பல் சம்மந்தமான பிரச்சனைகள் அனைத்தும் தீர எளிய மூலிகைபல்பொடி For all dental problems simple herbal toothpaste

 பல் சம்மந்தமான பிரச்சனைகள் அனைத்தும் தீர  எளிய  மூலிகைபல்பொடி



 தயாரிக்கும் முறை :-

🌿🍃🍀☘️🥗🌳☘️🍀🍃🌿


 பல்பொடி தயாரிக்க😁


 தேவையான பொருட்கள் :-


கிராம்பு பொடி                - 25 கிராம்

கடுக்காய்  பொடி           - 40

 கிராம்

ஆலம் பட்டை பொடி.    - 25

அக்ரகாரம் பொடி          -10 கிராம்

நாயுருவி வேர் பொடி  - 25 கிராம்

கல் உப்பு பொடி              - 10 கிராம்


இந்த பொருட்கள் அனைத்தும் நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும் . இந்த மூலிகைகளை பற்றி 1 நிமிடம் பார்த்த பின்பு பல்பொடி தயாரிக்கும் முறை பற்றி பார்ப்போம்..


1 . கிராம்பு -


பற்றி அனைவருக்கும் தெரியும் ..பல்வலியை சரிசெய்து பற்களில் உள்ள கிருமிகளை அழிக்கும்.


2 . கடுக்காய் -


 அந்த காலத்தில் நம் முன்னோர்கள் கடுக்காய் பயன்படுத்தி தான் பெரிய பெரிய கட்டிடங்களை கட்டினார்கள் ..கடுக்காய் சேர்த்து கட்டப்பட்ட கட்டிடம் அவ்வளவு எளிதில் உடைபடாதாம்..கடுக்காய் வைத்து பல் துலக்க பல் வலிமை பெறும்.


3 . அக்ரகாரம் -


 அக்ரகாரம் வைத்து பல் துலக்க ஆடின பல் கூட ஆடாமல் நிற்கும் என்று சித்தர்கள் கூறுகிறார்கள் . மேலும் அக்ரகாரம் நம் உடலில் உள்ள நரம்பு களையும் வலுபடுத்த கூடியது ..அதுமட்டுமல்லாமல் பல் வலியையும் சரிசெய்ய கூடியது..


4. ஆலம்பட்டை


ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி என்பது மூத்தோர் வாக்கு. ஆலமரப்பட்டை பற்களின் இறுகளை பலப்படுத்தும்.


5 . நாயுருவி வேர் -


 நாயுருவி பற்றி நாம் பல பதிவுகளில் பார்த்து உள்ளோம்.. நாயுருவி வேர் பற்களால் கடித்து பல் முழுவதும் பட்ட உடனே ஓரு சிறு கல்லை எடுத்து கடிக்க அந்த கல் உடைபடும் .. அந்த அளவுக்கு பற்களை உடனே வலுபடு்ததும் சக்தி இந்த நாயுருவிக்கு உண்டு.

முகவசீகரம் தன்மை அதிகரிக்கும்.


6. இந்துப்பு -


இந்துப்பு பற்றி தெரியாத நபர்களே கிடையாது . நம் முன்னோர்கள் உப்பை பயன்படுத்தி தான் பற்களை துலக்கினார்கள் ...


செய்முறை :-😀

ஆறு பொருட்களில் உப்பை மட்டும் தனியாக பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள் ... மற்ற மூலிகைகளை மேற்கூறிய அளவுகளில் கலந்து ஓரு கண்ணாடி பாட்டலில் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள் ..காலை எழுந்தவுடன் இந்த பற்பொடியை சிறிது எடுத்து  பல் துலக்க ஆரம்பியுங்கள் ...

வாயில் தான் துவங்குது நம்ம ஆரோக்கியம்... தோழமைகளே...


ருதம்பரா யோகா கோவை🍁

கோணிபுளியங்காய் / கொடுக்காபுளி/ சீனிப்புளியங்காய் 90's Kids favorite fruit

 கோணிபுளியங்காய்

🌿🙏🌸🌼🍁🥒🥗🍉🥭🌿


30 ஆண்டுகளுக்கு முன் இந்த சுவையை உணரா நபர்கள் இல்லை...துவர்ப்பு இனிப்பு புளிப்பு கலந்த அற்புத சுவை....😋😋😋

ஆப்பிளை விட அதிக விலை கொடுக்காபுளி எனப்படும் சீனிப்புளியங்காய்

கோவை பெரியகடை வீதியில் மூலிகைகடைக்கு செல்லும் வழியில் இதை பார்த்ததும் வாங்கும் ஆசையில் விலையை கேட்டேன் கிலோ 250 ரூபாய் எனக்கூறினர். கலிபோர்னியாவின்

ஆப்பில்170.ருபாய் தான் .


🍋கிராமங்களில் பரவிகிடக்கும் இந்த மரம் இன்று நகரங்களில் எட்டா கனியாக இருக்கிறது.


👌ஆயுர்வேதத்தில் கொடுக்கா புளியின் மருத்துவ குணங்கள் நன்கு அறியப்பட்டு பரிந்துரைக்கப் படுகிறது.


🍅செரிமானம் மேம்படுத்தவும், கீல்வாதம் மற்றும் சில கருப்பை நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இது புண்களை குணப்படுத்தும்.


🍁வாத நோய் மற்றும் மூட்டு வலிக்கு மருந்தாகக் கொடுக்கப்பட்டுள்ளது. 


🌸நீண்ட நாள் நோய்வாய் பட்டு சரியானதும் உடல் சூட்டில் பேதி ஆகாமல் இருக்க கொடுக்காபுளி தரப்படுகிறது. இது ஒரு சிறிய புளிப்பான பழம். 


🍒உடல் எடை குறைய மிகவும் அற்புதமான மருந்தாக ஆயுர்வேதம் மற்றும் நாட்டுப்புற மருத்துவம் பரிந்துரைக்கிறது. 


🌿குடல் அழற்சி, கல்லீரல் பெருங்குடல் தொடர்பான எந்த பிரச்சனைக்கும் இது நல்ல மருந்து.


இயற்கை வாழ்வியல் வழி பயணிப்போம்....


🍁பதஞ்சலிஈஸ்வரன்

ருதம்பராயோகாகோவை

ஜில் ஜில் கூல் மண்ணில் பிரிட்ஜ். Fridge made of clay

 ஜில் ஜில் கூல்

மண்ணில் பிரிட்ஜ்...

🌿🌳👏🙏👌🌼👆🧊💧


இனி ஓசோனையும்,மனித உறுப்புகளையும ஓட்டை போடும் எலெக்ட்ரிக் பிரிட்ஜ் இனி தேவை இல்லை...மின்சார கட்டணமும் மிச்சம்.


மண்பானை தொழில் செய்வோர் கால மாற்ற நிலையை கண்டு நம் நிலையை சற்று மாற்றி அமைத்தல் அவசியம்.


1,500 ரூபாய் ஒரு பானை பிரிட்ஜில் 5 கிலோ வரை வைக்கலாம்


பலர் இப்போது மின்சாரத்தில் இயங்கி ஓசோனையும், மனித உறுப்புகளையும் நோய் தந்து ஓட்டை போடும் பிரிட்ஜ் உபயோகத்தை தற்சார்பு அறிவாளிகள் நிறுத்த தொடங்கி தற்போது உபயோகப் படுத்துவது இல்லை.


மண் பானை போலதான் !

பீன்ஸ், முட்டைக்கோஸ் தவிர மற்றவை எல்லாம் அப்படியே புதியதாக உள்ளது. 


தக்காளி + மிளகாய் 10 நாள்.


வெண்டைக்காய் + கருவேப்பிலை + தேங்காய் 12நாள்


சாலட் காய் கறிகள்

லெட்யூஸ், க்ரீன் பெப்பர், சோளம் 14 நாள்


இஞ்சி+பெல்லாரி+நாட்டு வெங்காயம் 2 மாதம்


உருளை+மரவள்ளி

3 மாதம்


கத்திரிக்காய்க்கு மட்டும் ஒரு பானை. 

16 நாள், அதன் பிறகு ஒன்று ஒன்றாக அழுகுகிறது.


பானை வாயை ஈரத்துணி போட்டு மூடி வையுங்கள்.


உடல் கெடாது.

மனம் கெடாது.



திருநீலகண்டர் ஸ்டோர்ஸ் மண்பொருள் விற்பனையகம் 

கருமத்தம்பட்டி கோயமுத்தூர்-641659

அலைபேசி

8015032612.


கோவையில்

சிங்காநல்லூரில்....

ருதம்பரா யோகா மையம்

அடுப்பில்லா சமையல் செய்து அசத்தும் NGR பள்ளி ஆசிரியர்கள்

அடுப்பில்லா சமையல் செய்து அசத்தும் NGR பள்ளி ஆசிரியர்கள் 🌿🙏🥥🍵🥗🌼🌸🌿🍅🥒🍋


              23.4.2021வெள்ளிக்கிழமை கோவை காமராஜர் சாலை, தியாகி NGR நினைவு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் பங்குபெற்ற அடுப்பில்லா சமையல் பயிலரங்கம் பள்ளியில் நடைபெற்றது. 


          மாணவ, மாணவியர் களுக்கான ஆரோக்கிய வாழ்வியலை கொண்டு செல்லவும் நமது பாரம்பரிய உணவுமுறை களையும் ஆரோக்கியம் தரும் அடுப்பில்லா சமையல் உணவுகளையும் நிகழ்வில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு பயிற்சியாக வழங்கப்பட்டது. 


      ஒவ்வொரு இல்லங் களிலும் அடுப்பில்லா உணவுகளை கொண்டு செல்ல ஆசிரியர்கள் மிக ஆர்வமுடன் கலந்து கொண்டனர். நல்ல தொரு நிகழ்வாக அமைந்தது.  20 வகையான இயற்கை உணவுகளை  செய்முறை பயிற்சியுடன் கற்றுத் தரப்பட்டது.  நன்றி🍁


நிகழ்வில் கற்றுதரப்பட்ட  மதிய உணவாக வழங்கப்பட்ட இயற்கை உணவு வகைகள்...


அருகம்புல் ஜுஸ்

லெமன்புதினா ஜுஸ்

முக்கனி சாலட்

வல்லாரை கீர்

எனர்ஜிலட்டு

நுங்கு பாயாசம்

வேர்க்கடலை சாலட்

வாழைப்பூ பொரியல்

பீட்ரூட் பேபிகார்ன் சாலட்

பூசணி வெள்ளரி பச்சடி

அரசாணிக்காய் ஊறுகாய்

கம்பு அவல்பொங்கல்

சிவப்பரிசி காரப்புட்டு

பூங்கார் இட்லி

பாசிபருப்பு வடை

தேங்காய் சாதம்

தூயமல்லி தயிர் சாதம்

மாப்பிள்ளை சம்பா ஸ்வீட்

சோள அவுல் பிரயாணி

கொடாம்புளி பானகம்


அன்னமே எண்ணம்🌿🙏

அன்னம் பரபிரம்மம்🌼👏


🍁ஶ்ரீபதஞ்சலி ஈஸ்வரன்.

