மாற்றத்தை நோக்கி

 திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பிரியா விதை சேகரிப்பில் முக்கிய பங்காற்றிவருகிறார். தன் கணவர் தொழில் முனைபவர்,1 மகன் , 1 மகள் இருக்கிறார்கள். தொடக்க காலத்தில் தன் வீட்டு தேவைக்காக வீட்டு மாடியிலும் வீட்டில் இருக்கும் ஒரு சிறிய இடத்திலும் தங்கள் குடும்பத்திற்கான காய்கறிகளை வளர்க்க ஆரம்பித்தார்.  

     

         அதில் சேகரித்த விதைகளை விதைக்க வீட்டில் உள்ள இடம் போதவில்லை.பிறகு தன் வீட்டின் அருகில் உள்ள நண்பரின் 3 ½ சென்ட் இடத்தில் காய்கறி தோட்டம் அமைத்து பராமரித்து வந்தார். இந்த 3½ சென்ட் இடத்தில் குடும்பத்திற்கான உணவு தேவையை நிறைவு செய்துள்ளார்.இப்பொழுது தமிழகம் முழுக்க விதை பரவலாக்கம் செய்து கொண்டு இருக்கிறார்.  தன் வேலையையும், வீட்டு வேலைகளையும் கவனித்து கொண்டு , குழந்தைகளையும் கவனித்து கொண்டு தோட்டத்தையும்  பராமரித்து வருகிறார். 

       

           பெண்கள் கைகளில் தான் விதை இருக்க வேண்டும் என்று நம்மாழ்வார் ஐயா கூறுவதிற்கு இணங்க, இவர் விதைகளை பேராயுதமாக எடுத்துக்கொண்டு செயல்பட்டு வருகிறார். இதில் உள்ள ஆர்வத்தில் தன் வேலையை விட்டு  தன் முழு நேரத்தையும்  தன் குடும்பத்துடனும் விதைகளினுடனும் பயணித்து வருகிறார்.வீட்டை சுற்றி உள்ள இடங்களில்  பல வகை சுரைக்காய்கள், 50 திற்கும் மேல் கத்தரி வகைகள்,  30 வகை தக்காளி,  பலவகை மிளகாய், 33 வகை வெண்டை,  உள்ளடக்கிய கீரை, காய், கிழங்கு, கனிகள், மூலிகைகள், நெற்பவழம் போன்ற அறிய தானியங்கள் உட்பட்ட  500 விதமான தாவர வகைகள் விதை உற்பத்தியுடன் இயற்கை முறையில் பராமரித்து வருகிறார். ஒரு முறை நட்ட ரகங்களை அடுத்தமுறை நடாமல் ரகத்துக்கு ஒரு செடி என்று வளர்ந்து ரகங்களை காப்பதோடு விதைகளை இனகலப்பு ஆகாமல் எடுத்து பரவலாக்கம் செய்துள்ளார்.

    

          வருடத்திற்கு 1000 பேர்க்கு மேல் இவர் மூலம் நாட்டு விதைகள் பெற்று தங்கள் வீடுகளில் காய்கறிகளை அறுவடை செய்து கொண்டு உள்ளார்கள். தன்னிடம் விதைகள் கேட்பவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல், எப்பொழுது விதை வருகிறதோ அப்பொழுது பகிர்வார். அவருக்கு உள்ள வேலை பளுவை பொருட்படுத்தாமல் இதில் உள்ள ஆர்வத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.அது மட்டும் இல்லாமல் தமிழ்நாட்டில் உள்ள விதை சேகரிப்பாளர்களிடம் இருந்து நாட்டு விதைகள் பரிமாறி கொண்டு வருகிறார். இன்றைக்கு தமிழ்நாட்டில் தவிர்க்க முடியாத விதை சேகரிக்கும் பெண்மணியாக திகழ்கிறார்.  3½ சென்டில் செய்ததை இப்பொழுது   3 எக்கர்க்கு செய்ய தொடங்கியுள்ளார். 

    

இன்றைய பயிற்சி கண்களுக்கானது eye practice

 அனைவருக்கும் வணக்கம் 🙏


இன்றைய பயிற்சி கண்களுக்கானது, எந்த செலவும் இல்லாதது....நம் கைகளை மட்டும் உபயோகித்தால் போதுமானது....இன்று ஒரு நாள் செய்ங்க....


செய்தவங்க உங்கள் அனுபவங்களை சொல்லி மாலை பயன் என்ன னு கேளுங்க சொல்கிறேன்....


* இரண்டு மணிநேரத்திற்கொருமுறை, கண்களை மூடி,  இரண்டு கைகளையும் குவித்து கண்ணின் மேல் வைத்து....60 எண்ணிக்கை எண்ணவும்.....



* இரண்டு மணநேரத்திற்கொரு முறை என்பது இன்று முழுக்க 6 முறை வரும்....

அனைவருக்கும் வணக்கம் 🙏

காலையில் நாம் செய்த கண் பயிற்சிக்கான பலன்கள்

* நாம் செய்தது கண்களுக்கான யோகா பயிற்சி... ( palming yoga )...

* உள்ளங்கையில் கண்ணை அழுத்தாமல் மறைத்து, வலதுகையை வலது கண்ணிலும், இடது கையை இடது கண்ணிலும்  வைத்து  2 நிமிடம் இருக்கவேண்டும் ( 120 நொடிகள் ).....

பயன்கள்

* கண்கள் ஓய்வு எடுத்து புத்துணர்ச்சி பெறும்

* கண் நீர் அழுத்த நோய் ( glaucoma )  சரியாகும்
* கண்புரை நோய் சரியாகும்

ஒரு நாளைக்கு 6 முறை செய்யவேண்டும்

எனதனுபவம்

கண்களை மூடி திறக்கும் போது ஒரு மலர்ச்சி, புத்துணர்ச்சி கிடைத்தது

Spoon feeding எப்படி சாப்பிடனும் என்பதற்கான பதிவு

 நன்றாக மென்று முழுங்கும் வரை,   கையில் அடுத்த உணவை எடுத்து வாயில் வைக்க கூடாது என்பதற்கான பதிவு .....


* விருப்பமுள்ள அனைவரும் செய்ங்க... ஆரோக்கியமா 100 ஆண்டுகள் வாழ நினைப்பவர்கள் செய்யும் எளிமையான,  எந்த வித செலவும் இல்லாத செயல் இது, நாமும் செய்வோம்....ஆரோக்கியமாக வாழ்வோம், 💐 பதிவு 👇



திப்பிலி (Piper Longum) மிளகிற்க்கு அண்ணன் இதன் இலைகளோ வெற்றிலைக்கு தம்பி

 


பழங்காலமாக நம் சமையல் அறையில் இருந்தது திப்பலி  மிளகாய் வந்தவுடன் நம்மிடம் இருந்து வெளியேறிவிட்டது தற்செயலா திட்டமிடபட்டதா என தெரியவில்லை மிளகாய் திப்பிலி இரண்டிலுமே காரம் இருக்கிறது ஆனால் திப்பிலியில் மட்டுமே காரமும் கூடவே சாதாரண சளி முதல் ஆண்மையை அதிகரிப்பு வரை என ஏகபட்ட மருத்துவ குணம் இருக்கிறது


நம் காலசூழ்நிலையில் சாதாரணமாக வளரகூடிய கொடிதாவரம் இது..வீட்டிலும் மொட்டமாடியிலும் வளர்க்கலாம் எங்கள் வீட்டில் பல ஆண்டுகளாக திப்பிலி செடி வளர்க்கிறோம்..பழங்குடி மற்றும் கிராம மக்கள் அசைவ உணவிற்க்கு பின் திப்பிலி செடியின் இலையை மென்று சாப்பிடுவார்கள்,.இதன் இலை ஜீரண ஆற்றலை அதிகரிக்கும் அதனால்தான் வெற்றிலையின் தம்பி என்று முதல்வரியில் சொல்லியிருந்தென்


சளி,காசநோய், காய்ச்சல், கபம், கோழைச்சளி,   இருமல்,வாய்வுத் தொல்லை, வயிற்றுப் பொருமல், வறட்டு இருமல், இளைப்பு, களைப்பு,  வெள்ளைப் படுதல், போன்ற பிரச்சனைக்கு உணவிலும் சேர்த்துகொள்ளலாம் அல்லது பவுடர் செய்து மிளகு தூள் போல பயன்படுத்தலாம் ஆனால் மிளகைவிட காரம் அதிகம்,,திப்பிலி தூளை நெய் அல்லது நாட்டு சர்க்கரையுடன் சாப்பிட்டால் "அந்த

விசயத்தில் பலம் அதிகமாகும்


திப்பிலி பொடியை இரண்டு ஸ்பூன் எடுத்து வெற்றிலைசாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் சளி காய்ச்சல் இருமல் குணமாகும்

திப்பிலி பொடியுடன் சமஅளவு குப்பை மேனி இலையை நிழலில் உலர்த்தி  பொடி செய்து சேர்த்து சாப்பிட்டால் மூலம் பெளத்திர குணமாகும்

திப்பிலி 5 பங்கு தேற்றான் விதை  3 பங்கு இவை பொடி செய்து அரிசி கழுவிய  நீரில் காலை மாலை என இருவேளை மூன்று நாட்கள் சாப்பிட்டால் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் அதிகரித்து போகும் ரத்தபோக்கு  பிரச்சனை சரியாகும்.


திப்பிலியை தூக்கி வைத்து கொண்டாடலாம். வீட்டில் வளர்க்க தொடங்குகள்

7 ம் நாளுக்கான உணவு 7th day food

 அனைவருக்கும் வணக்கம் 🙏

7 ம் நாளுக்கான உணவு

காலை


அரை முடி தேங்காய், வாழைப்பழம், பேரீச்சை 2, வெல்லம் ஒரு துண்டு


மதியம்


அவல் புட்டு


சிவப்பு அவலை, மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும், அதில் மூழ்கும் அளவு நீர் ஊற்றி 2 நிமிடம் ஆனதும் , நீரை வடிண்துவிடவும், வடித்த அவலில் கால் பங்கு தேங்காய் துருவல், ஏலக்காய் தூள் ஒரு சிட்டிகை, வெல்லம் 1 ஸ்பூன் கலந்து சாப்பிடவும் ..


மாலை


எலுமிச்சை ஜூஸ் ( வெல்லம் போட்டது)


இரவு 


பழங்கள்




தேங்காயின் பயன்கள்




* உடலில் உள்ள நோய் எதிர்ப்பு அமைப்பை நிலை நிறுத்த உதவும்

* அடிக்டி ஏற்படும் சளி இருமலை விரட்டியடிக்கும்

* உடைத்து அரைமணிநேரத்திற்குள் சாப்பிடுவது சிறந்தது

* கெட்ட கொழுப்பை அகற்றும்

* இரத்தம் சுத்தமாகும்

* உச்சிமுதல் பாதம் வரை உள்ள உருப்புகளை புதுப்பிக்கும்

* பழங்காலத்தில் இறக்கும் தருவாயில் உள்ள நபர்களை தேங்காய்பால் கொடுத்து வாழ்நாளை நீட்டிப்பு செய்தார்கள்...

6 ம் நாளுக்கான உணவு 6th day food

 அனைவருக்கும் வணக்கம் 🙏


காலை


வெண்பூசணி ஜூஸ், தோல் விதையோடு அரைத்து வெள்ளை துணியில் வடிகட்டி குடிக்கவும்....


11 மணிக்கு


Detox water


கேரட் 1, பீட்ரூட் 1, எலுமிச்சை 1, சோம்பு 1 1/2 ஸ்பூன்....ஊறவைத்து குடிக்கவும்


மதியம்


வெண்பூசணி அவல் சாதம்


துருவிய வெண்பூசணி ஒரு கப் ( பிழிந்து சாறு எடுத்துடுங்க), வெள்ளை அவல் ஒரு கப், இயற்கை மோர் சிறிது....ஒரு சிட்டிகை உப்பு, மிளகு தூள் ஒரு சிட்டிகை, வறுத்த வேர்கடலை, மாதுளை கொஞ்சம் சேர்த்து, மல்லிஇலை கொஞ்சம் சேர்த்து சாப்பிடவும்....


மாலை


அத்திப்பழம் 2, பேரீச்சை 4 , ஊறவைச்சு அரைச்சு குடிக்கவும்


இரவு


பழங்கள்


* வெண்பூசணி குடல் புண் ஆற்றும்

* எரிச்சல் கொடுக்கும் புண்கள் சரியாகும்

* வெயிலினால் ஏற்படும் புண்கள் சரியாகும்

* உடல் குளிர்ச்சியாகும்

* வேர்கடலை களைப்பு நீக்கும்

* detox water, கழிவை நீக்கி சக்தி கொடுக்கும்

* அத்திபேரீச்சை பலம் கொடுக்கும்

ஒரே ஒரு உயிரினத்தை தான் நம்மிடம் இருந்து பிரித்தார்கள் - மொத்த தற்சார்பும் (self-dependence) Close.


படித்ததில் பிடித்த,யோசிக்க வைத்த பதிவு


1. சந்தையில் காய்கறிகளை விற்ற காசில் பாதி டெம்போ வாடகைக்கே சரியா போகுது தம்பி. 


மாட்டுவண்டி எங்க தாத்தா ???


மாடு இல்லையே பா..!! 


