Showing posts with label gardening ideas. Show all posts
Showing posts with label gardening ideas. Show all posts

உரமோ வளர்ச்சியூக்கியோ எதுவாக இருந்தாலும் குறைந்தது 15-20 நாட்கள் இடைவெளியில் தான் தரவேண்டும் Fertilizing techniques for plants gardening tips

 எத்தகைய உரமோ வளர்ச்சியூக்கியோ எதுவாக இருந்தாலும் குறைந்தது 15-20 நாட்கள் இடைவெளியில் தான் தரவேண்டும். 


ஒவ்வொரு இடுபொருளையும் முறை வைத்து மாற்றி மாற்றி தாருங்கள்.


கொடிவகைகளில் எளிதில் பூஞ்சாண தொற்று ஏற்படும். காலைவேளையில் 4/5 நாட்கள் இடைவெளியில் மஞ்சள்தூள் கரைசல் தொடர்ந்து தெளித்து வரவும்.


கொடி என்று வரும்போது வழக்கத்தைவிட இரண்டு மூன்று மடங்கு பெரிய பை அல்லது பிரிட்ஜ் அல்லது பெரிய தெர்மோகோல் பெட்டியை பயன்படுத்தவும்.


கொடி ரகங்களுக்கு இலைமக்கு அல்லது தொழுவுரம் 15/20 நாள் இடைவெளியில் சிறிய அளவில் தொடர்ந்து தருவது நல்ல பலனை கொடுக்கும்.


பெரிய தொட்டி வேர் வளர்ச்சிக்கு உதவும். வேர் வளர்ச்சியை சார்ந்து புதிய கொடி உருவாகி பூத்து காய்க்கும். மேலுரம் கொடி வளர்ச்சி, பூத்து காய்ப்பதற்கு துணைபுரியும்.


அளவிற்கு மீறிய இடுபொருள் குறைந்த கால இடைவெளியில் தருவது எந்த செடிக்கும் நல்லதல்ல.

இயற்கை வழி வீட்டு தோட்ட பயிற்சி - 9☘️🍀🌿🌱🪴🎋🍃🌾 Home gardening aadi pattam thedi vithai

 இயற்கை வழி வீட்டு தோட்ட பயிற்சி - 9☘️🍀🌿🌱🪴🎋🍃🌾



Topic: ஆடிப்பட்டம் தேடி விதை - கிழங்கு நடவு முறை


* கிழங்கு வகைகளை வீட்டு தோட்டத்தில் எவ்வாறு நடவு செய்து அதிக மகசூல் எடுப்பது. 

* அதலைகாய், பழுபாகல் வீட்டு தோட்டத்தில் நடவு முறை.  செய்ய கூடியவை செய்ய கூடாதவை எவை.


Mr. Balaraman Maneri

Mrs.V.Priya Rajnarayanan 


பயிற்சி ஒருங்கிணைப்பாளர்கள்

Mrs. Ajitha Veerapandian

Mrs. Akila Kunalan


ஒவ்வொரு வாரமும் நடைபெறும். அனைவரும் பங்கேற்று வீட்டுக்கு ஒரு விவசாயி ஆகலாம்



https://youtu.be/bMtLZfTHzPc


Gardening Tips to remove ants Benefits of Turmeric water

 சிவப்பு எறும்பு என்று வரும் போது சிறிய பெரிய வகை உள்ளது. வீட்டில் அதிகமாக இனிப்பு பண்டங்களில் சிறிய வகையே பெரும்பாலும் காணப்படும். இந்த வகை செடிகளில் காணும் போது அவை செடியில் உள்ள பூ, காய்களை அரித்துண்ணும்.


பெரிய எறும்பில் முசுறும் ஒன்று. அதிகமாக மாமரத்தில் காணப்படும். இவை மற்ற பூச்சி புழுக்களை உண்ணும் தன்மை கொண்டது.


வெண்டையில்  சிறு  எறும்பு பூக்களை காய்களை பாதிக்கிறது என்றால் மஞ்சள் தூள் கரைசல் நல்ல பலனைத் தரும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் பிரச்சனை தீரும் வரை தெளிக்கவும். நான்கைந்து தெளிப்பிற்கு ஒரு முறை மஞ்சள் தூளுடன் பட்டாணி அளவு வெற்றிலைச் சுண்ணாம்பு கலந்து ஒன்று அல்லது இரு முறை தெளிக்கவும். சுண்ணாம்பின் காரத்தன்மை அதாவது எரிக்கும் சக்தி பூச்சி புழுக்களை கட்டுப்படுத்தும். சுண்ணாம்பை அளவிலும் சரி அடிக்கடி தெளிப்பையும் கண்டிப்பாக தவிர்க்கவும்.


உப்பு களைச் செடிகளை கட்டுப்படுத்த பயன்படுத்துவர். ஆகையால் நீங்கள் எறும்பிற்காக பயன்படுத்த விரும்பினால் உட்பு கரைசலை களைச் செடி மேல் தெளித்து பார்த்த பின் முதன்மை செடிக்கு தெளிக்கவும். உப்பு கரைசல் நீர்த்த நிலையில் இருப்பது மிக அவசியம். தொடர்ந்து பயன்படுத்தும் போது வேறு விளைவுகள் ஏற்படுத்துமா என்பது தெரியாது.


மஞ்சள் தூள் கரைசல் எறும்பை கட்டுப்படுத்தும். வெண்டையில் ஏற்படும் மஞ்சள் தேமல் நோயை கட்டுப்படுத்துவதுடன் வெயிலுக்கு செடியை கடினப்படுத்தவும் செய்கிறது.