Showing posts with label Healthy food. Show all posts
Showing posts with label Healthy food. Show all posts

காலையில் வெறும் வயிற்றில் முளைகட்டிய பயறு சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?

Scroll down for English Version

 முளைக்க வைக்கப்பட்டு பயன்படுத்தும் அனைத்து பயறு வகைகளுமே சிறந்த புரதச்சத்து உடையதாக இருக்கிறது.



அதில் புரதம், கார்போஹைட்ரேட், பீட்டா, கரோட்டின் போன்றவை அதிக அளவில் உள்ளன. முளை கட்டிய தானியங்களில் அதிக அளவு ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்டும், உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கிறது.


அதிலும் காலையில் வெறும் வயிற்றில் முளைகட்டிய பயறு சாப்பிடுவதனால் உடலுக்கு பல நன்மைகள் தருகின்றது. 


அந்தவகையில் தானியங்களை எடுத்துக் கொள்வதால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்று இங்கே தெரிந்து கொள்வோம்.


முளைகட்டிய தானியங்களை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உங்களின் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும். 


ஆரோக்கியமான சருமத்தை பெற விரும்புவோர் முளைகட்டிய தானியங்களை எடுத்துக் கொள்ளலாம்.  


முளைகட்டிய தானியங்களை நாம் உணவாக எடுத்துக் கொள்ளும் போது, உங்களின் ஜீரண சக்திக்கு உதவி புரியும். இதில் உள்ள நார்ச்சத்து மலத்தை இலகுவாக்கி குடல் வழியாக விரைவில் நகர்த்த உதவும். இதனால் மலச்சிக்கல் அபாயத்தைக் குறைக்க முடியும். இது குடல் ஆரோக்கியத்திற்கும் சிறந்தது.


முளைகட்டிய பயிர்கள் அல்லது தானியங்களை உண்ட பின் நீங்கள் மந்தமாகவோ அல்லது அஜீரணமாகவோ உணர்ந்தால், நன்றாக நீராவியில் வேக வைத்த உருளைக்கிழங்கு மற்றும் சிறிதளவு நெய்யை முளைகட்டிய பயிருடன் சேர்த்துக் கொள்ளலாம்.

English Version

Do you know the benefits of eating sprouted lentils in the morning on an empty stomach?

All sprouted legumes are high in protein.

It is high in protein, carbohydrates, beta and carotene. Sprouted grains are high in antioxidants and provide much needed immunity to the body.

Even more, eating sprouted lentils on an empty stomach in the morning has many benefits for the body.

Here we will find out what are the benefits of taking grains in that way.

Incorporating sprouted grains in the diet will improve your immunity.

Those who want to get healthy skin can take sprouted grains.

When we eat sprouted grains, it helps in your digestive power. The fiber in it lightens the stool and helps it to move quickly through the intestines. This can reduce the risk of constipation. It is also good for intestinal health.

If you feel sluggish or indigestible after eating sprouted crops or grains, you can add well-steamed potatoes and a little ghee to the sprouted crop.

எடையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புபவர்கள் புடலங்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வரவேண்டும் Healthy Snake guard

 புடலங்காயை நாம் ஒரு மூலிகை என்பதை அறியாமலே பயன்படுத்தி வருகிறோம். இதில் உள்ள விதைகளை நீக்கி சதைப்பகுதியை மட்டும் பயன்படுத்தவேண்டும். புடலங்காயை பச்சை பயிறு சேர்த்து கூட்டாக செய்து தொடா்ந்து 12 நாட்கள் இடைவெளி விட்டு ஒரு மண்டலம் சாப்பிட்டுவர மூல நோயின் தாக்கம் குறைந்து மூலம் கருகி விழுந்துவிடும்.


எடையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புபவர்கள் புடலங்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வரவேண்டும். இதனால் உடலில் உள்ள தேவையற்ற உப்பு நீரை வியர்வை சிறுநீர் மூலம் வெளியேற்றும்.


அதிக உடல் சூட்டால் மஞ்சள்காமாலை நோய் ஏற்பட்டால் அவர்கள் புடலங்கொடியின் இலைகளை கைப்பிடி அளவு எடுத்து அதனுடன் அதே அளவு கொத்தமல்லி சேர்த்து 300மிலி தண்ணீரில் கொதிக்கவைத்து அந்த தண்ணீரை வடிகட்டி மூன்று வேளை குடித்து வந்தால் மஞ்சள்காமாலை கட்டுப்படும்.


இதய கோளாறு உள்ளவர்கள் புடலை இலையின் சாறு எடுத்து நாள்தோறும் 2 தேக்கரண்டிவீதம் வெறும் வயிற்றில் 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் இதயநோய்கள் அனைத்தும் நீங்கும்.


புடலையின் வேரை கைப்பிடி எடுத்து மைய அரைத்து சில துளிஅளவு வெந்நீரில் விட்டு குடித்து வந்தால் மலமிளகி வயிற்றில் உள்ள பூச்சிகள் வெளியேறும்.


புடலங்காயை பொறியல் செய்து சாப்பிட நரம்புகளுக்கு புத்துணர்வு கிடைக்கும். நினைவாற்றல் அதிகரிக்கும். நீரிழிவு உள்ளவர்கள் புடலங்காயை எந்த வகையிலாவது சேர்த்துவர அனைத்து வகையான சத்துக்களும் அவர்களுக்கு கிடைக்கும்.


கடும் காய்ச்சல் உள்ளவர்கள் வெட்டிய புடலங்காய் 250கிராம் எடுத்து 300மிலி தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி 200மிலி குடித்தால் ஒரே நாளில் காய்ச்சல் இயற்கையாக நீங்கும்....

திப்பிலி (Piper Longum) மிளகிற்க்கு அண்ணன் இதன் இலைகளோ வெற்றிலைக்கு தம்பி

 


பழங்காலமாக நம் சமையல் அறையில் இருந்தது திப்பலி  மிளகாய் வந்தவுடன் நம்மிடம் இருந்து வெளியேறிவிட்டது தற்செயலா திட்டமிடபட்டதா என தெரியவில்லை மிளகாய் திப்பிலி இரண்டிலுமே காரம் இருக்கிறது ஆனால் திப்பிலியில் மட்டுமே காரமும் கூடவே சாதாரண சளி முதல் ஆண்மையை அதிகரிப்பு வரை என ஏகபட்ட மருத்துவ குணம் இருக்கிறது


நம் காலசூழ்நிலையில் சாதாரணமாக வளரகூடிய கொடிதாவரம் இது..வீட்டிலும் மொட்டமாடியிலும் வளர்க்கலாம் எங்கள் வீட்டில் பல ஆண்டுகளாக திப்பிலி செடி வளர்க்கிறோம்..பழங்குடி மற்றும் கிராம மக்கள் அசைவ உணவிற்க்கு பின் திப்பிலி செடியின் இலையை மென்று சாப்பிடுவார்கள்,.இதன் இலை ஜீரண ஆற்றலை அதிகரிக்கும் அதனால்தான் வெற்றிலையின் தம்பி என்று முதல்வரியில் சொல்லியிருந்தென்