2. நிலத்தை ஒருமுறை உழுது போட டிராக்டருக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 1000 தர வேண்டியிருக்கு மாப்ளே.


ஏர் வைத்து உழுது பார்க்கலாம் ல மாமா ?


மாடு இல்லையே பா..!! 


3. DAP (Di ammonium phosphate), Urea, Phosphorous னு ஆயிரக்கணக்கில் செலவு ஆகிறது. 


மாட்டு எரு, பஞ்சகவ்யம், அமிர்தகரைசல்னு பயன்படுத்தலாமே ?


மாடு இல்லையே பா..!! 


4. நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு எரிவாயு செலவே மாதம் ரூ.700 ஆகிறது.


மாட்டு சாணத்தை வைத்து இயங்கும் Gobar gas plant  என்ன ஆயிற்று ? 


மாடு இல்லையே பா..!! 


5. நஞ்சு னு தெரிந்தும் ஏதேதோ ரசாயனங்களை வீட்டிற்குள் தெளிக்கிறீர்களே - 


மாட்டு சாணம் பயன்படுத்தலாமே ??


மாடு இல்லையே பா..!! 


*********


உழவெனும் வாழ்வியலில் மாட்டின் பங்கினை உணர்ந்த ஆங்கிலேயர்கள், "மாடுகளை" ஒழிக்காமல் வருடம் முழுவதும் உழவு செய்யத்தக்க பருவ சூழல்களை கொண்ட இந்நிலப்பரப்பில் உழவை வைத்து வணிகம் செய்ய இயலாது என்று  திட்டமிட்டு 19ம் நூற்றாண்டிலேயே இந்நிலப்பரப்பு முழுவதும் பசுவதை கூடங்கள் (cow slaughter houses) அமைத்து (சுதந்திரத்துக்கு பிறகும் இருந்தன, இன்றளவும் இருக்கின்றன; மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா 2வது இடம் as per 2019 data) -  பின்னர் அதற்கான மாட்டிறைச்சி சந்தையும் சமகாலத்தில் மேற்கத்திய நாடுகளில் உருவாக்கப்பட்டன.  


விவசாய புரட்சியில் மாட்டின் மீதான நமது தேவைகளை குறைக்க உரம், டிராக்டர் என அனைத்திற்கும் இந்த ஒன்றிய அரசால் மானியம் வழங்கப்பட்டது. மாடு என்னும் உயிரினம் பின்னர் பால் உற்பத்திக்காக மட்டுமே பயன்படுத்த பட்டது. அதுவும் கிடாரி (பெண்) கன்றுகள் மட்டுமே வளர்க்கப்பட்டது. காளை கன்றுகள் எல்லாம் அடி மாட்டிற்குத்தான். இனப் பெருக்கத்திற்கு எதை பயன்படுத்துவோம் என்ற சிந்தனை இன்றி காளைகளை விற்றதால் இன்று சினை ஊசியை வைத்து பெரும் லாபம் ஈட்ட காத்திருக்கிறது வணிக கும்பல்.. 


சினை ஊசி ஏன் போடனும் - இயற்கையாகவே இனப்பெருக்கம் செய்யலாமே ?


காளை மாடு இல்லையே பா..!! 


*********

ஒரே ஒரு உயிரினத்தை தான் நம்மிடம் இருந்து பிரித்தார்கள் - மொத்த தற்சார்பும் Close.


அனைவரும்  சிந்திக்கவே இந்த பதிவு....  விழிப்போம் உயர்வோம்....👍🏼

5 ம் நாளுக்கான உணவு 5th day healthy natural foods

 அனைவருக்கும் வணக்கம் 🙏


காலை


வேர்கடலை,  ... இரவு ஊறவைச்சுடுங்க....காலையில் அரைத்து அதோடு வாழைப்பழம ஒன்று, வெல்லம் சேர்த்து குடிக்கவும்


11 மணிக்கு 


Detox water


கொத்தமல்லி ஒரு கைப்பிடி, துளசி 10, புதினா 10...3 மணிநேரம் ஊறவைத்து குடிக்கவும்


மதியம்


அவல் அலசியது + மாங்காய் துருவல், வறுத்த வேர்கடலை பொடித்தது, ஒரு சிட்டிகை உப்பு, மிளகுதூள் கலந்து உண்ணவும்


மாலை


இரண்டு துண்டு வெண்பூசணி 


இரவு  7 மணிக்குள்


இரண்டு துண்டு வாழைக்காய் (raw) ...


பழங்கள்....




மதியம்

4 ம் நாளுக்கான உணவு 4th day natural healthy food

 அனைவருக்கும் வணக்கம் 🙏


காலை


வெண்பூசணி ஜூஸ்


வெண்பூசணி யை நன்றாக அலசிட்டு தோல் விதை உட்பட அனைத்தையும் அரைச்சு வடிகட்டி குடிக்கவும்....


எரிச்சலுடன் கூடிய தோல் வியாதி தீரும்


Detox water 11 am


புதினா 25 இலைகள், எலுமிச்சை 1, வெள்ளரிக்காய் 1( நறுக்கி போடவும்)


மதியம்


தேங்காய் பால் + அவல் கலவை


மாலை


கேரட் துருவல் , பொடித்த வேர்கடைலை, தேங்காய் துருவல், அனைத்தும் சம அளவு ....தேவைக்கு வெல்லம் சேர்த்து உருண்டைபிடிக்கவும்


இரவு 


பழங்கள்


* செவ்வாய்கிழமை பெண்கள் எண்ணெய் தேய்த்து குளிக்கவும்


 *எண்ணெய் தேய்த்து குளிப்பவர்களுங்கு இந்த இயற்கை உணவு வேண்டாம் , சமைத்த உணவு சாப்பிடவும்..

3 ம் நாளுக்கான உணவு 3rd day healthy natural foods

அனைவருக்கும் வணக்கம் 🙏


3 ம் நாளுக்கான உணவு....


காலை


கொத்தவரங்காய் ஜூஸ்


கொத்தவரங்காய் 4, தேங்காய் சில் 1, மிளகு, சீரகம், ஒரு சிட்டிகை உப்பு...அரைத்து வடிகட்டி குடிக்கவும்


11 மணிக்கு


Detox water


கேரட் 1 ( நறுக்கியது ),  புதினா 25 இலைகள், சோம்பு 1 ஸ்பூன்....3 மணிநேரம் 1/1/2 லிட்டர் தண்ணீரில் ஊறவைத்து குடிக்கவும்


மதியம்


நவரத்னா அவல் கலவை


வெள்ளை அவல், அலசி மூழ்கும் அளவு தேங்காய்ப்பால் ஊற்றி சிறிது நேரம் ஆனதும், மாதுளை, உலர் பழங்கள், விதைகள், கலந்து உண்ணவும்


மாலை


வாழைப்பழ பேடா


வாழைப்பழத்தை வட்ட வட்டமாக நறுக்கி அதன்மேல் தேங்காய் துருவல், வெல்லம் தூவி சாப்பிடவும்


இரவு 


பழங்கள்


கொத்தவரங்காய்

*கொத்தவரங்காய் நரம்பு பலப்படும்

* சிரங்கு, வேர்கூரு குணமாகும்

* கட்டிகள், கொப்பளங்கள் சரியாகும்

* பூச்சிக்கடியால் வரும் அலர்ஜி சரியாகும்

* நரம்பில் ரத்த ஓட்டத்தை அதிகபடுத்தும்

* சூட்டினால் வரும் கொப்பளங்கள், கட்டிகள் குணமாகும்

இயற்கை வழி வீட்டு தோட்ட பயிற்சி - 9☘️🍀🌿🌱🪴🎋🍃🌾 Home gardening aadi pattam thedi vithai

 இயற்கை வழி வீட்டு தோட்ட பயிற்சி - 9☘️🍀🌿🌱🪴🎋🍃🌾



Topic: ஆடிப்பட்டம் தேடி விதை - கிழங்கு நடவு முறை


* கிழங்கு வகைகளை வீட்டு தோட்டத்தில் எவ்வாறு நடவு செய்து அதிக மகசூல் எடுப்பது. 

* அதலைகாய், பழுபாகல் வீட்டு தோட்டத்தில் நடவு முறை.  செய்ய கூடியவை செய்ய கூடாதவை எவை.


Mr. Balaraman Maneri

Mrs.V.Priya Rajnarayanan 


பயிற்சி ஒருங்கிணைப்பாளர்கள்

Mrs. Ajitha Veerapandian

Mrs. Akila Kunalan


ஒவ்வொரு வாரமும் நடைபெறும். அனைவரும் பங்கேற்று வீட்டுக்கு ஒரு விவசாயி ஆகலாம்



https://youtu.be/bMtLZfTHzPc


2 ம் நாள் இயற்கை உணவு 2nd day natural food list and tips

அனைவருக்கும் வணக்கம் 🙏

கத்தரிக்காய் ஜூஸ்


கத்தரிக்காய் 1 ( சிறிது )...மிக்ஸியில் அரைச்சு வடிகட்டி குடிக்கவும் (ஒரு நபருக்கு )...


கருப்பு நிற தோல்  நோய் தீரும், மங்கு, கண் கருவளையம், நாள்பட்ட பருக்கள்.....


மதியம் 


தக்காளி அவல் சாதம்....


தேங்காய் பாலில் ஊறவைத்த அவல் ஒரு கப், அதில் பொடியாக நறுக்கிய ஒரு தக்காளி, சுவைக்கு ஒரு சிட்டிகை உப்பு, சீரகத்தூள், மிளகுதூள் ஒரு சிட்டிகை, பொடியா நறுக்கிய கறிவேப்பிலை, மல்லி இலை.....


மாலை (5 மணிக்குள்)


Detox water...


கேரட் 1, கறிவேப்பிலை ஒரு கைப்பிடி, எலுமிச்சை 1....

👆 3 மணிநேரம் 1 1/2 லிட்டர் நீர் ஊற்றி ஊறவைத்து...அடுத்த ஒரு மணிநேரத்தில் குடிச்சு முடிக்கனும்....


இரவு


கொய்யாபழம்



* கத்தரிக்காய் தோல் நோய்க்கான, அதுவும் கருமைநிற தோல் நோய்க்கான மருந்து, தொடர்ந்து குடிக்க மறையும்....


* தேங்காய் பால் நரம்புகளுக்கு பலம் கொடுக்கும்


Detox water....இது ஒரு வகை கழிவு நீக்கம்....சோரியாசிஸ் நோய் குணமாகும், ஜீரணசக்தி கூடும், நெஞ்செரிச்சல் சரியாகும்.....

இரண்டு நாள் இயற்கைவாழ்வியல் பயணம் Two days natural way of life

அனைவருக்கும் வணக்கம் 🙏

*அதிகாலை அலாரம் இல்லாமல் கண்விழிப்பு
* 3 டம்ளர் தண்ணீர் குடிப்பது
* தடாசணம்
* காலைகடன்
* மூலிகை பல்பொடி வைத்து பல் விலக்குதல்
* பித்த நீர் கழிவு நீக்கம்
* கண் கழுவுதல்
* தலைக்குளியல்
* உடல் பயிற்சிகள்
* பஞ்சபூத சக்தி வணக்கம்
* சூரியனை வணங்குதல்
* உமிழ்நீரோடு உணவை மென்று முழுங்குதல்
* கண்பயிற்சிகள்
* இரவு தூங்கும்முன் பயிற்சி

( இவைகள் தினமும் தொடரவும் 👆 )

மேலும் ....

* வாரம் இருமுறை எண்ணெய் குளியல்
* மாதம் ஒரு முறை இரைப்பை சுத்தம்
* வாரம் 3 முறை மூக்கு கழுவுதல்
* மாதம் ஒரு முறை நீர்தாரா
* 3 மாதத்திற்கு ஒரு முறை குடல் சுத்தம்
* 6 மாதத்திற்கு ஒரு முறை மண் குளியல்
* வாரம் ஒரு முறை 16 மணிநேர விரதம்

இந்த பயிற்சிகள் எல்லாம் உங்களுக்கு சொல்லியாச்சு தொடர்ந்து செய்ங்க, தொடர்ந்து செய்யும் போது நீங்க ஒரு பயிற்சியாளராக ஆகமுடியும்,

 நாம் உணர்ந்து செய்யும்போதுதான் மற்றவர்களுக்கு சொல்லமுடியும், 

மருந்தில்லா, செலவில்லா எளிமையான மருத்துவ முறை இது, கழிவுகளின் தேக்கம் தான் நோய், அவைகளை வெளியேற்ற இவ்வளவு வழி நம் முன்னோர் சொல்லிவைச்சிருக்காங்க, அதை தொடர்ந்து செய்வோம் பலன்பெறுவோம்....நம்மோடு 100 பேர் நின்றாலும் நாம் ஆரோக்கியமாக இருந்தால் தனித்து தெரிவோம், ஒரு ஒளிவட்டம் நம்மைசுற்றி இருக்கும்...நம்ம குழு நண்பர்களிடம் அதை நிறையவே பார்க்கிறேன்.....நன்றி....

வாழை இலை குளியல் ( தோல் கழிவு நீக்கம் ) அடுத்தமாதம் ஒரு நாள் செய்முறை விளக்கங்களுடன் சொல்கிறேன்,

மிளகு கற்பம் Pepper formula

 மிளகு கற்பம்.      