ருதம்பரா பவுண்டேஷன் கோவை.

அழகான மண்பாண்டங்களும் அதன்பயன்களும் Benefits of earthen pots

 🌿🙏 *அழகான மண்பாண்டங்களும் அதன்பயன்களும்....


நம் பாரம்பரிய அடையாளங் களுள் ஒன்றான பொங்கல் கொண்டாட்டத்தில், புத்தாடை உடுத்தி, வாசலில் கோலமிட்டு,  புதிய மண் பானையில் பச்சரிசியால் பொங்கலிடுவது வழக்கம். இப்படிப் பொங்கல் திருநாள் மட்டுமல்ல...


   முந்தைய தலைமுறை வரை அன்றாடப் பயன் பாட்டில், மண்பாண்டங்கள் முக்கிய இடம் வகித்தன. ஆனால், இன்றைக்கு 'நாகரிகம்' என்ற பெயரில், அவற்றை யெல்லாம் மறந்து விட்டோம். 


               பொங்கலன்று கூட அலுமினியம், எவர்சில்வர், நான்ஸ்டிக் பாத்திரங்களில் கடமைக்காகப் பொங்கல் வைப்பதே பெரும் பாலும் நடக்கிறது.


       அண்மைக் காலமாக, மக்களிடையே பாரம்பர்ய உணவு வகைகள் மீதான ஆர்வம் அதிகரித்து வருகிறது. மண்பானையில் சாதம், மீன்குழம்பு, ஆப்பம், பணியாரம் எல்லாம் செய்கிறார்கள். இவற்றைச் சமைக்க அலுமினியம், காப்பர், எவர்சில்வர் பாத்திரங்களுக்குப் பதிலாக மண்பாண்டங் களையே பயன்படுத்து கிறார்கள்.


           ஹோட்டல்களிலும் மண்பாண்டங் களில் சமைத்துப் பரிமாறுவதை வாடிக்கை யாளர்கள் பெரிதும் விரும்புகின்றனர். 

உண்மையில், நம் பாரம்பரிய மண்பானைச் சமையலில் அப்படிஎன்னதான் இருக்கிறது? அதை நம் முந்தையத் தலை முறை கொண்டாட என்ன காரணம்?????...


"முன்பெல்லாம், நாம சமைக்கிற பாத்திரம் மட்டுமில்லாம, தண்ணீர் பாத்திரத்துல இருந்து சாப்பிடக்கூடிய தட்டு வரைக்கும் எல்லாமே மண் பாத்திரங்கள்தாம். இரும்பு, பித்தளை, வெண்கலம்னு என பல பாத்திரங்கள் வந்தாலும் அதை வாங்குற சக்தி இல்லாதவங்களுக்கு கையில கிடைச்ச மண்ணைப் பிசைஞ்சி செஞ்ச பாத்திரங்கள்தான் வரப்பிரசாதமா இருந்துச்சு. ஆனா, இந்த நாகரிக காலத்துல, கிராமங்கள்ல கூட மண் பானையில சமையல் செய்றது குறைஞ்சுபோச்சு. அலுமினியப் பாத்திரம், எவர்சில்வர் பாத்திரங்கள் தான் சமைக்கிறாங்க. 


மண்பானையில சமைச்சாத்தான் உணவோட உண்மையான ருசி தெரியும். அதை சாப்பிட்டுப் பார்த்தவங்களுக்கு அதோட அருமை புரியும். மண் பாத்திரத்துல சமைக்கிற உணவு சீக்கிரமா கெட்டுப் போகாது. குறிப்பா மண் பானையில வைக்கிற மீன் குழம்புக்கு ஈடு இணை

கிடையாது. ஒரு வாரம்கூட கெட்டுப் போகாம இருக்கும். மத்த பாத்திரங்கள்ல வைக்குற உணவுப் பொருள்கள், வெயில்ல நீர்த்துப் போயிரும். ஆனா, மண்பானை யோட தன்மையால அது நீர்த்துப் போகாது.  


மண்பானையோட அருமையை உணர்ந்து, இன்னைக்கு நட்சத்திர ஹோட்டல்கள்கூட மண்பானைச் சமையல்ல அசத்துறாங்க. நகரங்கள்ல சில ஓட்டல்கள்ல, 'மண்பானை சமையல்னு' போர்டுவெச்சு மக்களை ஈர்க்குறாங்கஇப்படி ஒருபக்கம் மண்பானை மேல மக்களுக்குக் கவனம் திரும்பி இருக்கிறது வரவேற்கக்கூடியதுதான். அதேமாதிரி எல்லாரும் நம் முன்னோர்கள் அனுபவத்துல சொன்னதை உணரணும். அதுமட்டும் இல்லாம, மண்பானைத் தண்ணி குடிச்சா நோய் எதுவும் வராது; அதனால மண்பானையைப் பயன் படுத்துங்க. அதே போல, தை முதல் நாள்ல மண் பானையில பொங்கல் வெச்சு கொண்டாடுறது தான் நம்ம மரபு. அதை மறக்கக் கூடாது" ங்க...


மண்பானையில் சமைத்துச் சாப்பிடுவதால், உடலுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும்....???


``மண்பானையில் வைக்கும் பொங்கலின் ருசி அலாதியானது. ஆனால், இன்றைக்கு எவர்சில்வர் பாத்திரங்கள்லயும் குக்கர்லயும்தான் பொங்கல்வைக்கிறோம். எவர்சில்வர், நான் - ஸ்டிக் பாத்திரங்களில் செய்யக்கூடிய சமையல் உடலுக்குப் பாதிப்புகளை உண்டாக்கும்"  மண்பானையில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பல பல....


"சத்துகளுடன், நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கக்கூடியவை இயற்கை உணவுகள். அவற்றை முறையாகச் சமைத்து உண்ணும்போது அதன் முழுச்சத்தும் நம் உடலுக்குக் கிடைக்கும்.  மண்பானைச் சமையல் என்பது மரபு மட்டுமல்ல, உணவின் தன்மை மாறாமல், சுவையை அதிகரிக்கக்கூடியது. மண்பானைப் பாத்திரத்தில் சமைக்கப்படும் உணவு எளிதில் செரிமானாகும்.  இப்போது கிடைக்கும் பாத்திரத்தில் உலோகத்தன்மை இருப்பதால், உணவின் தன்மையை மாற்றி விடுகிறது. 


      பொதுவாக, உணவைச் சமைக்கும்போது, உணவில் உள்ள தாதுக்கள் உள்ளிட்ட முக்கியமான சத்துகள் ஆவியாகிவிடும். குறிப்பாக, பச்சைக் காய்கறிகளில் உள்ள குளோரோஃபில் (Chlorophyll) எளிதில் ஆவியாகிவிடும். ஆனால், மண்பானையில் சமைக்கும் போது அதிலுள்ள சத்துகள் வீணாகாமல் அப்படியே கிடைக்கும். 


      மண்பானையில் உள்ள நுண் துளைகளால் உணவில் வெப்பம் சீராகவும், சமநிலையிலும் ஊடுருவும்.  இதனால் மண் பானைகளில் சமைக்கும் உணவு ஆவியில் வேகவைத்த உணவைப் போன்ற தன்மையைப் பெறும். இது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. 

மண்பானைச் சமையலுக்கு அதிக எண்ணெய் தேவைப்படாது. அது உணவுக்குத் தேவையான எண்ணெயை மட்டுமே எடுத்துக்கொள்ளும். இதுவும் உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியக் காரணம்.


இன்றைக்கு நவீன வாழ்க்கை முறையில் சமைக்க ஒரு பாத்திரம், சூடாகப் பராமரிக்க ஹாட்பாக்ஸ், உணவு கெட்டுப்போகாமல் இருக்க  ஃபிரிட்ஜ் எனத் தனித் தனியாகப் பொருள்களைப் பயன்படுத்துகிறோம். ஆனால், இவை எதுவும் இல்லாத காலத்திலும் மண்பானையே ஓர் இயற்கை ரெப்ஃரிஜி ரேட்டராக இருந்தது. இதில் உள்ள சிறிய நுண் துளைகள் வழியே அதன் உள்ளே இருக்கும் நீர் தொடர்ந்து ஆவியாகிக் கொண்டேயிருக்கும். பானையின் வெப்பமும், பானையின் உள்ளே இருக்கும் நீரில் உள்ள வெப்பமும் தொடர்ந்து ஆவியாதல் மூலம் வெளி யேற்றப் படுவதால் உள்ளே இருக்கும் நீர் குளிர்ந்த நிலையிலேயே இருக்கும். எனவே, ஃப்ரிட்ஜில் இருக்கும் நீர் பனிக்கட்டி யாவது போன்று, பானையில் இருக்கும் நீர் எந்த நிலைக்கும் மாறாது. 


  அதேபோல, மண்பானை யில் சமைத்த உணவை அடிக்கடி சூடுபடுத்தத் தேவை யில்லை. மற்ற பாத்திரங்களைவிட சீரான வெப்பநிலையை அதிகநேரம் பராமரிக்கும். அதனால், மண்பானையில் சமைக்கும் உணவு நீண்ட நேரம் கெடாமல் இருக்கும். 


மேலும், மண்பானை நன்மை செய்யும் பாக்டீரியாக்களை அதிகரிக்கும். இதனால் தான் அந்தக் காலங்களில் மீன் குழம்பை ஒரு வாரம் வரைகூட வைத்திருந்து சாப்பிடு வதால் எந்தப் பிரச்னையும் ஏற்பட்ட தில்லை.  


மண்பாண்டங்கள் உணவில் உள்ள அமிலத்தன்மையைச் சமன்படுத்தும் தன்மை கொண்டவை. நல்ல பசியையும் நல்ல தூக்கத் தையும் கொடுக்கும். மலச்சிக்கல் வராமல் தடுக்க உதவும். குழந்தை இன்மைப் பிரச்னை ஏற்படாமல் தடுக்கும். மண்பானை உணவு ரத்தக் குழாய் களைச் சீராக்க உதவும். உடல் சூட்டைத் தணிக்கும். இப்படி மண் பானையின் மகத்துவத்தை அடுக்கிக் கொண்டே போகலாம்.


