Showing posts with label health benefit. Show all posts
Showing posts with label health benefit. Show all posts

காலையில் வெறும் வயிற்றில் முளைகட்டிய பயறு சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?

Scroll down for English Version

 முளைக்க வைக்கப்பட்டு பயன்படுத்தும் அனைத்து பயறு வகைகளுமே சிறந்த புரதச்சத்து உடையதாக இருக்கிறது.



அதில் புரதம், கார்போஹைட்ரேட், பீட்டா, கரோட்டின் போன்றவை அதிக அளவில் உள்ளன. முளை கட்டிய தானியங்களில் அதிக அளவு ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்டும், உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கிறது.


அதிலும் காலையில் வெறும் வயிற்றில் முளைகட்டிய பயறு சாப்பிடுவதனால் உடலுக்கு பல நன்மைகள் தருகின்றது. 


அந்தவகையில் தானியங்களை எடுத்துக் கொள்வதால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்று இங்கே தெரிந்து கொள்வோம்.


முளைகட்டிய தானியங்களை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உங்களின் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும். 


ஆரோக்கியமான சருமத்தை பெற விரும்புவோர் முளைகட்டிய தானியங்களை எடுத்துக் கொள்ளலாம்.  


முளைகட்டிய தானியங்களை நாம் உணவாக எடுத்துக் கொள்ளும் போது, உங்களின் ஜீரண சக்திக்கு உதவி புரியும். இதில் உள்ள நார்ச்சத்து மலத்தை இலகுவாக்கி குடல் வழியாக விரைவில் நகர்த்த உதவும். இதனால் மலச்சிக்கல் அபாயத்தைக் குறைக்க முடியும். இது குடல் ஆரோக்கியத்திற்கும் சிறந்தது.


முளைகட்டிய பயிர்கள் அல்லது தானியங்களை உண்ட பின் நீங்கள் மந்தமாகவோ அல்லது அஜீரணமாகவோ உணர்ந்தால், நன்றாக நீராவியில் வேக வைத்த உருளைக்கிழங்கு மற்றும் சிறிதளவு நெய்யை முளைகட்டிய பயிருடன் சேர்த்துக் கொள்ளலாம்.

English Version

Do you know the benefits of eating sprouted lentils in the morning on an empty stomach?

All sprouted legumes are high in protein.

It is high in protein, carbohydrates, beta and carotene. Sprouted grains are high in antioxidants and provide much needed immunity to the body.

Even more, eating sprouted lentils on an empty stomach in the morning has many benefits for the body.

Here we will find out what are the benefits of taking grains in that way.

Incorporating sprouted grains in the diet will improve your immunity.

Those who want to get healthy skin can take sprouted grains.

When we eat sprouted grains, it helps in your digestive power. The fiber in it lightens the stool and helps it to move quickly through the intestines. This can reduce the risk of constipation. It is also good for intestinal health.

If you feel sluggish or indigestible after eating sprouted crops or grains, you can add well-steamed potatoes and a little ghee to the sprouted crop.

மன அழுத்தத்தை குறைக்க 9 எளிய வழிகள் Remedies for Stress mental pressure relief



1. Have a laugh  

ஒவ்வொரு முறை நாம் சத்தமாக சிரிக்கும் போது, அதிகப்படியான ஆக்சிஜன் நம் உடல் உறுப்புகளுக்கு சென்று வரும். இதனால் ரத்த ஓட்டம் அதிகமாகி, மன அழுத்தம் தானாகவே குறைந்துவிடும்.


2. Spend time with your pet

நம் வீட்டில் உள்ள விலங்குகளுடன் நேரம் செலவிடும் போது, நம் உடலில் இருந்து நல்ல ஹார்மோன்களான செரடோனின் மற்றும் ப்ரோலேக்டின் ஆகியவை சீராக வெளியேறுகின்றன. இவை மன அழுத்தம் ஏற்படும் சூழலை குறைக்கின்றன.


3. Get rid of the clutter


நாம் வசிக்கும் இடங்களை சுத்தமாக வைத்து கொள்வது அவசியம். அதேபோல் சுற்றி இருக்கும் பொருட்களை ஒழுங்காக பராமரித்து வைத்திருக்க வேண்டும்.


4. Do the housework


வீட்டில் இருக்கும் போது, உங்களுக்கு பிடித்தமான இசை அல்லது டிவி நிகழ்ச்சியை ஒளிபரப்பிக் கொள்ளவும். இதையடுத்து வீட்டில் செய்ய வேண்டிய நமக்கு பிடித்தமான வேலைகளை செய்யலாம். அவ்வாறு செய்யும் போது, உடலில் உள்ள கலோரிகள் எரிவதுடன், சோர்வடையாமல் நீண்ட நேரம் வேலை செய்ய முடியும்.


5. Drink juices


ஆரஞ்சு பழச்சாறு குடிப்பதன் மூலம் மன அழுத்தத்தை வெகுவாக குறைத்து, உடலை திறம்பட செயல்பட வைக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.


6. Sing out loud


ரேடியோவை ஆன் செய்து, அதோடு சேர்ந்து பிடித்தமான பாடலை வாய் விட்டு பாடலாம். இதனால் மன மகிழ்ச்சி ஏற்படுவதுடன், மன அழுத்தமும் குறையும்.


7. Go for a walk


மன அழுத்தத்தை குறைக்க மிக முக்கியமான வழி உடற்பயிற்சி. இதன் மூலம் எண்டார்பின்கள் சுரந்து, புத்துணர்வை அளிக்கின்றன.


8. Breathe deeply


இயற்கையான சூழலுக்கு சென்று, ஆழ்ந்த சுவாசத்தை மேற் கொண்டால் மன அழுத்தம் குறையும். இதனால் ரத்தத்தில் ஆக்சிஜன் கலந்து, அமைதி கிடைக்க வழிவகுக்கும்.

4 ம் நாளுக்கான உணவு 4th day natural healthy food

 அனைவருக்கும் வணக்கம் 🙏


காலை


வெண்பூசணி ஜூஸ்


வெண்பூசணி யை நன்றாக அலசிட்டு தோல் விதை உட்பட அனைத்தையும் அரைச்சு வடிகட்டி குடிக்கவும்....


எரிச்சலுடன் கூடிய தோல் வியாதி தீரும்


Detox water 11 am


புதினா 25 இலைகள், எலுமிச்சை 1, வெள்ளரிக்காய் 1( நறுக்கி போடவும்)


மதியம்


தேங்காய் பால் + அவல் கலவை


மாலை


கேரட் துருவல் , பொடித்த வேர்கடைலை, தேங்காய் துருவல், அனைத்தும் சம அளவு ....தேவைக்கு வெல்லம் சேர்த்து உருண்டைபிடிக்கவும்


இரவு 


பழங்கள்


* செவ்வாய்கிழமை பெண்கள் எண்ணெய் தேய்த்து குளிக்கவும்


 *எண்ணெய் தேய்த்து குளிப்பவர்களுங்கு இந்த இயற்கை உணவு வேண்டாம் , சமைத்த உணவு சாப்பிடவும்..

3 ம் நாளுக்கான உணவு 3rd day healthy natural foods

அனைவருக்கும் வணக்கம் 🙏


3 ம் நாளுக்கான உணவு....