மிளகு கற்பம் எடுத்துக்கொள்ள தகுதியானவர்கள் பேதி மருந்து எடுத்து உடல் சுத்தம் செய்து இருக்க வேண்டும். இரண்டு நாள் இடைவெளிக்கு பின் காலை 5.30 எழுந்து பல்துலக்கிய பின் 300 to 400 ml வெண்ணீர் வாய் வைத்து சப்பி குடிக்க வேண்டும். பின் காலை கடன்களை முடித்தபின் வெண்ணீர் குடித்த மணியில் இருந்து 45 நிமிடம் கழித்து முதல் நாள்  ஒரு மிளகு, சிறிது மலைதேன் அல்லது கலப்படம் இல்லாத பனை வெல்லம் சிறிது சேர்த்து மென்று உண்ண வேண்டும்.

ஒவ்வொரு நாளும் ஒரு  மிளகு கூட்டி உண்ணவேண்டும்.  24 வது நாள் 24 மிளகு 25வது நாள் 24 மிளகு உண்ணவேண்டும். பின் ஒரு ஒரு மிளகாக குறைத்து 48 வது நாள் ஒரு மிளகுடன் கற்பம் முடிக்கவேண்டும். மிளகு கற்பம் எடுத்துக்கொள்ளும் காலத்தில் புலால் உணவு உண்ண கூடாது. மேலும் ஊறுகாய், பொறித்த உணவுகள் , அவரைக்காய், கொத்தவரங்காய், கத்தரிக்காய் அளவு குறைத்து உண்ண வேண்டும். 

மோர் தேவையான அளவு குடிக்க வேண்டும். உடல் சூடு அதிகமாக உணர்பவர்கள் இளநீர், மாதுளை, தேவையான அளவு எடுத்துக்கொள்ள வேண்டும்.கீரை உணவு அதிகம் சாப்படவேண்டும.வல்லாரை கீரை எடுத்துகொள்வது பலனை கூட்டி தரும்.  தாய்மார்கள் ஓய்வு நாட்களிலும் மிளகு கற்பம் எடுத்துக்கொள்ளலாம். 

ஆண்கள் மது, புகை பான்பராக் பழக்கம் உள்ளவர்கள் அந்த பழக்கத்தை நிறுத்திய பின் அருகம்புல் சாறு ஒரு மண்டலம் எடுத்துக்கொள்ள வேண்டும். இதோடு மூன்று நாட்கள் கீழ்காய் நெல்லி சாறு, வில்வ சாறு , மணத்தக்காளி சாறு எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பின்புதான் மிளகு கற்பம் எடுத்துக்கொள்ள தகுதியானவர்கள் ஆவார்கள். இந்த முறையில் மிளகு கற்பம் எடுத்துக்கொள்பவரகள் முழு பலரையும் பெறலாம்.

மிளகு கற்பம்

திரு. தங்கபாண்டியன் ஐயாவின் பதிவு....

அனைவரும் இதை செய்யவேண்டும் என வேண்டி கேட்டுக்கொள்கிறேன், எளிமையான இன்றைய தேவைக்கு ஏற்ற மருந்து 👆

இயற்கை உணவுகள் healthy natural foods

 நாளை காலை உணவு


எலுமிச்சை 1/2 பழம், இஞ்சி 1/4 இன்ச், அரைச்சு வடிகட்டி தேன் அல்லது வெல்லம் கலந்து குடிக்கவும்


வாழைக்காய் பசும்பொரியல்


வாழைக்காய் தோல் நீக்கியது 1/4, சம அளவு தேங்காய் துருவல், ஒரு மணிநேரம் ஊறவைத்த பாசிபருப்பு ( தோல் நீக்கியது), மிளகுதூள், சீரகதூள் ஒரு சிட்டிகை, உப்பு ஒரு சிட்டிகை, கலந்து மல்லி இலை தூவி, எலுமிச்சை சில துளிகள் கலந்து 10 நிமிடம் ஆனதும் சாப்பிடவும்.....


மதியம்


அவல் உணவு


அவல் 100 கிராம் எடுத்து அலசி, சம அளவு தேங்காய் துருவல்,  வெல்லம், தோல் நீக்கிய வேர்கடலை சேர்த்து ....சாப்பிடவும்


மாலை


பேரீச்சை 2, அத்திப்பழம் 2, திராட்சை 10 ஒருமணிநேரம் ஊறவைத்து அரைத்து குடிக்கவும் ( ஒரு நபருக்கு )....


இரவு 7 மணிக்குள்


பழங்கள் ஒரே வகை பழம் ( பப்பாளி, மாதுளை, சப்போட்டா, மாம்பழம்) இப்படி ஏதாவது ஒன்று


முக்கிய குறிப்புகள்


* இயற்கை உணவு உண்ணும் போது,  தண்ணி நிறைய குடிங்க, உணவு சாப்பிடும்போது அல்ல, மற்ற நேரங்களில், தாகம் எடுக்காவிட்டாலும் குடிக்கனும்


* உணவு அளவு குறைவா இருக்கறமாதிரி தோனும், ஆனால் போதுமானது, 


* வாழைக்காய் சாப்பிட்டு அரைமணிநேரமாவது மற்ற உணவுக்கு இடைவெளி வேண்டும்...


* பசித்தால் பழங்கள் சாப்பிடுங்க, விதையுள்ள கறுப்பு திராட்சை சிறப்பு

வாழைக்காய் அப்படியே சாப்பிட்டால் வாய்வு ஏற்பட வாய்ப்பு இருக்குங்களா? Raw banana healthy vegetables

 வாய்வு ஏற்பட வாய்ப்பு  இல்லை, சாப்பிடலாம்..

பச்சையாக வாழைகாய் சாப்பிடுவதற்கு பிஞ்சு காயை எடுத்துக்கொள்ள வேண்டும், கிடைக்காத சமயம் விளைந்த காயை பயன்படுத்துங்கள். 

சிறு துண்டுகளாக வெட்டிய காயை நல்ல தேனில் ஊரவைத்து  , நல்ல பனை வல்லத்தில் பாகு காய்சி ஊரவைத்த வைத்து , மிளகு சீரகம் பொடி தூவி எலுமிச்சை சாறு சிறு துளிகள்  விட்டு  இதில் ஏதாவது ஒரு முறையை பின்பற்றி சாப்பிட்டு வரலாம். 

அல்லது தோலுடன்  வாழைக்காய்  , தோலுடன் எலுமிச்சை,  சிறு துண்டு இஞ்சி , 10 மிளகு சேர்த்து அரைத்து சாறு பிழிந்து பருகலாம். சிறு காய்கறிகள் இருந்தால் இரண்டு நபர்கள் , பெரிய காய் மூன்று நபர்கள் வாரம் இரண்டு நாட்கள் சாப்பிட்டு வரலாம். 

அதிலும் நாட்டு காய் கிடைத்தால் பலன் அதிகம்.கிடைக்காத பட்சத்தில் மற்றவற்றை பயன்படுத்தலாம். இப்பொழுதெல்லாம் வாழைக்கு ஊசி, மாத்திரை ,இரசாயன உரங்கள் , மருந்து தெளித்தல் போன்றவை அதிகமாக பயன்படுத்துவதால்  கல் உப்பு , மஞ்சள் தண்ணீர் கலவையில் நன்கு ஊரவைத்த கழுவி பயன்படுத்த வேண்டும்.

மூக்குசளி பழம் (அல்லது) நறுவல்லிபழம் CARDIA DOCHOTOMA

 மூக்குசளி பழம் (அல்லது)

நறுவல்லிபழம்

CARDIA DOCHOTOMA







மற்ற எந்த வகையான உணவுகளை காட்டிலும் பழங்களில் அதிக அளவு உடலுக்குத் தேவையான சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன. 


அதில் நம் தமிழ்நாட்டில் பரவலாக அறியப்படும் ஒரு வகை பழமாக தான் மூக்குச்சளிப்பழம் இருக்கிறது. சித்த வைத்தியத்தில் இந்த பழத்தை #நறுவல்லி எனக் குறிப்பிடுகின்றனர். இந்த நறுவல்லி அல்லது மூக்குச்சளிப் பழம் சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

 நறுவல்லிபழம்பயன்கள்

😊🌿🙏😋🙏🌿🙏


ஆண்மைகுறைபாடு இக்காலங்களில் பல ஆண்களுக்கு குழந்தை பெற்றுக்கொள்ள முடியாததற்கு முதன்மை காரணங்களாக இருப்பது அதற்கு அவர்களின் விந்து நீர்த்து போகுதல் மற்றும் விந்தில் உயிரணுக்கள் குறைபாடு ஆகியவையே இருக்கின்றன


மூக்கு சளி பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வரும் ஆண்களுக்கு விந்து கெட்டியாகி, அந்த விந்தில் உயிரணுக்கள் அதிகரித்து, மலட்டுத் தன்மை குறைபாட்டை நீக்கி,ஆரோக்கியமான குழந்தை பிறக்க வழி வகை செய்கிறது.


உடல் சூடு நமது உடலின் சராசரி வெப்பநிலை அனைத்து காலங்களிலும் சீராக இருப்பது அவசியம் ஆகும். கோடைக்காலங் களில் பலருக்கும் உடல் வெகு சீக்கிரத்தில் உடல் உஷ்ணமடைந்து தலைவலி, உடல் சோர்வு உட்பட பல பாதிப்புகளை ஏற்படுத்தி, கடுமை யான கோடை காலங்களில் மூக்கு சளி பழங் களை சாப்பிட்டு வந்தால் உடல் குளிர்ச்சி அடைவதோடு, உடற்சோர்வு நீங்கி உடலுக்கும், மனதிற்கு உற்சாகத்தை ஏற்படுத்துகிறது. 


குடற்புழுக்கள் சாக்லேட், இனிப்புகள் அதிகம் சாப்பிடுவதால் குழந்தைகள் அதிலும் குறிப்பாக 12 வயதுக்கு உட்பட்ட குழந்தை களுக்கு வயிற்றில் குடற்புழுக்கள் உற்பத்தி யாகி, அவர்களின் உடல் நலத்தை பாதித்து, உடலளவிலும் மனதள விலும் சோர்வடையச் செய்கிறது. வயிற்றில் இருக்கும் புழுக்களை அழிக்க சிறந்த இயற்கை மருந்தாக மூக்குச் சளிப் பழம் இருக்கிறது. 


இதய ஓட்டையை சரி செய்யும்  ஆற்றல் உடையது.தோல் நோய்கள், நீர்ச் சுருக்கை குணமாக்கும் சுவாச கோளாறுகள் சரியாகும்.


இந்த பழங்களை குழந்தைகள் அடிக்கடி சாப்பிடக் கொடுத்து வந்தால் குடற்புழுக்கள் அழிந்து மலத்தின் வழியாக உடலை விட்டு அவை வெளியேறும். உடல் எடை கூட நவீன மருத்துவ அளவுகோலின் படி ஒவ்வொரு மனிதரும் அவரின் உடல் உயரத்திற்கு ஏற்ற அளவில் உடல் எடை பெற்றிருக்கவேண்டும் என அறிவுறுத்துகிறது. ஒரு சிலர் சராசரி உடல் எடைக்கு கீழாக இருக்கின்றனர். இத்தகையவர்கள் சீக்கிரம் உடல் எடை கூட்ட அடிக்கடி நறுவிழி பழங்களை சாப்பிட வேண்டும். 


இதில் இதில் இருக்கும் சத்துகள் உடல் எடை அதிகரிக்க உதவுகிறது. வைட்டமின் சி மூக்கு சளி பழத்தில் “வைட்டமின் சி” சத்து அதிகம் இருக்கிறது. இந்த வைட்டமின் சி சக்தி நமது உடலில் சரியான அளவில் இருந்தால் மட்டுமே நமது உடலின் நோய்எதிர்ப்புதிறன் வலுவுடன் இருந்து, உடலை வெளியிலிருந்து தாக்க வரும் நோய் நுண்கிருமி களை எதிர்த்து போராட முடிகிறது. 


எனவே அனைத்து வயதினரும் நறுவிலி பழங்களை அடிக்கடி சாப்பிடுவது பயன்தரும்.


பழங்கள் தேவைக்கு

🌿🙏👍🌳🌳🌳🌳🌳

ருதம்பராயோகாமையம்

இயற்கை வழி வீட்டு தோட்ட பயிற்சி - 8

 இயற்கை வழி வீட்டு தோட்ட பயிற்சி - 8☘️🍀🌿🌱🪴🎋🍃🌾


தேதி:  04/07/2021 

 

நேரம்:3:30 PM to 5:00 PM


Topic: ஆடிப்பட்டம் தேடி விதை 

கேள்வி பதில்கள் பகுதி - 2



இந்த நிகழ்வில் விதைப்புக்கு தயாராக இருக்கும் போது தங்களுக்கு ஏற்படும் வீட்டு தோட்டம் பற்றிய அனைத்து சந்தேகங்களுக்கும் விடை கிடைக்கும்


Mr. Balaraman Maneri

Mrs.V.Priya Rajnarayanan 


பயிற்சி ஒருங்கிணைப்பாளர்கள்

Mrs. Ajitha Veerapandian-9500321318

Mrs. Akila Kunalan-9962583057


ஒவ்வொரு வாரமும் நடைபெறும். அனைவரும் பங்கேற்று வீட்டுக்கு ஒரு விவசாயி ஆகலாம்


குறிப்பு: பயிற்சி சரியாக 3.30 PM ஆரம்பித்து  5.00PM முடிந்து விடும்.


seedsisland Team is inviting you to a scheduled Meeting



நமக்கான முதல்தர உணவு கனிகள்தான்! Fruits

 நமக்கான முதல்தர உணவு கனிகள்தான்!

