மஞ்ச நத்தி எனும் நுனா காய் சட்னி Morinda sp.

 மஞ்ச நத்தி எனும் நுனா காய் சட்னி  இன்று 😍😍



ஹைபீரிடு எனும் மாய உலகில் நாட்டு ரகங்களை சாப்பிடுவதே சவாலாக உள்ளது  அதனால்தான் இதுபோன்று என் தேடல் 



காயை பிஞ்சாக பறித்து சிரிது சிரிதாக நறுக்கி தண்ணீரில் போடனும் இல்லைனா கருத்திடும் 



பத்து பிஞ்சிகளுக்கு மேல் போட வேண்டாம் காய்முற்றியதாக இருந்தால் துவர்ப்பும் கசப்பும் அதிகமாகிடும்


அப்புரம்  விதைகள் நாம் சாப்பிடும் போது  தொந்தரவாக இருக்கும் 


 நல்லென்னை விட்டு வதக்கிய பிறகு 



தேங்காய் சட்னி செய்வது போல் செய்து கொள்ளலாம் புளி சேத்திக்க தேவையில்லை 


சரி இதன் மருத்துவ பயன் பார்போம்ங்க...


உடல் வெப்பத்தை தனிக்கும் கல்லீரல் மண்ணீரல் ஆகியவைகளை சுத்தபடுத்தும்


 சக்கரை அளவை கட்டுபடுத்தும் இரும்பு சக்தியை அதிகரிக்கும்ங்க வயிற்று புன் ஆற்றிடும்ங்க


மூட்டு வலி போக்கி புற்று நோய் வராமல் தடுக்கும் 


உடலில் நோய் எதிர்பு திறனை அதிகபடுத்தும் 


கொஞ்சம் துவர்பு கசப்பு சுவையுடன் தான் இருந்தது சாப்பிடலாம் 


உணவை ருசிபார்து பகிற்ந்தது  


K. M. A. Dhanapal மரங்களை நேசிப்பவன் 


இனைந்தே பயணிப்போம் மரங்களுடன்

மஞ்சணத்தி முழுத்தாவரமும் கார்ப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது. நோயினால் தளர்ந்த உடலை ஆரோக்கியமாக்கும்; உடல் வெப்பத்தை அதிகரிக்கும்.


 இலை, காய், பழங்கள், வீக்கம் கட்டிகளைக் கரைக்கும். மாதவிலக்கை தூண்டும். உடல் வெப்பத்தை கட்டுப் படுத்தும். பட்டை கரப்பான், புண்கள், கழலை போன்றவற்றை குணமாக்கும். வேர், கழிச்சலுண்டாக்கும்.

குழந்தைகளுக்கு ஏற்படும் மாந்தம், கழிச்சல் ஆகியன தீர 5மஞ்சணத்தி இலைகளைப் பசுமையானதாகச் சேகரித்து நீரில் கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். இவற்றை ஒன்றிரண்டாக நசுக்கி ½ லிட்டர் தண்ணிரீல் இட்டுக் காய்ச்சி குடிநீர் செய்து கொண்டு தினமும் காலை மாலை வேளைகளில் 20 மிலி வீதம் உள்ளுக்கு கொடுக்க வேண்டும்.


புண்கள், சிரங்குகள் குணமாக மஞ்சணத்தி இலையை அரைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் பூச வேண்டும்.


பல் சொத்தை குணமாக முதிர்ந்த மஞ்சணத்தி காய்களை சேகரித்து உப்பு நீரில் ஊற வைத்து வெயிலில் காய வைத்து சுட்டு கரியாக்கி சலித்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த தூளால் பல் துலக்கி வரவேண்டும்.


பேதியாக 10 கிராம் மஞ்சணத்தி வேரை நசுக்கி ½ லிட்டர் நீரில் போட்டு ஒரு டம்ளராக சுண்டக் காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும்.