காலை


கொத்தவரங்காய் ஜூஸ்


கொத்தவரங்காய் 4, தேங்காய் சில் 1, மிளகு, சீரகம், ஒரு சிட்டிகை உப்பு...அரைத்து வடிகட்டி குடிக்கவும்


11 மணிக்கு


Detox water


கேரட் 1 ( நறுக்கியது ),  புதினா 25 இலைகள், சோம்பு 1 ஸ்பூன்....3 மணிநேரம் 1/1/2 லிட்டர் தண்ணீரில் ஊறவைத்து குடிக்கவும்


மதியம்


நவரத்னா அவல் கலவை


வெள்ளை அவல், அலசி மூழ்கும் அளவு தேங்காய்ப்பால் ஊற்றி சிறிது நேரம் ஆனதும், மாதுளை, உலர் பழங்கள், விதைகள், கலந்து உண்ணவும்


மாலை


வாழைப்பழ பேடா


வாழைப்பழத்தை வட்ட வட்டமாக நறுக்கி அதன்மேல் தேங்காய் துருவல், வெல்லம் தூவி சாப்பிடவும்


இரவு 


பழங்கள்


கொத்தவரங்காய்

*கொத்தவரங்காய் நரம்பு பலப்படும்

* சிரங்கு, வேர்கூரு குணமாகும்

* கட்டிகள், கொப்பளங்கள் சரியாகும்

* பூச்சிக்கடியால் வரும் அலர்ஜி சரியாகும்

* நரம்பில் ரத்த ஓட்டத்தை அதிகபடுத்தும்

* சூட்டினால் வரும் கொப்பளங்கள், கட்டிகள் குணமாகும்

2 ம் நாள் இயற்கை உணவு 2nd day natural food list and tips

அனைவருக்கும் வணக்கம் 🙏

கத்தரிக்காய் ஜூஸ்


கத்தரிக்காய் 1 ( சிறிது )...மிக்ஸியில் அரைச்சு வடிகட்டி குடிக்கவும் (ஒரு நபருக்கு )...


கருப்பு நிற தோல்  நோய் தீரும், மங்கு, கண் கருவளையம், நாள்பட்ட பருக்கள்.....


மதியம் 


தக்காளி அவல் சாதம்....


தேங்காய் பாலில் ஊறவைத்த அவல் ஒரு கப், அதில் பொடியாக நறுக்கிய ஒரு தக்காளி, சுவைக்கு ஒரு சிட்டிகை உப்பு, சீரகத்தூள், மிளகுதூள் ஒரு சிட்டிகை, பொடியா நறுக்கிய கறிவேப்பிலை, மல்லி இலை.....


மாலை (5 மணிக்குள்)


Detox water...


கேரட் 1, கறிவேப்பிலை ஒரு கைப்பிடி, எலுமிச்சை 1....

👆 3 மணிநேரம் 1 1/2 லிட்டர் நீர் ஊற்றி ஊறவைத்து...அடுத்த ஒரு மணிநேரத்தில் குடிச்சு முடிக்கனும்....


இரவு


கொய்யாபழம்



* கத்தரிக்காய் தோல் நோய்க்கான, அதுவும் கருமைநிற தோல் நோய்க்கான மருந்து, தொடர்ந்து குடிக்க மறையும்....


* தேங்காய் பால் நரம்புகளுக்கு பலம் கொடுக்கும்


Detox water....இது ஒரு வகை கழிவு நீக்கம்....சோரியாசிஸ் நோய் குணமாகும், ஜீரணசக்தி கூடும், நெஞ்செரிச்சல் சரியாகும்.....

இரண்டு நாள் இயற்கைவாழ்வியல் பயணம் Two days natural way of life

அனைவருக்கும் வணக்கம் 🙏

*அதிகாலை அலாரம் இல்லாமல் கண்விழிப்பு
* 3 டம்ளர் தண்ணீர் குடிப்பது
* தடாசணம்
* காலைகடன்
* மூலிகை பல்பொடி வைத்து பல் விலக்குதல்
* பித்த நீர் கழிவு நீக்கம்
* கண் கழுவுதல்
* தலைக்குளியல்
* உடல் பயிற்சிகள்
* பஞ்சபூத சக்தி வணக்கம்
* சூரியனை வணங்குதல்
* உமிழ்நீரோடு உணவை மென்று முழுங்குதல்
* கண்பயிற்சிகள்
* இரவு தூங்கும்முன் பயிற்சி

( இவைகள் தினமும் தொடரவும் 👆 )

மேலும் ....

* வாரம் இருமுறை எண்ணெய் குளியல்
* மாதம் ஒரு முறை இரைப்பை சுத்தம்
* வாரம் 3 முறை மூக்கு கழுவுதல்
* மாதம் ஒரு முறை நீர்தாரா
* 3 மாதத்திற்கு ஒரு முறை குடல் சுத்தம்
* 6 மாதத்திற்கு ஒரு முறை மண் குளியல்
* வாரம் ஒரு முறை 16 மணிநேர விரதம்

இந்த பயிற்சிகள் எல்லாம் உங்களுக்கு சொல்லியாச்சு தொடர்ந்து செய்ங்க, தொடர்ந்து செய்யும் போது நீங்க ஒரு பயிற்சியாளராக ஆகமுடியும்,

 நாம் உணர்ந்து செய்யும்போதுதான் மற்றவர்களுக்கு சொல்லமுடியும், 

மருந்தில்லா, செலவில்லா எளிமையான மருத்துவ முறை இது, கழிவுகளின் தேக்கம் தான் நோய், அவைகளை வெளியேற்ற இவ்வளவு வழி நம் முன்னோர் சொல்லிவைச்சிருக்காங்க, அதை தொடர்ந்து செய்வோம் பலன்பெறுவோம்....நம்மோடு 100 பேர் நின்றாலும் நாம் ஆரோக்கியமாக இருந்தால் தனித்து தெரிவோம், ஒரு ஒளிவட்டம் நம்மைசுற்றி இருக்கும்...நம்ம குழு நண்பர்களிடம் அதை நிறையவே பார்க்கிறேன்.....நன்றி....

வாழை இலை குளியல் ( தோல் கழிவு நீக்கம் ) அடுத்தமாதம் ஒரு நாள் செய்முறை விளக்கங்களுடன் சொல்கிறேன்,

மிளகு கற்பம் Pepper formula

 மிளகு கற்பம்.      

மிளகு கற்பம் எடுத்துக்கொள்ள தகுதியானவர்கள் பேதி மருந்து எடுத்து உடல் சுத்தம் செய்து இருக்க வேண்டும். இரண்டு நாள் இடைவெளிக்கு பின் காலை 5.30 எழுந்து பல்துலக்கிய பின் 300 to 400 ml வெண்ணீர் வாய் வைத்து சப்பி குடிக்க வேண்டும். பின் காலை கடன்களை முடித்தபின் வெண்ணீர் குடித்த மணியில் இருந்து 45 நிமிடம் கழித்து முதல் நாள்  ஒரு மிளகு, சிறிது மலைதேன் அல்லது கலப்படம் இல்லாத பனை வெல்லம் சிறிது சேர்த்து மென்று உண்ண வேண்டும்.