அரசும் மீடியாவும் பிரபலங்களும்...மரம் நிழல் தரும், காற்று தரும், மழை தரும்னு சொல்லுவாங்க...

 ஆனா கனி தரும்னு மட்டும் சொல்லவே மாட்டாங்க. ஏன்?


இப்ப சாலையோரம் வைத்திருக்கும் மரம், அரசு பள்ளி, மருத்துவமனை, அலுவலகங்கள் இங்கெல்லாம் இருக்கும் மரங்களை கவனியுங்கள்.... அங்கு கனி தரும் மரங்கள் எதுவுமே இருக்காது.

ஏன்? 


எங்கெல்லாம் புளிய மரம் நிறைய உள்ள சாலைகள் உள்ளதோ அந்த சாலைகளையெல்லாம் விரிவு படுத்துகின்றேன் என்று அரசு அந்த புளிய மரங்களை வெட்டிவிடும். விரிவாக்கத்திற்கு பின் வெத்து மரங்களையே நடும். 


அரசும் தொண்டு நிறுவனங்களும் வெத்து மர்மங்களை மட்டுமே நடும்.


Lock down னில் பல ஆயிரம் பேர் பல கிலோமீட்டர் ரோட்டில் பசியோடு நடந்து சென்றனர். அப்பொழுதும் கூட அந்த மக்கள் காய் கனி மரங்கள் இருந்தால் பசிக்கு உணவாகுமே என சிந்திக்கவில்லை.


எனக்கு தெரிந்து ... ஏன் கனி தராத மரங்களை மட்டுமே நடுகின்றனர் என எவரும் சிந்திக்கவில்லை.


நாமெல்லாம் குரங்கிலிருந்து பிறந்தோம் என்றால் நமது முக்கிய உணவே பழம்தானே. ஆனால் நாமே சிந்திக்கவில்லையே. மா பலா நாவல் அத்தி கொய்யா.... என்று எத்தனை மரங்கள் உள்ளன. அவையெல்லாம் ஏன் நடப்படவில்லை. நம் சிந்தனையை எப்படி மழுங்கடித்தனர்.


காரணம்

MMMC: mass media mind control.


மரம் கனி தரும் என்ற வார்த்தையை எல்லா விதத்திலும் மறைத்தனர். தொடர்ந்து மரம் நிழல் தரும் காற்று தரும் மழை தரும் என்று மட்டுமே சொன்னார்கள்.... அதை மட்டுமே மனிதர்களும் நினைத்து கனியை மறந்தான்.


கனி நமக்கான ஊட்டச்சத்து நிறைந்த உணவு .


ஆனால் இதையெல்லாம் தடுத்து கார்பரேட் ஊட்டச்சத்து உணவு என்று கண்ட குப்பைகளை நம்மிடம் திணிக்கிறது. அதையெல்லாம் ஏதோ ராயல் ஃபேமிலி போல ஸ்டைலா வாங்கி தின்னு உடம்பு நாசமா போனதுதான் மிச்சம். கார்பரேட்டுக்கோ ஏகபோக லாபம்.


நல்லா புரிஞ்சிக்குங்க இயற்கையிலிருந்து நாம் இலவசமாக எதையும் பெற்றுவிடக்கூடாது என்று கார்பரேட் தெளிவா செயல்படுறாங்க.


பூமியில் பிறந்த அனைத்து உயிரினங்களுக்கும் இயற்கையாகவே உணவு படைக்கப்பட்டிருக்கிறது.


அதை முழு முற்றாக தடுத்து பணத்தால் மட்டுமே எதையும் வாங்க முடியும் என்ற நிலையை உருவாக்குகிறது கார்பரேட்..


நீங்கள் கற்பனை பண்ணி பாருங்கள் கருவை மரங்கள் உள்ள இடங்களிலும் மற்றும் அனைத்து இடங்களிலும் மா, பலா, வாழை, நாவல் போன்ற மரங்கள் இருந்தால் இந்த இடமே சொர்க்கமாக காட்சி அளிக்கும். தை மாதங்களில் பூத்து குலுங்கும். உணவுப் பஞ்சம் என்ற ஒன்றே இருக்காது.

நம் மனநிலையே ஆனந்தமாக இருக்கும் . உண்மையான சொர்க்கத்தை நாம் அனுபவிக்கலாம். நீங்கள் மீண்டும் மீண்டும் இதே போல் கற்பனை செய்து வெளி உலகத்துக்கு வந்து பாருங்கள்....


அப்பொழுது உங்களுக்கு தெரிவதெல்லாம் கிரிக்கட் மைதானங்களும் கருவை மரங்களும் மற்ற வெற்று மரங்களும் உள்ள வரண்ட பூமியைத்தான். 

ஒரு சொர்க்க பூமியை இப்படி நரகமாக்கிவிட்டு ரேசன் கடையில் புழுத்துப்போன அரிசிக்கு வரிசையில் நிற்கிறோம்.


மீடியாக்கள் சொல்வது மட்டுமே உலகில் உள்ளதாகவும் நடப்பதாகவும் நம்புவது அறியாமையின் உச்சம். மீடியாக்கள் ஒட்டுமொத்த உண்மையை மறைத்துள்ளது.


மீடியா ஒரு ஈவு இரக்கமற்ற மாபெரும் பயங்கரவாதி. 


கார்பரேட் அறிவாளியல்ல... நாம் சிந்திக்கவில்லை அவ்வளவே.


மனிதன் சிந்திக்காதவரை இவையெல்லாம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.

பஞ்சம் தீர்க்கும் பஞ்சகாவியம் செய்முறை Panchakavya seya murai vilakkam

 அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள் 

(நன்றி திரு நம்மாழ்வார் ஐயா) 

பஞ்சம் தீர்க்கும் பஞ்சகாவியம் செய்முறை:- 

மாட்டுச் சாணம் ஒரு கிலோ,பசு கோமியம் ஒரு லிட்டர் ,பசும்பால் அரை லிட்டர்,பசு தயிர் அரை லிட்டர் பசுநெய் 150 மில்லி நான்கைந்து கனிந்த வாழைப் பழங்கள் கரும்பு சக்கரை 250 கிராம் கரும்புச்சாறு கால் லிட்டர் இவைகள் அனைத்தும் மூலப்பொருள்கள் ஆகும்

10 லிட்டர் கொள்ளளவு உள்ள மூடி உள்ள பிளாஸ்டிக் பக்கெட்டில் முதல்நாள் சாணியையும் நெய்யையும் நன்றாக கலந்து மூடி வைக்க வேண்டும் ஒரு முப்பது முறை இரண்டு நாட்களுக்கு கலக்கவேண்டும் அதற்குப் பிறகு மீதி அனைத்தையும் பொருள்களையும் அதனுடன் இணைத்து காலையில் 50 முறையும் மாலையில் 50 முறையும் கடிகார சுற்றில் கலக்கவேண்டும் அனைத்து பொருளையும் கலக்கும் நாளிலிருந்து ஏழு நாட்கள் கழித்து பஞ்சகவ்யத்தை உபயோகிக்கலாம் ஒரு லிட்டருக்கு முதல் முறை செடிகளுக்கு அடிக்கும் பொழுது ஒரு லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி கலக்கவேண்டும் அதற்குப் பிறகு 50 மில்லி போதும் 15 நாட்களுக்கு ஒரு முறை உபயோகிக்கலாம் பஞ்சகாவியம் தயாராகிய பின் தினமும் காலையோ அல்லது மாலையோ ஒரு முறை 30 தடவை கலக்கினால் போதும் (பின்குறிப்பு கலக்கும் குச்சியை நன்றாக கழுவி வைத்து உபயோகிக்க வேண்டும்)🙏

நாளைய கழிவு நீக்கங்கள் Clean your body part internally to live healthy

12 காய்கறிகளை கொண்டு அனைத்து நோய்களையும் குணப்படுத்தமுடியும் vegetables to cure diseases Food is Medicine

 Kidney Failure : கத்திரிக்காய்

Paralysis : கொத்தவரங்காய்

Insomnia : புடலங்காய்

Hernia : அரசாணிக்காய்

Cholesterol : கோவைக்காய்

Asthma : முருங்கைக்காய் 

Diabetes : பீர்கங்காய்

Arthritis : தேங்காய்

Thyroid : எலுமிச்சை

High BP : வெண்டைக்காய்

Heart Failure : வாழைக்காய்

Cancer : வெண்பூசணிக்காய்


உணவு பழக்கம்" பழமொழி வடிவில்🎀*


💎காட்டுலே புலியும் , வீட்டுலே புளியும் ஆளைக் கொல்லும்.

💎போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே💚

💎பொங்குற காலத்தில் புளி.. மங்குற காலம் மாங்கா💚

💎சீரகம் இல்லா உணவும் , சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது.💚

💎 எண்னை குடத்தை சுற்றிய எறும்பு போல💚

💎 தன் காயம் காக்க வெங்காயம் போதும்💚

💎வாழை வாழ வைக்கும்💚

💎அவசர சோறு ஆபத்து💚

💎ஆறிய உணவு மூட்டு வலி உண்டாக்கும்💚

💎இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு💚

💎ரத்த கொதிப்புக்கு அகத்திக் கீரை💚

💎இருமலை போக்கும் வெந்தயக் கீரை💚

💎உஷ்ணம் தவிர்க்க கம்பங் களி💚

💎கல்லீரல் பலம் பெற கொய்யாப் பழம்💚

💎குடல் புண் நலம் பெற அகத்திக்கீரை💚

💎கொலஸ்ட்ரால் குறைக்க பன்னீர் திராச்சை💚

💎சித்தம் தெளிய வில்வம்💚

💎 சிறுநீர் கடுப்புக்கு அன்னாசி💚

💎சூட்டை தணிக்க கருணை கிழங்கு💚

💎ஜீரண சக்திக்கு சுண்டக்காய்💚

💎தலை வலி நீங்க முள்ளங்கி சாறு💚

💎தேனுடன் இஞ்சி ரத்தத் தூய்மை💚

💎பூண்டில் இருக்கு பென்சிலின் சக்தி💚

💎மூல நோய் தீர வாழைப்பூ கூட்டு💚

💎வாந்திக்கு மருந்து மணத்தக்காளி💚

💎வாத நோய் தடுக்க அரைக் கீரை💚

💎வாய் துர்நாற்றம் தீர்க்க ஏலக்காய்💚

💎பருமன் குறைய முட்டைக்கோஸ்💚

💎பித்தம் தணிக்க நெல்லிக்காய்💚


உணவு மருந்தாக இருக்க வேண்டும் இல்லாவிட்டால் மருந்தே நமக்கு உணவாகும் நிலைமை உருவாகும்”💚


*🎀நலம் உடன் வாழ்வோம்...

பகிர்வு / பாசில்

நாளைய கழிவு நீக்கங்கள் Clean your body part internally to live healthy

 அனைவருக்கும் வணக்கம் 🙏


நாளைய கழிவு நீக்கங்கள்


காது கழிவு


காதின் வழியே கெட்ட காற்று வெளியேறும், சூடு வெளியேறும்....மாதம் ஒரு முறை லேசான துண்டை முனையில் சுருட்டி லேசா அதில் உள்ள கழிவுகளை எடுக்கலாம்....


வெள்ளைபூண்டு தோல் உரித்து காதில் வைக்கனும் ( உள்ளே போய்விடாதபடி பெரிய பல் பூண்டு எடுத்துக்கோங்க ) 5 நிமிடம் வைத்தால் போதும், மாதம் ஒரு முறை செய்யனும்....( head set மாட்டுவதுபோல் இருக்கனும் )...உள்ளே போயிடாம பார்துக்கோங்க 🙏


பித்தநீர் கழிவு


காலையில் பல் விலக்கிவிட்டு இரண்டுவிரல் விட்டு உள்நாக்கு தொட்டு குமட்டவும், இரண்டுமுறை, பித்தம் இருந்தால் பச்சையாக, புளிப்பாக வெளியே வந்துடும், வரலனாலும் பரவாயில்லை, 


பயன்கள்

தலைவலி

வாந்தி

நெஞ்செரிச்சல்

ஜீரணமின்மை

வயிறுசம்மந்தமான நோய் நீக்கும்


தலைக்கழிவு


* முருங்கையிலை, மஞ்சள், நொச்சி இலை, வேப்பிலை, துளசி, தைல இலை, இப்படி எந்த இலை கிடைக்கிறதோ அதை வைத்து ஆவி கட்டவும் ...தலையில் இருக்கும் கெட்ட நீர் வெளியேறும் 


* மூச்சுபயிற்சி தினமும் செய்யவும் (30 நாள் )...link அனுப்புகிறேன்...இரண்டுநாள் அதை பார்த்து கற்றுக்கொண்டு நீங்களே உங்களுக்கு தோதான நேரத்தில் செய்யலாம்


நீர்தாரா


பெண்களுக்கானது, இதை மாதம் ஒரு முறை மாதவிலக்கு முடிந்ததும் செய்யலாம், எனிமா கேனிலேயே இதை செய்வதற்கான உபகரணம் சேர்த்து கிடைக்கும்....இதற்கான விளக்கமான link அனுப்புகிறேன்....அதில் மிக தெளிவான பதிவு இருக்கும்.... பார்துட்டு.. செய்யனும் என நினைக்கும் பெண்கள் சந்தேகம் இருந்தால் தனிபதிவில் கேளுங்க, சொல்கிறேன்...



