இயற்கை வழி வீட்டு தோட்டம் பயிற்சி - 3 தேதி: 19/06/2021 Topic: மண் வளம் அறிவோம் (Soil Science)

 இயற்கை வழி வீட்டு தோட்டம் பயிற்சி - 3☘️🍀🌿🌱🪴🎋🍃🌾

தேதி:  19/06/2021  

நேரம்:3:30 PM to 5:00 PM

Topic: மண் வளம் அறிவோம் (Soil Science)

நடத்துபவர்: திரு. பலராமன் மானேரி

இயற்கைவழி வீட்டுதோட்டம் /Seed Island விதை தீவு

பயிற்சி ஒருங்கிணைப்பாளர்கள்

Mrs. Ajitha Veerapandian

Mrs. Akila Kunalan

Mrs. Priya Rajnarayanan 

ஒவ்வொரு வாரமும் நடைபெறும். அனைவரும் பங்கேற்று வீட்டுக்கு ஒரு விவசாயி ஆகலாம்

குறிப்பு: பயிற்சி சரியாக 3.30 PM ஆரம்பித்து  5 PM முடிந்து விடும்.

SeedsIsland Team is inviting you to a scheduled meeting.



https://youtu.be/XSWHLCCtbpI


Or


Join Zoom Meeting

https://us02web.zoom.us/j/9470331037?pwd=aDR0bi9NeFN1ME9sZ1VkQ2dqL0JHdz09


Meeting ID: 947 033 1037

Passcode: nF5j3H

Or

https://www.facebook.com/seedisland.seedisland/

சர்வ சுகந்தி மரம் Pimenta dioica | மருத்துவ பயன்கள் நிறைந்த சர்வ சுகந்தி மரம் | Allspice: Health Benefits | What are the health benefits of pimento?

சர்வ சுகந்தி மரம்  Pimenta dioica

    மேற்கிந்திய தீவுகள், (ஜமைக்கா)    உன் தாயகம்!.     உணவில் நறுமணம் கூட்டும் உன்னத இலை மரம் நீ! 59.அடி வரை வளரும் அழகு மரம் நீ!   குளிர் பிரதேசங்கள் உன் கூடாரம்! சோம்பு, ஏலக்காய்,கிராம்பு, பட்டை இவைகளின் நறுமணங்களை நீ தருவதால் ‘ஆல் ஸ்பைஸ்’ மரமானாய்!.

    அமெரிக்க,ஐரோப்பிய நாடுகள் எனப் பல்வகை நாடுகளில் சமையலில் பயன்படும் இலை மரம் நீ!  ஆல் மசாலா, பலமசாலா,ஜமைக்காய் பெப்பர்  எனப்பல்வகைப்பெயர்களில் விளங்கும் நல்வகை மரம் நீ!ஜீரணசக்தி,

    வயிற்றுவலி,பல்வலி, மலச்சிக்கல்,தோல் வியாதி,வாய் துர்நாற்றம், வாயுத்தொல்லை,முடி வளர்ச்சி, உடல் ஆரோக்கியம்,எலும்பு முறிவு,ரத்த சர்க்கரை அளவு குறைப்பு,நீரிழிவு, இதய நலம்,வளர்சிதை மாற்றம் ஆகியவற்றிற்கு ஏற்ற அற்புத நிவாரணி நீ!    பிரியாணி சாப்பாட்டுக்குப் பெருமை சேர்க்கும் நறுமண நல்மரமே!

    தென்னந்தோப்புகளில் வளர்க்கப்படும் ஊடுபயிரே! ஐந்து ஆண்டுகளில் பலன் கொடுக்கும் வேளாண் மரமே!   விதைகள் &பதியன் முறை மூலம் இனப்பெருக்கம் செய்யும் இனிய மரமே!மிளகு வடிவ கனி கொடுக்கும் இலை மரமே!பச்சைநிற காய் கொடுக்கும் பசுமை மரமே!வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கப்படும் நாட்டு மரமே!நறுமணம் மிகுந்த கற்பகமே!இரும்புசத்து,பொட்டாசியம்,தாமிர சத்து மிகுந்த மருந்து மரமே!

மாடித்தோட்டத்தில் வைக்கும் பைகளின் அளவு என்னென்ன செடிகள் வைக்கலாம்? Growbag sizes and selected plants for that growbags

12இஞ்ச் × 12இஞ்ச்

 (ஒரு அடிக்கு ஒரு அடி )

இந்த அளவுள்ள பையில் முள்ளங்கி, பீட்ரூட், கேரட், தக்காளி, மணத்தக்காளி கீரை, புளிச்சைக் கீரை, இஞ்சி, மா இஞ்சி, மஞ்சள், உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ், காலிஃப்ளவர் போன்ற செடிகளும் கற்பூரவள்ளி எனும் ஓமவல்லி, துளசி, பிரண்டை போன்றவற்றையும் வைக்கலாம். 


12 இஞ்ச் × 15இஞ்ச்

 ஒரு அடிக்கு ஒன்னேகால் அடி

தக்காளி, வெண்டை, கத்தரி, மிளகாய், கொத்தவரை போன்றவை ஒரு செடி மட்டும் வைக்கலாம். திருநீற்றுப்பச்சை, தூதுவளை போன்ற மூலிகைகள் வைக்கலாம். 


 

15 இஞ்ச் ×15 இஞ்ச்

 ஒன்னேகால் அடிக்கு ஒன்னேகால் அடி


 இதில் கத்தரி, வெண்டை, மிளகாய், கொத்தவரை, குடைமிளகாய் போன்ற   அதிகப்படியான காய்கள் காய்க்கும் செடிகளை வைக்கலாம். இரண்டு செடிகள் வரை வைக்கலாம். சேனைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, 

சர்க்கரைவள்ளி கிழங்கு

 போன்ற கிழங்கு வகைகளையும் இதில் வைக்கலாம்.

தூதுவளை, பிரண்டை போன்ற மூலிகைகள் இதில் தாராளமாக வளரும். 


15 இஞ்ச் × 9 இஞ்ச்

 கீரை பை கீரைகளில் சிறுகீரை, அரைக்கீரை, முளைக்கீரை, தண்டுக்கீரை, புதினா, வெந்தயம், கொத்தமல்லி, வெங்காயம் போன்ற அனைத்து சிறு வேர் அமைப்பு உள்ள கீரை வகைகளை வைக்கலாம்.

குறிப்பாக வெங்காயம், பூண்டு போன்றவைகளை  இதில் நன்றாக வளர்க்கலாம்.


18 இஞ்ச் ×18 இஞ்ச் 

( ஒன்றரை அடிக்கு ஒன்றரை அடி )


இதில் பாகற்காய், புடலங்காய், பீர்க்கங்காய், சுரைக்காய், சௌசௌ, அவரைக்காய் போன்ற கொடிக்காய் வகைகளையும், ரோஜா செடிகள்,  செம்பருத்தி போன்ற நீண்ட நாட்கள் வாழக்கூடிய பூ வகைகளையும் வைக்கலாம் , குண்டுமல்லி, முல்லை, போன்ற வகைகளை கொடியாகப் படர விடாமல் குத்துச் செடிகளாக கவாத்து செய்து வளர்க்கலாம். அகத்திக்கீரை, தவசிக்கீரை இரண்டுக்கும் இந்த அளவு மிகப் பொருத்தமானது.


24 இஞ்ச் × 24 இஞ்ச்


 இரண்டு அடிக்கு இரண்டு அடி


இதில் கொய்யா, மாதுளை, எலுமிச்சை, சப்போட்டா, வாழை, கறிவேப்பிலை, முருங்கை  போன்ற மர வகைகளும் மற்றும் பூச்செடிகளில் மல்லிகை வகைகளையும்,  திராட்சை கொடியையும் வளர்க்கலாம்...

குறை சொல்வதையும் எவ்வளவு அழகாக கேட்பவர் மனம் நோகாமல் சொல்கிறார் பாருங்கள் giving feedback without hurting

 நண்பர் ஒருவர்  தனது இன்னொரு நண்பரை விருந்துக்கு அழைத்து தடபுடலாக விருந்து அளித்தார்.

விருந்து முடிந்ததும் தாம்பூலமும் அளித்தார்.


பின்  விருந்து உண்டவரிடம்   "தளிகை( சமையல் ) எப்படி இருந்தது "

என்று கேட்டார்.


அதற்கு  அவர்  சிரித்துக் கொண்டே


" கண்ணமுது  கோவில் ,

கறியமுது  விண்ணகர் ,

அன்னமுது  வில்லிப் புத்தூர் 

ஆனதே ,

எண்ணும் சாற்றமுது  மல்லை ,

குழம்புமது  குருகூர் ,

பருப்பதனில்  திருமலையே  , பார் "


என்றார்.


உடனே நமது நண்பர் 

 "ஆஹா நம் வீட்டுச் சமையல் திவ்ய தேசங்களுக்கு ஒப்பாக அருமையாக

இருக்கிறது என்று கூறி விட்டாரே  "என்று

மிக மகிழ்ச்சி அடைந்தார்.


இருந்தாலும் அந்தப் பாடலின் உண்மைப் பொருள் அறிய விரும்பிய அவர்

இன்னொரு வைணவ நண்பரிடம் கேட்டார்.


இதோ அந்த வைணவ நண்பர் கூறிய

பொருள்.


கண்ணமுது என்றால் பாயசம்.

ஸ்ரீரங்கம்  கோவிலில்  பாயசம் மண்சட்டியில்தான் வைப்பார்களாம்.