   அறுசுவையான உணவும் ஆரோக்கிய மான உணவும் கிடைக்க வேண்டும்என்றால் மண்பானையில் சமைத்துச் சாப்பிடுவதே ஆகச்சிறந்தது* 🙏👌🌾

No Oil, No Boil... Healthy ayul... புற்றுநோயை குணமாக்கும்.... சிறுநீரக மண்டலத்தை சீரமைக்கும் கத்திரிக்காய் மில்க் சேக்

 No Oil, No Boil...  Healthy ayul...🌿🙏 


புற்றுநோயைகுணமாக்கும்.... சிறுநீரகமண்டலத்தை சீரமைக்கும் கத்திரிக்காய்மில்க்சேக்...🍆🍆🍅


தேவையானபொருட்கள்


நாட்டுகத்திரிக்காய் - 4

தக்காளி - 2

தேங்காய்ப்பால் - 50 மில்லி,

வெல்லம் பொடித்தது - 1 டேபிள் ஸ்பூன் அல்லது கரும்புஜுஸ் - 1/4 கப்,

ஏலக்காய் 4


செய்முறை 


கத்திரிக்காய், தக்காளி

ஆகியவைகளை துண்டுகளாக 

வெட்டிக் கொள்ளவும். மிக்சியில்  போட்டு ஒரு சுற்று சுற்றவும்.பின் அதில் வெல்லம், தேங்காய்ப்பால் சேர்த்து அடிக்கவும்.


பிறகு அதில் தண்ணீர் சேர்த்து அடித்து நட்ஸ் தூவி அலங்கரித்து பரிமாறவும்.


தேவையெனில் முந்திரி, பாதாம் பொடியாக நறுக்கி தூவியும் பரிமாறலாம்.


ருதம்பராயோகா கோவை.

​ரோஜா குல்கந்து செய்முறை how to make gulkand at home

 நல்ல தரமான சுவையான "ரோஜா குல்கந்து" வீட்டிலேயே  தயார் செய்வது எப்படி. .?

🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹

குல்கந்து செய்முறை



🌸நல்ல, தரமான, சிவந்த நிறமுடைய நன்கு பூத்த பூக்களிலிருந்து இதழ்களை ஆய்ந்து கொள்ளவும்.


🌸 இதழ்களை நன்கு கழுவி, சுத்தம் செய்து, ஈரம் போக துடைத்து / நிழலில் உலர்த்தி வைத்துக் கொள்ளவும். சேகரித்த இதழ்களின் எடையைப் போல, மூன்று மடங்கு பனங்கற்கண்டை எடுத்துக் கொள்ளவும். 


🌸ரோஜா இதழ்களையும், பனங்கற்கண்டையும் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து இடித்துக் கொள்ளவும். ஜாம் போல வரும் வரை இடிக்கவும். 


🌸இதனை ஒரு வாயகன்ற கண்ணாடி ஜாடியில் போடவும். இந்த ஜாம் அளவுக்கு மூன்றில் ஒரு பங்கு சுத்தமான தேனை விட்டு நன்றாக கிளறவும்.


🌸 இத்துடன் வெள்ளரி விதை, கசகசா சேர்க்கவும். குல்கந்து தயார். ஒவ்வொரு தடவையும் உபயோகிக்கு முன் நன்றாக கிளறவும்.


🌸ஆண்மையை பெருக்கும், உடல்வெப்பத்தை குறைக்கும், இதயத்தை வலுப்படுத்தும், பெண்கள் நோய்களை குணமாக்கும், உடல்வளர்ச்சியை மேம்படுத்தும் நறுமணமும் உடல் நலமும் தரும் குல்கந்து ரெடிங்க....


🍁ருதம்பரா யோகா கோவை.

வெந்தய நீரை வடிகட்டி இப்படி குடித்தால் கிடைக்கும் நன்மைகள் Fenugreek water benefits

 வெந்தய நீரை வடிகட்டி இப்படி குடித்தால் கிடைக்கும் நன்மைகள்..



ஒவ்வொருவரது வீட்டின் சமையலறையிலும் பொதுவாக காணப்படும் ஒரு பொருள் தான் வெந்தயம். இந்த வெந்தயம் உணவின் சுவையை அதிகரிக்க மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்தையும் தான் மேம்படுத்த உதவுகிறது. பலருக்கும் வெந்தயம் உடல் சூட்டை தணிக்கும் என்று தான் தெரியும். ஆனால் அதையும் தாண்டி, வெந்தயத்தில் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளன.


அதற்கு வெந்தயத்தை சமையலில் சேர்ப்பதோடு மட்டுமின்றி, அதைக் கொண்டு டீ தயாரித்துக் குடிக்கவும் செய்யலாம். உங்களுக்கு வெந்தய டீ எப்படி தயாரிப்பது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். மேலும் வெந்தய டீயைக் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து உங்களது அன்றாட உணவில் அதை சேர்த்து நன்மைப் பெறுங்கள்.


வெந்தய டீ தயாரிப்பது எப்படி?


ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதில் வெந்தயத்தை சிறிது சேர்த்து மூடி வைத்து 3 நிமிடம் கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.

பின் அதை வடிகட்டி, தேன் சேர்த்து கலந்து, சூடாகவோ அல்லது குளிர்ச்சியான நிலையிலோ குடியுங்கள்.

இப்போது வெந்தய டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளைக் காண்போம்.


நன்மை


குடல் மற்றும் சிறுநீரகங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டுமா? அப்படியெனில் தினமும் ஒரு டம்ளர் வெந்தய டீ குடியுங்கள். இது கழிவுகளை உடலில் இருந்து எளிதில் வெளியேற்றும்.


உலகில் இதய நோயால் அவஸ்தைப்படுவோரின் எண்ணிக்கை அதிகம். இத்தகைய இதய நோயின் தாக்கத்தைத் தடுக்க வேண்டுமெனில், தினமும் ஒரு கப் வெந்தய டீ குடியுங்கள்.


வைட்டமின் பி1 குறைபாட்டினால் ஏற்படும் பெரி பெரி நோயின் தாக்கத்தை வெந்தய டீ குறைக்க உதவும். ஆகவே அன்றாட டயட்டில் வெந்தய டீயை தவறாமல் சேர்த்து வாருங்கள்.


பிரசவத்தை நெருங்கும் கர்ப்பிணிப் பெண்கள் வெந்தய டீயைக் குடித்தால், அது பிரசவ வலியைத் தூண்டுவதோடு, எளிதில் பிரசவம் நடக்கவும் உதவி புரியும்.


ஆண்கள் மற்றும் பெண்கள் தினமும் வெந்தய டீ குடிப்பதன் மூலும், அவர்களின் பாலியல் வாழ்க்கை சிறக்கும். ஏனெனில் இந்த டீ உடலின் பாலுணர்ச்சியைத் தூண்டி, உறவில் சிறப்பாக ஈடுபட உதவும்.


வெந்தய டீயில் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. இதை தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தொடர்ந்து குடித்து வந்தால், தாய்ப்பால் சுரப்பு அதிகரிப்பதோடு, தாய்ப்பாலில் சத்துக்களும் அதிகரிக்கும்.


வெந்தய டீயில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் ஏராளமாக அடங்கியுள்ளது. ஆகவே மூட்டு வலி, முழங்கால் வலி உள்ளவர்கள், வெந்தய டீயைக் குடித்து வந்தால், இந்த பிரச்சனையில் இருந்து முழுவதுமாக தடுக்கலாம்.


வெந்தயம் மிகச்சிறந்த சளி கரைப்பான். ஆகவே உங்களுக்கு சைனஸ் மற்றும் சளித் தொல்லை அதிகம் இருந்தால், தினமும் ஒரு டம்ளர் வெந்தய டீயைக் குடியுங்கள். இதனால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.


வெந்தயம் சிறுநீர் பெருக்கியாக செயல்படும். ஒருவர் தினமும் பலமுறை சிறுநீர் கழிப்பதன் மூலம், இரத்தத்தில் உள்ள கசடுகள் வெளியேறும். வெந்தய டீயைக் குடித்தால், அடிக்கடி சிறுநீரைக் கழிக்கலாம்.


காய்ச்சல் அடிக்கும் போது, கண்ட மாத்திரைகளைப் போடாமல், ஒரு டம்ளர் வெந்தய டீயைக் குடியுங்கள். இதனால் காய்ச்சல் உடனே குறைந்துவிடும்.


வெந்தய டீ பொடுகைப் போக்கும். அதற்கு தலைக்கு ஷாம்பு போட்டு முடியை அலசிய பின், இந்த வெந்தய டீயால் தலைமுடியை அலசி, பின் கண்டிஷனர் பயன்படுத்துங்கள். இப்படி செய்வதால் பொடுகு போய்விடும்.


வெந்தய டீ தொண்டைப் புண்ணை குணப்படுத்தும். அதற்கு வெந்தய டீயை சூடாக குடிக்க வேண்டும்.


வாய் புண் அல்லது வாய் அல்சர் உள்ளதா? அப்படியெனில் தினமும் வெந்தய டீயால் வாயைக் கொப்பளியுங்கள். இப்படி தினமும் வாய் புண் போகும் வரை செய்யுங்கள்.


வெந்தய டீ வாய் துர்நாற்ற பிரச்சனையில் இருந்து விடுவிக்கும். அதிலும் வெந்தய டீயை குளிக்கும் நீரில் கலந்து குளித்தால், உடல் துர்நாற்ற பிரச்சனை நீங்கும்.


மாதவிடாய் காலத்தில் பெண்கள் வயிற்று வலி மற்றும் பிடிப்புக்களை சந்திப்பார்கள். இந்த சமயத்தில் வெந்தய டீயைக் குடித்தால், வலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.


பூப்படையும் வயதில் உள்ள சிறுமிகள் வெந்தய டீயைக் குடிப்பது நல்லது. இதனால் மார்பகங்களின் வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கும். ஏனெனில் இந்த டீ நீர் தேக்கத்தைத் தூண்டுவதோடு, வளர்ச்சி ஹார்மோன்களையும் ஊக்குவிக்கும்.


ஒருவர் தினமும் வெந்தய டீயை குடித்து வந்தால், தற்போது நிறைய பேர் சந்திக்கும் சர்க்கரை நோய் மற்றும் டைப்-2 சர்க்கரை நோயின் தாக்கத்தைத் தடுக்கலாம்.


கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளதா? அதைத் தவிர்க்க தினமும் வெந்தய டீ குடியுங்கள். இதனால் உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை குறைவதோடு, இரத்த சர்க்கரை அளவும் குறையும்.


வெந்தய டீ மிகச்சிறந்த மலமிளக்கியாக செயல்படும். ஆகவே மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாமல் இருக்க நினைப்பவர்கள், தினமும் ஒரு டம்ளர் வெந்தய டீயைக் குடியுங்கள்.


