Showing posts with label இயற்கை வாழ்வியல். Show all posts
Showing posts with label இயற்கை வாழ்வியல். Show all posts

பஞ்சம் தீர்க்கும் பஞ்சகாவியம் செய்முறை Panchakavya seya murai vilakkam

 அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள் 

(நன்றி திரு நம்மாழ்வார் ஐயா) 

பஞ்சம் தீர்க்கும் பஞ்சகாவியம் செய்முறை:- 

மாட்டுச் சாணம் ஒரு கிலோ,பசு கோமியம் ஒரு லிட்டர் ,பசும்பால் அரை லிட்டர்,பசு தயிர் அரை லிட்டர் பசுநெய் 150 மில்லி நான்கைந்து கனிந்த வாழைப் பழங்கள் கரும்பு சக்கரை 250 கிராம் கரும்புச்சாறு கால் லிட்டர் இவைகள் அனைத்தும் மூலப்பொருள்கள் ஆகும்

10 லிட்டர் கொள்ளளவு உள்ள மூடி உள்ள பிளாஸ்டிக் பக்கெட்டில் முதல்நாள் சாணியையும் நெய்யையும் நன்றாக கலந்து மூடி வைக்க வேண்டும் ஒரு முப்பது முறை இரண்டு நாட்களுக்கு கலக்கவேண்டும் அதற்குப் பிறகு மீதி அனைத்தையும் பொருள்களையும் அதனுடன் இணைத்து காலையில் 50 முறையும் மாலையில் 50 முறையும் கடிகார சுற்றில் கலக்கவேண்டும் அனைத்து பொருளையும் கலக்கும் நாளிலிருந்து ஏழு நாட்கள் கழித்து பஞ்சகவ்யத்தை உபயோகிக்கலாம் ஒரு லிட்டருக்கு முதல் முறை செடிகளுக்கு அடிக்கும் பொழுது ஒரு லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி கலக்கவேண்டும் அதற்குப் பிறகு 50 மில்லி போதும் 15 நாட்களுக்கு ஒரு முறை உபயோகிக்கலாம் பஞ்சகாவியம் தயாராகிய பின் தினமும் காலையோ அல்லது மாலையோ ஒரு முறை 30 தடவை கலக்கினால் போதும் (பின்குறிப்பு கலக்கும் குச்சியை நன்றாக கழுவி வைத்து உபயோகிக்க வேண்டும்)🙏

நாளைய கழிவு நீக்கங்கள் Clean your body part internally to live healthy

12 காய்கறிகளை கொண்டு அனைத்து நோய்களையும் குணப்படுத்தமுடியும் vegetables to cure diseases Food is Medicine

 Kidney Failure : கத்திரிக்காய்

Paralysis : கொத்தவரங்காய்

Insomnia : புடலங்காய்

Hernia : அரசாணிக்காய்

Cholesterol : கோவைக்காய்

Asthma : முருங்கைக்காய் 

Diabetes : பீர்கங்காய்

Arthritis : தேங்காய்

Thyroid : எலுமிச்சை

High BP : வெண்டைக்காய்

Heart Failure : வாழைக்காய்

Cancer : வெண்பூசணிக்காய்


உணவு பழக்கம்" பழமொழி வடிவில்🎀*


💎காட்டுலே புலியும் , வீட்டுலே புளியும் ஆளைக் கொல்லும்.

💎போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே💚

💎பொங்குற காலத்தில் புளி.. மங்குற காலம் மாங்கா💚

💎சீரகம் இல்லா உணவும் , சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது.💚