அதனால்  அடியில் சற்று அடிப் பிடித்து

இருக்குமாம். அது போல் நண்பர் வீட்டுப் பாயசமும் சற்று அடிப் பிடித்து  

இருந்ததாம்.


கறியமுது  என்றால் காய்கறிகள்.

விண்ணகரில் இருப்பவன்  உப்பிலியப்பன். அவனுக்கு நைவேத்தியம் எல்லாமே  உப்பில்லாப் பண்டம்தான்.

அதாவது கறியமுதில் உப்பில்லை

என்பதே கறியமுது விண்ணகர்.


அன்னமது வில்லிப் புத்தூர்.

ஸ்ரீ வில்லிப் புத்தூர் கோவிலில் அன்னம் குழைந்திருக்குமாம்.

அது போல் நண்பர் வீட்டு சாதம் குழைந்துள்ளது.


சாற்றமுது மல்லை.

மல்லை  என்றால் கடல்.

கடல் நீர் உப்பு.

இங்கும்  சாற்றமுது ( ரசம் .நீராகத்தானே இருக்கும் ).அதில்  உப்பு அதிகம்.


குழம்பது குருகூர்.

குருகூர்  என்றாலே  புளி.

அதாவது குழம்பில் புளி அதிகம்.


பருப்பதில் திருமலை.

திருமலை எங்கும் கல்தான்.

இங்கும் பருப்பு முழுதும் கல்.


பாடல்  எப்படி ?

குறை சொல்வதையும் எவ்வளவு அழகாக

கேட்பவர் மனம் நோகாமல் சொல்கிறார் பாருங்கள்.இதுதான் அக்கால மரபு.

இதைப் படித்ததும் எனக்கு மிகப் பிடித்தது.இதோ பகிர்ந்தேன் உங்களிடம்.

மழை பற்றிய சகுனங்கள் When rain will come? What happens before rain?

 மழை பற்றிய சகுனங்கள்...

----------------------------------------

கீழ்கண்ட சகுனங்கள் தோன்றினால் மழை வரும்.


1. தும்பி பறந்தால் தூரத்தில் மழை

2. தட்டான் தாழப் பறந்தால் மழை

3. அந்தி ஈசல் அடை மழை

4. எறும்பு முட்டை கொண்டு திட்டை ஏறினால் மழை.

5. தவளை கத்தினால் மழை

6. மாடு மயங்கி வானம் பார்த்தால் மழை

7. கொக்கு மேடேறினால் மழை

8. பகற்பொழுதில் சேவல் கூவி வானத்தைப் பார்த்தால் மழை

9. கழுதை காதை உயர்த்தினால் மழை

10. ஈசல் பறந்தால் மழை

11. புற்றிலே ஈசல் பறந்தாலும், மண்ணிலே கரையான் கூடினாலும் மழை

12. பாம்புகள் மரத்தில் ஏறினாலோ அல்லது திறந்த வெளியில் புணர்ச்சியில் ஈடுபட்டாலோ மழை 

13. பசு மாடுகள் கன்றைத் தேடி வீட்டிற்கு ஓடினால் மழை.

14. பூனைகள் நிலத்தை பிராண்டினால் மழை

15. குழந்தைகள் அணைக்கட்டி விளையாடினால் மழை 

16. மலைகள் நீல நிறமாக காட்சியளித்தால் மழை

17. குகைகள் பனிமூட்டத்தால் மறைக்கப்பட்டிருந்தால் மழை

18. ஓணான்கள் வானத்தைப் பார்த்தால், மரத்தில் ஏறி விளையாடினால் மழை

19. பூனை, எலி, பாம்பு முதலிய பிராணிகள் காரணமின்று அங்குமிங்கும் ஓடினால் மழை.

20. மயில்கள் நடனமாடினால் மழை

21. பசுக்கள் சூரியனையும் ,வானத்தையும் பார்த்தால் மழை

22. பச்சோந்திகள் மரத்தின் மீது அமர்ந்து தன் நிறத்தை மாற்றிக்கொண்டால் மழை

23. பசுக்கள் நிழலிடங்களை விட்டு நகர மறுத்தால் மழை

24. நாய்கள் வீட்டிற்கு வெளியே செல்ல மறுத்தால், வானத்தைப் பார்த்து குரைத்தால் மழை

25. சிட்டுக்குருவிகள் மண்ணில் புரண்டு விளையாடினால் மழை

26. மீன்கள் நீரில் துள்ளி விளையாடினால் மழை.

27. பறவைகள், மிருகங்கள் நுனிப்புல் உண்பதைக் கண்டால் மழை.

28. நீரின் சுவை மாறுதல், உப்பு நீர்த்துப் போதல், மோர் புளித்து போதல் நடந்தால் மழை.

29. இரும்பு பொருட்களிலிருந்து மாமிச வாடை வந்தால் மழை

30. சந்திரனை சுற்றி சிவப்பு நிற வளையம் காணப்பட்டால் அல்லது சந்திரனின் நிறம் கோழியின் கண் போன்று காணப்பட்டால் மழை.

31. வட கிழக்கில் மின்னல் தோன்றினால் மழை

32. மேகங்களால் மறைக்கப்பட்ட சந்திரனிலிருந்து பிரதி சந்திரன் தோன்றினால் மழை

33. இரவு நேரங்களில் இடி முழங்கினால், பகல் நேரத்தில் மின்னல் அடித்தால், கிழக்கு திசையிலிருந்து குளிர்ந்த காற்று வீசினால் மழை.

நம் இயற்கையை கண்டறிந்த இயற்கை ஞானிகளை போற்றுவோம்.

இது ஆத்மார்ந்த மூத்தோரின் அனுபவ அறிவுரை

 இதை படிக்கும் முன் உங்கள் மனதை ஒரு நிலைப்படுத்திய பின்னர் படியுங்கள். அப்போது தான் ஒரு தெளிவு உங்களுக்குள் பிறக்கலாம்...


உன்னை வாழ்த்த மனம் இல்லாதவர்கள் இருப்பார்கள். அவர்களைப் பற்றி கவலைப்படாதே.....


நீ எதை செய்தாலும் அதில் ஒரு குறையை கண்டுபிடிக்கக்கூடிய மனிதர்களும் இருந்து கொண்டுதான் இருப்பார்கள். 

     அதையும் பெரிது பண்ணாதே......


உன் லட்சியம் எதுவோ அதை நோக்கி பயணம் போ.....


ஒன்றை மட்டும் தெரிந்து கொள்....

         ஒவ்வொரு மனிதனும்

         தனித்தனி ஜென்மங்கள்.

         தனித்தனி பிறவிகள்

         தனித்தனி ஆன்மாக்கள்.....


அவர்களுக்கென்று தனித்தனி ஆசாபாசங்கள் இருக்கும். குணங்களும் இருக்கும். அதன் வழியில் தான் அவர்களின் பயணமும் இருக்கும். அவர்களை ஒழுங்கு படுத்துகிறேன் என்று வேதனைகளை சுமந்து கொள்ளாதே. அவர்கள் போகும் வரை போகட்டும். போய் ஒரு அனுபவத்தை பெற்றபின் திரும்பி வருவார்கள்.....


அதுவரை நீ பொறுமையாக இருக்க வேண்டும். அவர்கள் போன பாதை நல்லதா? கெட்டதா? என்பதை அவர்களாக உணர்ந்தால்தான் அவர்களுக்கு ஒரு உண்மை தெரியும். அந்த உண்மையை நீ முன்கூட்டியே சொன்னால் உன்னை அவர்களுக்கு பிடிக்காது......


இதுதான் வாழ்க்கையின் தத்துவ உண்மை.....


அவர்களது பூர்வ புண்ணியத்தின் அடிப்படையில்தான் அவர்களின் குணங்களும் செயல்களும் இருக்கும்....


அது,

உடன் பிறந்தவர்களாக இருந்தாலும், 

நண்பர்களாக இருந்தாலும், 

கணவன், மனைவியாக இருந்தாலும், 

பெற்ற குழந்தைகளாக இருந்தாலும், 

பேரன் பேத்திகளாக இருந்தாலும், 

எந்த உறவுகளாக இருந்தாலும், 

                       அவர்களது பிறவி குணம் ஒரு போதும் மாறாது.......


எதைச் செய்ய வந்தார்களோ அதை செய்வதுதானே அவர்களின் விதி.  இதை நீ மாற்றி அமைக்க முடியுமா...?


ஒதுங்கி நின்று வேடிக்கை பார்!....

பந்த பாசத்தில் உள்ளே விழுந்து அறிவுரை சொல்லுகிறேன் என்று கெட்ட பெயரை சம்பாதித்துக் கொண்டிருக்காதே.....


அவர்களுக்கு அனுபவம் தான் குரு.....


அந்த அனுபவம் ஏற்பட்ட பிறகு தன்னை மாற்றிக் கொள்வதற்கு அவர்களுக்கு விதி இருந்தால் தன்னை திருத்திக் கொள்வார்கள். அதுவரை நீ பொறுமையாக இரு........


செயற்கையாக ஒரு குணத்தை  உருவாக்கி உன்னிடம் அன்பை காட்டினாலும்,

        தான் யார்? தன் குணம் என்ன?

என்பதை ஒரு நாள் வெளிப்படுத்தி விடுவார்கள். எதையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தோடு இருந்து கொள்ள பழகிக் கொள்....