குழந்தை மருத்துவத்தில் மஞ்சணத்தி: 5 மஞ்சணத்தி இலை, ஒரு கொத்து வேப்பங்கொழுந்து, 2 கிராம் சுக்கு, ஒரு தேக்கரண்டி ஓமம் எடுத்துக் கொண்டு முதலில் மஞ்சணத்தி இலை, வேப்பங் கொழுந்தை வதக்கி, இதனுடன் சுக்கு, மிளகு, ஓமத்தை நசுக்கி, 1/2 லிட்டர் தண்ணீர் விட்டு  ஒரு டம்ளராக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 3 தேக்கரண்டி அளவு உள்ளுக்கு கொடுக்க அஜீரணத்தால் ஏற்படும் காய்ச்சல் குணமாகும்.


5 மஞ்சணத்தி இலை, ஒரு கொத்து வேப்பங்கொழுந்து இவற்றை வதக்கி, இதனுடன் ஒரு தேக்கரண்டி சீரகம் ஒரு தேக்கரண்டி ஓமம் ஒரு சிட்டிகை பொரித்த பெருங்காயம் சேர்த்து ½ லிட்டர் தண்ணீரில் இட்டு ஒரு டம்ளராக சுண்டக் காய்ச்சி காலை மாலை இரு வேளைகள் வேளைக்கு 2 தேக்கரண்டி அளவு உள்ளுக்கு கொடுக்க வயிற்று உப்புசம் குணமாகும்.

Common Names in Different Languages (Source: India Biodiversity )

  • English
    Morinda tree
  • Hindi
    औछ Auch,
    आल Aal
  • Kannada
    ಮಡ್ಡಿ Maddi
  • Konkani
    बारतोंडी Bartondi
  • Malayalam
    Manjapavitta,
    Kattapitalavam,
    Pavitta,
    മഞ്ഞപ്പാവട്ട Manjappaavatta,
    Manjanathi
  • Marathi
    बारतोंडी Bartondi
  • Oriya
    Pindra
  • Others
    Indian Mulberry,
    Morinda,
    Noni,
    Togari Wood Of Madras
  • Sanskrit
    अक्षिकिफल Akshikiphala,
    अच्युत Achyuta
  • Tamil
    மஞ்சணாறி Manchanari,
    நுணா Nuna
  • Telugu
    మడ్డి Maddi,
    తొగరు Togaru
  • Urdu
    Togar Mughalai

இன்றைய காலைஉணவு தூயமல்லி அரிசி சாதம்

 இன்றைய காலைஉணவு  தூயமல்லி அரிசி சாதம் 





  துத்தி இலை பொரியல் பருப்பு சாம்பார் 


துத்தி இலையின் அசத்தல் மருத்துவபயன் 


அழற்சியைப் போக்கும் 

மலக்கட்டு ஆசனவாய் எரிச்சல் மூலம்  ஆகியவற்றை குணமாக்கும்ங்க 


நோய் நீக்கி உடலைத் தேற்றும்  உடல் சூடு  குணமாக்கும் 


சிறுநீரை பெருக்கும் துத்தி பூ, இரத்தப் போக்கை அடக்கும் 


இருமலைக் குறைக்கும் ஆண்மையைப் பெருக்கும் குளிர்ச்சி உண்டாக்குமங்க 


இது எல்லா இடங்களிலும் சாதாரமாகவே கிடைக்கும் கீரைதான் 


நல்லென்னையில்   வதக்கி செய்யனும் துவர்ப்பு சுவையுடன் இருக்கும் 


சுவை என்பது சற்று குறைவாக இருந்தாலும் உடலுக்கு ஏற்ற உணவுங்க 


துத்தி இலையை சிரிதாக நருக்கி நம்ம வீட்டில் முருங்கை கீரை செய்வது போல் செய்தால் போதும் 


இனைந்தே பயணிப்போம் மரங்களுடன் 


பாரதி பசுமை சேவை

இயற்கை வழியிலான உணவுகள் வழியிலான மலமிளக்கிகள் யாவை? What are the laxatives through natural foods?

 பப்பாளி, துத்தி, கீரை, வாழை, இயற்கை மலமிளக்கிகள்...