💎 எண்னை குடத்தை சுற்றிய எறும்பு போல💚

💎 தன் காயம் காக்க வெங்காயம் போதும்💚

💎வாழை வாழ வைக்கும்💚

💎அவசர சோறு ஆபத்து💚

💎ஆறிய உணவு மூட்டு வலி உண்டாக்கும்💚

💎இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு💚

💎ரத்த கொதிப்புக்கு அகத்திக் கீரை💚

💎இருமலை போக்கும் வெந்தயக் கீரை💚

💎உஷ்ணம் தவிர்க்க கம்பங் களி💚

💎கல்லீரல் பலம் பெற கொய்யாப் பழம்💚

💎குடல் புண் நலம் பெற அகத்திக்கீரை💚

💎கொலஸ்ட்ரால் குறைக்க பன்னீர் திராச்சை💚

💎சித்தம் தெளிய வில்வம்💚

💎 சிறுநீர் கடுப்புக்கு அன்னாசி💚

💎சூட்டை தணிக்க கருணை கிழங்கு💚

💎ஜீரண சக்திக்கு சுண்டக்காய்💚

💎தலை வலி நீங்க முள்ளங்கி சாறு💚

💎தேனுடன் இஞ்சி ரத்தத் தூய்மை💚

💎பூண்டில் இருக்கு பென்சிலின் சக்தி💚

💎மூல நோய் தீர வாழைப்பூ கூட்டு💚

💎வாந்திக்கு மருந்து மணத்தக்காளி💚

💎வாத நோய் தடுக்க அரைக் கீரை💚

💎வாய் துர்நாற்றம் தீர்க்க ஏலக்காய்💚

💎பருமன் குறைய முட்டைக்கோஸ்💚

💎பித்தம் தணிக்க நெல்லிக்காய்💚


உணவு மருந்தாக இருக்க வேண்டும் இல்லாவிட்டால் மருந்தே நமக்கு உணவாகும் நிலைமை உருவாகும்”💚


*🎀நலம் உடன் வாழ்வோம்...

பகிர்வு / பாசில்

நாளைய கழிவு நீக்கங்கள் Clean your body part internally to live healthy

 அனைவருக்கும் வணக்கம் 🙏


நாளைய கழிவு நீக்கங்கள்


காது கழிவு


காதின் வழியே கெட்ட காற்று வெளியேறும், சூடு வெளியேறும்....மாதம் ஒரு முறை லேசான துண்டை முனையில் சுருட்டி லேசா அதில் உள்ள கழிவுகளை எடுக்கலாம்....


வெள்ளைபூண்டு தோல் உரித்து காதில் வைக்கனும் ( உள்ளே போய்விடாதபடி பெரிய பல் பூண்டு எடுத்துக்கோங்க ) 5 நிமிடம் வைத்தால் போதும், மாதம் ஒரு முறை செய்யனும்....( head set மாட்டுவதுபோல் இருக்கனும் )...உள்ளே போயிடாம பார்துக்கோங்க 🙏


பித்தநீர் கழிவு


காலையில் பல் விலக்கிவிட்டு இரண்டுவிரல் விட்டு உள்நாக்கு தொட்டு குமட்டவும், இரண்டுமுறை, பித்தம் இருந்தால் பச்சையாக, புளிப்பாக வெளியே வந்துடும், வரலனாலும் பரவாயில்லை, 


பயன்கள்

தலைவலி

வாந்தி

நெஞ்செரிச்சல்

ஜீரணமின்மை

வயிறுசம்மந்தமான நோய் நீக்கும்


தலைக்கழிவு


* முருங்கையிலை, மஞ்சள், நொச்சி இலை, வேப்பிலை, துளசி, தைல இலை, இப்படி எந்த இலை கிடைக்கிறதோ அதை வைத்து ஆவி கட்டவும் ...தலையில் இருக்கும் கெட்ட நீர் வெளியேறும் 


* மூச்சுபயிற்சி தினமும் செய்யவும் (30 நாள் )...link அனுப்புகிறேன்...இரண்டுநாள் அதை பார்த்து கற்றுக்கொண்டு நீங்களே உங்களுக்கு தோதான நேரத்தில் செய்யலாம்


நீர்தாரா


பெண்களுக்கானது, இதை மாதம் ஒரு முறை மாதவிலக்கு முடிந்ததும் செய்யலாம், எனிமா கேனிலேயே இதை செய்வதற்கான உபகரணம் சேர்த்து கிடைக்கும்....இதற்கான விளக்கமான link அனுப்புகிறேன்....அதில் மிக தெளிவான பதிவு இருக்கும்.... பார்துட்டு.. செய்யனும் என நினைக்கும் பெண்கள் சந்தேகம் இருந்தால் தனிபதிவில் கேளுங்க, சொல்கிறேன்...