வெந்தய டீ உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை கரைப்பதோடு, அடிக்கடி பசி ஏற்படுவதையும் தடுத்து, உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும்

உணவே மருந்து. அகத்தியர்,தேரையர் சித்தர் சொல்லும் சுண்டைக்காய் சாப்பிடுங்க !

 அகத்தியர்,தேரையர் சித்தர் சொல்லும் சுண்டைக்காய் சாப்பிடுங்க !



கொரனாவை என்ன ! அதன் மூலத்தை கூட விரட்ட நோய் எதிர்ப்பு சக்தி மூலமாக விரட்டலாம் எனும் அகத்தியர் பெருமானின் ஆலோசனையை கடைபிடிப்போம்.


கிருமிகளின் எதிர்ப்பு மருந்தாக சுண்டைக்காய் இருக்கிறது என்கிறார் அகத்தியர் பெருமான் தனது வைத்திய  நூலில் ....


நெஞ்சின் கபம் போம்

நிறை இருமி நோயும் போம்

விஞ்சு வாதத்தின் விளைவு போம் வஞ்சியரே வாய் கசபிக்கும் மாமலையில் விளையும் சுண்டைக் காயை சுவைப்பதர்கே*

- அகத்தியர்


நெஞ்சில் எந்த கபச் சளியும் நீக்கும். எந்த கிருமியானாலும் வரும் நோய்களும் போய் விடும். வாதசுரம் வலியும் போக்கும்.


அப்புறம் என்ன இந்த அறிகுறி அனைத்தும் கொண்ட கொரோனா வைரஸ் மட்டும் அகத்திய பெருமான் சொல்லும் சுண்டைக்காயிடம்  தப்பி விடுமா என்ன !


சுண்டைக்காய் சிறிது என உதாசீனம் செய்து விடாதீர்கள்.


மூர்த்தி சிறிது கீர்த்தி பெரிது என்பது நம் நாட்டின் சுண்டைக்காய்க்கும் பொருந்தும்.


உணவே மருந்து.🌿🙏


சுண்டைகாய் வத்தலை பொடித்து கசாயம் செய்யலாம்....


சுண்டைக்காய் துவையல், குழம்பு, தொக்கு, சட்னி என ஏதாவது ஒரு முறையில் பயன்படுத்தி பலன்பெறுங்கள். 


தவறாமல் பகிர்வோம்.👏🌼🌿🙏

சித்தர்கள் கோழையை எமன் என்று கூறுகிறார்கள்!!! வள்ளலார் அருளிய காயகல்பம் மூலிகை பொடி!

 கொல்லும் பிடரிதனை கோழையாமே....

சித்தர்கள் கோழையை எமன் என்று கூறுகிறார்கள்....



நுரையீரல் மட்டுமல்லாது உடலில் தேங்கும் கோழையை விரட்டும்....

வள்ளலார் அருளிய காயகல்பம் மூலிகை பொடி!🌿🙏

🌿🍁முக்கூட்டு சூரணம்


காயகல்பம் என்பது நோயற்ற வாழ்வு வாழ சித்தர்கள் நமக்கு அளித்த மருந்துகளாகும்.


சாதாரணமாக காயகல்பம் தயார் செய்ய மிகுந்த செலவாகும். ஆனால் வள்ளலார் மிகக்குறைந்த செலவில் மனித குலம் வாழ காயகல்பம் அருளியுள்ளார்.


வெள்ளை கரிசலாங்கண்ணி 200 கிராம், தூதுவளை 50 கிராம்,முசுமுசுக்கை 50 கிராம்,சீரகம் 50 கிராம் ஆகியவற்றை பொடியாக

மூலிகை கடைகள், காதி கிராப்டில் வாங்கி (சீரகம் மட்டும் தனியாக வாங்கி பொடித்துக் கொள்ளவும்).


இந்த பொடிகளையெல்லாம் ஒன்றாகக் கலந்து கொள்ளவும். தினமும் காலையில் பல் துலக்கியவுடன் ஒரு தம்ளர் பாலில்

மேற்கண்ட பொடியை ஒரு டேபிள் ஸ்பூன் கலந்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைத்து சர்க்கரை கலந்து லேசான சூட்டில் சிறிது சிறிதாக சுவைத்து சாப்பிட வேண்டும்.


இதனை சாப்பிட ஆரம்பித்த மறுநாளில் இருந்து மலம் கருப்பு நிறத்தில் வரும். சிறுகுடல், பெருங்குடலில் இருக்கும் பழைய மலங்கள், சளிபடலங்கள் வெளித் தள்ளப்படும். சிறுகுடல் உறிஞ்சிகள் (VILLUS) தூய்மைப் படுத்தப்பட்டு சாப்பிடும் அனைத்தும் முழுமையாக இரத்தத்தில் சேர்க்கப்படும். 99 சதவீதம் பெரும் நோய்கள் உடலை தாக்காமல் இருக்கும். கேன்சர், சிறுநீரக நோய்கள், இதய நோய்கள் வராது.அனைத்து நோய்களும் குணமாகும்.


 வள்ளலார் அருளிய எளிய முறை காயகற்ப சூரணம் இது. பத்தியம் எதுவுமில்லை.சர்வரோக நிவாரணியாக செயல்படுகிறது. காலையில் அருந்துவதற்கு ஏற்ற மூலிகைபானமாகவும் விளங்குகிறது.


இந்த மருந்து சர்வரோக நிவாரணியாகும்.இதனைத் தொடர்ந்து வருடக் கணக்கில் சாப்பிட்டு வர மனிதவுடலை வாட்டும் அனைத்து நோய்களும் குணமாகும். இந்த மருந்து என்னிடம் வரும் அனைத்து நோயாளிகளுக்கும் கட்டாயமாக சாப்பிடச் சொல்வேன். சர்வ நிச்சயமாக பலன் பெறுவீர்கள். இதனைப் படிக்கும் அனைத்து நண்பர்களும் இந்த மருந்தினை அவசியம் சாப்பிட வேண்டும். நோயற்ற வாழ்வு வாழ வேண்டும்.


🌿ருதம்பரா பவுண்டேஷன் கோவை.

தேன் நெல்லிக்காய் Honey Gooseberry

 தேன் நெல்லிக்காய்

🍈🍈🍈🍈🍈🍈🍈🍈🍈



சித்தஶ்ரீபதஞ்சலி ஈஸ்வரன்

ருதம்பரா யோகாமையம்

செல் : 8610823072

🌼🌸☘🌷🌿🌷☘🌸🌼


என்றும் இளமைதரும்....

சங்ககாலம் தொட்டு ஆரோக்கிய பொக்கிஷமாம்

ஔவைக்கு அதியமான் அளித்த அமுதகனி....


தினமும் ஒரு நெல்லிக்காய் சேர்த்தால் நல்லது. ஆனா, பச்சையா சாப்பிட்டா, முழுசா ஒன்னை சாப்பிடறதே கஷ்டம். என்ன செய்யலாம்?🤔


கடையில தேன் நெல்லிக்காய்-ன்னு கிடைக்குது, விலை அதிகம். உண்மையான தேன்ல தான் ஊற வைக்கிறாங்களான்னா. சந்தேகம் தான். பெரும்பாலும், சர்க்கரைப்பாகுன்னு நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்கிறார்கள்.


சூப்பரா இருக்கு, ஹெல்த்தும், ருசியும் ஒரு கிலோ நெல்லிக்காயை சுத்தமா கழுவி, இட்லி தட்டுகளில் துணி போட்டு, அதுல பரத்தி வைங்க. வேகவைக்கத் தேவையான தண்ணீருடன், இரண்டு கரண்டி பாலையும், இட்லி பானையில் ஊத்தி அடுப்புல ஏத்தணும். பால் கலந்த தண்ணி சூடானதும், நெல்லிக்காய் பரப்புன இட்லி தட்டுகளை வைத்து, பானையை மூடி அவிச்சு எடுங்க.அரைக்கிலோ வெல்லம் அல்லது கருப்பட்டியை தூளாக்கி (அரைக்கிலோ வெல்லம்னா சுமாரா ஒரு உருண்டை. இது இனிப்பு குறைவா சேர்க்கிறவங்களுக்கு. இனிப்பு அதிகம் வேணும்னா ஒரு கிலோ வெல்லம் போடலாம்.) தேவையான தண்ணீர் ஊற்றி கரைத்து, அழுக்கு போக வடிகட்டி அடுப்புல வைச்சு பாகு காச்சுங்க. ரொம்ப காச்சணும்னு இல்ல.


 பிசுபிசுன்னு வந்தவுடன் இறக்கிடலாம். இதுல வெந்த நெல்லிக்காயைப் போட்டு வச்சுடுங்க. ஐந்து நாள் கழித்து   சுத்தமான மலைத்தேனில் பத்துநாள் ஊறவைக்கவும். ஊற ஊற, தினமும் ஒன்னு எடுத்து சாப்பிடுங்க. நோய் எதிர்ப்பு சக்தி கூடும். இரும்புச்சத்து, இன்னும் பல சத்துக்கள் கிடைக்கும்.


லாக்டவுன்ல இந்த ரெசிபி செய்து உங்கள் ஆரோக்கியத்தையும் குழந்தைகளின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துங்கள். நன்றி

கழிவின் தேக்கம் நோய்கள் கழிவின் நீக்கம் ஆரோக்கியம் Clean your Intestine

 கழிவின் தேக்கம் நோய்கள்

கழிவின் நீக்கம் ஆரோக்கியம்


குடல்சுத்தம்உடல்சுத்தம்🌿🙏



விளக்கெண்ணெய் 20 Ml..  

ஒரு எலுமிச்சப்பழ சாறு

கலந்து அதிகாலை 4 மணிக்கு நாக்கில் படாமல் மடக்கென்று குடித்து விடவும் 


 விடிவதற்குள்ளாக ஒரு 2 (அ) 3 லிட்டர் தண்ணீரை விடாமல் குடித்து கொண்டே வந்தால் வயிறு ஒரு 8 மணிக்குள் முழுவதுமாக  சுத்தம் செய்யப்படும்.


ஒவ்வொரு முறை கழிவை வெளியேற்றிய பின் ஒரு சொம்பு அளவு தண்ணீரை மிதமான சூட்டில் பருகவும்...


ஆறு முறைக்கு பிறகு நல்ல சூடான ஒரு டம்ளர் நீரில் ஒரு முழு எலுமிச்சை சாறை கலந்து  அருந்த பேதி கட்டுப்படும்.


அன்றைய தினம் மிதமான உணவுகளை எடுத்துக் கொள்வதுநலம் (ரசம்சாதம்)


விடுமுறை தினத்தில் செய்வது நல்லது லாக்டவுன்தானுங்களேஇது குடல்சுத்தம் செய்ய சரியான தருணம்🌿🙏


முன்று மாதங்களுக்கு ஒரு முறையோ ஆறு மாதங் களுக்கு ஒரு முறையோ அல்லது உங்களுக்கு தேவை என்று நினைக்கும் போதோ இதை தாராளமாக செய்து கொள்ளலாம். பலன்கள் பலநூறு உண்டு....


