5 days task to nurture your health

 வணக்கம்

20 மார்ச் முதல் 25 மார்ச் வரை மருந்துணவு Task.....குழுவிலேயே செய்திகள் பகிரப்படும், இதில் பங்கேற்பவர்கள் மட்டும் குழுவில் சந்தேங்கள் கேட்க அனுமதி, மற்றவர்கள் தனிபதிவில் கேட்கலாம்,

 நாளை இரவு முன்னேற்பாடாய் வாங்கிவைக்கும் பொருட்கள் பட்டியல் பதிவு செய்யப்படும்....🤝👍 கற்றது கையளவு....


முயற்சி என்பது விதைபோல

அதை விதைத்துக்கொண்டே இருங்கள்

முளைத்தால் மரம் இல்லையென்றால்

அது மண்ணிற்கு உரம்......

வணக்கம்


அடுத்த 5 days Task எல்லாரும் ரெடியா இருக்கீங்க, இன்று இரவு தேவையான பொருட்கள் பதிவு  செய்கிறேன், நமக்கு தெரியாத எதையோ சொல்லப்போறாங்க னு நினைக்காதீங்க, இல்ல சாப்பிடவே முடியாத பொருட்களா, இது நம்மால் முடியுமா, என்ற சந்தேகங்கள் துளியும் வேண்டியதில்லை, தெரிந்த உணவுகள் தான், அதனால் பயம் வேண்டாம், 5 நாள் சமைக்காத உணவுகள் எப்படி,  நிறைவா, நிறைந்த சத்துடன்சாப்பிடலாம் என்று தெரிந்துகொள்ளலாம், ஏற்கனவே இந்த குழுவில் பயணிப்பவர்களுக்கு தெரிந்திருக்கும், இந்த 5 நாள் முழுமையா இந்த உணவுகளை கடைபிடிச்சா கண்டிப்பா 2 கிலோ எடை குறையும், இந்த எடைகுறைவதால் சத்துக்கள் குறையாது சோர்வு இருக்காது, வழக்கம்போல வேலைகளில் நீங்கள் செயல்படலாம்,........100% இந்த 5 நாள் அனைவரும் இணைந்து பயணிப்போம் உறுதி எடுத்துக்கோங்க ( 5 days Task இருப்பவர்கள் )....


எப்பவும் ஆரம்பிக்கும்போது குடல் சுத்தம் செய்து ஆரம்பிப்போம், இந்த முறை வெள்ளி, சனிகிழமை வருவதால் வெள்ளிக்கிழமை பெண்களும், சனிக்கிழமை ஆண்களும் எண்ணெய் தேய்த்து குளிக்கலாம்......அதிக எண்ணெய் தேய்க்க அவசியமில்லை 4 முதல் 5 ஸ்பூன் போதும், நல்லெண்ணெய் அடுப்பில் லேசா சூடு செய்து அதில் மிளகு 6, மிளகாய் காம்பு 6 (பிச்சிபோட கூடாது கட் செய்துபோடனும் மிளகாயோ விதையோ அந்தகாம்போடு சேரகூடாது ), பூண்டு பல் 1 தட்டிப்போட்டு தலைமுதல் கனுக்கால் வரை தடவி வெந்நீரில் குளிக்கனும்......சிறிது நேரம் சூரிய ஒளியில் இருந்தால் நல்லது,  சாப்பிடும் முன் குளிக்கனும், மதியம் தூங்க கூடாது ( தூங்கினா தலைவலி வரும்...இரண்டு நாள் விடாது).....குளித்தவுடன் சூப் எடுக்கலாம், மதிய உணவு இரவு உணவு குழுவில் பதிவு செய்கிறேன்.......

வணக்கம்


நாளை காலை எண்ணய்க்குளியல் முடித்து மதிய உணவு


பாரம்பரிய அரிசியை மிக்ஸியில் போட்டு  ஒரு சுற்று சுற்றி வேகவைத்து வடித்துக்கொள்ளவும்


இதற்கு ஊற்றிக்கொள்ள ரசம்


தேவையான பொருள்கள்...