பயன்கள்


* நீர்கட்டியை கரைத்து கழிவாக வெளியேற்றும்

* கர்பப்பை புண் ஆறும்

* கர்பப்பை கேன்சர் போன்ற நோய்கள் வருவதை தடுக்கலாம்



நீர்தாரா செய்யகூடாத நபர்கள்


1 கர்பப்பை பை எடுத்தவங்க செய்யகூடாது

2 மாசமா இருக்கறவங்க செய்யவேண்டாம்

3 திருமணமாகாத பெண்கள் செய்யவேண்டாம்

4 குழந்தைக்கு காத்திருப்பவர்கள் காலை மாலை செய்யலாம், இரவு வேண்டாம்



இந்த பதிவுகளோடு கழிவு நீக்கம் முடிந்தது 🙏🤝👍💐

கண் கழிவு நீக்கும் முறை Eye cleaning technique

 கண் கழிவு நீக்கும் முறை


கண் குவலை வைச்சு நாளைக்கு இரு முறை காலை மாலை கண்கழுவலாம்.....



பயன்கள்


*கண்களில் உள்ள தூசிகள் நீக்கும்

*அழுக்குகளை நீக்கும்

* வெப்பம் குறைக்கும்

*கண்ணுக்கு பிராண சக்தி கிடைக்கும்

* கண்பார்வை தெளிவாகும்


செய்யும் முறை


மருந்தில்லா தண்ணீர் எடுத்துக்கோங்க, கண்குவலையில் ஊற்றி லேசா குனிந்து தண்ணீரில் கண் வைச்சு முழித்து பின் கண்களை மூடவும்....


கண்குவலை கிடைக்காதவங்க இரவே திறந்தவெளியில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி துணி கட்டி வைச்சிடுங்க, காலையில் அந்த தண்ணீரை ஒரு அகலமான பாத்திரத்தில் ஊற்றி அதில் முகத்தை வைத்து கண்களை திறந்து பார்க்கவும், பாத்திரத்தில் முகம் வைக்கும்போது நாக்கு வெளியே இருக்கனும்....( இந்த பயிற்சி காலை ஒரு முறை போதும்)

நந்தியாவட்டை பூக்கள் இட்ட குளிரிந்த நீரும் கண் குவளையும்.... பயிற்சி இனிதே முடிந்தது...







1 கண் இடது வலது பார்க்கனும், இடது போகும்போது மூச்சை உள்ளே லேசா இழுத்து  வலது வரும் போது விடனும்..  

2 மேலே கீழே பார்ப்பது ( மேலே போகும்போது மூச்சை எடுத்து கீழே வரும்போது விடனும் )

3 வட்டம் போடுவது ( ஒருவட்டம் வரும்போது மூச்சை எடுத்து திரும்ப வந்த இடத்திற்கு போகும்போது மூச்சை விடனும் )

4. கண்களை இறுக மூடி திறப்பது ( மூடும்போது உள்ளே  இழுத்து திறக்கும் போது மூச்சை வெளியே வினும் )

5. பக்கவாட்டில் பார்ப்பது ( மூச்சை இழுத்து மறுபக்கம் வரும்போது விடனும் ) 

6. நெற்றிக்கண்ணில் விரல் வைத்து இரு கண்களும் மூக்கை பார்க்கனும் ( மூச்சை இழுத்து மறுபக்கம் வரும்போது விடனும் )

இந்த பயிற்சியை இன்று மாலை ஒரு முறை செய்ங்க, நாளை முதல் தொடர்ந்து தினமும் செய்ங்க....

ஆண்கள் எண்ணெய் குளியல் செய்யலாம் பெண்கள் மூக்கு கழுவும் பயிற்சி செய்யலாம் Activities for Day 3 and clarification on queries raised on first two days

 அனைவருக்கும் வணக்கம் 🙏


*நாளை( சனிகிழமை ) ஆண்கள் எண்ணெய் குளியல் செய்யலாம் ( சனிகிழமை, புதன்கிழமை )


* நாளை (சனிகிழமை ) பெண்கள் மூக்கு கழுவும் பயிற்சி செய்யலாம்

கடந்த இரண்டுநாள் பயிற்சியில் 55 நபர்கள் பங்கெடுத்திருக்கீங்க, மிகவும் மகிழ்ச்சி, இயற்கை வாழ்வியலுக்கு வருவது கொஞ்சம் தயக்கமா இருக்கும், செய்துபார்துட்டா உங்க உடம்பு நீங்க சொல்றத கேட்கும், 


இந்த இரண்டுநாளில் குழுவில் வந்த கேள்விகள் சந்தேகங்களுக்கான பதில்கள்...