பயன்கள்


* நீர்கட்டியை கரைத்து கழிவாக வெளியேற்றும்

* கர்பப்பை புண் ஆறும்

* கர்பப்பை கேன்சர் போன்ற நோய்கள் வருவதை தடுக்கலாம்



நீர்தாரா செய்யகூடாத நபர்கள்


1 கர்பப்பை பை எடுத்தவங்க செய்யகூடாது

2 மாசமா இருக்கறவங்க செய்யவேண்டாம்

3 திருமணமாகாத பெண்கள் செய்யவேண்டாம்

4 குழந்தைக்கு காத்திருப்பவர்கள் காலை மாலை செய்யலாம், இரவு வேண்டாம்



இந்த பதிவுகளோடு கழிவு நீக்கம் முடிந்தது 🙏🤝👍💐

கண் கழிவு நீக்கும் முறை Eye cleaning technique

 கண் கழிவு நீக்கும் முறை


கண் குவலை வைச்சு நாளைக்கு இரு முறை காலை மாலை கண்கழுவலாம்.....



பயன்கள்


*கண்களில் உள்ள தூசிகள் நீக்கும்

*அழுக்குகளை நீக்கும்

* வெப்பம் குறைக்கும்

*கண்ணுக்கு பிராண சக்தி கிடைக்கும்

* கண்பார்வை தெளிவாகும்


செய்யும் முறை


மருந்தில்லா தண்ணீர் எடுத்துக்கோங்க, கண்குவலையில் ஊற்றி லேசா குனிந்து தண்ணீரில் கண் வைச்சு முழித்து பின் கண்களை மூடவும்....


கண்குவலை கிடைக்காதவங்க இரவே திறந்தவெளியில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி துணி கட்டி வைச்சிடுங்க, காலையில் அந்த தண்ணீரை ஒரு அகலமான பாத்திரத்தில் ஊற்றி அதில் முகத்தை வைத்து கண்களை திறந்து பார்க்கவும், பாத்திரத்தில் முகம் வைக்கும்போது நாக்கு வெளியே இருக்கனும்....( இந்த பயிற்சி காலை ஒரு முறை போதும்)

நந்தியாவட்டை பூக்கள் இட்ட குளிரிந்த நீரும் கண் குவளையும்.... பயிற்சி இனிதே முடிந்தது...







1 கண் இடது வலது பார்க்கனும், இடது போகும்போது மூச்சை உள்ளே லேசா இழுத்து  வலது வரும் போது விடனும்..  

2 மேலே கீழே பார்ப்பது ( மேலே போகும்போது மூச்சை எடுத்து கீழே வரும்போது விடனும் )

3 வட்டம் போடுவது ( ஒருவட்டம் வரும்போது மூச்சை எடுத்து திரும்ப வந்த இடத்திற்கு போகும்போது மூச்சை விடனும் )

4. கண்களை இறுக மூடி திறப்பது ( மூடும்போது உள்ளே  இழுத்து திறக்கும் போது மூச்சை வெளியே வினும் )

5. பக்கவாட்டில் பார்ப்பது ( மூச்சை இழுத்து மறுபக்கம் வரும்போது விடனும் ) 

6. நெற்றிக்கண்ணில் விரல் வைத்து இரு கண்களும் மூக்கை பார்க்கனும் ( மூச்சை இழுத்து மறுபக்கம் வரும்போது விடனும் )

இந்த பயிற்சியை இன்று மாலை ஒரு முறை செய்ங்க, நாளை முதல் தொடர்ந்து தினமும் செய்ங்க....

ஆண்கள் எண்ணெய் குளியல் செய்யலாம் பெண்கள் மூக்கு கழுவும் பயிற்சி செய்யலாம் Activities for Day 3 and clarification on queries raised on first two days

 அனைவருக்கும் வணக்கம் 🙏


*நாளை( சனிகிழமை ) ஆண்கள் எண்ணெய் குளியல் செய்யலாம் ( சனிகிழமை, புதன்கிழமை )


* நாளை (சனிகிழமை ) பெண்கள் மூக்கு கழுவும் பயிற்சி செய்யலாம்

கடந்த இரண்டுநாள் பயிற்சியில் 55 நபர்கள் பங்கெடுத்திருக்கீங்க, மிகவும் மகிழ்ச்சி, இயற்கை வாழ்வியலுக்கு வருவது கொஞ்சம் தயக்கமா இருக்கும், செய்துபார்துட்டா உங்க உடம்பு நீங்க சொல்றத கேட்கும், 


இந்த இரண்டுநாளில் குழுவில் வந்த கேள்விகள் சந்தேகங்களுக்கான பதில்கள்...


* இரைப்பை கழிவு நீக்கம் ஒரு நாள் போதும்,  


* ஒவ்வொரு உடலும் ஒரு மாதிரி இருக்கும், முதல்ல தெரிஞ்சிக்கோங்க, மாதம் ஒரு முறை செய்ங்க, அடுத்து வாரம் ஒரு முறை இப்படி செய்யலாம், தொண்டை மென்மையான பகுதி, யாராவது தொடர்ந்து 10 நாள் செய்யறதா இருந்தா, தனிபதிவில் எனக்கு தகவல் கொடுத்துடுங்க...


* உப்பு தண்ணி குடிச்சதும் தானா வாந்தி வரும், வரலனா லேசா மேலண்ணம் தொட்டா போதும்னு சொன்னேன், ரொம்ப கைவிட்டு கஷ்டபடகூடாது, வரலனாலும் பரவாயில்லை, மலமா வந்துடும்...


* இரைப்பை சுத்தம் செய்த அன்று எண்ணெய்குளியல் செய்ய கூடாது...ஏன் என்றால் இரைப்பை சுத்தம் செய்ததும் குடல், இரைப்பை சுத்தம் அடைந்து குளிர்ச்சியா இருக்கும்......


பொதுவா பேதி ஆகும்போது குளிக்ககூடாது, 


* எண்ணெய் குளியல் காலை 6 மணிக்கு மேல் தான் செய்யனும்...

நாளை ஆண்கள் மூக்கு கழுவும் பயிற்சி!!! பெண்களுக்கு எண்ணெய்குளியல் !!! Nose cleaning for Men and Oil bathing tips for Female

 இந்த பொருள் நாளை ஆண்களுக்கு, நாளை மறுநாள் பெண்களுக்கு தேவைப்படும் வாங்கிக்கோங்க, பெண்கள் எனிமா கேன் சேர்த்து வாங்கிக்கோங்க, இவை மூன்றும் சேர்ந்தே விற்கிறாங்க, 100 முதல் 150 இருக்கும்.....👇




    இயற்கைவாழ்வியல் பொருட்கள் விற்கும் கடைகள், நாட்டுமருந்துகடை, ஆங்கில மருந்துகடைகளில் இவை மூன்றும் சேர்ந்தே கிடைக்கும்... கிடைக்கலனா சிரம படாதீங்க... கிடைக்கும்போது செய்யலாம் ...

அம்மி இயற்கை அங்காடி, காதிகிராப்ட் போன்ற கடைகளில் மூன்றும் சேர்ந்தே கிடைக்கும்...

நாளை ஆண்கள் மூக்கு கழுவும் பயிற்சி செய்யலாம், 👇 மூக்குகழுவும் குவளை வைச்சி செய்யனும், 

நுரையீரல் சம்மந்தமான நோய்கள் தீரும், 

சைனஸ், 
மூக்கடைப்பு, 
ஆஸ்துமா
நெஞ்சுசளி
வீசிங் சரியாகும்

சாதாரண லேசான சூடு உள்ள தண்ணீரில் 4 கல் உப்பு போட்டு அந்த மூக்குகுழாய் மூலம் மூக்கில் விட்டு சுத்தப்படுத்தனும்....செய்முறை விளக்கம் 👇
இந்த பயிற்சி 👆 நாளை ஆண்கள் செய்ங்க, இந்தபயிற்சியை நமக்கு செய்து காண்பிப்பவர் சகோதரி லலிதா சிவசங்கர், இயற்கைமருத்துவர்.



அனைவருக்கும் வணக்கம் 🙏



நாளை பெண்களுக்கு....

 எண்ணெய்குளியல் ( வெள்ளி, செவ்வாய் )

நல்லெண்ணெய் 100 ml, மிளகு 6, காய்ந்த மிளகாய் காம்பு குச்சி 6 ( குச்சிமட்டும்), ஒரு பல் பூண்டு, லேசா எண்ணெயை சூடுசெய்து அதில் மிளகு, மிளகாய் வத்தல் காம்பில் உள்ள குச்சி 6 , பூண்டு ஒரு பல் தட்டிபோட்டு, ஆறியதும் ...

தலை உச்சியில் 
காதுமடல்கள் முன் பின்
அக்குள்
தொப்புள்
ஆசணவாய்
கால்மூட்டு
கால்விரல் நகங்கள் 

👆 இவற்றில் எண்ணெய் தடவிட்டு மீதி உள்ளதை உடல் முழுவதும் தடவுங்க, அரைமணிநேரம் வெயிலில் நிற்கனும்.
அதாவது சூரியன் உதித்து ஒருமணிநேரத்திற்குள் உள்ள வெயில்,

 சுடு தண்ணீரில் குளிக்கனும், எதுவும் சாப்பிடும்முன் குளிக்கனும், சீயக்காய் போட்டு குளிச்சா நல்லது...

* ஒருமாத குழந்தை முதல் குளிக்கலாம்

எண்ணெய்குளியல் கூடாத நாட்கள்

மாதவிடாய், அமாவாசை, பெளர்ணமி, மழைபெய்யும்போது, பனிப்பொழிவில் வசிப்பவர்கள் கால் கட்டைவிரலில் எண்ணெய்வைச்சிட்டு குளிக்கலாம்.....

எண்ணெய்குளியல் அன்று கூடாத உணவுகள்

தயிர், மோர், குளிர்ந்த நீர், தரிபூசணி, குளிரூட்டியஅறை, தாம்பத்திய உறவும் கூடாது...

எண்ணெய்குளியல் அன்று உண்ணும் உணவுகள்

ரசம் சாதம், ஆவியில் வேகவைத்த இட்லி, இடியாப்பம்

எண்ணெய் குளியல் தீர்க்கும் நோய்கள்

கண்பார்வை தெளிவாகும்
பற்கள்பலப்படும்
தோல்நோய் குணமாகும்
நீர்கட்டிகள் மறையும்
தைராய்டு குணமாகும்
ஹார்மோன் சமநிலையடையும்


நாளை நாம்  செய்யலாம் 💐👍🎊















இரைப்பை சுத்தம் | 30 நாள் ஆரோக்கிய பயணம் | இயற்கை வாழ்வியல் பயணத்தை செய்யலாம் Perfect Health in Natural Way | Organic health tips

 இரைப்பை சுத்தம்

8 டம்ளர் நீர் ( 1 1/2 லிட்டர் )... மிதமான குடிக்கும் அளவு சூடு ( warm water ), அதில் 1 டம்ளர் நீர் எடுத்து 2 1/2 ஸ்பூன் இந்துப்பு நன்றாக கலந்து, மொத்த நீரில் கலக்கவும், 


அந்த நீரை சுவைத்துபார்த்தால் நம் கண்ணீரில் உள்ள உப்பின் சுவை இருக்கவேண்டும், அதிக உப்பாக இருந்தால் கூடுதல் நீர் சேர்க்கலாம், ஒவ்வொரு டம்ளராக குடிக்கவும், குடித்து முடித்து பெருவிரலை வைத்து லேசா வாயில் மேலண்ணத்தில் தொட்டால் வாந்தியாக அனைத்து கழிவுகளும் வரும், இரண்டு டம்ளர் குடித்ததும் வாந்தி வந்தாலும் எடுக்கலாம், இதை செய்யும் நேரம் 5 முதல் 7 மணிக்குள் இருப்பது நல்லது, இந்த நேரம் உடல் கழிவுகள் நீக்கும் நேரமாகும், 


எந்த வித பக்கவிளைவும் இல்லாத கழிவு நீக்க இது, இதை தொடர்ந்து 10 நாள் செய்துவர 5 கிலோ எடை குறைக்கலாம் ( எடை குறைக்க நினைப்பவர்களுக்கு )....


இந்த கழிவுநீக்க முறையினால் தீரும் நோய்கள்


முடக்குவாதம்

மூட்டுவலி

நெஞ்செறிச்சல்

கட்டிகள் நீங்கும்

குடல் அலர்ஜி

அல்சர்


இந்த கழிவு நீக்க முறையை கர்ப்பமாக உள்ள பெண்கள் செய்யவேண்டாம், ஏன்னா அவங்களுக்கு இயற்கையாகவே இது நடக்கும்...முதல் மூன்று மாதம்...