நாம் வந்து போகும் உலகத்தில் பிறந்திருக்கிறோம். அவரவர்களுக்கு என்ன வேஷம் கொடுக்கப்பட்டிருக்கிறதோ அதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம். அதைத் தவிர நாம் வேறு எதையும் செய்து காட்ட முடியாது..... 


எல்லையில்லாத அன்பை வைத்திருந்தேன் என்னை ஏமாற்றி விட்டார்கள் என்று புலம்பிக் கொண்டு இருக்காதே. கடலுக்கும் ஒரு எல்லை வைத்திருக்கிறான் கடவுள்.

அதையும் மீறி சிலவேளைகளில் இறைவன் வகுத்த எல்லையை கடல் தாண்டி விடுகிறது. அது போல் இயற்கையின் சுபாவங்களைப் போல் மனித இயற்கை சுபாவங்கள் சில நேரங்களில் தங்களை வெளிப்படுத்தி விடும்.......


நீ உன்னை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறாயோ அப்படி வைத்துக் கொண்டு வாழப்பழகிக் கொள். அதில் நன்மை வந்தாலும், தீமை வந்தாலும், உனக்கும் ஒரு அனுபவம் கிடைக்கும். அதை வைத்து உன்னையும் திருத்திக் கொள்ளலாம்....


இன்பமானாலும் துன்பமானாலும் அதை நீயே சந்திக்க கற்றுக்கொள். அதை பகிர்ந்து கொள்வதற்கு ஒரு துணையைத் தேடாதே.....


உன் இன்ப துன்பத்தில் பங்கு பெறுவதற்கு இந்த பிரபஞ்சத்தில் ஒருவர் பிறந்திருந்தால் நிச்சயம் அவர் உன்னை கைவிடாமல் உன்னோடு சேர்ந்தே பயணிப்பார். அது உன் பிறவி பிராப்தத்தை பொறுத்து இருக்கிறது. அப்படி அது நடந்து விட்டால், எந்த சூழ்நிலையிலும் உன்னோடு இணைந்தே இருப்பார்....


நீ பெண்ணாக இருந்தாலும், ஆணாக இருந்தாலும், வரும் துன்பத்தை எதிர்கொள் ளக்கூடிய ஆற்றலை உருவாக்கிக் கொள்.


மனிதன் மீது வைக்கும் நம்பிக்கையை விட இறைவன் மீது வைக்கும் நம்பிக்கையை அதிகரித்துக் கொள்.....


உன் கண்ணீரும். உன் கவலையும் உன்னை பலவீனமாக காட்டிவிடும்... அழுவதாலும் சோர்ந்து போவதாலும் ஒன்றும் நடக்கப் போவதில்லை. எப்படி இருந்தாலும் நீதான் அந்த சுமையை சுமந்து ஆகவேண்டும். 


"அழுது சுமப்பதை காட்டிலும், ஏற்று சுமப்பது உனக்கு சிரமம் இல்லாமல் இருக்கும்."


தைரியமும் தன்னம்பிக்கையும் தான் 

ஒரு மனிதனை உலகத்தில் வாழ வைக்கும் என்ற உண்மையை உணர்ந்துகொள். இந்த பக்குவத்தை அடைந்து விட்டால் எத்துன்பமும் உன்னை நெருங்காது என்பதை உணர்ந்துகொள்....


இப்பதிவை பத்திரப்படுத்தி, உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் பொறுமையாக மீண்டும் மீண்டும் படிக்கவும்...

      ஒவ்வொரு வரிகளும் வைர வரிகள்...

இன்பத் தமிழ்...! குண்டக்க என்றால் என்ன? மண்டக்க என்றால் என்ன? Power of Tamil Language


1. அந்தி, சந்தி: 


அந்தி : மாலை நேரத்திற்கும் , இரவுக்கும் இடையில் உள்ள பொழுது. 

சந்தி: இரவு நேரத்திற்கும் , காலை நேரத்திற்கும் இடையில் உள்ள விடியல் பொழுது.


 2. அக்குவேர், ஆணிவேர் :


அக்குவேர் : செடியின் கீழ் உள்ள மெல்லியவேர். 

ஆணி வேர்: செடியின் கீழ் ஆழமாக செல்லும் வேர்.


3. அரை குறை:


அரை : ஒரு பொருளின் சரி பாதி அளவில் உள்ளது.

குறை : அந்த சரிபாதி அளவில் குறைவாக உள்ளது.


 4. அக்கம், பக்கம்:


அக்கம்: தன் வீடும், தான் இருக்கும் இடமும்.

பக்கம்: பக்தத்தில் உளவீடும், பக்கத்தில் உள்ள இடமும்.


5. அலுப்பு சலிப்பு :


அலுப்பு: உடலில் உண்டாகும் வலி.

சலிப்பு: உள்ளத்தில் ஏற்படும் வெறுப்பும், சோர்வும்.


 6. ஆட்டம் பாட்டம் :


ஆட்டம் : தாளத்திற்கு தகுந்தவாறு ஆடுவது.

பாட்டம் : ஆட்டத்திற்குப் பொருத்தமில்லாமல் பாடுவது.


7. இசகு பிசகு:

 

இசகு: தம் இயல்பு தெரிந்து ஏமாற்றுபவர்களிடம் ஏமாறுதல்.

பிசகு: தம்முடைய அறியாமையால் ஏமாறுதல்.


8. இடக்கு முடக்கு: 


இடக்கு : கேளியாக நகைத்து, இகழ்ந்து பேசுதல்.

முடக்கு : கடுமையாக எதிர்த்து, தடுத்துப் பேசுதல்.


9. ஏட்டிக்குப் போட்டி :


ஏட்டி: விரும்பும் பொருள் அல்லது செய்வது. ( ஏடம் : விருப்பம்) போட்டி : விரும்பும் பொருள், செயலுக்கு எதிராக வருவது.


10. ஒட்டு உறவு : 


ஒட்டு : இரத்த சம்பந்தம் உடையவர்கள்.

உறவு : கொடுக்கல் சம்பந்தமான வகையில், நெருக்கமானவர்கள்.


11. கடை கண்ணி :


கடை: தனித் தனியாக உள்ள வியாபார நிலையம்.

கண்ணி : தொடர்ச்சியாக அமைந்த கடைகள் , கடை வீதிகள்.


12. கார சாரம் : 


காரம் : உறைப்பு சுவையுள்ளது.

சாரம்: காரம் சார்ந்த சுவையுள்ளது.


13. காடு கரை :


காடு : மேட்டு நிலம் (முல்லை). 

கரை : வயல் நிலம் .( மருதம், நன் செய் , புன்செய்).


14.காவும் கழனியும்:


கா : சோலை.

கழனி: வயல். (மருதம் ).


15. கிண்டலும் கேலியும்: 


கிண்டல் : ஒருவன் மறைத்த செய்தியை அவன் வாயில் இருந்து வாங்குவது.

கேலி : எள்ளி நகைப்பது.


16. குண்டக்க மண்டக்க :


குண்டக்க : இடுப்புப்பகுதி, 

மண்டக்க: தலைப் பகுதி,

சிறுவர்கள் கால் பக்கம், தலைப்பக்கம் எது எனத் தெரியாமல் தூக்குவது,

வீட்டில் அந்தந்தப் பொருள் அங்கங்கே இருக்க வேண்டிய இடத்தில் இல்லாமல் இருப்பது.


17. கூச்சல் குழப்பம்:


கூச்சல் : துன்பத்தில் சிக்கி வாடுவோர் போடும் சத்தம். (கூ - கூவுதல்)

குழப்பம்: துன்பத்தின் மத்தியில் உண்டாகும் சத்தத்தைக் கேட்டு, வந்தவர்கள் போடும் சத்தம்.


18. சத்திரம் சாவடி :


சத்திரம் : இலவசமாக சோறு போடும் இடம் ( விடுதி ).

சாவடி: இலவசமாகத் தங்கும் இடம்.

 

19.தோட்டம் துரவு , தோப்பு துரவு :


தோட்டம் : செடி, கொடி, கீரை பயிரிடப்படும் இடம்.

தோப்பு : கூட்டமாக இருக்கும் மரங்கள்.

துரவு: கிணறு.


20. நகை நட்டு :


நகை : பெரிய அணிகலன்கள் (அட்டியல், ஒட்டியாணம்.)

நட்டு : சிறிய அணிகலன்கள்.


21. நத்தம் புறம்போக்கு :


நத்தம் : ஊருக்குப் பொதுவான மந்தை...

புறம்போக்கு : ஆடு, மாடு மேய்வதற்கு அரசு ஒதுக்கிய நிலம்.


22. நேரம் காலம் :


நேரம் : ஒரு செயலைச் செய்வதற்கு நமக்கு வசதியாக அமைத்துக் கொள்வது.

காலம் : ஒரு செயலைச் செய்வதற்கு பஞ்சாங்க அடிப்படையில் செய்ய முற்படும் கால அளவு.


23. நொண்டி நொடம் :


நொண்டி : காலில் அடிபட்டோ, குறையால் இருப்பவர்.

நொடம் : கை, கால் செயலற்று இருப்பவர்.


24. பற்று பாசம் :


பற்று : நெருக்கமாக உறவு கொண்டுள்ளவர்கள்.

பாசம் : பிரிவில்லாமல் மரணம் வரை சேர்ந்து இருப்பது...


25. பழக்கம் வழக்கம் :


பழக்கம் : ஒருவர் ஒரே செயலைப் பல காலமாகச் செய்வது.

வழக்கம் : பலர் ஒரு செயலைப் பலகாலம் (மரபுவழியாக ) கடைப்பிடித்துச் செய்வது.