* இரைப்பை கழிவு நீக்கம் ஒரு நாள் போதும்,  


* ஒவ்வொரு உடலும் ஒரு மாதிரி இருக்கும், முதல்ல தெரிஞ்சிக்கோங்க, மாதம் ஒரு முறை செய்ங்க, அடுத்து வாரம் ஒரு முறை இப்படி செய்யலாம், தொண்டை மென்மையான பகுதி, யாராவது தொடர்ந்து 10 நாள் செய்யறதா இருந்தா, தனிபதிவில் எனக்கு தகவல் கொடுத்துடுங்க...


* உப்பு தண்ணி குடிச்சதும் தானா வாந்தி வரும், வரலனா லேசா மேலண்ணம் தொட்டா போதும்னு சொன்னேன், ரொம்ப கைவிட்டு கஷ்டபடகூடாது, வரலனாலும் பரவாயில்லை, மலமா வந்துடும்...


* இரைப்பை சுத்தம் செய்த அன்று எண்ணெய்குளியல் செய்ய கூடாது...ஏன் என்றால் இரைப்பை சுத்தம் செய்ததும் குடல், இரைப்பை சுத்தம் அடைந்து குளிர்ச்சியா இருக்கும்......


பொதுவா பேதி ஆகும்போது குளிக்ககூடாது, 


* எண்ணெய் குளியல் காலை 6 மணிக்கு மேல் தான் செய்யனும்...

இரைப்பை சுத்தம் | 30 நாள் ஆரோக்கிய பயணம் | இயற்கை வாழ்வியல் பயணத்தை செய்யலாம் Perfect Health in Natural Way | Organic health tips

 இரைப்பை சுத்தம்

8 டம்ளர் நீர் ( 1 1/2 லிட்டர் )... மிதமான குடிக்கும் அளவு சூடு ( warm water ), அதில் 1 டம்ளர் நீர் எடுத்து 2 1/2 ஸ்பூன் இந்துப்பு நன்றாக கலந்து, மொத்த நீரில் கலக்கவும், 


அந்த நீரை சுவைத்துபார்த்தால் நம் கண்ணீரில் உள்ள உப்பின் சுவை இருக்கவேண்டும், அதிக உப்பாக இருந்தால் கூடுதல் நீர் சேர்க்கலாம், ஒவ்வொரு டம்ளராக குடிக்கவும், குடித்து முடித்து பெருவிரலை வைத்து லேசா வாயில் மேலண்ணத்தில் தொட்டால் வாந்தியாக அனைத்து கழிவுகளும் வரும், இரண்டு டம்ளர் குடித்ததும் வாந்தி வந்தாலும் எடுக்கலாம், இதை செய்யும் நேரம் 5 முதல் 7 மணிக்குள் இருப்பது நல்லது, இந்த நேரம் உடல் கழிவுகள் நீக்கும் நேரமாகும், 


எந்த வித பக்கவிளைவும் இல்லாத கழிவு நீக்க இது, இதை தொடர்ந்து 10 நாள் செய்துவர 5 கிலோ எடை குறைக்கலாம் ( எடை குறைக்க நினைப்பவர்களுக்கு )....


இந்த கழிவுநீக்க முறையினால் தீரும் நோய்கள்


முடக்குவாதம்

மூட்டுவலி

நெஞ்செறிச்சல்

கட்டிகள் நீங்கும்

குடல் அலர்ஜி

அல்சர்


இந்த கழிவு நீக்க முறையை கர்ப்பமாக உள்ள பெண்கள் செய்யவேண்டாம், ஏன்னா அவங்களுக்கு இயற்கையாகவே இது நடக்கும்...முதல் மூன்று மாதம்...