இந்த கழிவுநீக்க பயிற்சியை அனைவரும் ( விருப்பம் உள்ளவர்கள் ) நாளை செய்யலாம்... அனைவரும் உங்கள் அனுபவங்கள், சந்தேகங்கள் பதிவு செய்யலாம், நன்றி 🙏

இந்த 30 நாள் பயிற்சிகள் அனைத்தும் நீங்க வெளியில் போய் படிச்சா 35,000 ஆகும், இதில் மண்குளியல் தனியா 1000 ரூபாய், வாழைஇலைகுளியல் 1000, மூக்குகழுவுதல், கண் கழுவுதல், எனிமா 1000 நாம அங்கேயே செய்துபார்க்கனுமுனு சொன்னா 1000 , பார்க்கமட்டும் 35,000.....


இங்க உங்களுக்கு இலவசமா கிடைக்கிறது, காரணம் நீங்க செய்துபார்த்து தெரிஞ்சிகிட்டா, ஒருத்தர் 1000 பேரை மாற்றலாம், 


இது மருந்தில்லா செலவில்லா மருத்துவம், அன்றாட வாழ்க்கை மாறினால் மருத்துவ செலவு அவசியமில்லை, புதுபுது நோய்களுக்கு என்றுமே பயப்படவேண்டாம்....


உங்க செளகர்யம் எப்படி னு பார்துக்கோங்க......


இயற்கை வாழ்வியல் பயணத்தை செய்யலாம் Perfect Health in Natural Way | Organic health tips

 அனைவருக்கும் வணக்கம் 🙏


நாளை முதல் நாம் எல்லோரும் இணைந்து இந்த இயற்கை வாழ்வியல் பயணத்தை செய்யலாம்.....செய்யமுடியாதளவு இந்த வாழ்வியல் கடினமான விஷயங்கள் இல்லை,


 ஒரு 50 வருடத்திற்கு முன் நம் முன்னோர் வாழ்ந்த வாழ்வியல் தான், அன்று மருத்துவர்கள் நம்மை தேடி வந்தார்கள், இன்று நாம் அவர்களை தேடி போகிறோம் ( வரவைக்கிறார்கள் ).....இந்த 30 நாள் பயணம் நிச்சயமா  மாற்றம் கொடுக்கும், 


 கழிவு நீக்கம்....


இதைபற்றி கொஞ்சம் பேசலாம்....தினமும் பல் விலக்கி, மலம் நீக்கி, குளித்தால் இன்று உடல் கழிவுகளை போயிடுச்சு என நினைக்கிறோம், ஆனால் முழுமை இல்லை என்கிறது இயற்கை வாழ்வியல்....


உடல் கழிவுகள்


கண் கழிவுகள்

மூக்கு கழிவு

வாய் கழிவு

சிறுநீர்

மலம்

வியர்வை

காதுகழிவு

மூச்சுகாற்று ( வெளிமூச்சு )

சளி

பித்தநீர்

தும்மல்

தலைகழிவு ( கெட்டநீர் )

இரைப்பை கழிவு

நீர்தாரா.... ( பெண்கள் )


இவையெல்லாம் கழிவு நீக்கங்கள், இதைபற்றி நாம் இந்த 5 நாட்களில் பார்க்கப்போகிறோம்......

ஏன் கழிவுநீக்கம்?

நம் முன்னோர்கள் வாழ்வில் கழிவுநீக்கம் அன்றாட வாழ்வியல், ஆனால் இன்று அதை நாம் நமக்கு தேவையானபடி மாற்றிவிட்டோம்,.....

கழிவுகளின் தேக்கம் பல நோய்களுக்கு காரணமாகிறது, கழிவு நீக்கம் சரியா இருந்தா இனிவரும் புதுபுது நோய்களுக்கு பயப்படாம எதிர்த்து நிற்கலாம், உடலும் குடலும் சுத்தமா இருந்தால் மனம் சுத்தமாகும், மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.....

முதலில் நாம் நாளை செய்யபோவது இரைப்பை சுத்தம்

கழிவுகளின் தேக்கமே நோய்

கழிவு நீக்கமே ஆரோக்கியம்

30 நாள் ஆரோக்கிய பயணம்... perfect health in natural way

அனைவருக்கும் வணக்கம் 🙏


 30 நாள் ஆரோக்கிய பயணம்... ஜூலை 1 முதல் ஆரம்பமாகிறது. 30 நாள் பயிற்சி.


முதல் 5 நாள் கழிவு நீக்கம்


அடுத்த 2 நாள் இயற்கை வாழ்வியல்......


அடுத்த 3 நாள் தற்சார்பு வாழ்வியல் பொருட்கள் தயாரிப்பு.....


அடுத்த 10 நாள் இயற்கை உணவுகள்....


இறுதி 10 நாள் பாரம்பரிய உணவுகள் பற்றிய பயிற்சியும், செய்முறை விளக்கங்களும்.....

Introduction

Day 1 இரைப்பை சுத்தம் 


இப்படிக்கு 

  நிர்வாகம் சார்பாக

அஜிதா வீரபாண்டியன்


உள்ளூர் டிராகன் புரூட் Native/Village Dragon fruit | தினம் ஒரு மூலிகை இன்று பாதாளமூலி மறுபெயர் சப்பாத்திகள்ளி

 தினம் ஒரு மூலிகை இன்று பாதாளமூலி மறுபெயர் சப்பாத்திகள்ளி



 வட்ட வடிவ சதைப் பற்றான கொத்துக் கொத்தான மொழிகளை உடைய தண்டுகளையும் மஞ்சள் நிற மலர்களையும் புறப்பரப்பில் முள்ளுள்ள சிவப்பு நிற உண்ணக் கூடிய கனிகளையும் உடய கள்ளியினம்.

 தண்டு வேர் பழம் ஆகியவை மருத்துவப் பயனுடையவை நஞ்சு நீக்குதல் வெப்பு அகற்றுதல் ஆகிய குணங்களை உடையது சதையை சிறு சிறு துண்டுகளாக்கி மிளகுத்தூள் சேர்த்து 5 முதல் 10 துண்டுகள் வரை சாப்பிட எட்டி வாளம் அலரி சேங்கொட்டை நாவி ஊமத்தை ஆகியவற்றின் நஞ்சு போகும் வெப்ப வயிற்று வலி அடிக்கடி மலம் கழித்தல் கிராணி சத்தத்துடன் போகும் உஷ்ணபேதி முதலியன தீரும் வேரை பொடி செய்து 10 கிராம் கொடுத்துவர பூரான் கடி வண்டுகடி நஞ்சுகள் முறியும் தேள்கடிக்கு கொடுத்து காயை வாட்டி கடி வாயில் வைக்க குடைச்சல் தீரும் 

பழச்சாறில் செய்த மணப்பாகு சாப்பிட்டு வர கோடை கால வெப்பநோய் தீரும் முள் நீக்கி விளக்கெண்ணெயில் வாட்டி முடக்கு வாதத்திற்கு வைத்துக் கட்டலாம் ஒத்தடம் கொடுக்கலாம்.

இந்த வகை "காக்டஸ்" சிறிய அளவில் வீட்டுத் தோட்டத்தில் ஒரு மூலையில் வளர்க்க முடியுங்க.

உள்ளூர் டிராகன் புரூட்

 நன்றி ASNசாமி 

அங்கக ஒருங்கிணைந்த விவசாய பண்ணை மற்றும் மூலிகை பண்ணை ஆதனூர்...

Elaya Perumal: இதன் முற்கள் மிகவும் கடினமாகவும் அதிக வலி ஏற்படுத்த கூடியதும் கூட, எனவே இதை மாடித்தோட்டத்தில் வளர்க்கும் போது குழந்தைகள் அனுகாத இடம் பார்த்து வைக்கவும்... மேலும் இதை கையாளும் போது மிகுந்த கவனத்துடன் செயல்படவும்...

Thamizh Priya: நல்ல பதிவு முன்பு சாலை ஓரங்களில் அதிகளவில் காணப்பட்ட தானாக வளர்ந்த கள்ளிச்செடி மனித தவறுகளால் அழிந்து அரிதாகி வருகிறது  இதுபோன்ற பதிவுகள் இதன் மருத்துவ குணம் தெரிந்து கொண்டு வீட்டுத்தோட்டத்தில் வளர்க்க தூண்டும் . இந்த செடியை வளர்ப்பது எளிது செடியிலிருந்து ஒரே ஒரு இதழ் பகுதியை ஒடித்து வந்து மண்ணில் ஊன்றி வைத்தாலே வளர்ந்து விடும் மண்ணில் ஈரப்பதம் மட்டும் குறைவாக இருக்க வேண்டும்.சிறு வயதில் வளர்த்துள்ளேன் அம்மா கள்ளிச்செடி வீட்டில் வளர்க்க கூடாது என்று பிடுங்கி எரிந்து விட்டார்கள்...

மஞ்ச நத்தி எனும் நுனா காய் சட்னி Morinda sp.

 மஞ்ச நத்தி எனும் நுனா காய் சட்னி  இன்று 😍😍



ஹைபீரிடு எனும் மாய உலகில் நாட்டு ரகங்களை சாப்பிடுவதே சவாலாக உள்ளது  அதனால்தான் இதுபோன்று என் தேடல் 



காயை பிஞ்சாக பறித்து சிரிது சிரிதாக நறுக்கி தண்ணீரில் போடனும் இல்லைனா கருத்திடும் 



பத்து பிஞ்சிகளுக்கு மேல் போட வேண்டாம் காய்முற்றியதாக இருந்தால் துவர்ப்பும் கசப்பும் அதிகமாகிடும்


அப்புரம்  விதைகள் நாம் சாப்பிடும் போது  தொந்தரவாக இருக்கும் 


 நல்லென்னை விட்டு வதக்கிய பிறகு 



தேங்காய் சட்னி செய்வது போல் செய்து கொள்ளலாம் புளி சேத்திக்க தேவையில்லை 


சரி இதன் மருத்துவ பயன் பார்போம்ங்க...


உடல் வெப்பத்தை தனிக்கும் கல்லீரல் மண்ணீரல் ஆகியவைகளை சுத்தபடுத்தும்


 சக்கரை அளவை கட்டுபடுத்தும் இரும்பு சக்தியை அதிகரிக்கும்ங்க வயிற்று புன் ஆற்றிடும்ங்க


மூட்டு வலி போக்கி புற்று நோய் வராமல் தடுக்கும் 


உடலில் நோய் எதிர்பு திறனை அதிகபடுத்தும் 


கொஞ்சம் துவர்பு கசப்பு சுவையுடன் தான் இருந்தது சாப்பிடலாம் 


உணவை ருசிபார்து பகிற்ந்தது  


K. M. A. Dhanapal மரங்களை நேசிப்பவன் 


இனைந்தே பயணிப்போம் மரங்களுடன்

மஞ்சணத்தி முழுத்தாவரமும் கார்ப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது. நோயினால் தளர்ந்த உடலை ஆரோக்கியமாக்கும்; உடல் வெப்பத்தை அதிகரிக்கும்.


 இலை, காய், பழங்கள், வீக்கம் கட்டிகளைக் கரைக்கும். மாதவிலக்கை தூண்டும். உடல் வெப்பத்தை கட்டுப் படுத்தும். பட்டை கரப்பான், புண்கள், கழலை போன்றவற்றை குணமாக்கும். வேர், கழிச்சலுண்டாக்கும்.

குழந்தைகளுக்கு ஏற்படும் மாந்தம், கழிச்சல் ஆகியன தீர 5மஞ்சணத்தி இலைகளைப் பசுமையானதாகச் சேகரித்து நீரில் கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். இவற்றை ஒன்றிரண்டாக நசுக்கி ½ லிட்டர் தண்ணிரீல் இட்டுக் காய்ச்சி குடிநீர் செய்து கொண்டு தினமும் காலை மாலை வேளைகளில் 20 மிலி வீதம் உள்ளுக்கு கொடுக்க வேண்டும்.


புண்கள், சிரங்குகள் குணமாக மஞ்சணத்தி இலையை அரைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் பூச வேண்டும்.


பல் சொத்தை குணமாக முதிர்ந்த மஞ்சணத்தி காய்களை சேகரித்து உப்பு நீரில் ஊற வைத்து வெயிலில் காய வைத்து சுட்டு கரியாக்கி சலித்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த தூளால் பல் துலக்கி வரவேண்டும்.


பேதியாக 10 கிராம் மஞ்சணத்தி வேரை நசுக்கி ½ லிட்டர் நீரில் போட்டு ஒரு டம்ளராக சுண்டக் காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும்.


குழந்தை மருத்துவத்தில் மஞ்சணத்தி: 5 மஞ்சணத்தி இலை, ஒரு கொத்து வேப்பங்கொழுந்து, 2 கிராம் சுக்கு, ஒரு தேக்கரண்டி ஓமம் எடுத்துக் கொண்டு முதலில் மஞ்சணத்தி இலை, வேப்பங் கொழுந்தை வதக்கி, இதனுடன் சுக்கு, மிளகு, ஓமத்தை நசுக்கி, 1/2 லிட்டர் தண்ணீர் விட்டு  ஒரு டம்ளராக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 3 தேக்கரண்டி அளவு உள்ளுக்கு கொடுக்க அஜீரணத்தால் ஏற்படும் காய்ச்சல் குணமாகும்.