ஒவ்வொரு நாளும் ஒரு  மிளகு கூட்டி உண்ணவேண்டும்.  24 வது நாள் 24 மிளகு 25வது நாள் 24 மிளகு உண்ணவேண்டும். பின் ஒரு ஒரு மிளகாக குறைத்து 48 வது நாள் ஒரு மிளகுடன் கற்பம் முடிக்கவேண்டும். மிளகு கற்பம் எடுத்துக்கொள்ளும் காலத்தில் புலால் உணவு உண்ண கூடாது. மேலும் ஊறுகாய், பொறித்த உணவுகள் , அவரைக்காய், கொத்தவரங்காய், கத்தரிக்காய் அளவு குறைத்து உண்ண வேண்டும். 

மோர் தேவையான அளவு குடிக்க வேண்டும். உடல் சூடு அதிகமாக உணர்பவர்கள் இளநீர், மாதுளை, தேவையான அளவு எடுத்துக்கொள்ள வேண்டும்.கீரை உணவு அதிகம் சாப்படவேண்டும.வல்லாரை கீரை எடுத்துகொள்வது பலனை கூட்டி தரும்.  தாய்மார்கள் ஓய்வு நாட்களிலும் மிளகு கற்பம் எடுத்துக்கொள்ளலாம். 

ஆண்கள் மது, புகை பான்பராக் பழக்கம் உள்ளவர்கள் அந்த பழக்கத்தை நிறுத்திய பின் அருகம்புல் சாறு ஒரு மண்டலம் எடுத்துக்கொள்ள வேண்டும். இதோடு மூன்று நாட்கள் கீழ்காய் நெல்லி சாறு, வில்வ சாறு , மணத்தக்காளி சாறு எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பின்புதான் மிளகு கற்பம் எடுத்துக்கொள்ள தகுதியானவர்கள் ஆவார்கள். இந்த முறையில் மிளகு கற்பம் எடுத்துக்கொள்பவரகள் முழு பலரையும் பெறலாம்.

மிளகு கற்பம்

திரு. தங்கபாண்டியன் ஐயாவின் பதிவு....

அனைவரும் இதை செய்யவேண்டும் என வேண்டி கேட்டுக்கொள்கிறேன், எளிமையான இன்றைய தேவைக்கு ஏற்ற மருந்து 👆

12 காய்கறிகளை கொண்டு அனைத்து நோய்களையும் குணப்படுத்தமுடியும் vegetables to cure diseases Food is Medicine

 Kidney Failure : கத்திரிக்காய்

Paralysis : கொத்தவரங்காய்

Insomnia : புடலங்காய்

Hernia : அரசாணிக்காய்

Cholesterol : கோவைக்காய்

Asthma : முருங்கைக்காய் 

Diabetes : பீர்கங்காய்

Arthritis : தேங்காய்

Thyroid : எலுமிச்சை

High BP : வெண்டைக்காய்

Heart Failure : வாழைக்காய்

Cancer : வெண்பூசணிக்காய்


உணவு பழக்கம்" பழமொழி வடிவில்🎀*


💎காட்டுலே புலியும் , வீட்டுலே புளியும் ஆளைக் கொல்லும்.

💎போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே💚

💎பொங்குற காலத்தில் புளி.. மங்குற காலம் மாங்கா💚

💎சீரகம் இல்லா உணவும் , சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது.💚

💎 எண்னை குடத்தை சுற்றிய எறும்பு போல💚

💎 தன் காயம் காக்க வெங்காயம் போதும்💚

💎வாழை வாழ வைக்கும்💚

💎அவசர சோறு ஆபத்து💚

💎ஆறிய உணவு மூட்டு வலி உண்டாக்கும்💚

💎இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு💚

💎ரத்த கொதிப்புக்கு அகத்திக் கீரை💚

💎இருமலை போக்கும் வெந்தயக் கீரை💚

💎உஷ்ணம் தவிர்க்க கம்பங் களி💚

💎கல்லீரல் பலம் பெற கொய்யாப் பழம்💚

💎குடல் புண் நலம் பெற அகத்திக்கீரை💚

💎கொலஸ்ட்ரால் குறைக்க பன்னீர் திராச்சை💚

💎சித்தம் தெளிய வில்வம்💚

💎 சிறுநீர் கடுப்புக்கு அன்னாசி💚

💎சூட்டை தணிக்க கருணை கிழங்கு💚

💎ஜீரண சக்திக்கு சுண்டக்காய்💚

💎தலை வலி நீங்க முள்ளங்கி சாறு💚

💎தேனுடன் இஞ்சி ரத்தத் தூய்மை💚

💎பூண்டில் இருக்கு பென்சிலின் சக்தி💚

💎மூல நோய் தீர வாழைப்பூ கூட்டு💚

💎வாந்திக்கு மருந்து மணத்தக்காளி💚

💎வாத நோய் தடுக்க அரைக் கீரை💚

💎வாய் துர்நாற்றம் தீர்க்க ஏலக்காய்💚

💎பருமன் குறைய முட்டைக்கோஸ்💚

💎பித்தம் தணிக்க நெல்லிக்காய்💚


உணவு மருந்தாக இருக்க வேண்டும் இல்லாவிட்டால் மருந்தே நமக்கு உணவாகும் நிலைமை உருவாகும்”💚


*🎀நலம் உடன் வாழ்வோம்...

பகிர்வு / பாசில்

நாளைய கழிவு நீக்கங்கள் Clean your body part internally to live healthy

 அனைவருக்கும் வணக்கம் 🙏


நாளைய கழிவு நீக்கங்கள்


காது கழிவு


காதின் வழியே கெட்ட காற்று வெளியேறும், சூடு வெளியேறும்....மாதம் ஒரு முறை லேசான துண்டை முனையில் சுருட்டி லேசா அதில் உள்ள கழிவுகளை எடுக்கலாம்....


வெள்ளைபூண்டு தோல் உரித்து காதில் வைக்கனும் ( உள்ளே போய்விடாதபடி பெரிய பல் பூண்டு எடுத்துக்கோங்க ) 5 நிமிடம் வைத்தால் போதும், மாதம் ஒரு முறை செய்யனும்....( head set மாட்டுவதுபோல் இருக்கனும் )...உள்ளே போயிடாம பார்துக்கோங்க 🙏


பித்தநீர் கழிவு


காலையில் பல் விலக்கிவிட்டு இரண்டுவிரல் விட்டு உள்நாக்கு தொட்டு குமட்டவும், இரண்டுமுறை, பித்தம் இருந்தால் பச்சையாக, புளிப்பாக வெளியே வந்துடும், வரலனாலும் பரவாயில்லை, 


பயன்கள்

தலைவலி

வாந்தி

நெஞ்செரிச்சல்

ஜீரணமின்மை

வயிறுசம்மந்தமான நோய் நீக்கும்


தலைக்கழிவு


* முருங்கையிலை, மஞ்சள், நொச்சி இலை, வேப்பிலை, துளசி, தைல இலை, இப்படி எந்த இலை கிடைக்கிறதோ அதை வைத்து ஆவி கட்டவும் ...தலையில் இருக்கும் கெட்ட நீர் வெளியேறும் 


* மூச்சுபயிற்சி தினமும் செய்யவும் (30 நாள் )...link அனுப்புகிறேன்...இரண்டுநாள் அதை பார்த்து கற்றுக்கொண்டு நீங்களே உங்களுக்கு தோதான நேரத்தில் செய்யலாம்


நீர்தாரா


பெண்களுக்கானது, இதை மாதம் ஒரு முறை மாதவிலக்கு முடிந்ததும் செய்யலாம், எனிமா கேனிலேயே இதை செய்வதற்கான உபகரணம் சேர்த்து கிடைக்கும்....இதற்கான விளக்கமான link அனுப்புகிறேன்....அதில் மிக தெளிவான பதிவு இருக்கும்.... பார்துட்டு.. செய்யனும் என நினைக்கும் பெண்கள் சந்தேகம் இருந்தால் தனிபதிவில் கேளுங்க, சொல்கிறேன்...



