Cure for PCOD problem in Tamil Iyarkkai maruthuvam... PCOD prachanai ku marunthu

 ஆலமரப்பட்டை பொடி அல்லது ஆலமரப் பூக்களைக் காயவைத்துப் பொடியாக்கி காலை வேளையில் பாலில் கலந்து குடித்து வந்தால் கருப்பப் பை வீக்கம் குணமாகும்.

l ஆலமர இலைகளைப் பொடி செய்து வெண்ணெயில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் மாதவிலக்குக் கோளாறுகள் குணமாகும். l கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் பொடி அல்லது மாத்திரை சாப்பிடுவதன் மூலம் கர்ப்பப் பை தொந்தரவுகள் நீங்கும். l வாழைப்பூ சாறு அல்லது வாழைத் தண்டைப் பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் கர்ப்பப் பை கோளாறுகள் நீங்கும். l அரச மரத்து இலையைப் பசும் பாலில் அரைத்துச் சாப்பிட அல்லது அத்தி விதையைப் பசும் பாலில் அரைத்துச் சாப்பிட endometrial thickness அதிகரிக்கிறது l உளுந்தங்களி செய்து சாப்பிடப் பெண்களுக்கு கர்ப்பக் குழி சுத்தமாகும். அதைப் போல் முருங்கைப் பூவையும் சாப்பிடலாம். இளம் ஆலம் விழுதை 20 கிராம் எடுத்து அரைத்துப் பசும் பாலில் கலந்து மாதவிலக்கின் முதல் நாளில் இருந்து 5 நாட்கள்வரை குடித்தால் நல்லது. l சதகுப்பை, எள், கருஞ்சீரகம் சூர்ணம் (amenorrhoea) மாதவிடாய் வராத தன்மையில் பலன் அளிக்கிறது. l அதிக ரத்தப்போக்கு உள்ள நிலைகளில் சதாவரி லேகியம் கொடுக்கலாம்.

தமிழ்உச்சரிப்பு சரியாக வர சில தமிழ் வார்த்தைகள்

 உங்களுக்குத் தெரிந்த தமிழ் வார்த்தை விளையாட்டினை பகிரலாமே..

ஆரல்வாய் மொழிக் கோட்டையிலே ஆழாக்கு உழக்கு நெல்லுக்கு ஏழு வாழைப்பழம். கடலோரத்தில் உரல் உருளுது, புரளுது, தத்தளிக்குது, தாளம் போடுது. யார் தச்ச சட்டை, தாத்தா தச்ச சட்டை ஊழிக்காற்று,பாழும் கிணறு, கூழைக்குடி. வாழைப்பழத் தோல் சறுக்கி ஏழைக் கிழவன் கீழே விழுந்தான். பச்சைக் குழந்தை வாழைப் பழத்திற்காக விழுந்து விழுந்து அழுதது. கொக்கு நெட்ட கொக்கு, நெட்ட கொக்கு இட்ட முட்ட கட்ட முட்ட. வியாழக்கிழமை கிழட்டு ஏழை கிழவன் வாழைப் பழத்தில் வழுக்கி விழுந்தான். வாழைப் பழம் வழுக்கி கிழவி வழியில் நழுவி கீழே விழுந்தாள் ஓடற நரியில ஒரு நரி கிழ நரி கிழநரி முதுகுல ஒரு பிடி நரை முடி கடலோரத்தில் அலை உருளுது பிரளுது தத்தளிக்குது தாளம் போடுது யாரு தெச்ச சட்டை தாத்தா தெச்ச சட்டை ஆனை அலறலோடு அலற அலறியோட கடலோரம் உரல் உருளுது. கடலோரம் உரல் உருளுது! புட்டும் புதுப் புட்டு தட்டும் புதுத் தட்டு புட்டைக் கொட்டிட்டு தட்டைத் தா. வீட்டுக்கிட்ட கோரை வீட்டுக்கு மேல கூரை கூரை மேல நாரை. துள்ளும் கயலோ வெள்ளம் பாயும் உள்ளக் கவலை எள்ளிப் போகும். கருகும் சருகும் உருகும் துகிரும் தீயில் பட்டால்!✍🏼🌹

அளவு முறைகள் Tamilan Scale

 ஒரு பலம் = முப்பத்தி ஐந்து கிராம்.