சளி,காசநோய், காய்ச்சல், கபம், கோழைச்சளி,   இருமல்,வாய்வுத் தொல்லை, வயிற்றுப் பொருமல், வறட்டு இருமல், இளைப்பு, களைப்பு,  வெள்ளைப் படுதல், போன்ற பிரச்சனைக்கு உணவிலும் சேர்த்துகொள்ளலாம் அல்லது பவுடர் செய்து மிளகு தூள் போல பயன்படுத்தலாம் ஆனால் மிளகைவிட காரம் அதிகம்,,திப்பிலி தூளை நெய் அல்லது நாட்டு சர்க்கரையுடன் சாப்பிட்டால் "அந்த

விசயத்தில் பலம் அதிகமாகும்


திப்பிலி பொடியை இரண்டு ஸ்பூன் எடுத்து வெற்றிலைசாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் சளி காய்ச்சல் இருமல் குணமாகும்

திப்பிலி பொடியுடன் சமஅளவு குப்பை மேனி இலையை நிழலில் உலர்த்தி  பொடி செய்து சேர்த்து சாப்பிட்டால் மூலம் பெளத்திர குணமாகும்

திப்பிலி 5 பங்கு தேற்றான் விதை  3 பங்கு இவை பொடி செய்து அரிசி கழுவிய  நீரில் காலை மாலை என இருவேளை மூன்று நாட்கள் சாப்பிட்டால் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் அதிகரித்து போகும் ரத்தபோக்கு  பிரச்சனை சரியாகும்.


திப்பிலியை தூக்கி வைத்து கொண்டாடலாம். வீட்டில் வளர்க்க தொடங்குகள்

7 ம் நாளுக்கான உணவு 7th day food

 அனைவருக்கும் வணக்கம் 🙏

7 ம் நாளுக்கான உணவு

காலை


அரை முடி தேங்காய், வாழைப்பழம், பேரீச்சை 2, வெல்லம் ஒரு துண்டு


மதியம்


அவல் புட்டு


சிவப்பு அவலை, மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும், அதில் மூழ்கும் அளவு நீர் ஊற்றி 2 நிமிடம் ஆனதும் , நீரை வடிண்துவிடவும், வடித்த அவலில் கால் பங்கு தேங்காய் துருவல், ஏலக்காய் தூள் ஒரு சிட்டிகை, வெல்லம் 1 ஸ்பூன் கலந்து சாப்பிடவும் ..


மாலை


எலுமிச்சை ஜூஸ் ( வெல்லம் போட்டது)


இரவு 


பழங்கள்




தேங்காயின் பயன்கள்




* உடலில் உள்ள நோய் எதிர்ப்பு அமைப்பை நிலை நிறுத்த உதவும்

* அடிக்டி ஏற்படும் சளி இருமலை விரட்டியடிக்கும்

* உடைத்து அரைமணிநேரத்திற்குள் சாப்பிடுவது சிறந்தது

* கெட்ட கொழுப்பை அகற்றும்

* இரத்தம் சுத்தமாகும்

* உச்சிமுதல் பாதம் வரை உள்ள உருப்புகளை புதுப்பிக்கும்

* பழங்காலத்தில் இறக்கும் தருவாயில் உள்ள நபர்களை தேங்காய்பால் கொடுத்து வாழ்நாளை நீட்டிப்பு செய்தார்கள்...

6 ம் நாளுக்கான உணவு 6th day food

 அனைவருக்கும் வணக்கம் 🙏


காலை


வெண்பூசணி ஜூஸ், தோல் விதையோடு அரைத்து வெள்ளை துணியில் வடிகட்டி குடிக்கவும்....


11 மணிக்கு


Detox water


கேரட் 1, பீட்ரூட் 1, எலுமிச்சை 1, சோம்பு 1 1/2 ஸ்பூன்....ஊறவைத்து குடிக்கவும்


மதியம்


வெண்பூசணி அவல் சாதம்


துருவிய வெண்பூசணி ஒரு கப் ( பிழிந்து சாறு எடுத்துடுங்க), வெள்ளை அவல் ஒரு கப், இயற்கை மோர் சிறிது....ஒரு சிட்டிகை உப்பு, மிளகு தூள் ஒரு சிட்டிகை, வறுத்த வேர்கடலை, மாதுளை கொஞ்சம் சேர்த்து, மல்லிஇலை கொஞ்சம் சேர்த்து சாப்பிடவும்....


மாலை


அத்திப்பழம் 2, பேரீச்சை 4 , ஊறவைச்சு அரைச்சு குடிக்கவும்


இரவு


பழங்கள்


* வெண்பூசணி குடல் புண் ஆற்றும்

* எரிச்சல் கொடுக்கும் புண்கள் சரியாகும்

* வெயிலினால் ஏற்படும் புண்கள் சரியாகும்

* உடல் குளிர்ச்சியாகும்

* வேர்கடலை களைப்பு நீக்கும்

* detox water, கழிவை நீக்கி சக்தி கொடுக்கும்

* அத்திபேரீச்சை பலம் கொடுக்கும்

5 ம் நாளுக்கான உணவு 5th day healthy natural foods

 அனைவருக்கும் வணக்கம் 🙏


காலை


வேர்கடலை,  ... இரவு ஊறவைச்சுடுங்க....காலையில் அரைத்து அதோடு வாழைப்பழம ஒன்று, வெல்லம் சேர்த்து குடிக்கவும்


11 மணிக்கு 


Detox water


கொத்தமல்லி ஒரு கைப்பிடி, துளசி 10, புதினா 10...3 மணிநேரம் ஊறவைத்து குடிக்கவும்


மதியம்


அவல் அலசியது + மாங்காய் துருவல், வறுத்த வேர்கடலை பொடித்தது, ஒரு சிட்டிகை உப்பு, மிளகுதூள் கலந்து உண்ணவும்


மாலை


இரண்டு துண்டு வெண்பூசணி 


இரவு  7 மணிக்குள்


இரண்டு துண்டு வாழைக்காய் (raw) ...


பழங்கள்....




மதியம்

4 ம் நாளுக்கான உணவு 4th day natural healthy food

 அனைவருக்கும் வணக்கம் 🙏


காலை


வெண்பூசணி ஜூஸ்


வெண்பூசணி யை நன்றாக அலசிட்டு தோல் விதை உட்பட அனைத்தையும் அரைச்சு வடிகட்டி குடிக்கவும்....


எரிச்சலுடன் கூடிய தோல் வியாதி தீரும்


Detox water 11 am


புதினா 25 இலைகள், எலுமிச்சை 1, வெள்ளரிக்காய் 1( நறுக்கி போடவும்)


மதியம்


தேங்காய் பால் + அவல் கலவை


மாலை


கேரட் துருவல் , பொடித்த வேர்கடைலை, தேங்காய் துருவல், அனைத்தும் சம அளவு ....தேவைக்கு வெல்லம் சேர்த்து உருண்டைபிடிக்கவும்


இரவு 


பழங்கள்


* செவ்வாய்கிழமை பெண்கள் எண்ணெய் தேய்த்து குளிக்கவும்


 *எண்ணெய் தேய்த்து குளிப்பவர்களுங்கு இந்த இயற்கை உணவு வேண்டாம் , சமைத்த உணவு சாப்பிடவும்..

3 ம் நாளுக்கான உணவு 3rd day healthy natural foods

அனைவருக்கும் வணக்கம் 🙏


3 ம் நாளுக்கான உணவு....