ருதம்பரா யோகா மையம் கோவை


பஞ்சசுத்தியில் ஒன்று | சித்தர்களின் மருத்துவ முறையில் மணிமகுடமாக இருப்பது கரிசாலை நெய் Karisalai nei

 பஞ்சசுத்தியில் ஒன்று



 சித்தர்கள் நுரையீரலில் உருவாகும் கோழையை (சளியை) யமன் என்ற பெயரில் அழைத்தார்கள். ஏனெனில் இந்த சளியாகிய கோழைதான் மரணத்திற்கு மிக முக்கிய காரணி.


உடம்பில் சளியானது சேர சேர உடல் இயக்கம் குறைகிறது. இரத்த ஓட்டம் தடைபடுகிறது. எலும்புகள் வலுவிழக்கிறது. நாடி நரம்புகள் எல்லாம் தளர்ந்து போய் நடமாடும் பிணமாக மனிதன் ஆகிவிடுகிறான். எனவே சளித்தொல்லை இல்லாமல் வாழுகிற மனிதன் தான் நிஜமான ஐஸ்வர்யவனாவான் எனலாம்.


சளித்தொல்லை என்றால் மூக்கடைத்து கொண்டு ஒழுகுதல் மட்டுமே என்ற எண்ண வேண்டாம் எப்போதுமே உடலில் கோழையானது தங்கிக் கொண்டே இருக்கும் அது மிகுதியாகும் போது உடலை தொல்லை செய்யும்.


இந்த சளித்தொல்லையை முற்றிலுமாக நீக்குவதற்கு சித்தர்கள் கபசுத்தி என்ற பெயர் கொடுத்து கரிசாலை நெய் என்ற அற்புதமான மருந்தையும் கூறி இருக்கிறார்கள். கரிசாலை நெய்யை பற்றி பேசாத சித்தர்களே இல்லை என்று சொல்லலாம் சித்தர்களின் மருத்துவ முறையில் மணிமகுடமாக இருப்பது கரிசாலை நெய் என்றால் அது மிகையில்லை.


இந்த நெய்யை சற்று முயற்சி செய்தால் யார் வேண்டுமானாலும் செய்யலாம். 


கரிசலாங்கண்ணி (வெள்ளை) கீரையை வேரோடு வாங்கி வந்து நன்றாக கழுவி அரைக்க வேண்டும்.


அரைக்கப்பட்ட கீரை விழுதை உருண்டையாக பிடித்து ஒரு சுத்தமான நெய்யில் போட்டு சிறிது தூள் செய்த மிளகு சேர்த்து  அடுப்பேற்றி மிதமான நெருப்பில் மெழுகு பதமாக காய்ச்சி வடிகட்டி பத்திரபடுத்தி கொள்ள வேண்டும். 


இந்த நெய்யினை சூரியன் உதிக்கும் முன் எழுந்து வலது கை பெருவிரலால் தொட்டு வாயை நன்றாக திறந்து உள்நாக்கில் பின்புறம் உள்ள மேல்நோக்கி அமைந்த துவாரத்தில் தடவி அரைமணிநேரம் காத்திருக்க வேண்டும். 


இந்த நேரத்தில் ஊர்த்துவ நாடி, சுழுமுனை நாடி என்றெல்லாம் சித்தர்களால் சொல்லப்படும் சூட்சம நாடிக்குள் அடங்கி கிடக்கும் கோழை நூல் நூலாக வெளியே வந்து விழும்.கோழையை கழற்றுதல் என்பது இதுவே.


இப்படி நாற்பத்தி எட்டு நாட்கள் தொடர்ந்து செய்தால் உடம்பில் உள்ள தேவையற்ற சளி வெளியேறி, ஆரோக்கியமான நுரையீரல் உடல் முழுவதும் நல்ல பிராணக்காற்றை தரும். குறிப்பாக யோகப்பயிற்சியில் ஈடுபடுபவர்கள் இச்செய்முறையை கடைபிடித்து கோழையை கழற்றி அதன்பின்பு பயிற்சியில் ஈடுபடுதல் மிகுந்த பலனை அளிக்கும்.

ஆஸ்துமா, சுவாச கோளாறுகள், டான்சில் தொடர் இருமல், சளி ஆகியவை குணமாகும்.


ருதம்பரா யோகா கோவை

மஞ்சள்காமாலை குணமாக்கும், ஃபேட்டிலிவர், சிறுநீரககோளாறு, மாதவிடாய்கோளாறுகள் நீக்கும் கீழாநெல்லி சட்னி

 👌ஆயுசு நூறு தரும்

✋ஆரோக்கியமான வாழ்வு தரும் 

🔥அடுப்பில்லா சமையல்


 மஞ்சள்காமாலை குணமாக்கும்

ஃபேட்டிலிவர், சிறுநீரககோளாறு, 

மாதவிடாய்கோளாறுகள் நீக்கும்

👌👍🌿🌿☘️



 அற்புத ஆற்றல் நிறைந்த 

கீழாநெல்லி சட்னி

☘️🌿☘️🌿☘️🌿☘️🌿🥙


      கீழாநெல்லி கீரையில் கால்சியம், இரும்புசத்து நிறைந்துள்ளது. மஞ்சள் காமாலை,  முடக்குவாதம், மலச்சிக்கல், நாட்பட்ட நுரையீரல், சிறுநீரக கோளாறுகளுக்கு சிறந்த நிவாரணியாகும். இன்று கீரையை வைத்து சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.


தேவையானபொருட்கள் :

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿


கீழாநெல்லி கீரை - 1 கப்

நறுக்கிய கொத்தமல்லி தழை - 1கைபிடி

இயற்கை தயிர் - ½ கப் 

சின்னவெங்காயம் - 8 

நறுக்கிய இஞ்சி - 1 டீஸ்பூன்  

உளுந்து பருப்பு - 2 ஸ்பூன் 

பொ. கடலை.     - 2 ஸ்பூன்

தே.துறுவல்.       - 2 ஸ்பூன்

மிளகுத்தூள் தேவைக்கு

கொடம் புளி கரைசல் - 1 ஸ்பூன்


செய்முறை:🌱🍃


 கீழாநெல்லி கீரையை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.கொத்தமல்லியை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.சின்ன வெங்காயத்தை தோல் உரித்து,உளுந்து பருப்பு பொ.கடலை,தேங்காய் துறுவல்,  மிளகுதூள் போட்டுபின்னர் அதனை மிக்சியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். அதனுடன் கீழாநெல்லி கீரையையும்,கொத்தமல்லி, புளி கரைசலையும் சேர்த்து அரைக்கவும். இஞ்சி, இயற்கை தயிர், உப்பு போன்றவைகளை அத்துடன் சேர்த்து அரைத்து கலந்து சாப்பிடலாம்.


ஆரோக்கியபலன்:


 இதில் கல்லீரலை பலப்படுத்தும் ஆற்றல் மற்றும் சுகர் BPக்கு சிறந்த நிவாரணியாகும். இந்த சட்னியை வாரம் ஒரு முறை சாப்பிடலாம்.😋👍🙏


ருதம்பராயோகாமையம்

கோவை. 8610823072


தாவரஇயல்பெயர்: Phyllanthusniruri


இதன்மறுபெயர்கள்: இளஞ்சியம், அவகதவாய், கீழ்வாய் நெல்லி, கீழ்க்காய், காதமாதாநிதி, மாலறுது, மாலினி, வித்துவேசரம், பூதாத்திரி, பெருவிரியகா, காமாலை நிவர்த்தி


வளரும்இடங்கள்:

இந்தக் கீழாநெல்லி இந்தியாவைச் சார்ந்த தாவரம் ஆகும். அரை மீட்டருக்கும் குறைவாகத் தான் இந்தச் செடி வளரும். அது மட்டும் அல்ல ஈரத்தன்மை உள்ள மண் தான் இதன் பிறப்பிடம்.


பயன்தரும்பகுதிகள்: முழுத்தாவரமும் அதாவது இலைகள், தண்டுத் தொகுதி மற்றும் வேர்கள் உட்பட அனைத்துமே பயன் தரும் பகுதிகள் தான்.


பொதுவானதகவல்கள் : கீழாநெல்லி (Phyllanthus niruri) ஒரு மருத்துவ குணமுடைய செடியாகும். இது ஏறத்தாழ அரை மீட்டர் வளரும் ஓராண்டுத் தாவரமாகும். செடி முழுதும் மருத்துவப் பயன்பாடுடையதாகும்.


இது வெப்பமண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடியினத்தை சேர்ந்தது ஆகும். இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் காணப்படுகிறது. சுமார் ஒரு அடி உயரம் வரை வளரும் தன்மை உடையது. இதன் இலையின் அடிக்காம்பில் வரிசையாக காய்கள் காய்ப்பதால் கீழ்காய் நெல்லி என தமிழர் பெயரிட்டு அழைத்தனர். பேச்சு வழக்கில் கீழாநெல்லி, கீழ்வாய் நெல்லி, கீட்காநெல்லி எனவும் அழைக்கின்றனர்.


தொன்றுதொட்டே தமிழர் மருத்துவத்தில், மஞ்சள் காமாலை நோய்க்கு இம்மூலிகையை பயன் படுத்தி வந்துள்ளனர் என்பதனை இன்றும் கிராமத்து மக்களின் வாய்ச் சொல்லிலும், பயன்படுத்துதலிலுமிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது. ( எங்களது இல்லத்திலும் எனது தாத்தா காமலைக்கு மருந்தாக கீழாநெல்லியுடன்

சிலமூலிகைகள் கலந்து பாரம்பரிய மாக தந்துள்ளார்கள் நானும் இம்முறையை பின்பற்றி கீழநெல்லியை காமாலை க்கு மருந்தாக தந்து வருகிறேன்.)


இந்தியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கூடங்களில் இம்மூலிகை பல்வேறு விதங்களில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இது மிக்க குளுமைத் தன்மை கொண்டதாகும். சுவைகளில் இனிப்பு, புளிப்பு, கசப்பு, கார்ப்புச் சுவைகளைக் கொண்டது. விந்துவை அதிகமாக வளர்க்கும். கபத்தை தணித்து வாதத்தை அதிகரிக்கும். இதனை பச்சையாகக் கூட பறித்துத் தின்னலாம். ஆனால் லேசான கசப்பு இருக்கும்.


கீழாநெல்லியின் இதர மருத்துவப் பயன்கள்:


🌿வழுக்கையில் முடி வளர கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.