ஒரு வீசை = ஆயிரத்தி நானூறு கிராம். இருபத்தி நான்கு நிமிடங்கள் = ஒரு நாளிகை. இரெண்டரை நாழிகை = ஒரு மணி.

அளவைகள் உளுந்து (grain) – 65 மி. கி. குன்றிமணி - 130 மி. கி. மஞ்சாடி - 260 மி.கி. மாசம் - 780 மி.கி. பனவெடை - 488 மி.கி வராகனெடை - 4.2 கி. கழஞ்சு - 5.1 கி. பலம் - 41 கி. (35 கி.) கஃசு அல்லது கைசா - 10.2 கி. தோலா - 12 கி. ரூபாவெடை - 12 கி. அவுன்ஸ் - 30 கி. சேர் - 280 கி. வீசை - 1.4 கி.கி. தூக்கு - 1.7 கி.கி. துலாம் - 3.5 கி.கி
32 குன்றிமணி 1 வராகன்(வராகனெடை) 1.067 கிராம் 10 வராகனெடை 1 பலம் 10.67 கிராம் 8 பலம் 1 சேர் 85.33 கிராம் 5 சேர் 1 வீசை 426.67 கிராம் 1000 பலம் 1 கா 10.67 கிலோகிராம் 6 வீசை 1 துலாம் 2.560 கிலோகிராம் 8 வீசை 1 மணங்கு 3.413 கிலோகிராம் 20 மணங்கு 1 கண்டி (பாரம்) 68.2667 கிலோகிராம்

கரண்டி அளவுகள் 1 தேக்கரண்டி - 4 மி.லி 1 குப்பி - 175 தேக்கரண்டி ( 700 மி.லி) 1 தீர்த்தக்கரண்டி - 1.33 மி.லி 1 நெய்க்கரண்டி - தேக்கரண்டி (4.0 மி.லி) 1 உச்சிக்கரண்டி - 4 தேக்கரண்டி (16 மி.லி) 1 மேசைக்கரண்டி - 4 தேக்கரண்டி (16 மி.லி) 1 பாலாடை - 30 மி.லி 1 எண்ணெய்க்கரண்டி - 8 பாலாடை (240 மி.லி)

அன்பும் பண்பும் பாரம்பரியமும் நிறைந்த ஒரு மூத்த சகாப்தம் முடிவுக்கு வர இருக்கிறது.

 அன்பும் பண்பும் பாரம்பரியமும் நிறைந்த ஒரு மூத்த  சகாப்தம் முடிவுக்கு வர இருக்கிறது.


வரும் 10/15 ஆண்டுகளில் அன்பாலும் பாசப்பிணைப்பாலும் கட்டமைக்கப்பட்ட மற்றும் தர்மத்திற்கு கட்டுப்பட்ட ஒரு மூத்த தலைமுறை உலகை விட்டு போக இருக்கிறது.


இந்த தலைமுறை மக்கள் முற்றிலும் வேறுபட்டவர்கள்.!


இவர்கள் இரவில் சீக்கிரம் தூங்குபவர்கள், அதிகாலையில் சீக்கிரமே எழுபவர்கள்,

 காலையில் நடை பயிற்சிக்கு செல்பவர்கள்

வீட்டு தோட்டம், செடிகளுக்கும் தண்ணீர் விடுப்பவர்கள், கருவேப்பிலை, பச்சை மிளகாய், மருதாணி, செம்பருத்தி தன் வீட்டிலேயே வளர்ப்பவர்கள்.

கடவுளை வழிபடுவதற்காக தானே பூக்களைப் பறித்து பிரார்த்தனை செய்பவர்கள்...!


தினமும் கோவிலுக்குச் செல்பவர்கள்,

வழியில் சந்திப்பவர்களுடன் பேசுபவர்கள், அவர்களின் மகிழ்ச்சியையும், துயரத்தையும் விசாரிப்பவர்கள், இரு கைகளை கூப்பி வணக்கம் தெரிவிப்பவர்கள்...!


வழிபாடு இல்லாமல் உணவை எடுத்துக்கொள்ளாதவர்கள்...


அவர்கள் உலகம் வித்தியாசமான உலகம், அவர்களும் வித்தியாசமானவர்கள்...