காலை


கொத்தவரங்காய் ஜூஸ்


கொத்தவரங்காய் 4, தேங்காய் சில் 1, மிளகு, சீரகம், ஒரு சிட்டிகை உப்பு...அரைத்து வடிகட்டி குடிக்கவும்


11 மணிக்கு


Detox water


கேரட் 1 ( நறுக்கியது ),  புதினா 25 இலைகள், சோம்பு 1 ஸ்பூன்....3 மணிநேரம் 1/1/2 லிட்டர் தண்ணீரில் ஊறவைத்து குடிக்கவும்


மதியம்


நவரத்னா அவல் கலவை


வெள்ளை அவல், அலசி மூழ்கும் அளவு தேங்காய்ப்பால் ஊற்றி சிறிது நேரம் ஆனதும், மாதுளை, உலர் பழங்கள், விதைகள், கலந்து உண்ணவும்


மாலை


வாழைப்பழ பேடா


வாழைப்பழத்தை வட்ட வட்டமாக நறுக்கி அதன்மேல் தேங்காய் துருவல், வெல்லம் தூவி சாப்பிடவும்


இரவு 


பழங்கள்


கொத்தவரங்காய்

*கொத்தவரங்காய் நரம்பு பலப்படும்

* சிரங்கு, வேர்கூரு குணமாகும்

* கட்டிகள், கொப்பளங்கள் சரியாகும்

* பூச்சிக்கடியால் வரும் அலர்ஜி சரியாகும்

* நரம்பில் ரத்த ஓட்டத்தை அதிகபடுத்தும்

* சூட்டினால் வரும் கொப்பளங்கள், கட்டிகள் குணமாகும்

2 ம் நாள் இயற்கை உணவு 2nd day natural food list and tips

அனைவருக்கும் வணக்கம் 🙏

கத்தரிக்காய் ஜூஸ்


கத்தரிக்காய் 1 ( சிறிது )...மிக்ஸியில் அரைச்சு வடிகட்டி குடிக்கவும் (ஒரு நபருக்கு )...


கருப்பு நிற தோல்  நோய் தீரும், மங்கு, கண் கருவளையம், நாள்பட்ட பருக்கள்.....


மதியம் 


தக்காளி அவல் சாதம்....


தேங்காய் பாலில் ஊறவைத்த அவல் ஒரு கப், அதில் பொடியாக நறுக்கிய ஒரு தக்காளி, சுவைக்கு ஒரு சிட்டிகை உப்பு, சீரகத்தூள், மிளகுதூள் ஒரு சிட்டிகை, பொடியா நறுக்கிய கறிவேப்பிலை, மல்லி இலை.....


மாலை (5 மணிக்குள்)


Detox water...


கேரட் 1, கறிவேப்பிலை ஒரு கைப்பிடி, எலுமிச்சை 1....

👆 3 மணிநேரம் 1 1/2 லிட்டர் நீர் ஊற்றி ஊறவைத்து...அடுத்த ஒரு மணிநேரத்தில் குடிச்சு முடிக்கனும்....


இரவு


கொய்யாபழம்



* கத்தரிக்காய் தோல் நோய்க்கான, அதுவும் கருமைநிற தோல் நோய்க்கான மருந்து, தொடர்ந்து குடிக்க மறையும்....


* தேங்காய் பால் நரம்புகளுக்கு பலம் கொடுக்கும்


Detox water....இது ஒரு வகை கழிவு நீக்கம்....சோரியாசிஸ் நோய் குணமாகும், ஜீரணசக்தி கூடும், நெஞ்செரிச்சல் சரியாகும்.....

இயற்கை வழி வீட்டு தோட்டம் பயிற்சி - 3 தேதி: 19/06/2021 Topic: மண் வளம் அறிவோம் (Soil Science)

 இயற்கை வழி வீட்டு தோட்டம் பயிற்சி - 3☘️🍀🌿🌱🪴🎋🍃🌾

தேதி:  19/06/2021  

நேரம்:3:30 PM to 5:00 PM

Topic: மண் வளம் அறிவோம் (Soil Science)

நடத்துபவர்: திரு. பலராமன் மானேரி

இயற்கைவழி வீட்டுதோட்டம் /Seed Island விதை தீவு

பயிற்சி ஒருங்கிணைப்பாளர்கள்

Mrs. Ajitha Veerapandian

Mrs. Akila Kunalan

Mrs. Priya Rajnarayanan 

ஒவ்வொரு வாரமும் நடைபெறும். அனைவரும் பங்கேற்று வீட்டுக்கு ஒரு விவசாயி ஆகலாம்

குறிப்பு: பயிற்சி சரியாக 3.30 PM ஆரம்பித்து  5 PM முடிந்து விடும்.

SeedsIsland Team is inviting you to a scheduled meeting.



https://youtu.be/XSWHLCCtbpI


Or


Join Zoom Meeting

https://us02web.zoom.us/j/9470331037?pwd=aDR0bi9NeFN1ME9sZ1VkQ2dqL0JHdz09


Meeting ID: 947 033 1037

Passcode: nF5j3H

Or

https://www.facebook.com/seedisland.seedisland/

பல் சம்மந்தமான பிரச்சனைகள் அனைத்தும் தீர எளிய மூலிகைபல்பொடி For all dental problems simple herbal toothpaste

 பல் சம்மந்தமான பிரச்சனைகள் அனைத்தும் தீர  எளிய  மூலிகைபல்பொடி



 தயாரிக்கும் முறை :-

🌿🍃🍀☘️🥗🌳☘️🍀🍃🌿


 பல்பொடி தயாரிக்க😁


 தேவையான பொருட்கள் :-


கிராம்பு பொடி                - 25 கிராம்

கடுக்காய்  பொடி           - 40

 கிராம்

ஆலம் பட்டை பொடி.    - 25

அக்ரகாரம் பொடி          -10 கிராம்

நாயுருவி வேர் பொடி  - 25 கிராம்

கல் உப்பு பொடி              - 10 கிராம்


இந்த பொருட்கள் அனைத்தும் நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும் . இந்த மூலிகைகளை பற்றி 1 நிமிடம் பார்த்த பின்பு பல்பொடி தயாரிக்கும் முறை பற்றி பார்ப்போம்..


1 . கிராம்பு -


பற்றி அனைவருக்கும் தெரியும் ..பல்வலியை சரிசெய்து பற்களில் உள்ள கிருமிகளை அழிக்கும்.


2 . கடுக்காய் -


 அந்த காலத்தில் நம் முன்னோர்கள் கடுக்காய் பயன்படுத்தி தான் பெரிய பெரிய கட்டிடங்களை கட்டினார்கள் ..கடுக்காய் சேர்த்து கட்டப்பட்ட கட்டிடம் அவ்வளவு எளிதில் உடைபடாதாம்..கடுக்காய் வைத்து பல் துலக்க பல் வலிமை பெறும்.


3 . அக்ரகாரம் -


 அக்ரகாரம் வைத்து பல் துலக்க ஆடின பல் கூட ஆடாமல் நிற்கும் என்று சித்தர்கள் கூறுகிறார்கள் . மேலும் அக்ரகாரம் நம் உடலில் உள்ள நரம்பு களையும் வலுபடுத்த கூடியது ..அதுமட்டுமல்லாமல் பல் வலியையும் சரிசெய்ய கூடியது..