பயன்கள்


* நீர்கட்டியை கரைத்து கழிவாக வெளியேற்றும்

* கர்பப்பை புண் ஆறும்

* கர்பப்பை கேன்சர் போன்ற நோய்கள் வருவதை தடுக்கலாம்



நீர்தாரா செய்யகூடாத நபர்கள்


1 கர்பப்பை பை எடுத்தவங்க செய்யகூடாது

2 மாசமா இருக்கறவங்க செய்யவேண்டாம்

3 திருமணமாகாத பெண்கள் செய்யவேண்டாம்

4 குழந்தைக்கு காத்திருப்பவர்கள் காலை மாலை செய்யலாம், இரவு வேண்டாம்



இந்த பதிவுகளோடு கழிவு நீக்கம் முடிந்தது 🙏🤝👍💐

கண் கழிவு நீக்கும் முறை Eye cleaning technique

 கண் கழிவு நீக்கும் முறை


கண் குவலை வைச்சு நாளைக்கு இரு முறை காலை மாலை கண்கழுவலாம்.....



பயன்கள்


*கண்களில் உள்ள தூசிகள் நீக்கும்

*அழுக்குகளை நீக்கும்

* வெப்பம் குறைக்கும்

*கண்ணுக்கு பிராண சக்தி கிடைக்கும்

* கண்பார்வை தெளிவாகும்


செய்யும் முறை


மருந்தில்லா தண்ணீர் எடுத்துக்கோங்க, கண்குவலையில் ஊற்றி லேசா குனிந்து தண்ணீரில் கண் வைச்சு முழித்து பின் கண்களை மூடவும்....


கண்குவலை கிடைக்காதவங்க இரவே திறந்தவெளியில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி துணி கட்டி வைச்சிடுங்க, காலையில் அந்த தண்ணீரை ஒரு அகலமான பாத்திரத்தில் ஊற்றி அதில் முகத்தை வைத்து கண்களை திறந்து பார்க்கவும், பாத்திரத்தில் முகம் வைக்கும்போது நாக்கு வெளியே இருக்கனும்....( இந்த பயிற்சி காலை ஒரு முறை போதும்)

நந்தியாவட்டை பூக்கள் இட்ட குளிரிந்த நீரும் கண் குவளையும்.... பயிற்சி இனிதே முடிந்தது...







1 கண் இடது வலது பார்க்கனும், இடது போகும்போது மூச்சை உள்ளே லேசா இழுத்து  வலது வரும் போது விடனும்..  

2 மேலே கீழே பார்ப்பது ( மேலே போகும்போது மூச்சை எடுத்து கீழே வரும்போது விடனும் )

3 வட்டம் போடுவது ( ஒருவட்டம் வரும்போது மூச்சை எடுத்து திரும்ப வந்த இடத்திற்கு போகும்போது மூச்சை விடனும் )

4. கண்களை இறுக மூடி திறப்பது ( மூடும்போது உள்ளே  இழுத்து திறக்கும் போது மூச்சை வெளியே வினும் )

5. பக்கவாட்டில் பார்ப்பது ( மூச்சை இழுத்து மறுபக்கம் வரும்போது விடனும் ) 

6. நெற்றிக்கண்ணில் விரல் வைத்து இரு கண்களும் மூக்கை பார்க்கனும் ( மூச்சை இழுத்து மறுபக்கம் வரும்போது விடனும் )

இந்த பயிற்சியை இன்று மாலை ஒரு முறை செய்ங்க, நாளை முதல் தொடர்ந்து தினமும் செய்ங்க....

ஆண்கள் எண்ணெய் குளியல் செய்யலாம் பெண்கள் மூக்கு கழுவும் பயிற்சி செய்யலாம் Activities for Day 3 and clarification on queries raised on first two days

 அனைவருக்கும் வணக்கம் 🙏


*நாளை( சனிகிழமை ) ஆண்கள் எண்ணெய் குளியல் செய்யலாம் ( சனிகிழமை, புதன்கிழமை )


* நாளை (சனிகிழமை ) பெண்கள் மூக்கு கழுவும் பயிற்சி செய்யலாம்

கடந்த இரண்டுநாள் பயிற்சியில் 55 நபர்கள் பங்கெடுத்திருக்கீங்க, மிகவும் மகிழ்ச்சி, இயற்கை வாழ்வியலுக்கு வருவது கொஞ்சம் தயக்கமா இருக்கும், செய்துபார்துட்டா உங்க உடம்பு நீங்க சொல்றத கேட்கும், 


இந்த இரண்டுநாளில் குழுவில் வந்த கேள்விகள் சந்தேகங்களுக்கான பதில்கள்...


* இரைப்பை கழிவு நீக்கம் ஒரு நாள் போதும்,  


* ஒவ்வொரு உடலும் ஒரு மாதிரி இருக்கும், முதல்ல தெரிஞ்சிக்கோங்க, மாதம் ஒரு முறை செய்ங்க, அடுத்து வாரம் ஒரு முறை இப்படி செய்யலாம், தொண்டை மென்மையான பகுதி, யாராவது தொடர்ந்து 10 நாள் செய்யறதா இருந்தா, தனிபதிவில் எனக்கு தகவல் கொடுத்துடுங்க...


* உப்பு தண்ணி குடிச்சதும் தானா வாந்தி வரும், வரலனா லேசா மேலண்ணம் தொட்டா போதும்னு சொன்னேன், ரொம்ப கைவிட்டு கஷ்டபடகூடாது, வரலனாலும் பரவாயில்லை, மலமா வந்துடும்...


* இரைப்பை சுத்தம் செய்த அன்று எண்ணெய்குளியல் செய்ய கூடாது...ஏன் என்றால் இரைப்பை சுத்தம் செய்ததும் குடல், இரைப்பை சுத்தம் அடைந்து குளிர்ச்சியா இருக்கும்......


பொதுவா பேதி ஆகும்போது குளிக்ககூடாது, 


* எண்ணெய் குளியல் காலை 6 மணிக்கு மேல் தான் செய்யனும்...

இரைப்பை சுத்தம் | 30 நாள் ஆரோக்கிய பயணம் | இயற்கை வாழ்வியல் பயணத்தை செய்யலாம் Perfect Health in Natural Way | Organic health tips

 இரைப்பை சுத்தம்

8 டம்ளர் நீர் ( 1 1/2 லிட்டர் )... மிதமான குடிக்கும் அளவு சூடு ( warm water ), அதில் 1 டம்ளர் நீர் எடுத்து 2 1/2 ஸ்பூன் இந்துப்பு நன்றாக கலந்து, மொத்த நீரில் கலக்கவும், 


அந்த நீரை சுவைத்துபார்த்தால் நம் கண்ணீரில் உள்ள உப்பின் சுவை இருக்கவேண்டும், அதிக உப்பாக இருந்தால் கூடுதல் நீர் சேர்க்கலாம், ஒவ்வொரு டம்ளராக குடிக்கவும், குடித்து முடித்து பெருவிரலை வைத்து லேசா வாயில் மேலண்ணத்தில் தொட்டால் வாந்தியாக அனைத்து கழிவுகளும் வரும், இரண்டு டம்ளர் குடித்ததும் வாந்தி வந்தாலும் எடுக்கலாம், இதை செய்யும் நேரம் 5 முதல் 7 மணிக்குள் இருப்பது நல்லது, இந்த நேரம் உடல் கழிவுகள் நீக்கும் நேரமாகும், 


எந்த வித பக்கவிளைவும் இல்லாத கழிவு நீக்க இது, இதை தொடர்ந்து 10 நாள் செய்துவர 5 கிலோ எடை குறைக்கலாம் ( எடை குறைக்க நினைப்பவர்களுக்கு )....