26. பட்டி தொட்டி :


பட்டி: கால்நடைகள் (ஆடுகள்) வளர்க்கும் இடம் (ஊர்).

தொட்டி : மாடுகள் அதிமாக வளர்க்கும் இடம்.


27. பேரும் புகழும் : 


பேர் : வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்தில் உண்டாகும் சிறப்பு பெருமை. 

புகழ்: வாழ்விற்குப் பிறகும் நிலை பெற்றிருக்கும் பெருமை.


28. பழி பாவம் :


பழி: நமக்குத் தேவையில்லாத , பொருத்தமில்லாத செயலைச் செய்தால் இக்காலத்தில் உண்டாகும் அபச் சொல்.

பாவம் : தீயவை செய்து மறுபிறப்பில் நாம் அனுபவிக்கும் நிகழ்ச்சி.


29. பங்கு பாகம்:


பங்கு: கையிருப்பு. பணம், நகை, பாத்திரம்.( அசையும் சொத்து).

பாகம் : வீடு, நிலம். அசையாச் சொத்து.


30. பிள்ளை குட்டி:


பிள்ளை : பெதுவாக ஆண் குழந்தையைக் குறிக்கும்.

குட்டி: பெண் குழந்தையைக் குறிக்கும்.


31. வாட்டம் சாட்டம் :


வாட்டம் : வளமான தோற்றம், வாளிப்பான உடல்.

சாட்டம் : வளமுள்ள தோற்றம், தோற்றப்பொலிவு.

படித்ததில் பிடித்தது

மண் குளியல் soil bath feedback

 அனைவருக்கும் வணக்கம் 🙏


மண் குளியல் இனிதே செய்து முடித்தேன், அதற்கு நம் குழு நண்பர்களும் ஒரு காரணம், நீங்க செய்யும்போது நானும் செய்யனும்னு ஒரு ஊக்கம் கொடுக்கறது நீங்க தான்,....


குளியல் ஆரம்பிக்கும் போது முதல் ஒரு கைமண் எடுத்து தடவும்போது ஒரு ஜில்லுனு ஒரு உணர்வு அருமை, கல்யாணத்தில் வளைகாப்பில் கண்ணத்தில் சந்தனம் தடவும்போது வரும் உணர்வு போல் ஒரு மகிழ்ச்சி.....


உடல் முழுவதும் ஒரு புத்துணர்வு பெற்றது, குளிச்சி முடிச்சதும் பசி எடுத்தது....🙏👍


மண்குளியல் செய்தவங்க மட்டும் பதிவு போடுங்க, செய்யாதவங்க செய்யும்போது போடுங்க, ஏன் சொல்றேனா....இன்னைக்கு நான் செய்யவில்லை என்பது வேண்டாத ( negative ) பதிவு, இரண்டாவது சரி நாம இன்னைக்கு செய்யல இவங்களும் செய்யலபோல னு சிலர் நினைக்க வாய்புண்டு, இதை செய்தவங்க பதிவு அவசியம் போடுங்க, நேரமில்லைனு சொல்லாம இருக்காதீங்க, நன்றி....இயற்கை வாழ்வியலை உணர்ந்து செயல்படுத்தி ஆரோக்கியவாழ்வை வாழ்வோம் வாழவைப்போம்....😍🎊

Ajitha Veerapandian

சூரியஒளி குளியல் sun bath

 சூரியஒளி குளியல்


காலண்டரில் சூரிய உதயம் நேரம் பார்துக்கோங்க, அதில் இருந்து ஒருமணிநேரத்திற்குள் இந்த குளியல் செய்யலாம், கண்களை நன்றாக திறந்து சூரியனை பார்த்து அதன் சக்தியை உள்வாங்கலாம், 5 நிமிடம் போதும்.....அதில் வரும் ஒளி உங்கள் மீது படுவதுபோல் கற்பனை செய்து நில்லுங்க, சூரியனை பார்த்து நிற்கும்போது காலனிகள் போடாமல் நிற்கவேண்டும்....

இதற்கு எந்த கடைக்கும்போய் எதுவும் வாங்கவேண்டியதில்லை, செலவில்லை, நம்மை தேடிவரும் சக்தியை நாம் ஏற்றுக்கொண்டு நலமாய் வாழ்வோம்.....


காலையில் நான் தூங்கிட்டேன் செய்யமுடியல னா, மாலை சூரியன் மறைய ஒரு மணிநேரத்திற்கு முன் செய்யலாம் நல்லது......ஆனால் காலையில் மிக நல்லது

.......விருப்பம் செயல் உங்களுடையது.....


பயன்கள்


*புது நம்பிக்கை பிறக்கும்

* அதிகாலை எழுவது வழக்கமாகும்

* புதுவிதமான சக்தி நம் உடலில் இருப்பதுபோல் உணரமுடியும்

* தோல்வியாதிகள் தீரும்

* கண்களுக்கு புதுவித ஒளியால் நீண்டநாள் கண் ஆரோக்கியம்பெறும்

உணவு எப்படி சாப்பிடவேண்டும் How to eat perfect

 அனைவருக்கும் வணக்கம் 🙏


உணவு எப்படி சாப்பிடவேண்டும்


* சம்மணம் போட்டு சாப்பிடனும்

* பற்களால் அரைத்து உண்ணவும்

* சாப்பிடும்போது தண்ணி குடிக்ககூடாது

* கவனம் சாப்பாட்டில் இருக்கவேண்டும்

* இன்று இந்த உணவு கொடுத்த பிரபஞ்சத்திற்கு நன்றி சொல்லி, உணவை ஆசிர்வதித்து உண்ணவும்

* உணவு உண்ணும் முன் பின் அரைமணிநேரம் இடைவெளியில் நீர் அருந்தலாம்

* சாப்பிடும்போது உதடு பிரியகூடாது, இப்படி சாப்பிடும்போது வாயில் எச்சில் சுரந்து உணவோடு கலந்து செல்லும், ஜீரணம் எளிதில் ஆகும்

* கையில் எடுக்கும் உணவு விரலில் முதல் கோட்டிற்கு மேல் போககூடாது

* அம்மாக்கள் பிள்ளைகளோடு சாப்பிட கூடாது

* குளிக்கும் நேரம்... உணவிற்கு முன் பின் 45 நிமிடம் இடைவெளி இருக்கவேண்டும்...

முடக்கு அற்றான் இட்லி அம்மான் பச்சரிசி இலை துவையல்

இன்றைய காலை உணவு 


முடக்கு அற்றான் இட்லி அம்மான் பச்சரிசி இலை துவையல் இன்று பிரமாதமாக இருந்ததுங்க  



ஹைபீரிரடு எனும் மாய உலகில் ஆரோக்கியமாக வாழ்வதே சவாலாக உள்ளது



சந்தைக்கு வரும்  ஒரு சில கீரைகள் தவிர எல்லா வகை கீரைகளும் ஹைபீரிடு ஆகதான் உள்ளது 


அதில் கிடைக்கும் மருத்துவபயண்களும் கேள்விகுரியாகவே உள்ளது 


அதனால் தான் நாம் மரந்துபோன கீரை அம்மான் பச்சரிசி இலையை நான்  உணவுக்காக பயண்டுத்த துவங்கினேன் 


நல்ல ருசி நல்ல மனம் சாப்பிட எந்த தொந்தரவும் இல்லைங்க 


சரி எப்படி செய்வது என்று கேட்பீங்க நானே சொல்கிறேன் சிம்பில் 


நம்ம வீட்டில் பொதினா கொத்தமல்லி செய்கிற பக்குவம்தானுங்க

வேரொன்றும் இல்லை


 காசு இல்லை கலை செடியை பிடிங்கினால் போதும் மருந்தாக பயண்பெறும்ங்க


அடுத்து இதன் மருத்துவ பயண் பாருங்க இன்னும் நெகிழ்வா இருக்கும்


இந்த கீரை வகை ஆஸ்துமா மூச்சுப் பிரச்சினை இரத்தத்தை சுத்தப்படுத்துதல்


 உடல் வலிமை நீண்ட நாள் காயங்கள் போன்ற நன்மைகளை அள்ளித் தருகிறது


உடல் சூடு மற்றும் மலச்சிக்கல்

வாய் மற்றும் குடல் அல்சர்


பாசி பருப்புடன் இந்த இலையை சேர்த்து நெய் விட்டு வதக்கி சாப்பிட்டு வந்தால் குடல் அல்சர் குணமாகும்


தோல்நோய்கள் எதும் நம்மீது அடிடாதுங்க..


தாய்ப்பால் சுரப்பது   இனப்பெருக்க உறுப்புகளின் வளர்சி மற்றும் குழந்தை பேருதலும் சிறப்பாக நடைபௌறும்...


விந்து பிரச்சினைகள்ஆண் இனப்பெருக்க மண்டலம் மேம்பட்டு ஆண்மை பிரச்சினைகள் சரியாகும்


இரத்தம் சுத்தப்படுத்துதல் சிறப்பாக நடைபெற்று 


இல்லரத்திலும் நல் உடல் ஆரோக்கியத்திலும் நாம் செழிப்புடன் வாழ்ந்திட 


மீட்டெடுப்போம் வலிமையான பாரதம் படைப்போம் 


வாழ்க வளமுடன் நலமுடன் 


ருசிபார்த்து பகிர்ந்தது K M A Dhanapal மரங்களை நேசிப்பவன் 


கண் நலம் for better eye sight


கண் நம் உடலில் முக்கியமான ஒரு உறுப்பு, அழிவு என்பது இல்லாத ஒரு உறுப்பு எது என்றால் அது கண், இறப்பிற்குபின் அழியும் இந்த உடலில், கண் மட்டும் ஒரு மனிதனின் இறப்பிற்கு பின்பும் வாழும் திறன் பெற்றுள்ளது, இந்த அழகிய அற்புதமான படைப்பை இந்த பிரபஞ்சம் நமக்கு கொடுத்திருக்கிறது, அந்த பொக்கிஷத்தை  காப்பது நம் கடமை, அவசியமும் கூட.....கண்கள் பேசும் ( அனைவரும் அறிந்தததே)......