இந்த கழிவுநீக்க பயிற்சியை அனைவரும் ( விருப்பம் உள்ளவர்கள் ) நாளை செய்யலாம்... அனைவரும் உங்கள் அனுபவங்கள், சந்தேகங்கள் பதிவு செய்யலாம், நன்றி 🙏

இந்த 30 நாள் பயிற்சிகள் அனைத்தும் நீங்க வெளியில் போய் படிச்சா 35,000 ஆகும், இதில் மண்குளியல் தனியா 1000 ரூபாய், வாழைஇலைகுளியல் 1000, மூக்குகழுவுதல், கண் கழுவுதல், எனிமா 1000 நாம அங்கேயே செய்துபார்க்கனுமுனு சொன்னா 1000 , பார்க்கமட்டும் 35,000.....


இங்க உங்களுக்கு இலவசமா கிடைக்கிறது, காரணம் நீங்க செய்துபார்த்து தெரிஞ்சிகிட்டா, ஒருத்தர் 1000 பேரை மாற்றலாம், 


இது மருந்தில்லா செலவில்லா மருத்துவம், அன்றாட வாழ்க்கை மாறினால் மருத்துவ செலவு அவசியமில்லை, புதுபுது நோய்களுக்கு என்றுமே பயப்படவேண்டாம்....


உங்க செளகர்யம் எப்படி னு பார்துக்கோங்க......


இயற்கை வாழ்வியல் பயணத்தை செய்யலாம் Perfect Health in Natural Way | Organic health tips

 அனைவருக்கும் வணக்கம் 🙏


நாளை முதல் நாம் எல்லோரும் இணைந்து இந்த இயற்கை வாழ்வியல் பயணத்தை செய்யலாம்.....செய்யமுடியாதளவு இந்த வாழ்வியல் கடினமான விஷயங்கள் இல்லை,


 ஒரு 50 வருடத்திற்கு முன் நம் முன்னோர் வாழ்ந்த வாழ்வியல் தான், அன்று மருத்துவர்கள் நம்மை தேடி வந்தார்கள், இன்று நாம் அவர்களை தேடி போகிறோம் ( வரவைக்கிறார்கள் ).....இந்த 30 நாள் பயணம் நிச்சயமா  மாற்றம் கொடுக்கும், 


 கழிவு நீக்கம்....


இதைபற்றி கொஞ்சம் பேசலாம்....தினமும் பல் விலக்கி, மலம் நீக்கி, குளித்தால் இன்று உடல் கழிவுகளை போயிடுச்சு என நினைக்கிறோம், ஆனால் முழுமை இல்லை என்கிறது இயற்கை வாழ்வியல்....


உடல் கழிவுகள்


கண் கழிவுகள்

மூக்கு கழிவு

வாய் கழிவு

சிறுநீர்

மலம்

வியர்வை

காதுகழிவு

மூச்சுகாற்று ( வெளிமூச்சு )

சளி

பித்தநீர்

தும்மல்

தலைகழிவு ( கெட்டநீர் )

இரைப்பை கழிவு

நீர்தாரா.... ( பெண்கள் )


இவையெல்லாம் கழிவு நீக்கங்கள், இதைபற்றி நாம் இந்த 5 நாட்களில் பார்க்கப்போகிறோம்......

ஏன் கழிவுநீக்கம்?

நம் முன்னோர்கள் வாழ்வில் கழிவுநீக்கம் அன்றாட வாழ்வியல், ஆனால் இன்று அதை நாம் நமக்கு தேவையானபடி மாற்றிவிட்டோம்,.....

கழிவுகளின் தேக்கம் பல நோய்களுக்கு காரணமாகிறது, கழிவு நீக்கம் சரியா இருந்தா இனிவரும் புதுபுது நோய்களுக்கு பயப்படாம எதிர்த்து நிற்கலாம், உடலும் குடலும் சுத்தமா இருந்தால் மனம் சுத்தமாகும், மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.....

முதலில் நாம் நாளை செய்யபோவது இரைப்பை சுத்தம்

கழிவுகளின் தேக்கமே நோய்

கழிவு நீக்கமே ஆரோக்கியம்