இந்த கழிவுநீக்க முறையினால் தீரும் நோய்கள்


முடக்குவாதம்

மூட்டுவலி

நெஞ்செறிச்சல்

கட்டிகள் நீங்கும்

குடல் அலர்ஜி

அல்சர்


இந்த கழிவு நீக்க முறையை கர்ப்பமாக உள்ள பெண்கள் செய்யவேண்டாம், ஏன்னா அவங்களுக்கு இயற்கையாகவே இது நடக்கும்...முதல் மூன்று மாதம்...



இந்த கழிவுநீக்க பயிற்சியை அனைவரும் ( விருப்பம் உள்ளவர்கள் ) நாளை செய்யலாம்... அனைவரும் உங்கள் அனுபவங்கள், சந்தேகங்கள் பதிவு செய்யலாம், நன்றி 🙏

இந்த 30 நாள் பயிற்சிகள் அனைத்தும் நீங்க வெளியில் போய் படிச்சா 35,000 ஆகும், இதில் மண்குளியல் தனியா 1000 ரூபாய், வாழைஇலைகுளியல் 1000, மூக்குகழுவுதல், கண் கழுவுதல், எனிமா 1000 நாம அங்கேயே செய்துபார்க்கனுமுனு சொன்னா 1000 , பார்க்கமட்டும் 35,000.....


இங்க உங்களுக்கு இலவசமா கிடைக்கிறது, காரணம் நீங்க செய்துபார்த்து தெரிஞ்சிகிட்டா, ஒருத்தர் 1000 பேரை மாற்றலாம், 


இது மருந்தில்லா செலவில்லா மருத்துவம், அன்றாட வாழ்க்கை மாறினால் மருத்துவ செலவு அவசியமில்லை, புதுபுது நோய்களுக்கு என்றுமே பயப்படவேண்டாம்....


உங்க செளகர்யம் எப்படி னு பார்துக்கோங்க......


இயற்கை வாழ்வியல் பயணத்தை செய்யலாம் Perfect Health in Natural Way | Organic health tips

 அனைவருக்கும் வணக்கம் 🙏


நாளை முதல் நாம் எல்லோரும் இணைந்து இந்த இயற்கை வாழ்வியல் பயணத்தை செய்யலாம்.....செய்யமுடியாதளவு இந்த வாழ்வியல் கடினமான விஷயங்கள் இல்லை,


 ஒரு 50 வருடத்திற்கு முன் நம் முன்னோர் வாழ்ந்த வாழ்வியல் தான், அன்று மருத்துவர்கள் நம்மை தேடி வந்தார்கள், இன்று நாம் அவர்களை தேடி போகிறோம் ( வரவைக்கிறார்கள் ).....இந்த 30 நாள் பயணம் நிச்சயமா  மாற்றம் கொடுக்கும், 


 கழிவு நீக்கம்....


இதைபற்றி கொஞ்சம் பேசலாம்....தினமும் பல் விலக்கி, மலம் நீக்கி, குளித்தால் இன்று உடல் கழிவுகளை போயிடுச்சு என நினைக்கிறோம், ஆனால் முழுமை இல்லை என்கிறது இயற்கை வாழ்வியல்....


உடல் கழிவுகள்


கண் கழிவுகள்

மூக்கு கழிவு

வாய் கழிவு

சிறுநீர்

மலம்

வியர்வை

காதுகழிவு

மூச்சுகாற்று ( வெளிமூச்சு )

சளி

பித்தநீர்

தும்மல்

தலைகழிவு ( கெட்டநீர் )

இரைப்பை கழிவு

நீர்தாரா.... ( பெண்கள் )


இவையெல்லாம் கழிவு நீக்கங்கள், இதைபற்றி நாம் இந்த 5 நாட்களில் பார்க்கப்போகிறோம்......

ஏன் கழிவுநீக்கம்?

நம் முன்னோர்கள் வாழ்வில் கழிவுநீக்கம் அன்றாட வாழ்வியல், ஆனால் இன்று அதை நாம் நமக்கு தேவையானபடி மாற்றிவிட்டோம்,.....

கழிவுகளின் தேக்கம் பல நோய்களுக்கு காரணமாகிறது, கழிவு நீக்கம் சரியா இருந்தா இனிவரும் புதுபுது நோய்களுக்கு பயப்படாம எதிர்த்து நிற்கலாம், உடலும் குடலும் சுத்தமா இருந்தால் மனம் சுத்தமாகும், மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.....

முதலில் நாம் நாளை செய்யபோவது இரைப்பை சுத்தம்

கழிவுகளின் தேக்கமே நோய்

கழிவு நீக்கமே ஆரோக்கியம்

30 நாள் ஆரோக்கிய பயணம்... perfect health in natural way

அனைவருக்கும் வணக்கம் 🙏


 30 நாள் ஆரோக்கிய பயணம்... ஜூலை 1 முதல் ஆரம்பமாகிறது. 30 நாள் பயிற்சி.


முதல் 5 நாள் கழிவு நீக்கம்


அடுத்த 2 நாள் இயற்கை வாழ்வியல்......


அடுத்த 3 நாள் தற்சார்பு வாழ்வியல் பொருட்கள் தயாரிப்பு.....


அடுத்த 10 நாள் இயற்கை உணவுகள்....


இறுதி 10 நாள் பாரம்பரிய உணவுகள் பற்றிய பயிற்சியும், செய்முறை விளக்கங்களும்.....

Introduction

Day 1 இரைப்பை சுத்தம் 


இப்படிக்கு 

  நிர்வாகம் சார்பாக

அஜிதா வீரபாண்டியன்


வீட்டில் விளைவித்த காய்கறி (home made organic) நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுகிறது என்பது தான் நிதர்சன உண்மை

 வீட்டில் விளைவித்த காய்கறிகளை 2010லிருந்து பயன்படுத்தி வந்ததால் இரத்த அழுத்தத்திலிருந்து மீண்டு வந்துள்ளேன்.


16 மாத்திரையில் ஆரம்பித்து 3 மாத்திரை ஆனது. கடந்த நான்கு வருடங்களாக மாத்திரை எதுவும் எடுத்துக் கொள்ளவதில்லை. காரணம் மாத்திரைகள் எடுத்தும் தீராத சின்ன சின்ன பிரச்சனைகள் வீட்டில் விளைந்த கீரைகள் தீர்த்து வைத்தது.


அனுதினமும் கீரைகள் மாற்றி மாற்றி கலாவாங் கீரை சூப் ஒரு கப் வீட்டிற்கு பணிக்கு வரும் அம்மையார் முதல் அனைவரும் பருகி வருகிறோம்.