 * கண், கல்லீரல், பித்தப்பை, ஜீரணம் இவற்றில் ஒன்றின் பாதிப்பு மற்றொன்றை பாதிக்கும், 


* கோபம் 👆 இந்த நான்கையும் பாதிக்கும்


* கழிவு தேங்கினால் கண் நோய் ஏற்படும்


* கழிவு நீக்கம் செய்ய நேத்ர சுத்தி...அதாவது கண்குவளை வைத்து சுத்தம் செய்யலாம், 


* அதிகாலை பல் விலக்காமல் நம் உமிழ்நீரை கண்ணில் விடலாம்


* கண் சிமிட்டுவது மிக அவசியம், நாம் கண்களை சிமிட்டாமல் இருக்கும் நேரம் கைபேசிபார்ப்பது, தொலைகாட்சிபார்ப்பது


* சூரியயோகம்...அதாவது சூரிய உதயமாகி அடுத்த ஒரு மணிநேரம், சூரிய அஸ்தமனமாக முன் ஒரு மணிநேரம் பார்ப்பது கண் நலம் கொடுக்கும், 5 நிமிடம் பார்த்தால் போதுமானது


* கண் பட்டி....கண்ணில் புற்றுமண் அடைத்த துணி அல்லது தண்ணீரில் நனைத்த துணி போடலாம், கண்ணில் இரத்த ஓட்டம் சரியாகும், கண் புத்துணர்வு பெறும்


* திராடகம் பயிற்சி....அதிகாலை எரியும் விளக்கை பார்ப்பது, இதை தொடர்ந்து செய்யும்போது கண்ணாடியை விரைவில் கழட்டிவிடலாம்...5 நிமிடம் போதுமானது....பழகியபின் 20 நிமிடம் செய்யலாம் ( கண் கழிவு நீக்கும் )


கண் நலத்தின் உணவு


* நல்லபுளிப்பு, அதாவது திராட்சை, எலுமிச்சை, சாத்துக்குடி....புளியை சுட்டு பயன்படுத்தலாம்...


* கீழாநெல்லி வேரோடு மாதம் ஒரு முறை சாப்பிடவும்


* விதையுள்ள திராட்சை தினமும் ஒரு கைப்பிடி கண் நலம் காக்கும்.....


கண்ணாடி போட்டிருக்கும் ஒரு கண் தானாமாக மற்றவருக்கு பொருத்தியபின் கண்ணாடி போடபடுவதில்லை, உண்மை என்னவென்றால் கண் என்றுமே ஆரோக்கியமாக இருக்கிறது, நன்றி 🙏🎊

தேன் நெல்லி Honey Amla / Then nellikai / Honey gooseberry

 தேன் நெல்லி என்பது பெரிய நெல்லி பயன்படுத்தி செய்வார்கள்.

கிளாஸ் பாட்டிலில் ஒரு அடுக்கு இயற்கையாக தயாரித்த பொடித்த வெல்லம் அல்லது நாட்டு சக்கரை இட்டு கழுவி காய வைத்த நெல்லியை சிறிய ஈர் குச்சியை வைத்து துளைகள் போட்டு ஒரு அடுக்கு வைக்கவும். வில்லைகளாக்கியும் போடலாம். பின்பு அதன் மேல் வெல்லம். அடுக்குகள் மெல்லியதாக போடவேண்டும். இல்வாறு அடுக்கு அடுக்காக போட்ட பின்பு சூரியபுடம் போடவும்.

வெல்லத்திற்கு பதில் சுத்தமான தேனை முங்கும் அளவு ஊற்றி சூரிய புடம் போட்டு பயன்படுத்தலாம்.

குழந்தைகளுக்காக நெல்லிக்காய் லேகியம் செய்யலாம். பெரு நெல்லியை நன்றாக கழுவி துடைத்து ஆறிய பின் துறுவி வெல்லப்பாகுடன் கிளறி சுருண்டு வரும் போது  ஏலக்காய் கிராம்பு பட்டையை வெறும் வாணலியில்  வறுத்து பொடி செய்து சேர்க்கலாம்.  சுக்குப்பொடி சிறிது சேர்த்தால் காரம் புளிப்பு இனிப்பு துவர்ப்பு  எல்லாம் கலந்த சுவை கிடைக்கும்.  இதை மிட்டாய் மாதிரி சப்பி  சாப்பிடும் போது உமிழ் நீர் அதிகம் சுரந்து உடலுக்கு நன்மை பயக்கும்.  

நன்றி.

வீட்டில் விளைவித்த காய்கறி (home made organic) நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுகிறது என்பது தான் நிதர்சன உண்மை

 வீட்டில் விளைவித்த காய்கறிகளை 2010லிருந்து பயன்படுத்தி வந்ததால் இரத்த அழுத்தத்திலிருந்து மீண்டு வந்துள்ளேன்.


16 மாத்திரையில் ஆரம்பித்து 3 மாத்திரை ஆனது. கடந்த நான்கு வருடங்களாக மாத்திரை எதுவும் எடுத்துக் கொள்ளவதில்லை. காரணம் மாத்திரைகள் எடுத்தும் தீராத சின்ன சின்ன பிரச்சனைகள் வீட்டில் விளைந்த கீரைகள் தீர்த்து வைத்தது.


அனுதினமும் கீரைகள் மாற்றி மாற்றி கலாவாங் கீரை சூப் ஒரு கப் வீட்டிற்கு பணிக்கு வரும் அம்மையார் முதல் அனைவரும் பருகி வருகிறோம்.


பயன்படுத்தி ஒரு வாரத்தில் உடல் ஆரோக்கியமாக இருப்பதை உணர்கிறேன் என்று கூறினார் பணி மகள்.


நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுகிறது என்பது தான் நிதர்சன உண்மை.

NEET Coching - NEET மற்றும் JEE பயிற்சி மையங்களில் சேரப்போகிறவா நீங்கள்?

 NEET மற்றும் JEE பயிற்சி மையங்களில் சேரப்போகிறவா நீங்கள்?


லட்சங்களை செலுத்தும்  முன் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்.


1.அனைத்து பயிற்சி மையங்களும் காப்பியடித்துக் கொண்டிருக்கும் Physics Book என்னவெனில் Concepts of Physics by H.C.Verma இதன் விலை 600 மட்டுமே.


2.  BIOLOGY பாடத்திற்கு NCERT மற்றும் SCERT உங்களது புத்தகத்தை படித்தால் மட்டுமே  போதுமானது.


3. MATHS பாடப்பிரிவிற்கு உங்களது பாடப்புத்தகங்ளோடு  Maths by R.D.Sharma வைத்துக் கொள்ளுங்கள். இதன் விலை அதிகபட்சமாக 1500 ரூபாய்.


4.   CHEMISTRY பாடப்பகுதிகளை உங்களது  NCERT மற்றும் SCERT புத்தகங்களை கொண்டே படிக்கலாம்.


5. 40 ஆண்டு வினா வங்கி புத்தகங்களை வாங்கி வைத்துக் கொண்டு நீங்கள் படித்ததில் உள்ள வினாக்களை விடையளித்து பாருங்கள். இதன் விலை அதிகபட்சம் 700 ரூபாய் மட்டுமே.



இதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னவெனில் பல பயிற்சி மையங்கள் தங்களது பெயரில் புத்தகங்களை ARIHANT PUBLICATIONS போன்ற நிறுவனத்திடம் இருந்து பெற்று அவர்களே தயாரித்தது போன்ற முன்பக்க அட்டையை அச்சடித்து மாணவர்களுக்கு வழங்கி ஏமாற்றுகின்றனர். அதன் மொத்த விலையே 2000 ரூபாய் மட்டுமே அதனை செலுத்தி நீங்களே பெற்றுக் கொள்ளலாம்.


ஆக வெறும் 3000 முதல் 5000 ரூபாய் செலவில் எளிதாக NEET மற்றும் JEE போன்ற தேர்வுகளில் எளிதில் வெற்றி பெறலாம் என்பதே உண்மை. இதனைப் பல பள்ளிகளும் ஆசிரியர்களும் மாணவர்களுக்கு எடுத்துரைப்பதே நமது லட்சியமாக கொண்டு ஏழைமாணவர்களின் வாழ்வில் ஒளி ஏற்றுவோம்


உங்களது பாடங்களில் இருந்து மட்டுமே கேட்கப்படும் கேள்விகளுக்கு விடையளிப்பதற்கு நீங்கள்  படித்தால் மட்டுமே வெற்றி நிச்சயம்.



மாணவர் சமுதாயத்திற்கு விழிப்புணர்வு ஊட்டும் வகையில் பிறருக்கும் பகிர்ந்து மாற்றத்திற்கு தோள் கொடுங்கள்.

road safety message

 ஜாக்கிரதை

#####₹₹₹₹₹₹##



நான்கு வழிசாலைகளில் இரவு நேரங்களில் வலதுபுறமாக செல்லவேண்டாமென பலமுறை கூறினாலும் பெரும்பாலானவா்கள் கேட்பதில்லை.