4. ஆலம்பட்டை


ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி என்பது மூத்தோர் வாக்கு. ஆலமரப்பட்டை பற்களின் இறுகளை பலப்படுத்தும்.


5 . நாயுருவி வேர் -


 நாயுருவி பற்றி நாம் பல பதிவுகளில் பார்த்து உள்ளோம்.. நாயுருவி வேர் பற்களால் கடித்து பல் முழுவதும் பட்ட உடனே ஓரு சிறு கல்லை எடுத்து கடிக்க அந்த கல் உடைபடும் .. அந்த அளவுக்கு பற்களை உடனே வலுபடு்ததும் சக்தி இந்த நாயுருவிக்கு உண்டு.

முகவசீகரம் தன்மை அதிகரிக்கும்.


6. இந்துப்பு -


இந்துப்பு பற்றி தெரியாத நபர்களே கிடையாது . நம் முன்னோர்கள் உப்பை பயன்படுத்தி தான் பற்களை துலக்கினார்கள் ...


செய்முறை :-😀

ஆறு பொருட்களில் உப்பை மட்டும் தனியாக பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள் ... மற்ற மூலிகைகளை மேற்கூறிய அளவுகளில் கலந்து ஓரு கண்ணாடி பாட்டலில் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள் ..காலை எழுந்தவுடன் இந்த பற்பொடியை சிறிது எடுத்து  பல் துலக்க ஆரம்பியுங்கள் ...

வாயில் தான் துவங்குது நம்ம ஆரோக்கியம்... தோழமைகளே...


ருதம்பரா யோகா கோவை🍁

கோணிபுளியங்காய் / கொடுக்காபுளி/ சீனிப்புளியங்காய் 90's Kids favorite fruit

 கோணிபுளியங்காய்

🌿🙏🌸🌼🍁🥒🥗🍉🥭🌿


30 ஆண்டுகளுக்கு முன் இந்த சுவையை உணரா நபர்கள் இல்லை...துவர்ப்பு இனிப்பு புளிப்பு கலந்த அற்புத சுவை....😋😋😋

ஆப்பிளை விட அதிக விலை கொடுக்காபுளி எனப்படும் சீனிப்புளியங்காய்

கோவை பெரியகடை வீதியில் மூலிகைகடைக்கு செல்லும் வழியில் இதை பார்த்ததும் வாங்கும் ஆசையில் விலையை கேட்டேன் கிலோ 250 ரூபாய் எனக்கூறினர். கலிபோர்னியாவின்

ஆப்பில்170.ருபாய் தான் .


🍋கிராமங்களில் பரவிகிடக்கும் இந்த மரம் இன்று நகரங்களில் எட்டா கனியாக இருக்கிறது.


👌ஆயுர்வேதத்தில் கொடுக்கா புளியின் மருத்துவ குணங்கள் நன்கு அறியப்பட்டு பரிந்துரைக்கப் படுகிறது.


🍅செரிமானம் மேம்படுத்தவும், கீல்வாதம் மற்றும் சில கருப்பை நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இது புண்களை குணப்படுத்தும்.


🍁வாத நோய் மற்றும் மூட்டு வலிக்கு மருந்தாகக் கொடுக்கப்பட்டுள்ளது. 


🌸நீண்ட நாள் நோய்வாய் பட்டு சரியானதும் உடல் சூட்டில் பேதி ஆகாமல் இருக்க கொடுக்காபுளி தரப்படுகிறது. இது ஒரு சிறிய புளிப்பான பழம். 


🍒உடல் எடை குறைய மிகவும் அற்புதமான மருந்தாக ஆயுர்வேதம் மற்றும் நாட்டுப்புற மருத்துவம் பரிந்துரைக்கிறது. 


🌿குடல் அழற்சி, கல்லீரல் பெருங்குடல் தொடர்பான எந்த பிரச்சனைக்கும் இது நல்ல மருந்து.


இயற்கை வாழ்வியல் வழி பயணிப்போம்....


🍁பதஞ்சலிஈஸ்வரன்

ருதம்பராயோகாகோவை

ஜில் ஜில் கூல் மண்ணில் பிரிட்ஜ். Fridge made of clay

 ஜில் ஜில் கூல்

மண்ணில் பிரிட்ஜ்...

🌿🌳👏🙏👌🌼👆🧊💧


இனி ஓசோனையும்,மனித உறுப்புகளையும ஓட்டை போடும் எலெக்ட்ரிக் பிரிட்ஜ் இனி தேவை இல்லை...மின்சார கட்டணமும் மிச்சம்.


மண்பானை தொழில் செய்வோர் கால மாற்ற நிலையை கண்டு நம் நிலையை சற்று மாற்றி அமைத்தல் அவசியம்.


1,500 ரூபாய் ஒரு பானை பிரிட்ஜில் 5 கிலோ வரை வைக்கலாம்


பலர் இப்போது மின்சாரத்தில் இயங்கி ஓசோனையும், மனித உறுப்புகளையும் நோய் தந்து ஓட்டை போடும் பிரிட்ஜ் உபயோகத்தை தற்சார்பு அறிவாளிகள் நிறுத்த தொடங்கி தற்போது உபயோகப் படுத்துவது இல்லை.


மண் பானை போலதான் !

பீன்ஸ், முட்டைக்கோஸ் தவிர மற்றவை எல்லாம் அப்படியே புதியதாக உள்ளது. 


தக்காளி + மிளகாய் 10 நாள்.


வெண்டைக்காய் + கருவேப்பிலை + தேங்காய் 12நாள்


சாலட் காய் கறிகள்

லெட்யூஸ், க்ரீன் பெப்பர், சோளம் 14 நாள்


இஞ்சி+பெல்லாரி+நாட்டு வெங்காயம் 2 மாதம்


உருளை+மரவள்ளி

3 மாதம்


கத்திரிக்காய்க்கு மட்டும் ஒரு பானை. 

16 நாள், அதன் பிறகு ஒன்று ஒன்றாக அழுகுகிறது.


பானை வாயை ஈரத்துணி போட்டு மூடி வையுங்கள்.


உடல் கெடாது.

மனம் கெடாது.



திருநீலகண்டர் ஸ்டோர்ஸ் மண்பொருள் விற்பனையகம் 

கருமத்தம்பட்டி கோயமுத்தூர்-641659

அலைபேசி

8015032612.


கோவையில்

சிங்காநல்லூரில்....

ருதம்பரா யோகா மையம்

அடுப்பில்லா சமையல் செய்து அசத்தும் NGR பள்ளி ஆசிரியர்கள்

அடுப்பில்லா சமையல் செய்து அசத்தும் NGR பள்ளி ஆசிரியர்கள் 🌿🙏🥥🍵🥗🌼🌸🌿🍅🥒🍋


              23.4.2021வெள்ளிக்கிழமை கோவை காமராஜர் சாலை, தியாகி NGR நினைவு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் பங்குபெற்ற அடுப்பில்லா சமையல் பயிலரங்கம் பள்ளியில் நடைபெற்றது. 


          மாணவ, மாணவியர் களுக்கான ஆரோக்கிய வாழ்வியலை கொண்டு செல்லவும் நமது பாரம்பரிய உணவுமுறை களையும் ஆரோக்கியம் தரும் அடுப்பில்லா சமையல் உணவுகளையும் நிகழ்வில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு பயிற்சியாக வழங்கப்பட்டது. 