கடுக்காய் பொடி 1  தேக்கரண்டி  1 டம்பளர் நீரில் கரைத்து படுப்பதற்கு முன் குடிக்கவும்                

வெந்தயம்,  கருஞ்சீரகம், ஓமம் இவற்றை பொடியாக்கி1 தேக்கரண்டி 1 டம்பளர் நீரில் கரைத்து குடிக்கவும். இவற்றை குடித்தபிறகு எதுவும் சாப்பிட கூடாது.

 மற்றோரு செலவில்லாத முறை காலை எழுந்தவுடன் 2 பெரிய டம்பளர் நீரை குடிக்கவும் மலசிக்கல் என்பதே வராது 

 மாதுளை பழம் தோல் இரவில் ஊறவைத்து அதிகாலை அந்த நீரை வடிகட்டி சுமார் 400 ml   குடித்தால் நீண்ட நாள் கழிவுகள் வெளியேறும்.

 நெல்லிக்காய் சாறு அதிகாலை குடித்தால் தேங்கியுள்ள கழிவுகளும் வெளியேறும்.

சாம்பாருக்கு பருப்பு வேகவைக்கும் போது ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய் ஊற்றினால் மலமிளக்கி யாக செயல்படும்.

மாவு உணவு (அரிசி & கோதுமை உட்பட தானியம்) தவிர்த்து நார்ச்சத்து உணவுகள் எடுத்தால் நல்ல பலன் கிடைக்கும்.

பசு மாடு போல் சாப்பிட வேண்டும்.

உணவு வாடை பார்த்து அதை அதை அசைபோட்டு மனதை ஒருநிலை படுத்தி உண்ணவேண்டும்.

 எதிரியை அளிக்க வேண்டும் என்றால் அவருக்கு பசிக்காதபோது உணவு கொடு

ஆங்கில பழமொழி.

பசித்து சாப்பிட்டால் மலச்சிக்கல் தவிர்க்கலாம்.

மரங்கள் மண்ணின் வரங்கள்save trees

 🌿🌳இனிய வணக்கம்ங்க.. இன்றைய தினம் இஎஸ்ஐ மருத்துவமனை கல்லூரி முதல்வர் மற்றும்  கண்காணிப்பாளர், தலைமையில்  மருத்துவ மனை உள்பகுதியில்


 மூலிகை வனம்🌵🌿🌳


அமைக்க இடம் ஒதுக்கப் பட்டு நிகழ்வு துவக்கப்பட்டது

ருதம்பரா பவுண்டேசன் நிறுவனர் ஶ்ரீபதஞ்சலிஈஸ்வரன் நிகழ்வுகுறித்து கூறுகையில் பசுமையை அதிகரிக்கும் விதமாக மருத்துவ குணம் மிகுந்த மரங்களை மருத்துவமனை சுற்றிலும் ஆயிரம் மரக்கன்றுகளை நடும்பணி துவக்கி இருப்பது மகிழ்வை தருவதாகவும் நிகழ்வினை ருதம்பரா பவுண்டேசன் சார்பில் நிர்வாகிகள் கேபிள் மணி, டிரீம்டாட்ஸ் சுகுமார், மரம்பொன்னுசாமி,வள்ளிக்கும்மி  குழுவினர் இணைந்து ஒருங்கிணைத்தார்கள்


மரங்கள் மண்ணின் வரங்கள்🌿🙏

🌱🪴🌳🌲🌴🎋🌴🌲🌳🪴🌱

 




சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கோவை இஎஸ்ஐ மருத்துவ மனை ஆயுஷ் சார்பில் யோகா தினம் கொண்டாடப்பட்டது 21/06/2021

 🌿🙏🌸சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கோவை இஎஸ்ஐ மருத்துவ மனை ஆயுஷ் சார்பில் யோகா தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்வை டாக்டர் தமிழ்ச்செல்வன் அவர்கள் துவக்கி வைத்தார் மருத்துவ மனை கண்காணிப் பாளர் டாக்டர் ரவிக்குமார் அவர்கள் தலைமையேற்க நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கோவை ருதம்பரா பவுண்டேசன் நிறுவனர்