பயன்படுத்தி ஒரு வாரத்தில் உடல் ஆரோக்கியமாக இருப்பதை உணர்கிறேன் என்று கூறினார் பணி மகள்.


நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுகிறது என்பது தான் நிதர்சன உண்மை.

பல் சம்மந்தமான பிரச்சனைகள் அனைத்தும் தீர எளிய மூலிகைபல்பொடி For all dental problems simple herbal toothpaste

 பல் சம்மந்தமான பிரச்சனைகள் அனைத்தும் தீர  எளிய  மூலிகைபல்பொடி



 தயாரிக்கும் முறை :-

🌿🍃🍀☘️🥗🌳☘️🍀🍃🌿


 பல்பொடி தயாரிக்க😁


 தேவையான பொருட்கள் :-


கிராம்பு பொடி                - 25 கிராம்

கடுக்காய்  பொடி           - 40

 கிராம்

ஆலம் பட்டை பொடி.    - 25

அக்ரகாரம் பொடி          -10 கிராம்

நாயுருவி வேர் பொடி  - 25 கிராம்

கல் உப்பு பொடி              - 10 கிராம்


இந்த பொருட்கள் அனைத்தும் நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும் . இந்த மூலிகைகளை பற்றி 1 நிமிடம் பார்த்த பின்பு பல்பொடி தயாரிக்கும் முறை பற்றி பார்ப்போம்..


1 . கிராம்பு -


பற்றி அனைவருக்கும் தெரியும் ..பல்வலியை சரிசெய்து பற்களில் உள்ள கிருமிகளை அழிக்கும்.


2 . கடுக்காய் -


 அந்த காலத்தில் நம் முன்னோர்கள் கடுக்காய் பயன்படுத்தி தான் பெரிய பெரிய கட்டிடங்களை கட்டினார்கள் ..கடுக்காய் சேர்த்து கட்டப்பட்ட கட்டிடம் அவ்வளவு எளிதில் உடைபடாதாம்..கடுக்காய் வைத்து பல் துலக்க பல் வலிமை பெறும்.


3 . அக்ரகாரம் -


 அக்ரகாரம் வைத்து பல் துலக்க ஆடின பல் கூட ஆடாமல் நிற்கும் என்று சித்தர்கள் கூறுகிறார்கள் . மேலும் அக்ரகாரம் நம் உடலில் உள்ள நரம்பு களையும் வலுபடுத்த கூடியது ..அதுமட்டுமல்லாமல் பல் வலியையும் சரிசெய்ய கூடியது..


4. ஆலம்பட்டை


ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி என்பது மூத்தோர் வாக்கு. ஆலமரப்பட்டை பற்களின் இறுகளை பலப்படுத்தும்.


5 . நாயுருவி வேர் -


 நாயுருவி பற்றி நாம் பல பதிவுகளில் பார்த்து உள்ளோம்.. நாயுருவி வேர் பற்களால் கடித்து பல் முழுவதும் பட்ட உடனே ஓரு சிறு கல்லை எடுத்து கடிக்க அந்த கல் உடைபடும் .. அந்த அளவுக்கு பற்களை உடனே வலுபடு்ததும் சக்தி இந்த நாயுருவிக்கு உண்டு.

முகவசீகரம் தன்மை அதிகரிக்கும்.


6. இந்துப்பு -


இந்துப்பு பற்றி தெரியாத நபர்களே கிடையாது . நம் முன்னோர்கள் உப்பை பயன்படுத்தி தான் பற்களை துலக்கினார்கள் ...


செய்முறை :-😀

ஆறு பொருட்களில் உப்பை மட்டும் தனியாக பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள் ... மற்ற மூலிகைகளை மேற்கூறிய அளவுகளில் கலந்து ஓரு கண்ணாடி பாட்டலில் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள் ..காலை எழுந்தவுடன் இந்த பற்பொடியை சிறிது எடுத்து  பல் துலக்க ஆரம்பியுங்கள் ...

வாயில் தான் துவங்குது நம்ம ஆரோக்கியம்... தோழமைகளே...


ருதம்பரா யோகா கோவை🍁

கோணிபுளியங்காய் / கொடுக்காபுளி/ சீனிப்புளியங்காய் 90's Kids favorite fruit

 கோணிபுளியங்காய்

🌿🙏🌸🌼🍁🥒🥗🍉🥭🌿


30 ஆண்டுகளுக்கு முன் இந்த சுவையை உணரா நபர்கள் இல்லை...துவர்ப்பு இனிப்பு புளிப்பு கலந்த அற்புத சுவை....😋😋😋

ஆப்பிளை விட அதிக விலை கொடுக்காபுளி எனப்படும் சீனிப்புளியங்காய்

கோவை பெரியகடை வீதியில் மூலிகைகடைக்கு செல்லும் வழியில் இதை பார்த்ததும் வாங்கும் ஆசையில் விலையை கேட்டேன் கிலோ 250 ரூபாய் எனக்கூறினர். கலிபோர்னியாவின்

ஆப்பில்170.ருபாய் தான் .


🍋கிராமங்களில் பரவிகிடக்கும் இந்த மரம் இன்று நகரங்களில் எட்டா கனியாக இருக்கிறது.


👌ஆயுர்வேதத்தில் கொடுக்கா புளியின் மருத்துவ குணங்கள் நன்கு அறியப்பட்டு பரிந்துரைக்கப் படுகிறது.


🍅செரிமானம் மேம்படுத்தவும், கீல்வாதம் மற்றும் சில கருப்பை நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இது புண்களை குணப்படுத்தும்.


🍁வாத நோய் மற்றும் மூட்டு வலிக்கு மருந்தாகக் கொடுக்கப்பட்டுள்ளது. 


🌸நீண்ட நாள் நோய்வாய் பட்டு சரியானதும் உடல் சூட்டில் பேதி ஆகாமல் இருக்க கொடுக்காபுளி தரப்படுகிறது. இது ஒரு சிறிய புளிப்பான பழம். 


🍒உடல் எடை குறைய மிகவும் அற்புதமான மருந்தாக ஆயுர்வேதம் மற்றும் நாட்டுப்புற மருத்துவம் பரிந்துரைக்கிறது. 


🌿குடல் அழற்சி, கல்லீரல் பெருங்குடல் தொடர்பான எந்த பிரச்சனைக்கும் இது நல்ல மருந்து.


இயற்கை வாழ்வியல் வழி பயணிப்போம்....


🍁பதஞ்சலிஈஸ்வரன்

ருதம்பராயோகாகோவை

ஜில் ஜில் கூல் மண்ணில் பிரிட்ஜ். Fridge made of clay

 ஜில் ஜில் கூல்

மண்ணில் பிரிட்ஜ்...

🌿🌳👏🙏👌🌼👆🧊💧


இனி ஓசோனையும்,மனித உறுப்புகளையும ஓட்டை போடும் எலெக்ட்ரிக் பிரிட்ஜ் இனி தேவை இல்லை...மின்சார கட்டணமும் மிச்சம்.


மண்பானை தொழில் செய்வோர் கால மாற்ற நிலையை கண்டு நம் நிலையை சற்று மாற்றி அமைத்தல் அவசியம்.