      ஒவ்வொரு இல்லங் களிலும் அடுப்பில்லா உணவுகளை கொண்டு செல்ல ஆசிரியர்கள் மிக ஆர்வமுடன் கலந்து கொண்டனர். நல்ல தொரு நிகழ்வாக அமைந்தது.  20 வகையான இயற்கை உணவுகளை  செய்முறை பயிற்சியுடன் கற்றுத் தரப்பட்டது.  நன்றி🍁


நிகழ்வில் கற்றுதரப்பட்ட  மதிய உணவாக வழங்கப்பட்ட இயற்கை உணவு வகைகள்...


அருகம்புல் ஜுஸ்

லெமன்புதினா ஜுஸ்

முக்கனி சாலட்

வல்லாரை கீர்

எனர்ஜிலட்டு

நுங்கு பாயாசம்

வேர்க்கடலை சாலட்

வாழைப்பூ பொரியல்

பீட்ரூட் பேபிகார்ன் சாலட்

பூசணி வெள்ளரி பச்சடி

அரசாணிக்காய் ஊறுகாய்

கம்பு அவல்பொங்கல்

சிவப்பரிசி காரப்புட்டு

பூங்கார் இட்லி

பாசிபருப்பு வடை

தேங்காய் சாதம்

தூயமல்லி தயிர் சாதம்

மாப்பிள்ளை சம்பா ஸ்வீட்

சோள அவுல் பிரயாணி

கொடாம்புளி பானகம்


அன்னமே எண்ணம்🌿🙏

அன்னம் பரபிரம்மம்🌼👏


🍁ஶ்ரீபதஞ்சலி ஈஸ்வரன்.

ருதம்பரா பவுண்டேஷன் கோவை.

அழகான மண்பாண்டங்களும் அதன்பயன்களும் Benefits of earthen pots

 🌿🙏 *அழகான மண்பாண்டங்களும் அதன்பயன்களும்....


நம் பாரம்பரிய அடையாளங் களுள் ஒன்றான பொங்கல் கொண்டாட்டத்தில், புத்தாடை உடுத்தி, வாசலில் கோலமிட்டு,  புதிய மண் பானையில் பச்சரிசியால் பொங்கலிடுவது வழக்கம். இப்படிப் பொங்கல் திருநாள் மட்டுமல்ல...


   முந்தைய தலைமுறை வரை அன்றாடப் பயன் பாட்டில், மண்பாண்டங்கள் முக்கிய இடம் வகித்தன. ஆனால், இன்றைக்கு 'நாகரிகம்' என்ற பெயரில், அவற்றை யெல்லாம் மறந்து விட்டோம். 


               பொங்கலன்று கூட அலுமினியம், எவர்சில்வர், நான்ஸ்டிக் பாத்திரங்களில் கடமைக்காகப் பொங்கல் வைப்பதே பெரும் பாலும் நடக்கிறது.


       அண்மைக் காலமாக, மக்களிடையே பாரம்பர்ய உணவு வகைகள் மீதான ஆர்வம் அதிகரித்து வருகிறது. மண்பானையில் சாதம், மீன்குழம்பு, ஆப்பம், பணியாரம் எல்லாம் செய்கிறார்கள். இவற்றைச் சமைக்க அலுமினியம், காப்பர், எவர்சில்வர் பாத்திரங்களுக்குப் பதிலாக மண்பாண்டங் களையே பயன்படுத்து கிறார்கள்.


           ஹோட்டல்களிலும் மண்பாண்டங் களில் சமைத்துப் பரிமாறுவதை வாடிக்கை யாளர்கள் பெரிதும் விரும்புகின்றனர். 

உண்மையில், நம் பாரம்பரிய மண்பானைச் சமையலில் அப்படிஎன்னதான் இருக்கிறது? அதை நம் முந்தையத் தலை முறை கொண்டாட என்ன காரணம்?????...


"முன்பெல்லாம், நாம சமைக்கிற பாத்திரம் மட்டுமில்லாம, தண்ணீர் பாத்திரத்துல இருந்து சாப்பிடக்கூடிய தட்டு வரைக்கும் எல்லாமே மண் பாத்திரங்கள்தாம். இரும்பு, பித்தளை, வெண்கலம்னு என பல பாத்திரங்கள் வந்தாலும் அதை வாங்குற சக்தி இல்லாதவங்களுக்கு கையில கிடைச்ச மண்ணைப் பிசைஞ்சி செஞ்ச பாத்திரங்கள்தான் வரப்பிரசாதமா இருந்துச்சு. ஆனா, இந்த நாகரிக காலத்துல, கிராமங்கள்ல கூட மண் பானையில சமையல் செய்றது குறைஞ்சுபோச்சு. அலுமினியப் பாத்திரம், எவர்சில்வர் பாத்திரங்கள் தான் சமைக்கிறாங்க. 


மண்பானையில சமைச்சாத்தான் உணவோட உண்மையான ருசி தெரியும். அதை சாப்பிட்டுப் பார்த்தவங்களுக்கு அதோட அருமை புரியும். மண் பாத்திரத்துல சமைக்கிற உணவு சீக்கிரமா கெட்டுப் போகாது. குறிப்பா மண் பானையில வைக்கிற மீன் குழம்புக்கு ஈடு இணை

கிடையாது. ஒரு வாரம்கூட கெட்டுப் போகாம இருக்கும். மத்த பாத்திரங்கள்ல வைக்குற உணவுப் பொருள்கள், வெயில்ல நீர்த்துப் போயிரும். ஆனா, மண்பானை யோட தன்மையால அது நீர்த்துப் போகாது.  


மண்பானையோட அருமையை உணர்ந்து, இன்னைக்கு நட்சத்திர ஹோட்டல்கள்கூட மண்பானைச் சமையல்ல அசத்துறாங்க. நகரங்கள்ல சில ஓட்டல்கள்ல, 'மண்பானை சமையல்னு' போர்டுவெச்சு மக்களை ஈர்க்குறாங்கஇப்படி ஒருபக்கம் மண்பானை மேல மக்களுக்குக் கவனம் திரும்பி இருக்கிறது வரவேற்கக்கூடியதுதான். அதேமாதிரி எல்லாரும் நம் முன்னோர்கள் அனுபவத்துல சொன்னதை உணரணும். அதுமட்டும் இல்லாம, மண்பானைத் தண்ணி குடிச்சா நோய் எதுவும் வராது; அதனால மண்பானையைப் பயன் படுத்துங்க. அதே போல, தை முதல் நாள்ல மண் பானையில பொங்கல் வெச்சு கொண்டாடுறது தான் நம்ம மரபு. அதை மறக்கக் கூடாது" ங்க...


மண்பானையில் சமைத்துச் சாப்பிடுவதால், உடலுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும்....???


``மண்பானையில் வைக்கும் பொங்கலின் ருசி அலாதியானது. ஆனால், இன்றைக்கு எவர்சில்வர் பாத்திரங்கள்லயும் குக்கர்லயும்தான் பொங்கல்வைக்கிறோம். எவர்சில்வர், நான் - ஸ்டிக் பாத்திரங்களில் செய்யக்கூடிய சமையல் உடலுக்குப் பாதிப்புகளை உண்டாக்கும்"  மண்பானையில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பல பல....