🌿🌼யோகா குருஜி ஶ்ரீ பதஞ்சலிஈஸ்வரன்

கலந்து கொண்டு யோகபயிற்சி, ஆற்றல் மிகுந்த சுவாச பயிற்சிகள், முத்திரை களின் நன்மைகள் குறித்தும் இன்றைய வாழ்வியல் சூழலில் நம்மை பாதுகாக்கும் ஆரோக்கியமான இயற்கை  உணவுமுறைகளை நிகழ்வில் கலந்து கொண்ட மருத்துவர்கள்,செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்களுக்கு வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆயுஷ் யோகா மருத்துவர் நந்தினி மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தார் ஒருங்கிணைத்தார்கள்


( நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு அடுப்பில்லா சமையல் முறையில் செய்யப்பட்ட


🌿லெமன்புதினா ஜுஸ்

🥗வெஜ் சாலட்

🍵கவுனி அரிசி நெய்ப்புட்டு

👍எனர்ஜிட்ரைபுரூட்ஸ் லட்டு

ஆகிய சத்துமிகும்  உணவுவகைகளை செய்முறையுடன் ருதம்பரா பவுண்டேசன் சார்பில் வழங்கப்பட்டது.)


நன்றி🌿🌼🙏🌸🌳🪴🌷

எறும்பு தொல்லையா இந்த இயற்கை முறையை பயன்படுத்தி பாருங்கள் Get-rid off ants

 எறும்பு அதிகம் இருக்கும் பட்சத்தில் மஞ்சள் தூள் கரைசல் ஒன்று அல்லது இரண்டு நாள் விட்டு தொடர்ந்து தெளித்து வரவும்.


மூன்று தெளிப்பிற்கு ஒரு முறை வெற்றிலைச் சுண்ணாம்பு பட்டாணி அளவு கலந்து தெளிக்கவும்.


எறும்பு நீங்கிய நிலையில் 3/4 நாட்கள் இடைவெளியில் எல்லாச் செடிகளுக்கும் தெளித்து வரவும்.


இந்த கரைசல் பூச்சிகள் மற்றும் நோய்களை கட்டுப்படுத்தும்.


வரும் முன் காப்பது சிறந்தது.

நிலக்கடலை கஷாயம் ஒரு மகசூல் பெருக்கி - ஒரு பார்வை. Peanut tincture is a yield multiplier - an overview.

ஒரு கைப்பிடி அல்லது 25 கிராம் காய்ந்த அதே சமயம் வறுக்காத நிலக்கடலை சிறிதளவு நீரில் ஒரு நாள் ஊற வைக்கவும்.


ஊறிய பின் அதன் நீருடன் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த நிலக்கடலையை அன்று அரிசி கழுவும் நீரில் ஊற்றி நொதிக்கவிடவும். தினமும் மொத்தம் 10 நாட்களுக்கு அரிசி கழுவும் நீரை நிலக்கடலை கரைசலில் ஊற்றிக் கொண்டு வரவும்.

பருப்பு கழுவும் நீர், பால் பாத்திரம் கழுவும் நீரையும் சேர்க்கலாம்.

பத்து நாட்கள் நொதித்த பின் கரைசலை ஐந்து மடங்கு அல்லது சற்று கூடுதலான நீரில் கரைத்து நிலத்தில்/மண்ணில்/தொட்டியில் ஊற்றவும்.

நிலக்கடலை ஊற வைத்து அரைப்பதாலும் நொதிக்க விடுவதாலும் கடலையில் உள்ள எண்ணை சத்தை குறைக்க உதவி செய்யும்.

திறன் மிகு நுண்ணுயிரி EM பல வகையில் தயார் செய்யலாம். அதில் ஒரு முறை அரிசி கழுவும் நீரையும் பாலையும் சேர்த்து செய்வது. இந்த முறையில் எந்தவித செலவில்லாமல் அரிசி மற்றும் பால் பாத்திரம் கழுவும் நீரை பயனுள்ள வகையில் பயன்படுத்துகிறோம்.

4 - 7 நாட்களில் செடிகளில் மாற்றத்தைக் காணலாம்.