திருவிழாக்கள், விருந்தினர் உபச்சாரம், உணவு, தானியங்கள், காய்கறிகள், அக்கறை, யாத்திரை, பழக்கவழக்கங்கள் அவர்களின் அனைத்துமே எதார்த்தமாகவும், மனிதநேயத்தோடும், இயற்கையாகவும், எந்தவிதமான நாடகத்தன்மையும் கலவாமல் இருக்கும்...


லேண்ட் லைன் தொலைபேசி மீது அலாதி பிரியம் கொண்டவர்கள்..! தொலைபேசி எண்களை மனப்பாடமாகவும், டைரியிலும் பராமரிக்கும் பழக்கம் உடையவர்கள்.. முகவரியை தெளிவாக கூறுவார்கள். முடிந்தால்  அழைத்துச் சென்று காட்டுவார்கள்.


ஒரு நாளைக்கு இரண்டு-மூன்று முறை செய்தித்தாளைப் படிப்பவர்கள்...


எப்போதும் ஏகாதசி, அமாவாசை மற்றும் பௌர்ணமி நினைவில் வைத்து கொள்பவர்கள் இந்த மக்கள்... கடவுள் மீது வலுவான நம்பிக்கை உள்ளவர்கள், குடும்ப, சமூக அக்கறை பயம் உள்ளவர்கள்...


தைத்து பராமரிக்கப்பட்ட பழைய செருப்புடன் உலா வருபவர்கள், பனியன், பெரிய கண்ணாடி என மிக எளிய தோற்றத்தில் உலா வருபவர்கள்....


கோடையில் ஊறுகாய், வடாம் தயாரிப்பவர்கள், வீட்டில் உள்ள உரலில் இடித்த மசாலாப் பொருள்களைப் பயன்படுத்துபவர்கள்...


விடியற் காலையில் எழுந்து வாசல் தெளித்து கோலம் போட்டு அவர்களே தங்கள் கைகளாலேயே வீட்டைப்பெருக்கி, ஒட்டடை அடித்து வீட்டை சுத்தபத்தமாக வைத்திருப்பவர்கள்...!


எப்போதும் நாட்டு மாட்டுப்பால், தக்காளி, கத்திரிக்காய், வெந்தயம், கீரைகளைத் தேடி தேடி வாங்குபவர்கள்...


இவர்கள் அனைவரும் நம்மை மெதுவாக விட்டு செல்ல இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா...?


உங்கள் வீட்டிலும் இப்படி யாராவது இருக்கிறார்களா..? ஆம் எனில், நீங்கள் மட்டுமே மிகவும் கொடுத்துவைத்தவர்கள் ! அவர்களை மிகவும் அன்பாக கவனித்துக் கொள்ளுங்கள்...! மரியாதை கொடுங்கள்,


 அவர்களிடம் வாழ்வியலை கற்று கொள்ளுங்கள்.


இல்லையெனில் அவர்களுடன் ஒரு முக்கியமான வாழ்வியல் என்னும் அதிமுக்கிய வாழ்க்கைப்பாடம் அழிந்தே போய்விடும்....

 அதாவது,மனநிறைவு, எளிமையான வாழ்க்கை, உத்வேகம் தரும் வாழ்க்கை, கலப்படம் மற்றும் புனைவு இல்லாத வாழ்க்கை, நமது கலாச்சாரத்தின் வழியைப் பின்பற்றும் வாழ்க்கை மற்றும் அக்கறையுள்ள ஒரு ஆத்மார்த்தமான வாழ்க்கை எல்லாம் அவர்களுடன் மறைந்து விடும்...


உங்கள் குடும்பத்தில் யார் மூத்தவராக இருந்தாலும், அவர்களுக்கு மரியாதை, நேரம் மற்றும் அன்பு கொடுங்கள். 


நம்முன்னோர்களே நமது அடையாளம், நமது முகவரி, மற்றும் நமது பெருமை, நம் கடமை 


🙏🙏🙏.


தனிமனித வாழ்வியில் சடங்குகள் மட்டுமே பல குற்றங்களை தடுக்க முடியுமே தவிர, அரசாங்கத்தால் மட்டுமே முழுமையாக தடுக்க இயலாது...!


 இயற்கையோடு ஒன்றி வாழ முயற்சிப்போம்.

ஆரோக்கியம் பேணுவோம்.