இதை பாா்த்தாலே உங்களுக்கு புாியும்.


  அதாவது, தொடா்சாலையில்,

இடைவெளி விட்டு மீண்டும் சாலை தொடங்கும்போது படத்தில் உள்ளதுபோல திடீரென சென்டா் மீடியன் அகலமாக வரும்போது இரவுநேரத்தில் எதிரே வரும் வாகனவெளிச்சத்தில் முன்னால் இருக்கும் சாலையின்தன்மை நமக்கு தொியாது.


 80,90 ,என வேகத்தில் செல்லும்போது ஒருசெகன்டில் எல்லா ஜோலியும் முடிந்துவிடும்..

 

பகலாக இருந்தால்கூட நம் கண்களுக்கு தொியும்..தப்பித்துக் கொள்ளலாம்.


  ஆகவே,

இனிமேலாவது

ஜாக்கிரதையாக வாகனங்களை இயக்குங்கள்..


  நன்றி.

மதராஸ் பாஷை சுவை தலபுராணம் - மெட்ராஸ் பாஷை Madras Tamil


மெட்ராஸ் பாஷை அல்லது மெட்ராஸ் மொழியை தமிழகமெங்கும் எடுத்துச் சென்றது தமிழ்த் திரைப்படங்கள்தான். 


குறிப்பாக,  என்.எஸ்.கே, சந்திரபாபு, சோ, நாகேஷ், மனோரமா, சுருளிராஜன், லூஸ் மோகன், ஜனகராஜ் எனக் காமெடி நடிகர்களே இதைக் கச்சிதமாகச் செய்தனர்.


1968 ம் வருடம் முக்தா சீனிவாசன் இயக்கத்தில் வெளிவந்த பொம்மலாட்டம்’  படத்தில்  மனோரமாவின் வா வாத்யாரே வூட்டாண்ட… நீ வராங்காட்டி நான் உடமாட்டேன்...’ பாடல் மெட்ராஸ் பாஷையை பட்டி தொட்டியெங்கும் கொண்டு சேர்த்தது.


தவிர, பல படங்களில் நடிகர்கள் சந்திரபாபுவும், சோவும் இன்னாமே, எப்டிகீற… குந்துமே… என்பது போன்ற வசனங்களைப் பேசுவதைப் பார்த்திருப்போம்.


எப்படி நெல்லைக்கும், மதுரைக்கும், தஞ்சாவூருக்கும், கோவைக்கும் தனித்துவமான பேச்சு மொழி இருக்கிறதோ, அதுபோலவே மெட்ராஸுக்கும் தனித்த பேச்சு மொழி இருக்கிறது. 


போர்த்துக்கீசியர்கள், டச்சுக்காரர்கள், பிரிட்டிஷ் காரர்கள், பிரஞ்சுக்காரர்கள், முஸ்லிம்கள், பணி நிமித்தமாக வந்த மற்ற மொழியினர் எனப் பலதரப்பட்டவர்கள் இங்கே வந்ததும், வாழ்ந்ததுமே இதற்குக் காரணம்.


குறிப்பாக, தெலுங்கர்களும், முஸ்லிம்களும் நிறைந்திருந்ததால் தெலுங்கு மற்றும் உருதுச் சொற்கள் அதிகளவில் மெட்ராஸ் பாஷையில் இருப்பதை அறிய முடியும். 


அடுத்ததாக, ஆங்கிலம் அதிகமாகக் கலந்திருக்கும். ‘‘பிரிட்டிஷ்காரர்களின் முக்கிய வியாபார மையமாகத் திகழ்ந்த சென்னையில் ஆங்கிலம்,தெலுங்கு, கன்னடம், உருது, சிந்தி, குஜராத்தி, ராஜஸ்தானி எனப் பல்வேறு மொழி பேசுபவர்களின் குடியேற்றங்களும், அவற்றின் விளைவாக ஏற்பட்ட பண்பாட்டு கலப்புகளும் இம்மக்கள் பேசிய தமிழ் மொழியின் மீது பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தின...’’


 என ‘சென்னையும், அதன் தமிழும்’ என்ற நூலின் ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார் எழுத்தாளர் இந்திரன்


மெட்ராஸ் பாஷையை ஒரு தரம்தாழ்ந்த மொழியாகக் கருதும் போக்கு தமிழர்கள் அனைவரிடமும் உள்ளது. 

நாவல்களிலும், சிறுகதைகளிலும் உயர்தட்டு மக்கள் சென்னைத் தமிழில் உரையாடுபவர்களாகச் சித்தரிக்கப்படுவதில்லை

 தமிழ் சினிமாவை எடுத்துக் கொண்டாலும்கூட நகைச்சுவைக் கதாபாத்திரங்கள் பேசும் மொழியாகவே சென்னைத் தமிழ் பயன்படுவதைப் பார்க்கலாம்.


மெட்ராஸ் பாஷை என்றாலே பொதுவாக அனைவரின் நினைவிற்கும் சேரித் தமிழ்தான் வருகிறது. 


மெட்ராஸ் பாஷை கொச்சையானது என்றே பலரும் நினைக்கிறோம். 


ஆனால், அதனுள் செந்தமிழும் நிறையவே நிறைந்திருக்கிறது


பக்கமாக, அருகில் எனப் பொருள்படும் அண்டை என்ற வார்த்தையை, ‘அந்தாண்ட, இந்தாண்ட, வூட்டாண்ட…’ என எளிதாகச் சொல்வார்கள் சென்னைவாசிகள். 

அதாவது, அதன் அருகில் இருக்கிறது என்பதே இதன் அர்த்தம். 

சிலர், ‘மெய்யாலுமா?’ எனக் கேட்பார்கள். 

உண்மையாகவா? எனப் பொருள்படும் மெய் எனும் தூய செந்தமிழைப் பயன்படுத்துகின்றனர். 


இதேபோல, சிறப்பு எனும் பொருள் தரும் செம்மை’ என்கிற வார்த்தையை, செம மச்சி… செம டா’ என சுருக்கிச் சொல்கின்றனர்.  


சோறு துன்னலயா?’ எனச் சிலர் கேட்பதைப் பார்த்திருப்போம். 


சோறு என்னும் தமிழ் வார்த்தையை இன்று பலரும் அநாகரிகமான வார்த்தை எனத் தவிர்த்து வருகிறோம். 


ரைஸ் என்கிற ஆங்கில வார்த்தையோ அல்லது சாதம் எனும் வடமொழிச் சொல்லோதான் நாக்கில் சட்டென வருகிறது.


ஆனால், சென்னைவாசிகள் இன்றும் சோறு எனும் பதத்தைப் பயன்படுத்துவதைப் பார்க்கலாம்.


 துன்னு என்கிற வார்த்தை தின்னுதல் என்பதன் கொச்சை வடிவமாகும். 


தேடிச் சோறுநிதந் தின்று… என்ற பாரதி யின் வரிகளில் இருந்து இதை அறியலாம்.


இதேபோல, வலி, அப்பால் போன்ற வார்த்தைகள் பற்றி ‘சென்னைத் தமிழின் பன்முகத் தன்மைகள்’ என்ற கட்டுரையில் எழுத்தாளர் அரவிந்தன் தரும் பதில்கள் சுவையானவை. 


‘‘வலி என்ற வார்த்தையை வேதனை என்றே நாம் பொருள் கொள்கிறோம். இலக்கியங்களில் வலி என்ற வார்த்தை, ‘அதிக விசை கொடு’, ‘இழு’, ‘தள்ளு’ போன்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.


இதை வைத்தே வலிமை, வலிது போன்ற வார்த்தைகள் வழக்கில் வந்தன. 

சென்னைத் தமிழில் மட்டுமே அந்த வார்த்தை இன்றும் அதே பொருளில் பேசப்பட்டு வருகிறது. 

உதாரணத்துக்கு, ‘வலிச்சிக்கினு வா’, ‘நல்லா வலி’ போன்றவை. 

ஆனால், வேதனை என்ற சொல் செந்தமிழுக்கு நெருக்கமாக ‘நோவு’ என்றே புழங்கி வருகிறது. 

வலிக்குது என்று பிற ஊர்களில் சொல்வதை சென்னையில் நோவுது என்றே சொல்வார்கள். 


Distance என்பதற்கான தமிழ்ச் சொல்லாக இன்றும் பல்வேறு ஊர்களில் தூரம் என்றே குறிப்பிடுகின்றனர். ஆனால் சென்னையில் அப்பால், தொலைவு என்கிற தமிழ்ச் சொல்லே பயன்படுத்துகின்றனர். 


அப்பால போய் நில்லு… எம்மாந் தொலைவு கீது’ போன்ற வார்த்தைகளே இதற்கு உதாரணங்கள்...’’ 


  அடுத்ததாக அதிகம் உச்சரிக்கப்படுவது அப்பீட்டு எனும் சொல். 


ஆளைவிடு, கிளம்பறேன் எனும் பொருளில் சென்னை வாசிகள் இந்தச் சொல்லைப் பயன்படுத்துகின்றனர்.

 

*இது ஆங்கிலச் சொல்லான abate இல் இருந்து வந்த வார்த்தை. 

அதாவது, விரைவாக வெளியேறு எனப் பொருள் படுகிறது. அதனாேலயே நான் அப்பீட்டு என்கின்றனர்.   