"சத்துகளுடன், நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கக்கூடியவை இயற்கை உணவுகள். அவற்றை முறையாகச் சமைத்து உண்ணும்போது அதன் முழுச்சத்தும் நம் உடலுக்குக் கிடைக்கும்.  மண்பானைச் சமையல் என்பது மரபு மட்டுமல்ல, உணவின் தன்மை மாறாமல், சுவையை அதிகரிக்கக்கூடியது. மண்பானைப் பாத்திரத்தில் சமைக்கப்படும் உணவு எளிதில் செரிமானாகும்.  இப்போது கிடைக்கும் பாத்திரத்தில் உலோகத்தன்மை இருப்பதால், உணவின் தன்மையை மாற்றி விடுகிறது. 


      பொதுவாக, உணவைச் சமைக்கும்போது, உணவில் உள்ள தாதுக்கள் உள்ளிட்ட முக்கியமான சத்துகள் ஆவியாகிவிடும். குறிப்பாக, பச்சைக் காய்கறிகளில் உள்ள குளோரோஃபில் (Chlorophyll) எளிதில் ஆவியாகிவிடும். ஆனால், மண்பானையில் சமைக்கும் போது அதிலுள்ள சத்துகள் வீணாகாமல் அப்படியே கிடைக்கும். 


      மண்பானையில் உள்ள நுண் துளைகளால் உணவில் வெப்பம் சீராகவும், சமநிலையிலும் ஊடுருவும்.  இதனால் மண் பானைகளில் சமைக்கும் உணவு ஆவியில் வேகவைத்த உணவைப் போன்ற தன்மையைப் பெறும். இது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. 

மண்பானைச் சமையலுக்கு அதிக எண்ணெய் தேவைப்படாது. அது உணவுக்குத் தேவையான எண்ணெயை மட்டுமே எடுத்துக்கொள்ளும். இதுவும் உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியக் காரணம்.


இன்றைக்கு நவீன வாழ்க்கை முறையில் சமைக்க ஒரு பாத்திரம், சூடாகப் பராமரிக்க ஹாட்பாக்ஸ், உணவு கெட்டுப்போகாமல் இருக்க  ஃபிரிட்ஜ் எனத் தனித் தனியாகப் பொருள்களைப் பயன்படுத்துகிறோம். ஆனால், இவை எதுவும் இல்லாத காலத்திலும் மண்பானையே ஓர் இயற்கை ரெப்ஃரிஜி ரேட்டராக இருந்தது. இதில் உள்ள சிறிய நுண் துளைகள் வழியே அதன் உள்ளே இருக்கும் நீர் தொடர்ந்து ஆவியாகிக் கொண்டேயிருக்கும். பானையின் வெப்பமும், பானையின் உள்ளே இருக்கும் நீரில் உள்ள வெப்பமும் தொடர்ந்து ஆவியாதல் மூலம் வெளி யேற்றப் படுவதால் உள்ளே இருக்கும் நீர் குளிர்ந்த நிலையிலேயே இருக்கும். எனவே, ஃப்ரிட்ஜில் இருக்கும் நீர் பனிக்கட்டி யாவது போன்று, பானையில் இருக்கும் நீர் எந்த நிலைக்கும் மாறாது. 


  அதேபோல, மண்பானை யில் சமைத்த உணவை அடிக்கடி சூடுபடுத்தத் தேவை யில்லை. மற்ற பாத்திரங்களைவிட சீரான வெப்பநிலையை அதிகநேரம் பராமரிக்கும். அதனால், மண்பானையில் சமைக்கும் உணவு நீண்ட நேரம் கெடாமல் இருக்கும். 


மேலும், மண்பானை நன்மை செய்யும் பாக்டீரியாக்களை அதிகரிக்கும். இதனால் தான் அந்தக் காலங்களில் மீன் குழம்பை ஒரு வாரம் வரைகூட வைத்திருந்து சாப்பிடு வதால் எந்தப் பிரச்னையும் ஏற்பட்ட தில்லை.  


மண்பாண்டங்கள் உணவில் உள்ள அமிலத்தன்மையைச் சமன்படுத்தும் தன்மை கொண்டவை. நல்ல பசியையும் நல்ல தூக்கத் தையும் கொடுக்கும். மலச்சிக்கல் வராமல் தடுக்க உதவும். குழந்தை இன்மைப் பிரச்னை ஏற்படாமல் தடுக்கும். மண்பானை உணவு ரத்தக் குழாய் களைச் சீராக்க உதவும். உடல் சூட்டைத் தணிக்கும். இப்படி மண் பானையின் மகத்துவத்தை அடுக்கிக் கொண்டே போகலாம்.


   அறுசுவையான உணவும் ஆரோக்கிய மான உணவும் கிடைக்க வேண்டும்என்றால் மண்பானையில் சமைத்துச் சாப்பிடுவதே ஆகச்சிறந்தது* 🙏👌🌾

No Oil, No Boil... Healthy ayul... புற்றுநோயை குணமாக்கும்.... சிறுநீரக மண்டலத்தை சீரமைக்கும் கத்திரிக்காய் மில்க் சேக்

 No Oil, No Boil...  Healthy ayul...🌿🙏 


புற்றுநோயைகுணமாக்கும்.... சிறுநீரகமண்டலத்தை சீரமைக்கும் கத்திரிக்காய்மில்க்சேக்...🍆🍆🍅


தேவையானபொருட்கள்


நாட்டுகத்திரிக்காய் - 4

தக்காளி - 2

தேங்காய்ப்பால் - 50 மில்லி,

வெல்லம் பொடித்தது - 1 டேபிள் ஸ்பூன் அல்லது கரும்புஜுஸ் - 1/4 கப்,

ஏலக்காய் 4


செய்முறை 


கத்திரிக்காய், தக்காளி

ஆகியவைகளை துண்டுகளாக 

வெட்டிக் கொள்ளவும். மிக்சியில்  போட்டு ஒரு சுற்று சுற்றவும்.பின் அதில் வெல்லம், தேங்காய்ப்பால் சேர்த்து அடிக்கவும்.


பிறகு அதில் தண்ணீர் சேர்த்து அடித்து நட்ஸ் தூவி அலங்கரித்து பரிமாறவும்.


தேவையெனில் முந்திரி, பாதாம் பொடியாக நறுக்கி தூவியும் பரிமாறலாம்.


ருதம்பராயோகா கோவை.

​ரோஜா குல்கந்து செய்முறை how to make gulkand at home

 நல்ல தரமான சுவையான "ரோஜா குல்கந்து" வீட்டிலேயே  தயார் செய்வது எப்படி. .?

🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹

குல்கந்து செய்முறை



🌸நல்ல, தரமான, சிவந்த நிறமுடைய நன்கு பூத்த பூக்களிலிருந்து இதழ்களை ஆய்ந்து கொள்ளவும்.


🌸 இதழ்களை நன்கு கழுவி, சுத்தம் செய்து, ஈரம் போக துடைத்து / நிழலில் உலர்த்தி வைத்துக் கொள்ளவும். சேகரித்த இதழ்களின் எடையைப் போல, மூன்று மடங்கு பனங்கற்கண்டை எடுத்துக் கொள்ளவும். 