உடல் நலனிற்கு முக்கியத்துவம் தருவோம்.

பாரம்பரியத்தை தூக்கிச்செல்லும் கலாச்சாரக் காவலராவோம்.

பெரியவர்களை மதிப்போம் 


🙏🏻🙏🏻🙏🏻

108 நாள் பயிற்சி முடிந்தவரை சிறப்பாக முடிந்தது

 108 நாள் பயிற்சி முடிந்தவரை சிறப்பாக முடிந்தது 


மீன்டும் 108 நாள் தொடர்ந்தால் நம் வாழ்கை நடைமுறை பழக்கம் ஆகிடும் என நினைக்கிறேன் 


நான் பல்விளக்குவது மாறிடிச்சி  குளிப்பது மாறீடீச்சி 


சூரிய வெளிச்சம் உள்வாங்குதல் 


சாப்பிட்டா இப்போதெல்லாம் வெற்றிலை போடதோனூது இன்று மதியம் கூட வெற்றிலை போட்டேன் 


குளிப்பதில் மிக பெரிய மாற்றம் சோப்பு சேம்பு போட்டு குளீப்பாதே இல்லை 


பப்பாளி தயிர் என அவ்வப்போது எடுத்து கொள்கிறேன் 


அப்புரம் அதிகாலை தூக்கம் தெளிகிறது அலாரம் வச்சு எழுந்தது போய் இப்போ சாதரணமாகவே எழமுடிகிறது 


சாப்பிடுவதை மென்று சாப்பிடுகிறேன் கூடுமான வரை அரிசியை தவிர்த்து சிருதானியங்களை நாடிவிட்டேன் 


பேரிச்சை முந்தரி நேந்திரம் போன்றவைகள்சினாக்ஸ்சாக மாறிவிட்டது 


நைட்டு கொசுவத்தி இல்லை மின் விசிரி இல்லை தூக்கம் வருகிறது 


காலை மாலை இருவேளையும் மலம் கழிக்கிறேன் 


முளைகட்டிய தானியம் நிறை சாப்பிட சொல்லுது


கடுக்காய் தேனீர் சாப்பிடுகிறேன் மற்ற நேரங்களிலும் 


தெனை சாமை கஞ்சி இப்பலாம் பிடிக்கிது


பல் விளக்கும் போது மேல் கீல் உள் பூராவும் விரலால் தேய்து விடுகிறேன் 


பல்பொடி கடுக்காய் தண்ரிகாய் கொண்டு செய்தது 


இனி பேஸ்டு என்றஒன்றே தேவையில்லை 


அப்புரம் நல்லஎன்னை வாய்கொப்பலிப்பு இப்போ பலக்க மாகிடத்து 


கீலா நெல்லி இலைகளை எப்போதாவது பார்த்தால் சாப்பிடுவது கொஞ்சமா


மூக்கு கழுவதல் இரண்டூ முறை செய்தேன் 


மண் குளியல் சொல்ல வே தேவையில் மூஞ்சும் முடியும் நைசாக இருக்கூம் வாரத்தில் இரண்டூ முறையாவது  மண் குளியல் தான் 



சனிக்கிழமை தோரும் என்னை குளியல்தான் இதுவும்  வாழ்கையின் நடைமுறையாகியது 


நீராவி குளியல்நானே அவ்வப்போது செய்கிறேன் 


அப்புரம் நீர் சமயளில் என்னை கவர்நது பண்ணீர ரோசா தான் மனம் நிம்மதியாஇருக்கு தண்ணீர்குடித்த நாள் முளுவது ம் 


அப்புரம் வில்வம் இல்லை தண்ணோர் செம்ங்க


பழ உணவு இப்போது தினமும் நைட்டில் சாப்பிடசொல்லுது அதும் நேந்திரம் சிப்ஸ் படுக்கும் போது 