🌿கீழாநெல்லி இலையுடன் உப்பு சேர்த்து அரைத்து சொறி, சிரங்கு, அரிப்பு உள்ள இடங்களில் தடவினால் சீக்கிரத்தில் குணம் கிடைக்கும்.


🌿நல்லெண்ணைய் இரண்டு ஆழாக்கு கீழாநெல்லிவேர், கருஞ்சீரகம், நற்சீரகம் இவை வகைக்குகால் பலம் (9 கிராம்) பசும்பால் விட்டு அரைத்துகலக்கிக் காச்சி வடித்து தலை முழுகி வரலாம் இது கீழாநெல்லி தைலமாகும். இதனால் உச்சி குளிர்ந்து டென்ஷன் குறையும். அது மட்டும் அல்ல முடி நன்றாக வளரும்.


🌿மஞ்சள் காமாலை, மூத்திர நோய்கள், குடல்புண், தொண்டை நோய்கள், வயிற்றுவலி, வயிற் றோட்டம், முறைசுரம், அதிக உஷ்ணம், கண்நோய்கள், மாதவிடாய்க் கோளாறுகள், பசியின்மை, தோல் நோய்கள், தீராத அழுகல் புண்கள், புரைகள், வீக்கம், குருதிவடிதல் போன்ற நோய்களுக்கான மூலிகை மருத்துவத்தில் கீழாநெல்லி பயன்படுகின்றது.


🌿கீழாநெல்லியை அரைத்து பசும்பாலுடன் கலந்து காலை, மாலை ஆகிய இருவேளை தொடர்ந்து 3 நாட்கள் உட்கொண்டு வந்தால் உடல் சூடு தணிந்து குளிர்ச்சி பெறும்.


🌿நீர் சுருக்கு நோயினால் அவதிப்படுபவர்கள் கீழா நெல்லி இலையுடன் சீனாக் கற்கண்டு சேர்த்து மைப் போல அரைத்து இருவேளைகள் என 1 வாரம் சாப்பிட்டால் உடனே சரியாகி விடும்.


🌿கீழாநெல்லி இலை, மூக்கிரட்டை இலை, பொன்னாங்கண்ணி இலை, சம அளவு அரைத்து கழற்சிக் காயளவு மோரில் கலக்கி 45 நாள்கள் கொள்ள மாலைக்கண், பார்வை மங்கல், வெள்ளெழுத்து தீரும்.


🌿பல் கூச்சம் இருந்தால் கீழா நெல்லியின் வேரை வாயில் போட்டு இரண்டு நிமிட நேரம் மென்றால் போதும். உடனே பல் கூச்சம் போய்விடும்.


🌿சிறிது சீரகத்துடன் கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்த்துப் பருகி வர கல்லீரல் கோளாறு குணமாகும்.


🌿கீழாநெல்லி வேர், அசோகப்பட்டை, அத்திப் பட்டை ஆகியவற்றை இடித்து தூள் செய்து சம அளவு கலந்து வேளைக்கு 10 கிராம் வீதம் காலை மாலை வெந்நீருடன் 40 நாள் கொள்ள பெரும்பாடு, வெள்ளை, மாதவிடாய் தாமதம் உதிரச்சிக்கல் தீரும்.


🌿கீழாநெல்லி இலையுடன் மாதுளம், நாவல் கொழுந்து இலைகளை சம அளவாக எடுத்து அரைத்து நெல்லிக்காய் அளவு வெறும் வயிற்றில் 1 டம்ளர் மோரில் கலக்கிக் குடித்து வர சீதபேதியை நிறுத்தும்.


🌿 வாலிப வயோதிகம் நீங்க வேண்டுமானால் ஓரிதழ் தாமரையுடன் சம அளவாக கீழாநெல்லி இலையைச் சேர்த்து அரைத்து நெல்லிக்காய் அளவு அதிகாலையில் 45 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும்.


🌿மஞ்சள் காமாலை, உடலில் உண்டாகும் வெப்பம், உடலில் ஊறிய மேகம், தாதுவெப்பம், நீரிழிவு இவற்றை போக்க உதவுவது கீழாநெல்லிப் பொடி.


🌿விஷக்கிருமிகளால் ஏற்படும் தொற்று நோய்களை குணப்படுத்துவதற்கான மருந்தாகவும் கீழாநெல்லி பயன்படுகிறது.


🌿கீழாநெல்லி பொடி, நெல்லிக்காய் பொடி, கரிசலாங்கண்ணி பொடி ஆகிய மூன்றையும் சமஅளவு எடுத்து. தேனில் குழைத்து உண்டு வந்தால்… அடிக்கடி வரும் சளித்தொல்லை குறையும், ரத்த சோகை மாறும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.


🌿கீழாநெல்லி இலையுடன் சிறிது மஞ்சளைச் சேர்த்து அரைத்து உடலில் தேய்த்து, பதினைந்து நிமிடங்கள் ஊறவிட்டு, குளித்தால் தோல் நோய்கள் குணமாகும்.


🌿கீழாநெல்லிச் செடியை நன்றாக அரைத்து சொறி, சிரங்கு, படைகளில் பற்றுப்போட்டால் உடனே குணமாகும். கீழாநெல்லிச் செடியை நன்றாக மென்று பல்துலக்கி வந்தால் பல்வலி குணமாகும். மேலும் செடியை நன்றாக மென்று ஈறுகளில் சாறு நன்றாகப் படிய வைத்திருந்தால். ஈறு நோய்கள் குணமாகும்.


ருதம்பராயோகாமையம் 

கோவை.


🙏பகிர்வோம்... மகிழ்வோம்😊...

No Oil, No Boil 🌿Healthy Ayul.... அடுப்பில்லா ஆரோக்கிய உணவுகள்

 No Oil  |  No Boil  🌿Healthy Ayul....

அடுப்பில்லா ஆரோக்கிய உணவுகள்🍅🍉🌾☘️🍵🍃



 இதயத்தில் எத்தனை அடைப்பு இருந்தாலும் பயம் வேண்டாம் மொந்தன் வாழைக்காய் இருக்க பயமேன்! 🌿🙏🥗👏


ஆம் இயற்கை உணவு முறையில் அனைத்து நோய்களில் இருந்தும் தற்காத்துக் கொள்ளலாம். மாத்திரை மருந்துகள் எவ்வளவு சாப்பிட்டும். பிரஷரும் சரி இதயத்துடிப்பும்சரி கொலஸ்ட்ராலும் சரி கட்டுப்பாட்டுக்கே வரவில்லை என்றால் எங்கள் ஆலோசனைப்படி தினமும்


🙏🌿🥗 ஒரு மொந்தன் வாழைக்காயை தோலுடன் சிறு துண்டுகளாகவெட்டி பொடி செய்து உடன் வேர்க்கடலை தூள்,  எலுமிச்சை சாறு, மிளகு தூள் கலந்து காலை வெறும் வயிற்றில் மென்று தின்றால் பத்து நாட்களில் அடைப்புகள் நீங்கி  இப்பொழுது அனைத்தும் கட்டுப்பாட்டில்....வரும்.


வாழைக்காயின் ரகசியம் 

இதயம் சீராக செயல்பட பொட்டாசியம்(துவர்ப்புச் சத்து மிக அத்தியாவசிய மாகிறது. இந்த பொட்டாசியம் கொட்டிக்கிடக்கும் வாழைக்காயை தினம் பச்சையாக மென்றோ அல்லது மிக்சி ஜாரில் நீர் விட்டறைத்து கூழ்மமாக வோ சாப்பிட ஒரு நாளைக்குத்தேவையான பொட்டாசியம் வாழைக் காயின் மூலமே கிடைக்கிறது. வாழைக்காயில் நார்ச்சத்திகம் என்பதாலும் சி   வைட்டமின் நிறைந்து உள்ளதாலும் சுகருக்கும் மிகச்சிறந்த அருமருந்து இதில் மெக்னீசியம் இருப்பதால் உடலுக்குத்வையான கால்சியம் சத்தை உறிஞ்ச மெக்னீசியம் உதவுவதால் எழும்புக்கும் நல்லது.சி விட்டமினிருப்பதால் நுரையீரலும் வழுப்பெற்று சுத்திசெய்யப்படுகிறது.இதில் 913மிகி பொட்டாசியம் அதீதமென்பதால் கெட்டகொழுப்புகள் கட்டுப்படுத்தப்படுவதோடு இரத்த அழுத்தமும் சீரடைகிறது. தோலுக்கும் காய்க்குமிடையிலுள்ள பசை போன்ற பொருளில் விட்டமின்கள் B6,B12 உள்ளதால் அடைப்புகள் சரிசெய்யப்படுகிறது.


மொத்தத்தில் தினம் ஒரு மொந்தன் வாழைக்காய் மாரடைப்பிலிருந்து தடுத்து இதயத்தைஆரோக்கியமாக வைக்கிறது. தொப்பை இருந்தாலும் கரைந்து விடும். உடல் பருமன் குறையும். சோர்வாக இருப்பவர் களையும் சுறுசுறுப்பாக்கும் வாழைக்காய் வயதானவர் களுக்கும் மிகச்சிறந்த சஞ்சீவி இந்த மொந்தன் வாழைக்காய்


காய்கறிகளை கொண்டு அனைத்து நோய்களையும் குணப்படுத்தமுடியும்.


உணவு மருந்தாக இருக்க வேண்டும் இல்லாவிட்டால் மருந்தேநமக்கு உணவாகும் நிலைமை உருவாகும்.


🍁ருதம்பரா யோகா கோவை.


உறங்கும் விதைகள் உயிர் பெறும் பயணம்!!! A Journey of sleeping seeds

உறங்கும் விதைகள் ( உறக்கத்தில் உள்ள ஒரு செடி ) உயிர் பெறும் பயணம்.....

 வணக்கம் 


* விளைகின்ற பயிரில் நன்கு விளைந்த பயிரில் இருந்து தேறிய விதைகளை மட்டும் எடுப்பது

* அதை பானை அல்லது மண்குதிர்களில் பாதுகாத்தார்கள்

* சேமிப்பின்போது பூச்சி தின்றுவிடாமல் இருக்க நொச்சி, புங்கம் போன்ற தாவரங்களின் இலைகளை விதைமீது பரப்பி வைத்தார்கள்

* விதை சேமிப்பிற்கு முன்பு மூன்று அமாவாசை நாட்களில் வெயிலில் உலர்த்தி பின்பே சேமித்தார்கள்

* விதைகளை உழவர்கள் கைமாற்றிக்கொண்டார்கள்

* சாம்பலில் விதைகளை புரட்டி விதைநேர்த்தி செய்யப்பட்டது, எறும்பு, எலி, குருவி பொறுக்கிவிடாமல் இருப்பதற்கு

* உரிய நேரம் காலம் பார்த்து விதையை நிலத்தில் இட்டு நீர்விடும் ( மழை) போது விதை உயிர்பெறுகிறது.....