🌸ரோஜா இதழ்களையும், பனங்கற்கண்டையும் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து இடித்துக் கொள்ளவும். ஜாம் போல வரும் வரை இடிக்கவும். 


🌸இதனை ஒரு வாயகன்ற கண்ணாடி ஜாடியில் போடவும். இந்த ஜாம் அளவுக்கு மூன்றில் ஒரு பங்கு சுத்தமான தேனை விட்டு நன்றாக கிளறவும்.


🌸 இத்துடன் வெள்ளரி விதை, கசகசா சேர்க்கவும். குல்கந்து தயார். ஒவ்வொரு தடவையும் உபயோகிக்கு முன் நன்றாக கிளறவும்.


🌸ஆண்மையை பெருக்கும், உடல்வெப்பத்தை குறைக்கும், இதயத்தை வலுப்படுத்தும், பெண்கள் நோய்களை குணமாக்கும், உடல்வளர்ச்சியை மேம்படுத்தும் நறுமணமும் உடல் நலமும் தரும் குல்கந்து ரெடிங்க....


🍁ருதம்பரா யோகா கோவை.

வெந்தய நீரை வடிகட்டி இப்படி குடித்தால் கிடைக்கும் நன்மைகள் Fenugreek water benefits

 வெந்தய நீரை வடிகட்டி இப்படி குடித்தால் கிடைக்கும் நன்மைகள்..



ஒவ்வொருவரது வீட்டின் சமையலறையிலும் பொதுவாக காணப்படும் ஒரு பொருள் தான் வெந்தயம். இந்த வெந்தயம் உணவின் சுவையை அதிகரிக்க மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்தையும் தான் மேம்படுத்த உதவுகிறது. பலருக்கும் வெந்தயம் உடல் சூட்டை தணிக்கும் என்று தான் தெரியும். ஆனால் அதையும் தாண்டி, வெந்தயத்தில் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளன.


அதற்கு வெந்தயத்தை சமையலில் சேர்ப்பதோடு மட்டுமின்றி, அதைக் கொண்டு டீ தயாரித்துக் குடிக்கவும் செய்யலாம். உங்களுக்கு வெந்தய டீ எப்படி தயாரிப்பது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். மேலும் வெந்தய டீயைக் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து உங்களது அன்றாட உணவில் அதை சேர்த்து நன்மைப் பெறுங்கள்.


வெந்தய டீ தயாரிப்பது எப்படி?


ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதில் வெந்தயத்தை சிறிது சேர்த்து மூடி வைத்து 3 நிமிடம் கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.

பின் அதை வடிகட்டி, தேன் சேர்த்து கலந்து, சூடாகவோ அல்லது குளிர்ச்சியான நிலையிலோ குடியுங்கள்.

இப்போது வெந்தய டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளைக் காண்போம்.


நன்மை


குடல் மற்றும் சிறுநீரகங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டுமா? அப்படியெனில் தினமும் ஒரு டம்ளர் வெந்தய டீ குடியுங்கள். இது கழிவுகளை உடலில் இருந்து எளிதில் வெளியேற்றும்.


உலகில் இதய நோயால் அவஸ்தைப்படுவோரின் எண்ணிக்கை அதிகம். இத்தகைய இதய நோயின் தாக்கத்தைத் தடுக்க வேண்டுமெனில், தினமும் ஒரு கப் வெந்தய டீ குடியுங்கள்.


வைட்டமின் பி1 குறைபாட்டினால் ஏற்படும் பெரி பெரி நோயின் தாக்கத்தை வெந்தய டீ குறைக்க உதவும். ஆகவே அன்றாட டயட்டில் வெந்தய டீயை தவறாமல் சேர்த்து வாருங்கள்.


பிரசவத்தை நெருங்கும் கர்ப்பிணிப் பெண்கள் வெந்தய டீயைக் குடித்தால், அது பிரசவ வலியைத் தூண்டுவதோடு, எளிதில் பிரசவம் நடக்கவும் உதவி புரியும்.


ஆண்கள் மற்றும் பெண்கள் தினமும் வெந்தய டீ குடிப்பதன் மூலும், அவர்களின் பாலியல் வாழ்க்கை சிறக்கும். ஏனெனில் இந்த டீ உடலின் பாலுணர்ச்சியைத் தூண்டி, உறவில் சிறப்பாக ஈடுபட உதவும்.


வெந்தய டீயில் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. இதை தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தொடர்ந்து குடித்து வந்தால், தாய்ப்பால் சுரப்பு அதிகரிப்பதோடு, தாய்ப்பாலில் சத்துக்களும் அதிகரிக்கும்.


வெந்தய டீயில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் ஏராளமாக அடங்கியுள்ளது. ஆகவே மூட்டு வலி, முழங்கால் வலி உள்ளவர்கள், வெந்தய டீயைக் குடித்து வந்தால், இந்த பிரச்சனையில் இருந்து முழுவதுமாக தடுக்கலாம்.


வெந்தயம் மிகச்சிறந்த சளி கரைப்பான். ஆகவே உங்களுக்கு சைனஸ் மற்றும் சளித் தொல்லை அதிகம் இருந்தால், தினமும் ஒரு டம்ளர் வெந்தய டீயைக் குடியுங்கள். இதனால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.


வெந்தயம் சிறுநீர் பெருக்கியாக செயல்படும். ஒருவர் தினமும் பலமுறை சிறுநீர் கழிப்பதன் மூலம், இரத்தத்தில் உள்ள கசடுகள் வெளியேறும். வெந்தய டீயைக் குடித்தால், அடிக்கடி சிறுநீரைக் கழிக்கலாம்.


காய்ச்சல் அடிக்கும் போது, கண்ட மாத்திரைகளைப் போடாமல், ஒரு டம்ளர் வெந்தய டீயைக் குடியுங்கள். இதனால் காய்ச்சல் உடனே குறைந்துவிடும்.


வெந்தய டீ பொடுகைப் போக்கும். அதற்கு தலைக்கு ஷாம்பு போட்டு முடியை அலசிய பின், இந்த வெந்தய டீயால் தலைமுடியை அலசி, பின் கண்டிஷனர் பயன்படுத்துங்கள். இப்படி செய்வதால் பொடுகு போய்விடும்.


வெந்தய டீ தொண்டைப் புண்ணை குணப்படுத்தும். அதற்கு வெந்தய டீயை சூடாக குடிக்க வேண்டும்.


வாய் புண் அல்லது வாய் அல்சர் உள்ளதா? அப்படியெனில் தினமும் வெந்தய டீயால் வாயைக் கொப்பளியுங்கள். இப்படி தினமும் வாய் புண் போகும் வரை செய்யுங்கள்.


வெந்தய டீ வாய் துர்நாற்ற பிரச்சனையில் இருந்து விடுவிக்கும். அதிலும் வெந்தய டீயை குளிக்கும் நீரில் கலந்து குளித்தால், உடல் துர்நாற்ற பிரச்சனை நீங்கும்.


மாதவிடாய் காலத்தில் பெண்கள் வயிற்று வலி மற்றும் பிடிப்புக்களை சந்திப்பார்கள். இந்த சமயத்தில் வெந்தய டீயைக் குடித்தால், வலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.