எலுமிச்சை அளவு புளி

பூண்டு 7 பல்

முருங்கை கீரை ஒரு கைப்பிடி

கடுகு 

காய்ந்த மிளகாய்


ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து, பூண்டு, வற்றல் 2, மிளகாய் 1, கறிவேப்பிலை கொஞ்சம் போட்டு வதக்கி இதோடு முருங்கை கீரை சேர்த்து வதக்கி,புளிதண்ணீர் , உப்பு ,மஞ்சள் தூள், ரசப்பொடி உப்பு போட்டு ஒரு கொதிவந்ததும் இறக்கி வைக்கவும்.....


இதற்கு பொரிகடலை துவையல் அரைச்சிக்கலாம்.....


இரவு 


அவல் வெல்லம் தேங்காய் துருவல் சாப்பிடலாம்.....


1. சாப்பிட்டு எண்ணெய் தேய்ச்சு குளிக்க கூடாது

2. காலை 6 மணிக்கு முன் எண்ணெய் தேய்ச்சு குளிக்க கூடாது

3. எண்ணெய் தேய்த்து குளிக்கும் நாள் மதிய தூக்கம் கூடாது

4. குளிர்ச்சியான உணவுகளும் தவிர்க்கவும்


5 days Task (20 march to 25 march) தேவையான பொருட்கள்....


மாதுளை 5 

ராகி 100 கிராம்

கம்பு 100 கிராம்

சோளம் 100 கிராம்

வெந்தயம் 50 கிராம்

எள்ளு 100 கிராம்

அத்திப்பழம் 10

பாதாம் 50 கிராம்

முந்திரி 50 கிராம்

பச்சை வேர்கடலை 100

வறுத்த வேர்கடலை 100

சப்ஜா விதை ஒரு ஸ்பூன்

வெள்ளை அவல் 1/2 கிலோ

சிவப்பு அவல் 1/2 கிலோ

நாட்டுசர்க்கரை 100

பாதாம் பிசின் 5 ஸ்பூன் அளவு தேவை

தேங்காய் நாள் ஒன்றுக்கு அரை முடி (2  1/2 )

பனங்கற்கண்டு 50 கிராம்

முழு உளுந்து 100 கிராம்

பாசிபயறு 50 கிராம்

கொள்ளு 50 கிராம்

கொண்டைகடலை கருப்பு 50 கிராம்

முந்திரிபருப்பு 50 கிராம்

திராட்சை 25 கிராம்

பூசணி விதை 25 கிராம்

வெள்ளரி விதை 25 கிராம்


காய்கறி


பீர்க்கங்காய் 50 கிராம்

புடலங்காய் 50 கிராம்

மஞ்சள் பூசணி 50 கிராம்

வெள்ளை பூசணி 100 கிராம்

கொத்தவரங்காய் 50 கிராம்

கோவக்காய் 50 கிராம்

கத்தரிக்காய் 1

சாத்துக்குடி 2


கீரைகள்


வல்லாரை 5 இலை

முருங்கை 10 

தூதுவலை 4

வெற்றிலை 1

முடக்கற்றான் 5


பூக்கள்


பன்னீர் ரோஜா 5

கேந்திப்பூ 2

தாமரை 1

செம்பருத்தி 5

வேப்பிலை ஒரு கைப்பிடி

கறிவேப்பிலை ஒரு கைப்பிடி


இரவு உணவிற்கு நீங்கள் விரும்பும் பழங்கள் வாங்கிக்கோங்க, இரவு ஒரே வித பழங்கள் சிறப்பு.....




இவையெல்லாம் தேவையான பொருட்கள், கிடைக்காத பொருள் இதில் எதுவுமில்லை, காய்கறி பழங்கள் குளிர்சாதணபெட்டியில் வைக்காமல் இருந்தால் சிறப்பு, முதல் நாள் மதியம் 3 மணிக்கு உணவு பதிவு செய்துடுவேன்,......


அவசியமான சந்தேகங்கள் இருந்தால் மட்டும் கேளுங்க.....இந்த 5 நாளில் ஒரு நாளைக்கு 100 வார்த்தைக்கு மேல் பேசகூடாது ( போனில் டைப் அடிக்கவும் கூடாது )....மெளனமாக ஒரு உள்நோக்கிய பயணம்....கடிகாரம் பார்க்க கூடாது.......பசிச்சா மட்டும் சாப்பிடனும், நான் போடும் பதிவுகள் அனைத்தும் சாப்பிடனும்னு அவசியமில்லை, பசியிருந்தா சாப்பிடலாம், இல்லையென்றால் அடுத்த உணவிற்கு போகலாம்...தண்ணீரே போதுமென்றாலும் விட்டுவிடலாம்.....உடனுக்குடன் பதிவுகள் வேண்டியதில்லை, மாலை 6 மணிக்கு தினமும் நீங்க செய்ததை அனுபவங்களை, எழுத்தாகவோ, வாய்மொழி செய்தியாகவோ பதிவிடலாம், மற்ற நேரங்களில் கைபேசி தவிர்க்கலாம்.....