5 மஞ்சணத்தி இலை, ஒரு கொத்து வேப்பங்கொழுந்து இவற்றை வதக்கி, இதனுடன் ஒரு தேக்கரண்டி சீரகம் ஒரு தேக்கரண்டி ஓமம் ஒரு சிட்டிகை பொரித்த பெருங்காயம் சேர்த்து ½ லிட்டர் தண்ணீரில் இட்டு ஒரு டம்ளராக சுண்டக் காய்ச்சி காலை மாலை இரு வேளைகள் வேளைக்கு 2 தேக்கரண்டி அளவு உள்ளுக்கு கொடுக்க வயிற்று உப்புசம் குணமாகும்.

Common Names in Different Languages (Source: India Biodiversity )

  • English
    Morinda tree
  • Hindi
    औछ Auch,
    आल Aal
  • Kannada
    ಮಡ್ಡಿ Maddi
  • Konkani
    बारतोंडी Bartondi
  • Malayalam
    Manjapavitta,
    Kattapitalavam,
    Pavitta,
    മഞ്ഞപ്പാവട്ട Manjappaavatta,
    Manjanathi
  • Marathi
    बारतोंडी Bartondi
  • Oriya
    Pindra
  • Others
    Indian Mulberry,
    Morinda,
    Noni,
    Togari Wood Of Madras
  • Sanskrit
    अक्षिकिफल Akshikiphala,
    अच्युत Achyuta
  • Tamil
    மஞ்சணாறி Manchanari,
    நுணா Nuna
  • Telugu
    మడ్డి Maddi,
    తొగరు Togaru
  • Urdu
    Togar Mughalai

இன்றைய காலைஉணவு தூயமல்லி அரிசி சாதம்

 இன்றைய காலைஉணவு  தூயமல்லி அரிசி சாதம் 





  துத்தி இலை பொரியல் பருப்பு சாம்பார் 


துத்தி இலையின் அசத்தல் மருத்துவபயன் 


அழற்சியைப் போக்கும் 

மலக்கட்டு ஆசனவாய் எரிச்சல் மூலம்  ஆகியவற்றை குணமாக்கும்ங்க 


நோய் நீக்கி உடலைத் தேற்றும்  உடல் சூடு  குணமாக்கும் 


சிறுநீரை பெருக்கும் துத்தி பூ, இரத்தப் போக்கை அடக்கும் 


இருமலைக் குறைக்கும் ஆண்மையைப் பெருக்கும் குளிர்ச்சி உண்டாக்குமங்க 


இது எல்லா இடங்களிலும் சாதாரமாகவே கிடைக்கும் கீரைதான் 


நல்லென்னையில்   வதக்கி செய்யனும் துவர்ப்பு சுவையுடன் இருக்கும் 


சுவை என்பது சற்று குறைவாக இருந்தாலும் உடலுக்கு ஏற்ற உணவுங்க 


துத்தி இலையை சிரிதாக நருக்கி நம்ம வீட்டில் முருங்கை கீரை செய்வது போல் செய்தால் போதும் 


இனைந்தே பயணிப்போம் மரங்களுடன் 


பாரதி பசுமை சேவை

இயற்கை வழியிலான உணவுகள் வழியிலான மலமிளக்கிகள் யாவை? What are the laxatives through natural foods?

 பப்பாளி, துத்தி, கீரை, வாழை, இயற்கை மலமிளக்கிகள்...

கடுக்காய் பொடி 1  தேக்கரண்டி  1 டம்பளர் நீரில் கரைத்து படுப்பதற்கு முன் குடிக்கவும்                

வெந்தயம்,  கருஞ்சீரகம், ஓமம் இவற்றை பொடியாக்கி1 தேக்கரண்டி 1 டம்பளர் நீரில் கரைத்து குடிக்கவும். இவற்றை குடித்தபிறகு எதுவும் சாப்பிட கூடாது.

 மற்றோரு செலவில்லாத முறை காலை எழுந்தவுடன் 2 பெரிய டம்பளர் நீரை குடிக்கவும் மலசிக்கல் என்பதே வராது 

 மாதுளை பழம் தோல் இரவில் ஊறவைத்து அதிகாலை அந்த நீரை வடிகட்டி சுமார் 400 ml   குடித்தால் நீண்ட நாள் கழிவுகள் வெளியேறும்.

 நெல்லிக்காய் சாறு அதிகாலை குடித்தால் தேங்கியுள்ள கழிவுகளும் வெளியேறும்.

சாம்பாருக்கு பருப்பு வேகவைக்கும் போது ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய் ஊற்றினால் மலமிளக்கி யாக செயல்படும்.

மாவு உணவு (அரிசி & கோதுமை உட்பட தானியம்) தவிர்த்து நார்ச்சத்து உணவுகள் எடுத்தால் நல்ல பலன் கிடைக்கும்.

பசு மாடு போல் சாப்பிட வேண்டும்.

உணவு வாடை பார்த்து அதை அதை அசைபோட்டு மனதை ஒருநிலை படுத்தி உண்ணவேண்டும்.

 எதிரியை அளிக்க வேண்டும் என்றால் அவருக்கு பசிக்காதபோது உணவு கொடு

ஆங்கில பழமொழி.

பசித்து சாப்பிட்டால் மலச்சிக்கல் தவிர்க்கலாம்.

மரங்கள் மண்ணின் வரங்கள்save trees

 🌿🌳இனிய வணக்கம்ங்க.. இன்றைய தினம் இஎஸ்ஐ மருத்துவமனை கல்லூரி முதல்வர் மற்றும்  கண்காணிப்பாளர், தலைமையில்  மருத்துவ மனை உள்பகுதியில்


 மூலிகை வனம்🌵🌿🌳


அமைக்க இடம் ஒதுக்கப் பட்டு நிகழ்வு துவக்கப்பட்டது

ருதம்பரா பவுண்டேசன் நிறுவனர் ஶ்ரீபதஞ்சலிஈஸ்வரன் நிகழ்வுகுறித்து கூறுகையில் பசுமையை அதிகரிக்கும் விதமாக மருத்துவ குணம் மிகுந்த மரங்களை மருத்துவமனை சுற்றிலும் ஆயிரம் மரக்கன்றுகளை நடும்பணி துவக்கி இருப்பது மகிழ்வை தருவதாகவும் நிகழ்வினை ருதம்பரா பவுண்டேசன் சார்பில் நிர்வாகிகள் கேபிள் மணி, டிரீம்டாட்ஸ் சுகுமார், மரம்பொன்னுசாமி,வள்ளிக்கும்மி  குழுவினர் இணைந்து ஒருங்கிணைத்தார்கள்


மரங்கள் மண்ணின் வரங்கள்🌿🙏

🌱🪴🌳🌲🌴🎋🌴🌲🌳🪴🌱

 




சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கோவை இஎஸ்ஐ மருத்துவ மனை ஆயுஷ் சார்பில் யோகா தினம் கொண்டாடப்பட்டது 21/06/2021

 🌿🙏🌸சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கோவை இஎஸ்ஐ மருத்துவ மனை ஆயுஷ் சார்பில் யோகா தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்வை டாக்டர் தமிழ்ச்செல்வன் அவர்கள் துவக்கி வைத்தார் மருத்துவ மனை கண்காணிப் பாளர் டாக்டர் ரவிக்குமார் அவர்கள் தலைமையேற்க நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கோவை ருதம்பரா பவுண்டேசன் நிறுவனர்


🌿🌼யோகா குருஜி ஶ்ரீ பதஞ்சலிஈஸ்வரன்

கலந்து கொண்டு யோகபயிற்சி, ஆற்றல் மிகுந்த சுவாச பயிற்சிகள், முத்திரை களின் நன்மைகள் குறித்தும் இன்றைய வாழ்வியல் சூழலில் நம்மை பாதுகாக்கும் ஆரோக்கியமான இயற்கை  உணவுமுறைகளை நிகழ்வில் கலந்து கொண்ட மருத்துவர்கள்,செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்களுக்கு வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆயுஷ் யோகா மருத்துவர் நந்தினி மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தார் ஒருங்கிணைத்தார்கள்


( நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு அடுப்பில்லா சமையல் முறையில் செய்யப்பட்ட


🌿லெமன்புதினா ஜுஸ்

🥗வெஜ் சாலட்

🍵கவுனி அரிசி நெய்ப்புட்டு

👍எனர்ஜிட்ரைபுரூட்ஸ் லட்டு

ஆகிய சத்துமிகும்  உணவுவகைகளை செய்முறையுடன் ருதம்பரா பவுண்டேசன் சார்பில் வழங்கப்பட்டது.)


நன்றி🌿🌼🙏🌸🌳🪴🌷

எறும்பு தொல்லையா இந்த இயற்கை முறையை பயன்படுத்தி பாருங்கள் Get-rid off ants

 எறும்பு அதிகம் இருக்கும் பட்சத்தில் மஞ்சள் தூள் கரைசல் ஒன்று அல்லது இரண்டு நாள் விட்டு தொடர்ந்து தெளித்து வரவும்.


மூன்று தெளிப்பிற்கு ஒரு முறை வெற்றிலைச் சுண்ணாம்பு பட்டாணி அளவு கலந்து தெளிக்கவும்.


எறும்பு நீங்கிய நிலையில் 3/4 நாட்கள் இடைவெளியில் எல்லாச் செடிகளுக்கும் தெளித்து வரவும்.


இந்த கரைசல் பூச்சிகள் மற்றும் நோய்களை கட்டுப்படுத்தும்.


வரும் முன் காப்பது சிறந்தது.

நிலக்கடலை கஷாயம் ஒரு மகசூல் பெருக்கி - ஒரு பார்வை. Peanut tincture is a yield multiplier - an overview.

ஒரு கைப்பிடி அல்லது 25 கிராம் காய்ந்த அதே சமயம் வறுக்காத நிலக்கடலை சிறிதளவு நீரில் ஒரு நாள் ஊற வைக்கவும்.


ஊறிய பின் அதன் நீருடன் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த நிலக்கடலையை அன்று அரிசி கழுவும் நீரில் ஊற்றி நொதிக்கவிடவும். தினமும் மொத்தம் 10 நாட்களுக்கு அரிசி கழுவும் நீரை நிலக்கடலை கரைசலில் ஊற்றிக் கொண்டு வரவும்.

பருப்பு கழுவும் நீர், பால் பாத்திரம் கழுவும் நீரையும் சேர்க்கலாம்.

பத்து நாட்கள் நொதித்த பின் கரைசலை ஐந்து மடங்கு அல்லது சற்று கூடுதலான நீரில் கரைத்து நிலத்தில்/மண்ணில்/தொட்டியில் ஊற்றவும்.

நிலக்கடலை ஊற வைத்து அரைப்பதாலும் நொதிக்க விடுவதாலும் கடலையில் உள்ள எண்ணை சத்தை குறைக்க உதவி செய்யும்.

திறன் மிகு நுண்ணுயிரி EM பல வகையில் தயார் செய்யலாம். அதில் ஒரு முறை அரிசி கழுவும் நீரையும் பாலையும் சேர்த்து செய்வது. இந்த முறையில் எந்தவித செலவில்லாமல் அரிசி மற்றும் பால் பாத்திரம் கழுவும் நீரை பயனுள்ள வகையில் பயன்படுத்துகிறோம்.

4 - 7 நாட்களில் செடிகளில் மாற்றத்தைக் காணலாம்.

பூக்கள் அதிகம் பிடித்து காய்கள் நன்கு பெருத்து வரும். தோராயமாக ஒன்னேகால் மடங்கிற்கு மேலாக பெரிதாக வளரும். பூச்செடிகளில் வரும் பூக்களும் அவ்வாறே வரும்.

மக்கு சத்து நிறைந்த மண்ணாக இருப்பின் இன்னும் மிக நல்ல பலனை தரும்.

15 நாள் இடைவெளியில் பயன்படுத்தவும்.

திருப்பூர் பிரியா தரும் கூடுதல் தகவல்:

நிலக்கடலையைத் தவிர பூச்சரித்த அல்லது பழைய தேவைப்படாத பருப்பு வகைகள் கைவசம் இருந்தாலும் மேற்சொன்ன சொன்ன முறையில் தயாரித்து பயன்படுத்தலாம். மற்ற பருப்பு வகைகளில் எண்ணைப் பதம் இருக்காது என்பது ஒரு கூடுதல் தகவல்.

Soak a handful or 25 grams of dried unpeeled peanuts in a little water for a day.

After soaking, grind it in a mixer with water.

Pour the ground peanuts over the rice washing water and let it ferment. Drain the rice wash water daily for a total of 10 days and bring to a boil.

Add lentil wash water and milk dishwashing water.

After ten days of fermentation, the solution is diluted five times or slightly more with water and poured into the ground / soil / pot.

Peanuts can be soaked, ground and fermented to help reduce the oil content of the peanuts.

Efficient microbial EM can be prepared in many ways. One of them is to wash the rice with water and milk. In this method we use rice and milk dishwashing water effectively at no cost.

You can see the change in the plants in 4 - 7 days.

The flowers are large and the pods are well inflated. Grows approximately one-fold larger. The same goes for the flowers that come in bloom.

If the soil is nutritious, it will still give very good results.

Use at 15-day intervals.