பூப்படையும் வயதில் உள்ள சிறுமிகள் வெந்தய டீயைக் குடிப்பது நல்லது. இதனால் மார்பகங்களின் வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கும். ஏனெனில் இந்த டீ நீர் தேக்கத்தைத் தூண்டுவதோடு, வளர்ச்சி ஹார்மோன்களையும் ஊக்குவிக்கும்.


ஒருவர் தினமும் வெந்தய டீயை குடித்து வந்தால், தற்போது நிறைய பேர் சந்திக்கும் சர்க்கரை நோய் மற்றும் டைப்-2 சர்க்கரை நோயின் தாக்கத்தைத் தடுக்கலாம்.


கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளதா? அதைத் தவிர்க்க தினமும் வெந்தய டீ குடியுங்கள். இதனால் உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை குறைவதோடு, இரத்த சர்க்கரை அளவும் குறையும்.


வெந்தய டீ மிகச்சிறந்த மலமிளக்கியாக செயல்படும். ஆகவே மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாமல் இருக்க நினைப்பவர்கள், தினமும் ஒரு டம்ளர் வெந்தய டீயைக் குடியுங்கள்.


வெந்தய டீ உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை கரைப்பதோடு, அடிக்கடி பசி ஏற்படுவதையும் தடுத்து, உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும்

உணவே மருந்து. அகத்தியர்,தேரையர் சித்தர் சொல்லும் சுண்டைக்காய் சாப்பிடுங்க !

 அகத்தியர்,தேரையர் சித்தர் சொல்லும் சுண்டைக்காய் சாப்பிடுங்க !



கொரனாவை என்ன ! அதன் மூலத்தை கூட விரட்ட நோய் எதிர்ப்பு சக்தி மூலமாக விரட்டலாம் எனும் அகத்தியர் பெருமானின் ஆலோசனையை கடைபிடிப்போம்.


கிருமிகளின் எதிர்ப்பு மருந்தாக சுண்டைக்காய் இருக்கிறது என்கிறார் அகத்தியர் பெருமான் தனது வைத்திய  நூலில் ....


நெஞ்சின் கபம் போம்

நிறை இருமி நோயும் போம்

விஞ்சு வாதத்தின் விளைவு போம் வஞ்சியரே வாய் கசபிக்கும் மாமலையில் விளையும் சுண்டைக் காயை சுவைப்பதர்கே*

- அகத்தியர்


நெஞ்சில் எந்த கபச் சளியும் நீக்கும். எந்த கிருமியானாலும் வரும் நோய்களும் போய் விடும். வாதசுரம் வலியும் போக்கும்.


அப்புறம் என்ன இந்த அறிகுறி அனைத்தும் கொண்ட கொரோனா வைரஸ் மட்டும் அகத்திய பெருமான் சொல்லும் சுண்டைக்காயிடம்  தப்பி விடுமா என்ன !


சுண்டைக்காய் சிறிது என உதாசீனம் செய்து விடாதீர்கள்.


மூர்த்தி சிறிது கீர்த்தி பெரிது என்பது நம் நாட்டின் சுண்டைக்காய்க்கும் பொருந்தும்.


உணவே மருந்து.🌿🙏


சுண்டைகாய் வத்தலை பொடித்து கசாயம் செய்யலாம்....


சுண்டைக்காய் துவையல், குழம்பு, தொக்கு, சட்னி என ஏதாவது ஒரு முறையில் பயன்படுத்தி பலன்பெறுங்கள். 


தவறாமல் பகிர்வோம்.👏🌼🌿🙏

சித்தர்கள் கோழையை எமன் என்று கூறுகிறார்கள்!!! வள்ளலார் அருளிய காயகல்பம் மூலிகை பொடி!

 கொல்லும் பிடரிதனை கோழையாமே....

சித்தர்கள் கோழையை எமன் என்று கூறுகிறார்கள்....



நுரையீரல் மட்டுமல்லாது உடலில் தேங்கும் கோழையை விரட்டும்....

வள்ளலார் அருளிய காயகல்பம் மூலிகை பொடி!🌿🙏

🌿🍁முக்கூட்டு சூரணம்


காயகல்பம் என்பது நோயற்ற வாழ்வு வாழ சித்தர்கள் நமக்கு அளித்த மருந்துகளாகும்.


சாதாரணமாக காயகல்பம் தயார் செய்ய மிகுந்த செலவாகும். ஆனால் வள்ளலார் மிகக்குறைந்த செலவில் மனித குலம் வாழ காயகல்பம் அருளியுள்ளார்.


வெள்ளை கரிசலாங்கண்ணி 200 கிராம், தூதுவளை 50 கிராம்,முசுமுசுக்கை 50 கிராம்,சீரகம் 50 கிராம் ஆகியவற்றை பொடியாக

மூலிகை கடைகள், காதி கிராப்டில் வாங்கி (சீரகம் மட்டும் தனியாக வாங்கி பொடித்துக் கொள்ளவும்).


இந்த பொடிகளையெல்லாம் ஒன்றாகக் கலந்து கொள்ளவும். தினமும் காலையில் பல் துலக்கியவுடன் ஒரு தம்ளர் பாலில்

மேற்கண்ட பொடியை ஒரு டேபிள் ஸ்பூன் கலந்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைத்து சர்க்கரை கலந்து லேசான சூட்டில் சிறிது சிறிதாக சுவைத்து சாப்பிட வேண்டும்.


இதனை சாப்பிட ஆரம்பித்த மறுநாளில் இருந்து மலம் கருப்பு நிறத்தில் வரும். சிறுகுடல், பெருங்குடலில் இருக்கும் பழைய மலங்கள், சளிபடலங்கள் வெளித் தள்ளப்படும். சிறுகுடல் உறிஞ்சிகள் (VILLUS) தூய்மைப் படுத்தப்பட்டு சாப்பிடும் அனைத்தும் முழுமையாக இரத்தத்தில் சேர்க்கப்படும். 99 சதவீதம் பெரும் நோய்கள் உடலை தாக்காமல் இருக்கும். கேன்சர், சிறுநீரக நோய்கள், இதய நோய்கள் வராது.அனைத்து நோய்களும் குணமாகும்.


 வள்ளலார் அருளிய எளிய முறை காயகற்ப சூரணம் இது. பத்தியம் எதுவுமில்லை.சர்வரோக நிவாரணியாக செயல்படுகிறது. காலையில் அருந்துவதற்கு ஏற்ற மூலிகைபானமாகவும் விளங்குகிறது.


இந்த மருந்து சர்வரோக நிவாரணியாகும்.இதனைத் தொடர்ந்து வருடக் கணக்கில் சாப்பிட்டு வர மனிதவுடலை வாட்டும் அனைத்து நோய்களும் குணமாகும். இந்த மருந்து என்னிடம் வரும் அனைத்து நோயாளிகளுக்கும் கட்டாயமாக சாப்பிடச் சொல்வேன். சர்வ நிச்சயமாக பலன் பெறுவீர்கள். இதனைப் படிக்கும் அனைத்து நண்பர்களும் இந்த மருந்தினை அவசியம் சாப்பிட வேண்டும். நோயற்ற வாழ்வு வாழ வேண்டும்.


🌿ருதம்பரா பவுண்டேஷன் கோவை.