ஏன் சொல்றேனா இந்த ஐந்து நாள் நமக்கு சத்துக்களை கூட்டி நோய்நீக்கும் பயிற்ச்சி, அதிக பேச்சு, கைபேசியோடு இணைப்பு சக்தி இழப்பு ஏற்படும்.....

சந்தேகம் மாலை அனுபவ பதிவு செய்யும்போது மட்டும் கேட்கலாம், மற்ற நேரங்களில் தவிர்ப்பது நலம்.....சந்தேகம் வராத அளவு பதிவுகள் இருக்கும் ......Task 20 to 25....  6 நாள் வரும், இதில் 20 ம் தேதி கழிவு நீக்கம் பயிற்சி, 21 முதல் 25 வரை உணவு பயிற்ச்சி......

நாளைக்கு எண்ணெய் குளியல் செய்யும் ஆண்கள் குடல் சுத்தம் செய்ய கூடாது....ஏதாவது ஒன்றுதான் செய்யனும்...

வணக்கம்

 21 ம் தேதி ஞாயிற்றுகிழமைக்கான உணவு....

காலை....எழுந்தவுடன் படுக்கையிலேயே அமர்ந்து நம் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளையும் நினைவுபடுத்தி நன்றி சொல்லவும்

அடுத்து மூலிகை பல்பொடி வைத்து பல் விலக்கவும்.....

குளியல்....வேப்பிலை ஒரு கைப்பிடி ( பூச்சிகள் இல்லாமல் பார்த்து நன்கு அலசி அரைக்கவும் ) மைபோல் அரைத்து முகம், உடல் முழுதும் பூசி குளிக்கவும்..தலைக்கு போடவேண்டாம், ......(சோப்பு போடகூடாது )..


காலை....7 am to 8 am


மாதுளை சாலட்


மாதுளை 1, பாதாம்பிசின் 1 ஸ்பூன் ( அலசிட்டு நுனுக்கி ஊறவைச்சா ஒரே சீரா இருக்கும்....ஊறின பாதாம்பிசின் ஒரு ஸ்பூன்), சீரகம் தூள் 2 சிட்டிகை ( கடையில் வாங்கிய பொடி வேண்டாம் ), பேரீச்சை 1, வறுத்த வேர்கடலை 1 ஸ்பூன், முந்திரி 2 பொடியா நறுக்கியது, நாட்டுசர்க்கரை 1/2 ஸ்பூன்....இது மாதிரி எல்லாமே போடும்போது அனைத்து சத்தும் கிடைக்கும், உடல் சோர்வில்லாமல் இருக்கும்.....புத்துணர்ச்சியா இருக்கும்....


காலை உணவு  வெந்தயப்பால்.....


வெந்தயம் 1/4 ஸ்பூன் ( ஒருவருக்கு ), தேங்காய் சில் 1, ஏலக்காய் 1, அரைத்து வடிகட்டி உமிழ் நீரோடு குறைந்தது 1/4 மணிநேரம் குடித்தால் இந்த உணவும் மருந்தாகும்....( அல்சர், உடல் சூடு, முடிஉதிர்தல், நரம்பு நோய்கள் சரியாகும்)....


மதியம்....