Additional Information from Tirupur Priya:

Apart from groundnuts, plastered or old unwanted pulses are available but can be prepared and used in the above manner. An additional information is that other legumes do not contain oil.

இயற்கை உணவு Traditional and Natural Food

 இயற்கை உணவு.       

8 மணிநேரம் ஊறவைத்த பாசிப்பயறு, நிலக்கடலை, சுண்டல் உடன் தேன்.



முளை கட்டிய பயறு சாலட்



நாளை ஒரு நாள் எனது வாழ்வியல் பயணம் live with traditional food for one full day இயற்கை வழி வீட்டுத் தோட்டம் - ஒரு தற்சார்பு வாழ்வியல் பயணம்

 அனைவருக்கும் வணக்கம்....


நாளை  ஒரு நாள் எனது வாழ்வியல் பயணம்.....நீங்களும் இணையலாம்...விரும்பினால்.....


* அதிகாலை அலாரம் இல்லாமல் எழுதல்

* இரண்டு டம்ளர் மண்பானை நீர் அருந்துதல்

* தோப்புகரணம் 10

* மூலிகை பல்பொடியில் பல்விலக்குதல்

* கற்றாழை குளியல்

* கண்களுக்கு ஒரு சூரிய குளியல்

* ஆசணங்கள், மூச்சுபயிற்சி, எதுவுமே முடியலயா....10 முறை ஓம் சொல்லலாம்

* நாமே தயாரித்த மூலிகை தேநீர் 

* புஸ்தக வாசிப்பு

* காலை உணவு அத்திப்பழ ஜூஸ்

* மதியம் 50% சாதம், 50% காய் ( மென்று உமிழ்நீரோடு உண்ணுதல் )

* பாரம்பரிய அரிசி பாயாசம் ( அரிசி, வெல்லம், தேங்காய்பால் )

* சூரிய அஸ்தமனத்திற்கு முன் உணவு....

* 16 மணிநேர விரதம் ஆரம்பம்....

* மனதிற்கு பிடித்த பாடல் கேட்பது, அல்லது பாரம்பரிய நடனம் ( நடனம், பாடல் நிகழ்காலத்தில் வாழவைக்கும் )......


நான் ரெடி...நீங்க 👆🤝


இயற்கை வழி வீட்டு தோட்டம் பயிற்சி - 3 தேதி: 19/06/2021 Topic: மண் வளம் அறிவோம் (Soil Science)

 இயற்கை வழி வீட்டு தோட்டம் பயிற்சி - 3☘️🍀🌿🌱🪴🎋🍃🌾

தேதி:  19/06/2021  

நேரம்:3:30 PM to 5:00 PM

Topic: மண் வளம் அறிவோம் (Soil Science)

நடத்துபவர்: திரு. பலராமன் மானேரி

இயற்கைவழி வீட்டுதோட்டம் /Seed Island விதை தீவு

பயிற்சி ஒருங்கிணைப்பாளர்கள்

Mrs. Ajitha Veerapandian

Mrs. Akila Kunalan

Mrs. Priya Rajnarayanan 

ஒவ்வொரு வாரமும் நடைபெறும். அனைவரும் பங்கேற்று வீட்டுக்கு ஒரு விவசாயி ஆகலாம்

குறிப்பு: பயிற்சி சரியாக 3.30 PM ஆரம்பித்து  5 PM முடிந்து விடும்.

SeedsIsland Team is inviting you to a scheduled meeting.



https://youtu.be/XSWHLCCtbpI


Or


Join Zoom Meeting

https://us02web.zoom.us/j/9470331037?pwd=aDR0bi9NeFN1ME9sZ1VkQ2dqL0JHdz09


Meeting ID: 947 033 1037

Passcode: nF5j3H

Or

https://www.facebook.com/seedisland.seedisland/

சர்வ சுகந்தி மரம் Pimenta dioica | மருத்துவ பயன்கள் நிறைந்த சர்வ சுகந்தி மரம் | Allspice: Health Benefits | What are the health benefits of pimento?

சர்வ சுகந்தி மரம்  Pimenta dioica

    மேற்கிந்திய தீவுகள், (ஜமைக்கா)    உன் தாயகம்!.     உணவில் நறுமணம் கூட்டும் உன்னத இலை மரம் நீ! 59.அடி வரை வளரும் அழகு மரம் நீ!   குளிர் பிரதேசங்கள் உன் கூடாரம்! சோம்பு, ஏலக்காய்,கிராம்பு, பட்டை இவைகளின் நறுமணங்களை நீ தருவதால் ‘ஆல் ஸ்பைஸ்’ மரமானாய்!.

    அமெரிக்க,ஐரோப்பிய நாடுகள் எனப் பல்வகை நாடுகளில் சமையலில் பயன்படும் இலை மரம் நீ!  ஆல் மசாலா, பலமசாலா,ஜமைக்காய் பெப்பர்  எனப்பல்வகைப்பெயர்களில் விளங்கும் நல்வகை மரம் நீ!ஜீரணசக்தி,

    வயிற்றுவலி,பல்வலி, மலச்சிக்கல்,தோல் வியாதி,வாய் துர்நாற்றம், வாயுத்தொல்லை,முடி வளர்ச்சி, உடல் ஆரோக்கியம்,எலும்பு முறிவு,ரத்த சர்க்கரை அளவு குறைப்பு,நீரிழிவு, இதய நலம்,வளர்சிதை மாற்றம் ஆகியவற்றிற்கு ஏற்ற அற்புத நிவாரணி நீ!    பிரியாணி சாப்பாட்டுக்குப் பெருமை சேர்க்கும் நறுமண நல்மரமே!

    தென்னந்தோப்புகளில் வளர்க்கப்படும் ஊடுபயிரே! ஐந்து ஆண்டுகளில் பலன் கொடுக்கும் வேளாண் மரமே!   விதைகள் &பதியன் முறை மூலம் இனப்பெருக்கம் செய்யும் இனிய மரமே!மிளகு வடிவ கனி கொடுக்கும் இலை மரமே!பச்சைநிற காய் கொடுக்கும் பசுமை மரமே!வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கப்படும் நாட்டு மரமே!நறுமணம் மிகுந்த கற்பகமே!இரும்புசத்து,பொட்டாசியம்,தாமிர சத்து மிகுந்த மருந்து மரமே!

மாடித்தோட்டத்தில் வைக்கும் பைகளின் அளவு என்னென்ன செடிகள் வைக்கலாம்? Growbag sizes and selected plants for that growbags

12இஞ்ச் × 12இஞ்ச்

 (ஒரு அடிக்கு ஒரு அடி )

இந்த அளவுள்ள பையில் முள்ளங்கி, பீட்ரூட், கேரட், தக்காளி, மணத்தக்காளி கீரை, புளிச்சைக் கீரை, இஞ்சி, மா இஞ்சி, மஞ்சள், உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ், காலிஃப்ளவர் போன்ற செடிகளும் கற்பூரவள்ளி எனும் ஓமவல்லி, துளசி, பிரண்டை போன்றவற்றையும் வைக்கலாம். 


12 இஞ்ச் × 15இஞ்ச்

 ஒரு அடிக்கு ஒன்னேகால் அடி

தக்காளி, வெண்டை, கத்தரி, மிளகாய், கொத்தவரை போன்றவை ஒரு செடி மட்டும் வைக்கலாம். திருநீற்றுப்பச்சை, தூதுவளை போன்ற மூலிகைகள் வைக்கலாம். 


 

15 இஞ்ச் ×15 இஞ்ச்

 ஒன்னேகால் அடிக்கு ஒன்னேகால் அடி


 இதில் கத்தரி, வெண்டை, மிளகாய், கொத்தவரை, குடைமிளகாய் போன்ற   அதிகப்படியான காய்கள் காய்க்கும் செடிகளை வைக்கலாம். இரண்டு செடிகள் வரை வைக்கலாம். சேனைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, 

சர்க்கரைவள்ளி கிழங்கு

 போன்ற கிழங்கு வகைகளையும் இதில் வைக்கலாம்.

தூதுவளை, பிரண்டை போன்ற மூலிகைகள் இதில் தாராளமாக வளரும். 


15 இஞ்ச் × 9 இஞ்ச்

 கீரை பை கீரைகளில் சிறுகீரை, அரைக்கீரை, முளைக்கீரை, தண்டுக்கீரை, புதினா, வெந்தயம், கொத்தமல்லி, வெங்காயம் போன்ற அனைத்து சிறு வேர் அமைப்பு உள்ள கீரை வகைகளை வைக்கலாம்.

குறிப்பாக வெங்காயம், பூண்டு போன்றவைகளை  இதில் நன்றாக வளர்க்கலாம்.


18 இஞ்ச் ×18 இஞ்ச் 

( ஒன்றரை அடிக்கு ஒன்றரை அடி )


இதில் பாகற்காய், புடலங்காய், பீர்க்கங்காய், சுரைக்காய், சௌசௌ, அவரைக்காய் போன்ற கொடிக்காய் வகைகளையும், ரோஜா செடிகள்,  செம்பருத்தி போன்ற நீண்ட நாட்கள் வாழக்கூடிய பூ வகைகளையும் வைக்கலாம் , குண்டுமல்லி, முல்லை, போன்ற வகைகளை கொடியாகப் படர விடாமல் குத்துச் செடிகளாக கவாத்து செய்து வளர்க்கலாம். அகத்திக்கீரை, தவசிக்கீரை இரண்டுக்கும் இந்த அளவு மிகப் பொருத்தமானது.


24 இஞ்ச் × 24 இஞ்ச்


 இரண்டு அடிக்கு இரண்டு அடி


இதில் கொய்யா, மாதுளை, எலுமிச்சை, சப்போட்டா, வாழை, கறிவேப்பிலை, முருங்கை  போன்ற மர வகைகளும் மற்றும் பூச்செடிகளில் மல்லிகை வகைகளையும்,  திராட்சை கொடியையும் வளர்க்கலாம்...

குறை சொல்வதையும் எவ்வளவு அழகாக கேட்பவர் மனம் நோகாமல் சொல்கிறார் பாருங்கள் giving feedback without hurting

 நண்பர் ஒருவர்  தனது இன்னொரு நண்பரை விருந்துக்கு அழைத்து தடபுடலாக விருந்து அளித்தார்.

விருந்து முடிந்ததும் தாம்பூலமும் அளித்தார்.


பின்  விருந்து உண்டவரிடம்   "தளிகை( சமையல் ) எப்படி இருந்தது "

என்று கேட்டார்.


அதற்கு  அவர்  சிரித்துக் கொண்டே


" கண்ணமுது  கோவில் ,

கறியமுது  விண்ணகர் ,

அன்னமுது  வில்லிப் புத்தூர் 

ஆனதே ,

எண்ணும் சாற்றமுது  மல்லை ,

குழம்புமது  குருகூர் ,

பருப்பதனில்  திருமலையே  , பார் "


என்றார்.


உடனே நமது நண்பர் 

 "ஆஹா நம் வீட்டுச் சமையல் திவ்ய தேசங்களுக்கு ஒப்பாக அருமையாக

இருக்கிறது என்று கூறி விட்டாரே  "என்று

மிக மகிழ்ச்சி அடைந்தார்.


இருந்தாலும் அந்தப் பாடலின் உண்மைப் பொருள் அறிய விரும்பிய அவர்

இன்னொரு வைணவ நண்பரிடம் கேட்டார்.


இதோ அந்த வைணவ நண்பர் கூறிய

பொருள்.


கண்ணமுது என்றால் பாயசம்.

ஸ்ரீரங்கம்  கோவிலில்  பாயசம் மண்சட்டியில்தான் வைப்பார்களாம்.

அதனால்  அடியில் சற்று அடிப் பிடித்து

இருக்குமாம். அது போல் நண்பர் வீட்டுப் பாயசமும் சற்று அடிப் பிடித்து  

இருந்ததாம்.


கறியமுது  என்றால் காய்கறிகள்.

விண்ணகரில் இருப்பவன்  உப்பிலியப்பன். அவனுக்கு நைவேத்தியம் எல்லாமே  உப்பில்லாப் பண்டம்தான்.

அதாவது கறியமுதில் உப்பில்லை

என்பதே கறியமுது விண்ணகர்.


அன்னமது வில்லிப் புத்தூர்.

ஸ்ரீ வில்லிப் புத்தூர் கோவிலில் அன்னம் குழைந்திருக்குமாம்.

அது போல் நண்பர் வீட்டு சாதம் குழைந்துள்ளது.


சாற்றமுது மல்லை.

மல்லை  என்றால் கடல்.

கடல் நீர் உப்பு.

இங்கும்  சாற்றமுது ( ரசம் .நீராகத்தானே இருக்கும் ).அதில்  உப்பு அதிகம்.


குழம்பது குருகூர்.

குருகூர்  என்றாலே  புளி.

அதாவது குழம்பில் புளி அதிகம்.


பருப்பதில் திருமலை.

திருமலை எங்கும் கல்தான்.

இங்கும் பருப்பு முழுதும் கல்.


பாடல்  எப்படி ?

குறை சொல்வதையும் எவ்வளவு அழகாக

கேட்பவர் மனம் நோகாமல் சொல்கிறார் பாருங்கள்.இதுதான் அக்கால மரபு.

இதைப் படித்ததும் எனக்கு மிகப் பிடித்தது.இதோ பகிர்ந்தேன் உங்களிடம்.