1,500 ரூபாய் ஒரு பானை பிரிட்ஜில் 5 கிலோ வரை வைக்கலாம்


பலர் இப்போது மின்சாரத்தில் இயங்கி ஓசோனையும், மனித உறுப்புகளையும் நோய் தந்து ஓட்டை போடும் பிரிட்ஜ் உபயோகத்தை தற்சார்பு அறிவாளிகள் நிறுத்த தொடங்கி தற்போது உபயோகப் படுத்துவது இல்லை.


மண் பானை போலதான் !

பீன்ஸ், முட்டைக்கோஸ் தவிர மற்றவை எல்லாம் அப்படியே புதியதாக உள்ளது. 


தக்காளி + மிளகாய் 10 நாள்.


வெண்டைக்காய் + கருவேப்பிலை + தேங்காய் 12நாள்


சாலட் காய் கறிகள்

லெட்யூஸ், க்ரீன் பெப்பர், சோளம் 14 நாள்


இஞ்சி+பெல்லாரி+நாட்டு வெங்காயம் 2 மாதம்


உருளை+மரவள்ளி

3 மாதம்


கத்திரிக்காய்க்கு மட்டும் ஒரு பானை. 

16 நாள், அதன் பிறகு ஒன்று ஒன்றாக அழுகுகிறது.


பானை வாயை ஈரத்துணி போட்டு மூடி வையுங்கள்.


உடல் கெடாது.

மனம் கெடாது.



திருநீலகண்டர் ஸ்டோர்ஸ் மண்பொருள் விற்பனையகம் 

கருமத்தம்பட்டி கோயமுத்தூர்-641659

அலைபேசி

8015032612.


கோவையில்

சிங்காநல்லூரில்....

ருதம்பரா யோகா மையம்

அடுப்பில்லா சமையல் செய்து அசத்தும் NGR பள்ளி ஆசிரியர்கள்

அடுப்பில்லா சமையல் செய்து அசத்தும் NGR பள்ளி ஆசிரியர்கள் 🌿🙏🥥🍵🥗🌼🌸🌿🍅🥒🍋


              23.4.2021வெள்ளிக்கிழமை கோவை காமராஜர் சாலை, தியாகி NGR நினைவு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் பங்குபெற்ற அடுப்பில்லா சமையல் பயிலரங்கம் பள்ளியில் நடைபெற்றது. 


          மாணவ, மாணவியர் களுக்கான ஆரோக்கிய வாழ்வியலை கொண்டு செல்லவும் நமது பாரம்பரிய உணவுமுறை களையும் ஆரோக்கியம் தரும் அடுப்பில்லா சமையல் உணவுகளையும் நிகழ்வில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு பயிற்சியாக வழங்கப்பட்டது. 


      ஒவ்வொரு இல்லங் களிலும் அடுப்பில்லா உணவுகளை கொண்டு செல்ல ஆசிரியர்கள் மிக ஆர்வமுடன் கலந்து கொண்டனர். நல்ல தொரு நிகழ்வாக அமைந்தது.  20 வகையான இயற்கை உணவுகளை  செய்முறை பயிற்சியுடன் கற்றுத் தரப்பட்டது.  நன்றி🍁


நிகழ்வில் கற்றுதரப்பட்ட  மதிய உணவாக வழங்கப்பட்ட இயற்கை உணவு வகைகள்...


அருகம்புல் ஜுஸ்

லெமன்புதினா ஜுஸ்

முக்கனி சாலட்

வல்லாரை கீர்

எனர்ஜிலட்டு

நுங்கு பாயாசம்

வேர்க்கடலை சாலட்

வாழைப்பூ பொரியல்

பீட்ரூட் பேபிகார்ன் சாலட்

பூசணி வெள்ளரி பச்சடி

அரசாணிக்காய் ஊறுகாய்

கம்பு அவல்பொங்கல்

சிவப்பரிசி காரப்புட்டு

பூங்கார் இட்லி

பாசிபருப்பு வடை

தேங்காய் சாதம்

தூயமல்லி தயிர் சாதம்

மாப்பிள்ளை சம்பா ஸ்வீட்

சோள அவுல் பிரயாணி

கொடாம்புளி பானகம்


அன்னமே எண்ணம்🌿🙏

அன்னம் பரபிரம்மம்🌼👏


🍁ஶ்ரீபதஞ்சலி ஈஸ்வரன்.

ருதம்பரா பவுண்டேஷன் கோவை.

அழகான மண்பாண்டங்களும் அதன்பயன்களும் Benefits of earthen pots

 🌿🙏 *அழகான மண்பாண்டங்களும் அதன்பயன்களும்....


நம் பாரம்பரிய அடையாளங் களுள் ஒன்றான பொங்கல் கொண்டாட்டத்தில், புத்தாடை உடுத்தி, வாசலில் கோலமிட்டு,  புதிய மண் பானையில் பச்சரிசியால் பொங்கலிடுவது வழக்கம். இப்படிப் பொங்கல் திருநாள் மட்டுமல்ல...


   முந்தைய தலைமுறை வரை அன்றாடப் பயன் பாட்டில், மண்பாண்டங்கள் முக்கிய இடம் வகித்தன. ஆனால், இன்றைக்கு 'நாகரிகம்' என்ற பெயரில், அவற்றை யெல்லாம் மறந்து விட்டோம். 


               பொங்கலன்று கூட அலுமினியம், எவர்சில்வர், நான்ஸ்டிக் பாத்திரங்களில் கடமைக்காகப் பொங்கல் வைப்பதே பெரும் பாலும் நடக்கிறது.


       அண்மைக் காலமாக, மக்களிடையே பாரம்பர்ய உணவு வகைகள் மீதான ஆர்வம் அதிகரித்து வருகிறது. மண்பானையில் சாதம், மீன்குழம்பு, ஆப்பம், பணியாரம் எல்லாம் செய்கிறார்கள். இவற்றைச் சமைக்க அலுமினியம், காப்பர், எவர்சில்வர் பாத்திரங்களுக்குப் பதிலாக மண்பாண்டங் களையே பயன்படுத்து கிறார்கள்.


           ஹோட்டல்களிலும் மண்பாண்டங் களில் சமைத்துப் பரிமாறுவதை வாடிக்கை யாளர்கள் பெரிதும் விரும்புகின்றனர். 

உண்மையில், நம் பாரம்பரிய மண்பானைச் சமையலில் அப்படிஎன்னதான் இருக்கிறது? அதை நம் முந்தையத் தலை முறை கொண்டாட என்ன காரணம்?????...


"முன்பெல்லாம், நாம சமைக்கிற பாத்திரம் மட்டுமில்லாம, தண்ணீர் பாத்திரத்துல இருந்து சாப்பிடக்கூடிய தட்டு வரைக்கும் எல்லாமே மண் பாத்திரங்கள்தாம். இரும்பு, பித்தளை, வெண்கலம்னு என பல பாத்திரங்கள் வந்தாலும் அதை வாங்குற சக்தி இல்லாதவங்களுக்கு கையில கிடைச்ச மண்ணைப் பிசைஞ்சி செஞ்ச பாத்திரங்கள்தான் வரப்பிரசாதமா இருந்துச்சு. ஆனா, இந்த நாகரிக காலத்துல, கிராமங்கள்ல கூட மண் பானையில சமையல் செய்றது குறைஞ்சுபோச்சு. அலுமினியப் பாத்திரம், எவர்சில்வர் பாத்திரங்கள் தான் சமைக்கிறாங்க. 