சாப்பிட்டு தூங்கினா அட அட செம்ம துக்கம்ங்க


கீர்பயிர்சில கேரட் கீர்நான் செம்ம நா சும்மா இருக்கும்போது போட்டுசாப்பிடுரேன்


நீர் காய்கரி சாலட் கொஞ்சம் எனக்கு சாப்பிடமுடில


சமைக்காத கீரை சொல்வா வேனும் மென்றே தின்னுட்டேன் 🥰🥰


இப்போது நெல் வயல் பக்கம்காலை நேரத்தீல் போனா நானே பிச்சி சாப்பிடுரேன் 


சிருதானிய கஞ்சி எனக்கு காலை நேரம்ணா செம்மையா இருக்கு நைட்டும்சாப்பிட்டேன் 


இனிமே காலை உணவாக எடூத்துக்க போரேன்


ஆகமொத்தம் உடல் மொழி நமக்கு புரிந்தால் 


ஆரோக்கியம் பற்றிய கவளையே இல்லை 


மீன்டும் தொடரனும் 108 நாள் பயிற்சி இதுவே என் ஆசை மகிழ்கிறேன்


நான் டாக்டரை நான் தேடி போகபோவதில் 


என் உடல் எனும் மருத்துவர் என்னுடன் இருக்கும் போது 


என்னை எந்த நோயும் தாக்காது வாய்மூக்கு வழி வந்த நோய்களை  ஆசன வாய் வழியாக அனுப்பி விடுவார் என் உடம்பு எனும் மருத்துவர் 




வொழ்க வளமுடன் நலமுடன் 


இனைந்தே பயணிப்போப் இயற்கை வாழ்வியலோடு

108 நாள் பயிற்சி அடிப்படை பயிற்சி.

 அனைவருக்கும் வணக்கம் 🙏


108 நாள் பயிற்சி அடிப்படை பயிற்சி...


அடுத்து நாம பார்க்கப்போறது,  108 நாளில் சொன்ன ஒவ்வொரு பயிற்சியையும் 21 நாள் செய்யப்போறோம்.....


அதில் முதலில் செய்யப்போவது,  தந்த சுத்தி......


தந்த சுத்திஎன்றால் என்ன னு நம் குழுவில் அனைவருக்கும் தெரியும் பல் விலக்கறது தான் தந்த சுத்தி......


என்னடா குழந்தையா இருக்கும்போதிருந்து பல் விலக்கிறோம்,  இவங்க என்ன புதுசா சொல்லப்போறாங்க....னு நீங்க நினைக்கிற mind voice கேக்குது......


இந்த பயிற்சியில், பல் சம்மந்தமான அனைத்து பிரச்சனைகளும் தீரும் என்பது உறுதி......


சரி செய்யறோம் னு சொல்விட்டா,


* போட்டோ எடுத்து குழுவில் போடனும்


* தினமும் பதிவு செய்யனும்


எதுக்கு வம்பு னு நினைக்காதீங்க....


எதுவுமே ஒரு குழுவா இணைஞ்சு செய்யும்போது ஒரு ஊக்கம் கிடைக்கும்,  பலன் நிறைய இருக்கும்.....


எந்த ஒரு பயிற்சியும் தெரிஞ்சிக்கிட்டா போதாது,  செய்துபார்த்தா அதன் முழுபலன் கிடைக்கும்......



இருந்த இடத்திலேயே பயிற்சி, 


பணம் எதுவும் செலவில்லை 


உங்க பல் பலம்பெற, சக்திபெற பயிற்சி....


யாரோ உங்களுக்காக இவ்ளோ மெனக்கெடும்போது....


உங்க நலனுக்காக நீங்க ஏன் ஒரு நாளில் 10 நிமிடம் ஒதுக்க கூடாது.....


சுவர் இருந்தாதான் சித்திரம் வரைய முடியும்


இங்கே சுவர்....நம் உடல்.....


நம்கையில் கோடி ரூபாய் இருந்தாலும்....


ஆயிரம் சுற்றம் சூழ இருந்தாலும்....


உடல் ஒத்துழைக்க மறுத்தால் ஒன்னும் செய்யமுடியாது......


வாழ்நாளில் பல் மருத்துவமனைக்கு போனவங்களுக்கு தெரியும்.....பல்லின் முக்கியத்துவம்.....


இந்த பயிற்சியை எல்லோரும் இணைந்து செய்யலாம்....


தேவையான பொருட்கள்.....👇


* கல் உப்பு (தூள்)

* மஞ்சள் தூள் 

* மூலிகை பல்பொடி 

* நல்லெண்ணெய் 100 ml

* கரிசலாங்கன்னி இலை 

* கடுக்காய் பொடி



நன்றி 🙏 வாழ்த்துக்கள் 💐