விதை என்பது வருங்கால சமுதாயத்தின் உயிர் வாழ்க்கையின் அடிப்படை...

- Ajitha Veerapandian

பஞ்சபூத ஆற்றல் universal energy

 நம் உடல் பஞ்ச பூத சக்தியை அடக்கியுள்ள ஒரு அற்புத அமைப்பு, நீர், நிலம், ஆகாயம், நெருப்பு காற்று, ஒவ்வொரு செயல்பாடும் பஞ்சபூத சக்தியின் வெளிப்பாடு, இவை விலங்குகளுக்கும் தாவரங்களுக்கும் கூட பொருந்தும், நம் உடலில் உள்ள 5 இராஜ உறுப்புகளின் ( கல்லீரல், இருதயம், மண்ணீரல், நுரையீரல், சிறுநீரகம் ) அற்புத செயல்பாடுகள் பஞ்சபூத சக்திகளை கொண்டே செயல்படுகிறது, உடலில் பஞ்சபூத சக்திகளின் ஆற்றல் குறையும் போது உடல் வலிகளையும், சோர்வையும் உணர்கிறது, ஒவ்வொரு வலியின் தன்மையும் நீர் நிலம் காற்று நெருப்பு ஆகாயம் சம்மந்தப்பட்டது, ஒவ்வொரு சக்தியும் கூடும்போதும் குறையும்போதும் நமக்கு வலிகளாக, நோய்களாக உணரமுடிகிறது, இவற்றை உடல் தானாக சரிசெய்துகொள்ளமுடியும், உதாரணமாக குழந்தைகளுக்கு காதுகுத்தும் ஓட்டை எப்படி மறைகிறது, மேலும் வயிற்றுள்ள கருவிற்கு யாரும் உள்ளே சென்று கையும் காலும் வைப்பதில்லை, அன்றைய சூழ்நிலையில் மருத்துவரிடம் அதிகம் சென்றதில்லை, ஆனா இன்று நிலைமை.... காலையில் வலி வந்தா மாலைக்குள் சரியாகிவிடவேண்டும், no time ....மாத்திரை கொண்டு தடுத்து நிறுத்தும் நோய்கள் மீண்டும் பல மடங்காக வரும்போது மனமும் உடலும் சேர்ந்தே சிதைகிறது......


உதாரணமா....தலைவலிக்கு மருத்துவரிடம் செல்கிறோம்...மருத்துவர் கேட்கும் கேள்விகள்


* இப்ப தலைவலிக்குதா

* எத்தனை நாளா

* அடிக்கடி வருமா

* வாரம் எத்தனை நாள் வரும்

* எவ்வளவு நேரம் இருக்கும்

* என்ன சாப்டீங்க....சரி இந்த மாத்திரை சாப்பிடுங்க, சரியாகலனா மறுபடியும் வாங்க மாத்திரை மாற்றி தரேன்....இதே கேள்விகள் கொஞ்சநேரம் அமைதியா அமர்ந்து  நம்மையே கேட்டுபார்த்தா தலைவலிக்கு விடை கிடைக்கும், ......


கடற்கரை உதாரணம் ஏன்.....5 சக்திகளும் சேர்ந்து இருக்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சியும் ஆனந்தமும் நம் உடலுக்கும் பொருந்தும் .....கடற்கரையில் ஒரு சக்தி இல்லையென்றாலும் ஆனந்தமில்லை.....அதேதான் நம் உடலிலும்.....


உடல் சொல்லும் அறிகுறிகளை மெல்ல அறிவோம், கல்லீரலில் பிரச்சனை என்றால் கண் மஞ்சளாகும்..... அதே சக்திதான் கீழாநெல்லியையும் கொடுத்திருக்கிறது, கல்லீரலை சரிசெய்ய,.....மழை காலத்தில் காற்று ஈரபதத்தால்  சுவாச பிரச்சனை....அதே சக்திதான் நுரையீரலை சரிசெய்ய குப்பைமேனியை கொடுத்துள்ளது ( மழைகாலத்தில் மட்டுமே கிடைப்பது இதன் சிறப்பு ).....


உடல் மொழி அறிந்து, உடலில் பஞ்சபூதசக்திகளின் ஏற்ற இறக்கங்களை அறிந்து, சமன்படுத்த மருந்து மாத்திரைகளை நாடாமல், நம்மை நாமே குணபடுத்தும் ஆற்றல் அறிவோம்....உடல் நலம் காப்போம்.....நன்றி 🙏


தோல் சம்மந்தமான வியாதிகள் வராமல் இருக்க,

 Tips 1 மலச்சிக்கல் இல்லாமல் இருக்கணும்.

Tips 2 சோப் , ஷாம்பூ உபயோகம் தவிர்த்தால் நலம்.

வீட்டில் தயாரித்த பொடிகள் உபயோகிக்கலாம். .... 

இது பொதுவான குறிப்புகள்.... 

தோல் வியாதியின் தன்மையை பொறுத்து ..தேவைக்கு ஏற்ப ...சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்....

Tips 3 

நமது உடலில் கழிவுகள் தேங்கும் போது அதை வெளியேற்ற நமது உடல் முயற்சி செய்யும். நுரையீரல் மற்றும் மலக்குடலில் கழிவுகள் தேங்கியிருந்தால் தோலின் வழியாக உடல் வெளியேற்றும். மலக்குடலை சுத்தகரித்தல், நீர் சிகிச்சை, பசித்து உண்ணுதல், அளவான சுவையோடு  (உப்பு, புளி, காரம்) சாப்பிடுதல், செயற்கை பூச்சுகளை தவிர்த்தல் இவற்றை பின்பற்றினாலே சரியாகிவிடும்.  நாட்பட்ட தொந்தரவாக இருந்தால் சரியாக கொஞ்சம் பொறுமையாக இருத்தல் வேண்டும். 

பசித்து உண்ணல், வியர்வை சுரப்பிகளுக்கு சூரிய ஒளியில் உடலுக்கு கொஞ்சம் வேலை கெnடுத்தல், மூச்சு பயிற்சி செய்தல் சீக்கிரம் நலம் பயக்கும்.

ஒரு குட்டி கதை... இந்த கதையின் ஒவ்வொரு வரியும் வெவ்வேரு நபர்களால் எழுதப்பட்டது...short story in which each line written by different people

 எழில் கொஞ்சும் பச்சை பசேல் மலைமீது  மெல்ல இயற்கை எழிலை ரசித்து உணர்ந்து, வியந்த கண்களோடு, சில்லென்று தொடும் தென்றலோடு,  காலணிகள் இல்லாமல் மண்வாசமும் உணர்ந்து.....ஏறுகிறேன் மலைமீது.....

மலை மீது ஏறும்போது என் மனம் மற்றும் உடம்பும் காற்றில் பறந்துசென்றது, மலையின் வழி எங்கும் மூலிகை மரங்களின் காற்று  என்னை மேலும் தூய்மை ஆக்கியது.

அப்போது தான் உண்மையான ஆக்ஸிஜன் உணர்ந்தேன்.

இயற்க்கையை ரசித்து என்னை நிலை மறந்து தேவதையாக மாறி மலைவாசிகள் வாழக்கமுறைகளை ரசித்தேன்.

மேகங்கள் அனைத்தும் கருமேகம் ஆக மாரி இளம் தூறல்  ஆரம்பித்து இருந்தது

பஞ்ச பூதங்களின் சக்தியை உணர முடிந்தது

பஞ்சபூதங்களின் சத்தி முழுமையான நான் அடைந்தேன்.

தூறலை கண்டதும் என் மனம் மயிலை போல ஆட நினைத்தது.

அப்போது மயில் ஆட குயில்பாட ஏக ஆனந்தம்

இருந்தாலும் என் கண்கள் ஏதோ தேடியது.

இருந்தாலும் என் கண்கள் ஏதோ தேடியது.

நாம் பெற்ற இன்பம் நம் தோழர்களை தேடியது.

மின்னல் ஒளியில் நான் கண்ட காச்சி ஆஹா

மழையில் நனைந்து அந்த வெளிச்சத்தில் வெதுவெதுப்பான இடம் செல் எண்ணியது.

மலையின் மீது வானவில் நான் தொட்டுவிடும் தொலைவில் இருப்பது போல் இருந்தது...

என் தோழர்கள் குளிருக்கு வெப்பம் முட்டி சுற்றி பாடல் பாடி மகில்சியில் நான் அங்கு வானவில் எங்களை வட்டம்மிட்டது ஆஹா ஆஹா

வானவில்லில் தூளி கட்டி ஆடி மகிழ என்னே இன்பம்

மனம் மட்டும் மா மகிழ்ச்சி கண்களுக்கு குளிர்சிகாதுக்கு இனிமை என்றும் நகரத்தில் இருந்த சத்தம் இல்லாமல் ஏகாந்த நிலை அடைந்தேன்

வானவில் வந்தால் மழை அடுத்து வராது என்று எனக்கு தெரியும்.    மின்னல் வந்ததை பார்க்க கூடிய அந்தி நேரம். எனவே என் பாதம் அங்கே திரும்பியது.

இந்த மகிழ்ச்சி என்னுள் எப்பொழுதும் நிலைத்திருக்க தான் வாழும் இடத்தை இயற்கை எழில் கொஞ்சும் இடமாக மாற்ற வேண்டும் என்று மனம் ஏங்குகிறது

ஆம் நாம் இருப்பது நகரமாக இருந்தாலும் இருக்கும் இடத்தில் மாடி தோட்டம் அமைக்க  திட்டமிட்டேன்...

 மாடி தோட்டமாக இருந்தாலும் இயற்கை முறைதான் பின்பற்ற மனம் என்னியது

அதன் முதல் படியாக மலை எங்கும் சுற்றி மலைவாழ் மக்களிடம் நாட்டு விதைகளை பெற சென்றேன்.. மேலும் நானும் பல மலை முகடுகளில் நாட்டு  தாவர விதைகளை சேகரித்தேன் 

இயற்கையின் பரிசாக  விதைகளை தேடி எடுத்து, இனி எனது உணவில் நஞ்சு இருக்காது என்ற திருப்த்தியோடு மலையிலிருந்து இறங்குகிறேன்...



இன்றைய விளையாட்டு கோடிட்ட இடத்தை நிரப்புதல்....... Fill in the blanks game !!! Are you ready???