எழுத்தாளர் அரவிந்தன் தனது கட்டுரையில், ‘‘அப்பீட் என்ற சொல் பம்பர விளையாட்டில் பயன்படுத்தப் படுவது. 


தரையில் சுற்றும் பம்பரத்தின் ஆணியைச் சாட்டையால் அணைத்து, சாட்டையைச் சுண்டி பம்பரத்தைத் தலைக்கு மேலே எழுப்பிப் பிடிக்கும் செயலுக்கு அப்பீட் என்று பெயர். 


அது அப் ெஹட’ என்ற சொல்லில் இருந்து மருவி வந்தது என்ற தகவல் ஜெயகாந்தனின் ‘ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்’ நாவலில் காணக் கிடைக்கிறது.


அப்பீட்டுக்கு எதுகை நயத்துடன் ரிப்பீட்டு என்னும் சொல்லும் அண்மைக் காலத்தில் புழங்கி வருகிறது.


இப்போ அப்பீட் ஆயிக்கறேன், அப்புறம் ரிப்பீட் ஆயிக்கறேன் என்று சொல்வதை யோசித்துப் பாருங்கள்.


அசால்ட் எனும் சொல் Assault என்ற ஆங்கில வார்த்தையிலிருந்து வந்திருக்கலாம். அதாவது, தாக்குதல் எனப் பொருள்படும்.


 அசால்ட் பண்ட்டாம்பா என்பது மோசமான தாக்குதலைக் குறிக்கச் சொல்கின்றனர். 

ஆனால், பல இடங்களில் இந்த அசால்ட் ‘எளிதாக’ எனும் பொருளில் பேசப்படுகிறது. உதாரணத்துக்கு, அசால்ட்டா முடிஞ்சிச்சு என்பார்கள்.  


மெட்ராஸில் சர்க்கரையை அஸ்கா என்றே குறிப்பிடுவர். இப்போதும் கூட சில இடங்களில் அஸ்கா இருக்கா என்று கேட்பதைப் பார்க்கலாம்.


இந்தப் பெயர் பின்னி அண்ட் கோ நிறுவனத்தால் வந்துள்ளது.இதுபற்றி, ‘அன்றைய சென்னைப் பிரமுகர்கள்-II’ நூலில் எழுத்தாளர் ராண்டார் கை குறிப்பிடுகிறார்.


‘‘1840ம் ஆண்டு வாக்கில், பின்னி அண்ட் கம்பெனி விவசாயம் சம்பந்தமான வியாபாரத்தில் இறங்கியது. 


ஒரிசா மாநிலத்தில் கூம்சூர் என்ற ஜமீன் சமஸ்தானத்திற்கு சொந்தமான எஸ்டேட் இருந்தது. 

அதன் பெயர் அஸ்கா.


 அங்கே ஒரு சர்க்கரை ஆலையை பின்னி நிறுவனம் நிறுவியது. 

அங்கிருந்து  வந்த வெள்ளை வெளேர் எனச் சுத்தம் செய்யப்பட்ட சர்க்கரைக்கு ‘அஸ்கா’ என்று பெயர்...’’ என்கிறார் அவர்.


இதுபோல, பேஜார் என்ற வார்த்தையை கேட்டிருப்போம். 

அதாவது தொடர்ந்து எரிச்சலூட்டுபவனை, உன்னோட பேஜரா போச்சு என்பார்கள். 


இது ஆங்கிலச் சொல்லான badger என்பதிலிருந்து வந்துள்ளது. 


அதாவது, அடிக்கடி எரிச்சலூட்டுபவன் எனப் பொருள்படும். 


சரியான பஜாரி எனச் சில பெண்களைச் சொல்வார்கள். 


இது உருது மொழியில் பஜார் என்ற வார்த்தையிலிருந்து வந்ததாகச் சொல்கின்றனர். 


பஜார் என்றால் தமிழில் சந்தை. அங்குள்ள கடையில் நின்று சத்தம் போடுபவள் பஜாரி ஆகிவிட்டாள் என்கின்றனர்.


இதேபோல பேக்கு என்ற வார்த்தையும் உருதிலிருந்தே மெட்ராஸ் பாஷையில் கலந்துள்ளது.

 பேவ்கூஃப்( bevkoof) என்ற வார்த்தையின் திரிபே பேக்கு! அதாவது, முட்டாள் என்பது இதன் பொருள்.


 போடா பேமானி என்பது மெட்ராஸுக்கே உரிய பழைய வழக்கு.

 இதுவும் உருதிலிருந்தே வந்துள்ளது. 


அதாவது, நேர்மையற்றவன், மானம் இல்லாதவன் என்ற பொருளில் வருகின்றது.


விசில் அடி என்பதை சென்னைவாசிகள் பிகிலு அடி என்பார்கள். விசிலும் ஆங்கிலம்தான். 


இருந்தும், இங்கே பிகிலு என்ற சொல் bugle என்பதிலிருந்து வந்ததாகச் சொல்கிறார்கள். 


இராணுவத்தில் பயன்படுத்தும் ஒரு ஊதுகுழல் bugle. இதுவே பிகிலு என்று மருவி உள்ளது.  


டப்பு, துட்டு, கப்பு, கலீஜு, கஸ்மாலம், காண்டு, டோமர், கேப்மாரி, பாடு, உனக்கொஸரம், டார் ஆயிட்டான், மஜா, நாஸ்தா, ஜல்பு… என இன்னும் எத்தனையோ வார்த்தைகள் ஒலிக்கின்றன.


🤣🤣🤣

Why Chennai is called SuperKing

Chennai is the 2nd city in the world to become a municipal corporation next to London, in the year 1688.


Chennai is the only city in India that will have 2 international ports, Chennai port, Ennore port, 


Chennai has the longest beach in India, 12kms urban beach, 2nd longest in the world.


Chennai is the only city that houses a national park within city limits. The Guindy national park.


Chennai is the only city that has three rivers flowing through it, Adyar, Covum river, Kosasthalai river.


Chennai's Old Mahabalipuram Road is the single largest IT corridor in India.


Chennai is the single largest automobile manufacturer in Asia. Fondly called the Detroit of Asia.


Chennai houses the largest bus terminus in Asia at Koyambedu.


Chennai is the birthplace of 'Chicken 65' @ Hotel Buhari.


Chennai has the largest library in Asia, Arignar Anna centenary library.


Chennai's Vandalur Zoo is the largest zoo in India.


Chennai's Guindy engineering college the oldest in India, 1794.


Two of the top ten engineering colleges in India located on a single road, IIT Madras, CEG(college of engineering — Guindy/Guindy engineering college), at Sardar Patel Road, Chennai.


Chennai houses the oldest shopping mall in India, Spencer plaza, 1863


The Madras High court is the world's second-largest court complex.


Chennai is the only Indian city attacked during world war I.


Chennai, the city of flyovers, largest number of flyovers in India.


Kathipara flyover is the largest cloverleaf flyover in Asia.


Chennai is the Indian city with the most number of foreign visitors annually.


Chennai is the health capital of India, with the most foreign and domestic footfalls.



Royapuram railway station is the oldest functioning railway station in India.


Integral Coach Factory(ICF), Chennai is the world's largest rail coach manufacturer.


Madras Medical College, the oldest medical college and oldest hospital in India, 1664.


The first-ever flight in Asia flew in and around Chennai, 1910.


Oragadam is the largest automobile hub in South Asia, with 22 Fortune 500 companies.


Chennai has the highest number of cinema theatres in India. Quite obvious, Tamil film industry has given 4 Chief ministers to the state.


Chennai has the oldest race tracks in india, both horse race, motor race.


Madras school of art is the oldest fine arts institute in india(1850).


Higginbothams, Mount road, chennai is the oldest book store in India(1844).


EID parry, chennai is the oldest company in India (1780).


MRF, chennai is the largest tyre manufacturer in india.


Madras regiment is the oldest infantry regiment of Indian army(1750).


AVM studio is the oldest surviving film production house in India.


St. George's Anglo Indian higher secondary school is the oldest school in India(1715).


Chennai is also the only city in the world where all forms of surface transport are manufactured... From bicycles, 2 wheelers, cars, trucks, armored personal carriers, locomotives, railway coaches, main battle tanks... the entire range of surface transport. Not even Detroit can boast of this wide range of surface transport.

ஆயுதங்கள் என்றும் அமைதியை தருவதில்லை!! there is no weapon which will make peace in the world

 என்ன  😭😭😭😭😭 கொடுமை 



வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த  இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டது 1945 ஆகஸ்ட் மாதம் 09 ஆம் திகதியாகும்.

அமெரிக்காவினால் ஜப்பானின் நாகசாகி நகரத்துக்கு அணுகுண்டுத் தாக்குதல் நடத்தி 7 நாட்களின் பின்னரே இந்தப் புகைப்படம் ஒரு அமெரிக்கப் படை வீரரினால் எடுக்கப்படுகிறது.

அமெரிக்கா அணுகுண்டுத் தாக்குதல் நடத்தியதன் பின்னர், ஜப்பானில் ஏற்பட்ட சேதங்களை ஆவணப்படுத்தும் பணி வழங்கப்பட்ட 

Joe 0'Donnell என்ற அமெரிக்க ராணுவ வீரரினால் எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படம் குறித்து அவர் தனது நாட்குறிப்பில் இவ்வாறு குறிப்பிடுகின்றார்.

"10 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன் தனது தோளில் ஒரு குழந்தையை கட்டிக் கொண்டு நிற்கிறான்.