பூக்கள் அதிகம் பிடித்து காய்கள் நன்கு பெருத்து வரும். தோராயமாக ஒன்னேகால் மடங்கிற்கு மேலாக பெரிதாக வளரும். பூச்செடிகளில் வரும் பூக்களும் அவ்வாறே வரும்.

மக்கு சத்து நிறைந்த மண்ணாக இருப்பின் இன்னும் மிக நல்ல பலனை தரும்.

15 நாள் இடைவெளியில் பயன்படுத்தவும்.

திருப்பூர் பிரியா தரும் கூடுதல் தகவல்:

நிலக்கடலையைத் தவிர பூச்சரித்த அல்லது பழைய தேவைப்படாத பருப்பு வகைகள் கைவசம் இருந்தாலும் மேற்சொன்ன சொன்ன முறையில் தயாரித்து பயன்படுத்தலாம். மற்ற பருப்பு வகைகளில் எண்ணைப் பதம் இருக்காது என்பது ஒரு கூடுதல் தகவல்.

Soak a handful or 25 grams of dried unpeeled peanuts in a little water for a day.

After soaking, grind it in a mixer with water.

Pour the ground peanuts over the rice washing water and let it ferment. Drain the rice wash water daily for a total of 10 days and bring to a boil.

Add lentil wash water and milk dishwashing water.

After ten days of fermentation, the solution is diluted five times or slightly more with water and poured into the ground / soil / pot.

Peanuts can be soaked, ground and fermented to help reduce the oil content of the peanuts.

Efficient microbial EM can be prepared in many ways. One of them is to wash the rice with water and milk. In this method we use rice and milk dishwashing water effectively at no cost.

You can see the change in the plants in 4 - 7 days.

The flowers are large and the pods are well inflated. Grows approximately one-fold larger. The same goes for the flowers that come in bloom.

If the soil is nutritious, it will still give very good results.

Use at 15-day intervals.

Additional Information from Tirupur Priya:

Apart from groundnuts, plastered or old unwanted pulses are available but can be prepared and used in the above manner. An additional information is that other legumes do not contain oil.

இயற்கை உணவு Traditional and Natural Food

 இயற்கை உணவு.       

8 மணிநேரம் ஊறவைத்த பாசிப்பயறு, நிலக்கடலை, சுண்டல் உடன் தேன்.



முளை கட்டிய பயறு சாலட்



நாளை ஒரு நாள் எனது வாழ்வியல் பயணம் live with traditional food for one full day இயற்கை வழி வீட்டுத் தோட்டம் - ஒரு தற்சார்பு வாழ்வியல் பயணம்

 அனைவருக்கும் வணக்கம்....


நாளை  ஒரு நாள் எனது வாழ்வியல் பயணம்.....நீங்களும் இணையலாம்...விரும்பினால்.....


* அதிகாலை அலாரம் இல்லாமல் எழுதல்

* இரண்டு டம்ளர் மண்பானை நீர் அருந்துதல்

* தோப்புகரணம் 10

* மூலிகை பல்பொடியில் பல்விலக்குதல்

* கற்றாழை குளியல்

* கண்களுக்கு ஒரு சூரிய குளியல்

* ஆசணங்கள், மூச்சுபயிற்சி, எதுவுமே முடியலயா....10 முறை ஓம் சொல்லலாம்

* நாமே தயாரித்த மூலிகை தேநீர் 

* புஸ்தக வாசிப்பு

* காலை உணவு அத்திப்பழ ஜூஸ்

* மதியம் 50% சாதம், 50% காய் ( மென்று உமிழ்நீரோடு உண்ணுதல் )

* பாரம்பரிய அரிசி பாயாசம் ( அரிசி, வெல்லம், தேங்காய்பால் )

* சூரிய அஸ்தமனத்திற்கு முன் உணவு....

* 16 மணிநேர விரதம் ஆரம்பம்....

* மனதிற்கு பிடித்த பாடல் கேட்பது, அல்லது பாரம்பரிய நடனம் ( நடனம், பாடல் நிகழ்காலத்தில் வாழவைக்கும் )......


நான் ரெடி...நீங்க 👆🤝