மண்பானையில சமைச்சாத்தான் உணவோட உண்மையான ருசி தெரியும். அதை சாப்பிட்டுப் பார்த்தவங்களுக்கு அதோட அருமை புரியும். மண் பாத்திரத்துல சமைக்கிற உணவு சீக்கிரமா கெட்டுப் போகாது. குறிப்பா மண் பானையில வைக்கிற மீன் குழம்புக்கு ஈடு இணை

கிடையாது. ஒரு வாரம்கூட கெட்டுப் போகாம இருக்கும். மத்த பாத்திரங்கள்ல வைக்குற உணவுப் பொருள்கள், வெயில்ல நீர்த்துப் போயிரும். ஆனா, மண்பானை யோட தன்மையால அது நீர்த்துப் போகாது.  


மண்பானையோட அருமையை உணர்ந்து, இன்னைக்கு நட்சத்திர ஹோட்டல்கள்கூட மண்பானைச் சமையல்ல அசத்துறாங்க. நகரங்கள்ல சில ஓட்டல்கள்ல, 'மண்பானை சமையல்னு' போர்டுவெச்சு மக்களை ஈர்க்குறாங்கஇப்படி ஒருபக்கம் மண்பானை மேல மக்களுக்குக் கவனம் திரும்பி இருக்கிறது வரவேற்கக்கூடியதுதான். அதேமாதிரி எல்லாரும் நம் முன்னோர்கள் அனுபவத்துல சொன்னதை உணரணும். அதுமட்டும் இல்லாம, மண்பானைத் தண்ணி குடிச்சா நோய் எதுவும் வராது; அதனால மண்பானையைப் பயன் படுத்துங்க. அதே போல, தை முதல் நாள்ல மண் பானையில பொங்கல் வெச்சு கொண்டாடுறது தான் நம்ம மரபு. அதை மறக்கக் கூடாது" ங்க...


மண்பானையில் சமைத்துச் சாப்பிடுவதால், உடலுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும்....???


``மண்பானையில் வைக்கும் பொங்கலின் ருசி அலாதியானது. ஆனால், இன்றைக்கு எவர்சில்வர் பாத்திரங்கள்லயும் குக்கர்லயும்தான் பொங்கல்வைக்கிறோம். எவர்சில்வர், நான் - ஸ்டிக் பாத்திரங்களில் செய்யக்கூடிய சமையல் உடலுக்குப் பாதிப்புகளை உண்டாக்கும்"  மண்பானையில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பல பல....


"சத்துகளுடன், நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கக்கூடியவை இயற்கை உணவுகள். அவற்றை முறையாகச் சமைத்து உண்ணும்போது அதன் முழுச்சத்தும் நம் உடலுக்குக் கிடைக்கும்.  மண்பானைச் சமையல் என்பது மரபு மட்டுமல்ல, உணவின் தன்மை மாறாமல், சுவையை அதிகரிக்கக்கூடியது. மண்பானைப் பாத்திரத்தில் சமைக்கப்படும் உணவு எளிதில் செரிமானாகும்.  இப்போது கிடைக்கும் பாத்திரத்தில் உலோகத்தன்மை இருப்பதால், உணவின் தன்மையை மாற்றி விடுகிறது. 


      பொதுவாக, உணவைச் சமைக்கும்போது, உணவில் உள்ள தாதுக்கள் உள்ளிட்ட முக்கியமான சத்துகள் ஆவியாகிவிடும். குறிப்பாக, பச்சைக் காய்கறிகளில் உள்ள குளோரோஃபில் (Chlorophyll) எளிதில் ஆவியாகிவிடும். ஆனால், மண்பானையில் சமைக்கும் போது அதிலுள்ள சத்துகள் வீணாகாமல் அப்படியே கிடைக்கும். 


      மண்பானையில் உள்ள நுண் துளைகளால் உணவில் வெப்பம் சீராகவும், சமநிலையிலும் ஊடுருவும்.  இதனால் மண் பானைகளில் சமைக்கும் உணவு ஆவியில் வேகவைத்த உணவைப் போன்ற தன்மையைப் பெறும். இது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. 

மண்பானைச் சமையலுக்கு அதிக எண்ணெய் தேவைப்படாது. அது உணவுக்குத் தேவையான எண்ணெயை மட்டுமே எடுத்துக்கொள்ளும். இதுவும் உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியக் காரணம்.


இன்றைக்கு நவீன வாழ்க்கை முறையில் சமைக்க ஒரு பாத்திரம், சூடாகப் பராமரிக்க ஹாட்பாக்ஸ், உணவு கெட்டுப்போகாமல் இருக்க  ஃபிரிட்ஜ் எனத் தனித் தனியாகப் பொருள்களைப் பயன்படுத்துகிறோம். ஆனால், இவை எதுவும் இல்லாத காலத்திலும் மண்பானையே ஓர் இயற்கை ரெப்ஃரிஜி ரேட்டராக இருந்தது. இதில் உள்ள சிறிய நுண் துளைகள் வழியே அதன் உள்ளே இருக்கும் நீர் தொடர்ந்து ஆவியாகிக் கொண்டேயிருக்கும். பானையின் வெப்பமும், பானையின் உள்ளே இருக்கும் நீரில் உள்ள வெப்பமும் தொடர்ந்து ஆவியாதல் மூலம் வெளி யேற்றப் படுவதால் உள்ளே இருக்கும் நீர் குளிர்ந்த நிலையிலேயே இருக்கும். எனவே, ஃப்ரிட்ஜில் இருக்கும் நீர் பனிக்கட்டி யாவது போன்று, பானையில் இருக்கும் நீர் எந்த நிலைக்கும் மாறாது. 


  அதேபோல, மண்பானை யில் சமைத்த உணவை அடிக்கடி சூடுபடுத்தத் தேவை யில்லை. மற்ற பாத்திரங்களைவிட சீரான வெப்பநிலையை அதிகநேரம் பராமரிக்கும். அதனால், மண்பானையில் சமைக்கும் உணவு நீண்ட நேரம் கெடாமல் இருக்கும். 


மேலும், மண்பானை நன்மை செய்யும் பாக்டீரியாக்களை அதிகரிக்கும். இதனால் தான் அந்தக் காலங்களில் மீன் குழம்பை ஒரு வாரம் வரைகூட வைத்திருந்து சாப்பிடு வதால் எந்தப் பிரச்னையும் ஏற்பட்ட தில்லை.  


மண்பாண்டங்கள் உணவில் உள்ள அமிலத்தன்மையைச் சமன்படுத்தும் தன்மை கொண்டவை. நல்ல பசியையும் நல்ல தூக்கத் தையும் கொடுக்கும். மலச்சிக்கல் வராமல் தடுக்க உதவும். குழந்தை இன்மைப் பிரச்னை ஏற்படாமல் தடுக்கும். மண்பானை உணவு ரத்தக் குழாய் களைச் சீராக்க உதவும். உடல் சூட்டைத் தணிக்கும். இப்படி மண் பானையின் மகத்துவத்தை அடுக்கிக் கொண்டே போகலாம்.


   அறுசுவையான உணவும் ஆரோக்கிய மான உணவும் கிடைக்க வேண்டும்என்றால் மண்பானையில் சமைத்துச் சாப்பிடுவதே ஆகச்சிறந்தது* 🙏👌🌾