இப்படி சிறுவர்கள் தம்பி,தங்கைகளை தோளில் சுமந்து கொண்டு விளையாடுவதை நாம் கண்டிருக்கிறோம்.

ஆனால் இந்தச் சிறுவன் விளையாடுவதற்காக தோளில் ஒரு குழந்தையை சுமந்து வரவில்லை. அவன் எதோ ஒன்றை பெரிதாக சிந்தித்துக் கொண்டு 

இருந்தான். அவனது காலில் செருப்பு கூட இருக்கவில்லை.

அந்தச் சிறுவன் தனது தோளில் இருந்த குழந்தையை திரும்பிப் பார்த்தான், அப்போதுதான்

அவனது தோளில் இருந்த குழந்தை இறந்து இருப்பதை நான் கவனித்தேன். அந்தக் குழந்தையின் கழுத்து சரிந்து இருந்தது.

இறந்த குழந்தையை சுமந்து கொண்டு அந்த சிறுவன் பிணங்களை எரிக்கும் இடத்திற்குச் சென்றான்.

அந்த இடத்தில் நின்றுகொண்டிருந்த சிறுவன் தனது உதடுகளை கடித்துக் கொண்டான். 

அப்போது, அவனது வாயினால் இரத்தம் வழிந்து கொண்டு இருந்தது.

பின்னர் அவனது தோளில் சுமந்துவந்த, அவனது தங்கையின் உடலை தகனம்  செய்வதற்கு

கொடுக்கிறான், கொஞ்ச நேரத்தில் அந்தப் பிஞ்சு 

உடல் தீயில் கருகி விடுகிறது.

அந்த தீச்சுவாலையை பார்த்த வண்ணமே அந்த சிறுவன் நடக்கத் தொடங்கினான்."

இந்த சம்பவம் நடந்து 72 வருடங்களின் பின்னர்

புனித பாப்பரசர் தனது புதுவருட வாழ்த்து அட்டையில் இந்த புகைப்படத்தை பிரசுரித்து

இப்படி ஒரு  குறிப்பையும் சேர்த்துவிடுகின்றார்.

"யுத்தத்தின் பிரதிபலன் இதுதான்"

நாம் அணு ஆயுதங்களை வைத்துக்கொள்வதை

சட்டமாக்குவதா ? அல்லது கடந்த காலங்களில்

படித்த பாடங்களை வைத்து மனிதகுலத்தின் 

விருத்திக்காக பாடுபடுவதா ?

இந்தச் சிறுவன் இரத்தம் வருமளவுக்கு தனது 

உதடுகளை கடிப்பதை நினைக்கும் பொழுது

அந்தப் பிஞ்சு உள்ளத்தின் வேதனையின் அளவை எம்மால் உணர முடியும்." 

ஆயுதங்கள் என்றும் அமைதியை தருவதில்லை!!

படித்ததில் வலித்தது.

மக்களை காப்பாற்றவே ஊடகங்கள் இருக்க வேண்டுமே தவிர. மக்களை வைத்து காசு பார்க்கவும், மக்களை காவு வாங்கவும் இல்லை!

 தென்கச்சி கோ சாமிநாதன்


நான் திருநெல்வேலி வானொலி நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த நேரம்.

.

ஒரு நாள் மாலை வேளையில் ஒரு தொலைபேசி அழைப்பு.

.

“ஹலோ… ரேடியோ ஸ்டேஷனா?’

.

“ஆமாங்க.’

.

“நான் டீன் பேசறேன். ஹைகிரவுண்ட் ஆஸ்பத்திரியில் இருந்து… ஒரு முக்கியமான விஷயம்.’

.

“சொல்லுங்க டாக்டர்.’

.

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஒரு ஆக்சிடெண்ட் நடந்துபோச்சி!’

.

“எங்கே டாக்டர்?’

.

“பாளையங்கோட்டை ரயில்வே கிராசிங் தாண்டி… கொஞ்ச தூரத்துலே…’

.

“பெரிய விபத்தா டாக்டர்?’

.

“ஆமாம்… வடநாட்டு சுற்றுலா பஸ் ஒன்றும் ஒரு லாரியும் மோதிக்கிட்டதுலே, டிரைவர் உள்பட கொஞ்ச பேர் அந்த இடத்துலேயே இறந்துட்டாங்க. அடிபட்டு உயிருக்குப் போராடிக்கிட்டி இருக்கிறவங்களை எல்லாம் இங்கே கொண்டு வந்து சேர்த்து இருக்காங்க. இந்த நேரத்துலே உங்களாலே ஒரு உதவி!’

.

“சொல்லுங்க டாக்டர்… எங்களாலே முடிஞ்சது எதுவா இருந்தாலும் செய்யிறோம்.

.

“வேறே ஒண்ணுமில்லே. இப்ப இங்கே எங்ககிட்டே வந்து சேர்ந்து இருக்கறவங்களுக்கு   எல்லாம் உடனடியா ரத்தம் செலுத்தியாகணும். அப்படி செஞ்சா தான்  அவங்களையெல்லாம் காப்பாத்திடலாம்.’

.

“சரி.’

.

“ஆனா போதுமான ரத்தம் இப்ப பிளட் பாங்க்ல இல்லே. பொதுமக்கள் யாராவது வந்து ரத்தம் கொடுத்தா இவங்களை எல்லாம் பிழைச்சுக்குவாங்க. இப்ப நான் உங்ககிட்டே கேட்டுக்கறது என்னன்னா, உடனடியா இது சம்பந்தமா நீங்க ரேடியோவுல ஒரு அறிவிப்பு கொடுக்க முடியுமா?’

.

“இப்பவே நாங்க அதுக்கு ஏற்பாடு செய்யறோம். நீங்க மற்ற வேலைகளைக் கவனிங்க.’

.

வானொலி நண்பர்கள் உடனே செயலில் இறங்கினார்கள். அந்த சமயத்தில் திரைப்பட இசை ஒலிபரப்பாகிக் கொண் டிருந்தது. அவசரம் அவசரமாக அறிவிப்பு ஒன்று எழுதப்பட்டது நாலு வரிகளில்.

.

“நேயர்களே! ஒரு முக்கிய அறிவிப்பு. சற்று முன் நேர்ந்த ஒரு விபத்தினால் பாதிக்கப் பட்டவர்களைக் காப்பாற்ற ரத்தம் தேவைப்படுகிறது. ரத்த தானம் செய்ய விரும்புகிறவர்கள் உடனடியாக பாளையங் கோட்டை மருத்துவமனைக்கு விரைந்து செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்.’

.

அறிவிப்பாளர் தூத்துக்குடி ராஜசேகரன், ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாடலை நிறுத்தி இடையே அந்த அறிவிப்பை வாசிக்கிறார். ஒரு முறைக்கு இருமுறையாக இந்த அறிவிப்பு வாசிக்கப்படுகிறது. மறுபடியும் படப்பாடல்கள் தொடர்கின்றன. ஒரு இருபது நிமிடங்கள் கடந்திருக்கும். இன்னும் இரண்டு பாடல்களை ஒலிபரப்ப நேரம் இருந்தது. அந்த சமயத்தில் மறுபடியும் தொலைபேசி அழைப்பு.

.

“ஹலோ!’

.

“”சார்… மறுபடியும்    ஹைகிரவுண்ட் ஆஸ்பத்திரியில் இருந்துதான் பேசறோம். நீங்க உடனே இன்னொரு அறிவிப்பு செய்யணும்.’

.

“என்ன சொல்லணும்… சொல்லுங்க டாக்டர்.’

.

“தயவு செய்து மேற்கொண்டு யாரும் ஹைகிரவுண்ட்  ஆஸ்பத்திரிக்கு ரத்ததானம் செய்ய வர வேண்டாம்னு சொல்லணும்.’

.

“என்ன ஆச்சு டாக்டர்?’

.

“ஏகப்பட்ட பேர் ரேடியோ அறிவிப்பைக் கேட்டுட்டு ரத்தம் கொடுக்க இங்கே வந்துட்டாங்க… கூட்டத்தை எங்களாலே சமாளிக்க முடியலே. அவ்வளவு பேர்கிட்டே ரத்தம் கலெக்ட் பண்ணவும் இப்ப இங்கே வசதி இல்லே. ப்ளீஸ்…!’

.

மறுபடியும் வானொலி அறிவிக்கிறது.

“இனி யாரும் அங்கே செல்லத் தேவையில்லை என்பதை நன்றியோடு தெரிவித்துக்     கொள்கிறோம்.

.

மறுநாள் மருத்துவமனைக்குப் போகிறோம். படுக்கையில் இருந்தவர்கள் பாசத்தோடு எங்களைப் பார்க்கிறார்கள். மொழி ஒரு தடையாக இல்லை.

.

ஊடகங்கள் சமுதாயத்திற்கு எப்படிக் கடமையாற்ற வேண்டும் என்று கேட்டீர்கள். இந்த உண்மை நிகழ்ச்சி அதற்கு ஓர் எடுத்துக்காட்டு.”

இப்படி எல்லா ஊடகங்களும் இருந்திருந்தால் கொரானா இவ்வளவு வேகமாக பரவி இருக்காது. உயிரிழப்பும் இவ்வளவு ஏற்பட்டு இருக்காது. மக்களை காப்பாற்றவே ஊடகங்கள் இருக்க வேண்டுமே தவிர. மக்களை வைத்து காசு பார்க்கவும், மக்களை காவு வாங்கவும் இல்லை!