நீர் தான் ___தண்ணீர் இல்லாமல் ____இருக்காது, உடலின் அனைத்து உயிரனுக்களுக்கும் நீர் உணவு, மற்றும் ___ஆகும், இது ஒரு நொடியில் அனைத்து உறுப்புகளுக்கும் ___அளிக்கிறது, நீர் உடல் மற்றும் ___நச்சுக்களை சுத்தப்படுத்துகிறது, தண்ணீர் பற்றாக்குறை உடலில் உள்ள பெரும்பாலான ____ஏற்படுத்துகிறது, மலையிலிருந்து வரும்  ___ நீர் என்பது மனிதனின் நுகர்வுக்கு இயற்கையின் நோக்கம்கொண்ட நீர் ஆதாரமாகும், தாகம் என்ற உணர்வு முதலில் ___உணரப்படுகிறது, உலர்ந்த உதடுகள் மற்றும் தொண்டைதீவிர நீரிழப்பை குறிக்கிறது, தண்ணீரை குடிக்க சிறந்தவழி கையின் உள்ளங்கையில் இருந்துதான், நீர் விழுங்குவதற்கு முன் உதடுகளின் நாவின் ____தொடவேண்டும், தண்ணீரின் வெப்பநிலையும், சுவையும் விழுங்கப்படுவதற்கு முன்பு உடலின் உமிழ்நீரை நடுநிலையாக்க வேண்டும், தண்ணீரை சிப்பால் உட்கொள்ளவேண்டும், கல்ப் செய்வதன்மூலம் அல்ல, தண்ணீரை நுகரும் முன் _____ நன்றி சொல்லவேண்டும், சுவை வாயில் தானே நடுநிலையான பின்னரே அனைத்து சாறுகளையும் விழுங்க வேண்டும்.......


விடைகள் இங்கே 👇 சரியான விடைகளை கோடிட்ட இடத்தில் நிரப்பவேண்டும் 💐


* மருந்து

* வாழ்க்கை

*அமுதம்

* ஆற்றல்

* ஆசிர்வதித்து

* மனதில்

* மனதின்

* நுனியையும்

* நதி

* வலிகள்......

உணவே மருந்து சில நோய்களும் அதன் தீர்வுகளும் Natural remedy for some diseases

நல்ல நெஞ்சு சளிக்கு 

இரவு தூங்கும் முன் ஒரு நபருக்கு ஒரு வெற்றிலை கால் ஸ்பூன் சிரகம் கால் ஸ்பூன் மிளகு . செய்முறை: வெற்றிலையை பிச்சி போட்டு சிரகம் மிளகு நுனுக்கி 500ml தண்ணீர் சேர்த்து சிறிய தீயில் 150 ml குறைய வைத்து பனகல் கண்டு சேர்த்து சாப்பிடனும் 12 நாள். குறிப்பு: பால் சாப்பிடும் பலக்கம் உள்ளவர்பால் சாப்பிட்ட பின் வெற்றிலை கசாயம் சாப்பிடவும்.

உடல் சோர்வு (வெயில் காலத்தில்)... 

ஒரு கப் தண்ணீரில் அரை எலுமிச்சை பழம் புளிந்து உப்பு மற்றும் சர்க்கரை சம அளவில் கலந்து குடித்தால் உடல் தெளிர்ச்சி அடையும்... Dehydrated bodyக்கு இது சிறந்த உடனடி தீர்வு... அதன் பிறகு உணவு எடுத்து கொள்ளலாம்...

பெண்களுக்கு மார்பக புற்று நோய் வராமல் இருக்கவும் வந்தபுற்று நோய் குணமாக மகிழம் பூ சிறந்த மருந்து சித்தர் கோயில் சித்தர்கள் கல்வெட்டில் எழுதியது

அல்சர்

    அல்சர் உள்ளவர்கள் முதலில் வயிற்றில் ஒரு வெள்ளை துணியை போட்டு அதன்மேல்களிமண் பரப்பி12 நாள் செய்ய அல்சர் குறையும். மனதை தெளிவாக வைத்துக்க வேண்டும்.

இரவில் மூன்று நான்கு முறை யூரியன் வெளியேரினால் தூக்கம் தடைபடும் அதற்க்கு அத்தி இலைகசாயம் சிறந்த மருந்து

கொழுப்பு குறைய/வெள்ளை படுதல் குணமடைய:

காலை வெறும் வயிற்றில் 100 கி வெண்பூசணி சாறு (தோல் விதையுடம் அரைக்கவும்). சுவைக்காக: உப்பு + மிளகு + சீரகம்

இதயம் பலகினம்

     வெள்ளை தாமரை பூ வாங்கி நிலவில் காயவைத்து. காலை 5 இதழ் பூவை 200ml தண்ணீர் சிறுதீயில் வைத்து 100 ml வந்ததும். வெறும் வயிற்றில் கூடிக்க இதயம் பலம் பேறும்

காலில் ஆணி...


பச்சரிசி இலை அ தண்டை கிள்ள பால் வரும்.. அந்த பாலை தொடர்ந்து புண் உள்ள இடத்தில் தேய்து வர குணமாகும். 


தொடர் வறட்டு இருமல்...


ஒருவருக்கு இரண்டு ஆடாதொடை இலை வீதம் எடுத்து கசாயம் வைத்து குடிக்க வேண்டும்.. மற்றும்

தேனில் மிளகுத்தூள் கலந்து சாப்பிட வேண்டும்.


சூடான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

 தலையில் நீர் கோத்தல்

   இரவு தூங்கும் முன்வெற்றிலைக்கு போடும் சுண்ணாம்பூ எடுத்து மஞ்சள்தூள் சேர்த்து பத்து போடவும். உச்சி தலைநெற்றி காது பின்புறம் தடவவும். நல்ல தூக்கம் வரும் காலை மிகவும் நல்லா போகும். இது அகத்தியர் மருந்து.


தோல்நோய் 

வரும் முன் காப்பது

.இரத்த சுத்தம்

1.தோல் துவாரம் அடைக்கும் fatty acid சோப் நீக்கி குளியல் பொடி. சூரிய குளியல் or வியர்வை சிந்த உழைப்பு. 

2. கழிவு நீக்குதல்

 கடுக்காய் or திரிபலா or விளக்கெண்ணெய் உட்கொள்ளுதல். 

3. Fatty acid தயாரிக்கும்

கடை சாப்பாடு தவிர்த்தல். 

இதை கடைபிடிக்காவிட்டால் தோல் நோய் வரும். வந்தபின் இதனை பின்பற்றி கழிவு நீக்கி 

வெளி மருந்தாக குப்பைமேனி கல் உப்பு விராலி மஞ்சல் எலுமிச்சை சாறு சேர்த்து இடித்து அதனை பூசி குளித்தல். 

உணவாக மாதுளை or திராட்சை சாற்றுடன் தேன் கலந்து குடித்து வர இரத்த சுத்தி ஏற்பட்டு தோல் வியாதி நீங்கும்.

To increase blood ரத்தம் அதிகரிக்க

 ரத்தம் அதிகரிக்க

    கருப்பு உலர்திராச்சை 9 நாள் சாப்பிடவும். 

சாப்பிடும் முறை:-

முதல்நாள் இரவு 3 திராச்சை உறவைத்து. மறுநாள் காலை, மதியம் இரவு மூன்று வேளையும் சாப்பிட பின் ஒரு திராச்சை கால் டம்ளர் தண்ணீர் விதம் மூன்று நேரம் சாப்பிடவும். இவ்வாறு 2வது நாள் ஒரு வேளைக்கு 2விதம் இப்படி ஒன்பது வரை எண்ணிக்கை அதிகரித்து சாப்பிட்டு பாருங்கள் ரத்தத்தின் அளவு அதிகரிக்கும்...

அல்சர் தீர்வு Ulcer

அல்சர் தீர்வு 

உணவை தேர்ந்தெடுத்தது சாப்பிடாததுதான் அல்சருக்கு முக்கிய காரணம் என்றாலும் மன அழுத்தம், மன பதட்டம், உரிய இடைவெளியில் உணவு உட்கொள்ளாதது, சுயமாக வலி நிவாரண மாத்திரைகளை அடிக்கடி எடுத்துகொள்வது, ஆரோக்கிய குறைபாடால் அதிகளவு எடுக்கும் ஸ்டீராய்டு மாத்திரைகள், அமிலம் கலந்த காரம் அதிகமான உணவை எடுத்துகொள்வது போன்றவை எல்லாம் அல்சருக்கு காரணம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

இந்த அல்சர் நோயை போக்க  மண தக்காளி கீரையுடன் (1/2) பாதி அளவு நாட்டு தக்காளி🍅 விதை பகுதி நீக்கி விட்டு பனங்கற்கண்டு சேர்த்து 3 நாள் காலை உணவுக்கு முன் ஜூஸ் போட்டு குடிக்கவும்....

குதிகால் வலிக்கு செங்கல் மருத்துவம்

 குதிகால் வலிக்கு செங்கல் ஒன்றை அடுப்பில்  வைத்து நன்கு ஒரு பத்து நிமிடம் சூடுபடுத்தி அந்த கல்லை பழைய துணியின் விரிப்பில் வைத்து எருக்கன் இலையை ஒன்றன்பின் ஒன்றாக வைத்து குதிகாலை அதன் மேல் வைத்து ஒத்தடம்  கொடுக்கவும்.

மூட்டு வலிக்கு சூடான இலையை மூட்டின் மேல்  போட்டு  ஒத்தடம் கொடுக்கலாம்.

சட்டியில் கல் உப்பை போட்டு வறுத்து வெள்ளை துணியில் மூட்டை கட்டி  ஒத்தடம் கொடுக்கலாம்.

அகலமான தட்டு அல்லது  பாத்திரத்தில் சுடு தண்ணீர்  ஊற்றி குதிகாலை அதில் வைத்து ஒத்தடம் கொடுக்கலாம்

ஒழுங்கற்ற மாதவிடாய் இருப்பவர்கள் இதை செய்யுங்கள் உடனே குணம் ஆகும் Remedy for Irregular periods

இன்றைய சூழலில் பல பெண்களுக்கு மாதவிடாய் சரியான நேரத்தில் வருவதில்லை அப்படி நாள் தவறி வரும் மாதவிடாயினால் பெண்கள் பல தொல்லைகளை நடைமுறை வாழ்க்கையில் அனுபவிக்கின்றனர் ...

இதில் இருந்து விடுபட பெண்கள் இந்த இயற்கை வழிமுறையை பின்பற்றலாம் ...


ஒழுங்கற்ற மாதவிடாய் இருப்பவர்கள் பதினா (Mint) இலையை சுத்தம் செய்து, நிழலில் உலர்த்தி பொடி செய்து ,ஒரு ஸ்பூன் எடுத்து தேணில் கலந்து  சாப்பிட்டால் மூன்று நாட்களுக்குள் மாதவிடாய் நடக்கும்,

 but if you go to doctors they will give tablets for months, but this single time simple food medicine will cure your problem ,,no side effects too...

செய்து பார்த்து உங்கள் அனுபவங்களை கமெண்டில் தெரிவிக்கவும்