பீர்க்கங்காய் அவல் சாதம்


வெள்ளை அவல் ஒரு கைப்பிடி ( ஒருவருக்கு ), தேங்காய் 1 கைப்பிடி , மிளகளவு நறுக்கிய பீர்க்கங்காய் ஒரு கைப்பிடி ( உப்பு மஞ்சள் கலந்த நீரில் அலசியது) , முளை கட்டிய எள் அரை ஸ்பூன், இதோடு மிளகு தூள் ஒரு சிட்டிகை, சீரகதூள் இரண்டு சிட்டிகை, உப்பு ஒரு சிட்டிகை, பொடியா நறுக்கிய மல்லி இலை, கறிவைப்பிலை ( இயற்கை உணவில் பொடியா நறுக்கிய காய் இலைகள் சுவை கொடுக்கும் ) ....( இந்த இயற்கை உணவு மிக மெதுவா உணர்ந்து உண்ணவேண்டும், ஒரு ஸ்பூன் வாயில் இருந்தால் வாய் முழுவதும் பட்டு போகனும், உமிழ்நீர் கலக்கனும், உணவு நீர் போல் உள்ளே போனால் இந்த உணவும் மருந்து .....உமிழ் நீர் ஜீரண சக்தியை கூட்டும் கண்களை மூடி 32 முறை ஒரு வாய் உணவை மென்று உண்ணவும்.....


மதியம் கீரை சாலட்


வல்லாரை கீரை 10 இலை ( உப்பு நீரில் அலசியது ) பொடியா நறுக்கியது,  நறுக்கிய கீரை அளவு தேங்காய் துருவல், மிளகு சீரக தூள் உப்பு, சில எலுமிச்சை துளிகள் விட்டு உண்ணவும் ( நம் வீட்டில் விளைந்த கீரை அமிர்தம் ).....ஞாபக சக்தியை கூட்டும், மனநலம் காக்கும்......


மாலை 5 மணிக்குள்


கோவைக்காய் ஜூஸ்

கோவைக்காய் 2, தேங்காய் துருவல் 2 ஸ்பூன், சீரகம் உப்பு மிளகுதூள் சேர்த்து அரைத்து வடிகட்டி குடிக்கவும்...சில துளி எலுமிச்சை சாறு கலந்து குடிக்கவும்.....( தோல் நோய் தீரும் ).....


இரவு 7 மணிக்குள்


ஒரே வித பழ உணவு ( சப்போட்டா, கொய்யா, பப்பாளி, ஆப்பில், ஏதாவது ஒன்று ) ...



இந்த இயற்க்கை உணவுகள் சோர்வு கொடுக்காது தைரியமா சாப்பிடலாம், இந்த 5 நாள் சில உறுதி எடுத்துக்கோங்க....


1 மூலிகை பல்பொடி உபயோகிப்பேன்

2. இலை, பூக்களில் குளிப்பேன்

3. நான் உண்ணும் உணவில் முதல் எடுக்கும் ஒரு கை  உணவு மற்றவர்களுக்கு கொடுத்து உண்ணுவது

4. காலை ..மாலை கண்களை மூடி 5 நிமிடம் நம் உடலில் உள்ள உறுப்புகளை நினைத்து நன்றி சொல்வது

5. இந்த 5 நாளுக்கு படுக்கும் இடத்தில் கைபேசி வைக்கமாட்டேன்.....என்று உறுதிமொழி எடுத்துக்கோங்க.....

6. வேலைக்கு போறவங்க தவிர மற்றவங்க கடிகாரம் பார்க்காம ஒரு நாள் இருந்து பார்க்கவும்

7. முடிந்தவரை மெளனமாக இருக்கவும், மகிழ்ச்சியாக இருக்கவும்


*மாலை வெந்தயம் 1/4 ஸ்பூன் ஊறபோட்டு இரவு முளைகட்டவும்

*எள் 1/4 ஸ்பூன் மாலை ஊறவைத்து இரவு முளைகட்டவும்

* கொள்ளு இரண்டு ஸ்பூன் ஊற மட்டும் போடவும்


இந்த 👆 அட்டவணையில் உணவுகள் எல்லாமே சாப்பிடனும்னு அவசியமில்லை, பசிச்சா சாப்பிடுங்க, ஒரு நேரம் சாப்பிட்டவுடன் மறுபடியும் எப்ப பசிக்கிதோ அந்த நேரம் சாப்பிட்டா போதும், பசிக்கலனா அடுத்த நேர உணவுக்கு போயிடலாம்..

திங்கட்கிழமைக்கான உணவு 2 ம் நாள்


காலை ....மாதுளை கொள்ளு ஜூஸ்


மாதுளை பழத்தை அரைத்து வடிகட்டி,  அதோடு முளைகட்டிய கொள்ளுபயிரை 1 ஸ்பூன் ( நேற்று ஊறவைத்தது ) வேகவைத்து அந்த தண்ணீரை மட்டும் மாதுளை சாறுடன் கலந்து வெல்லம் சேர்த்து குடிக்கவும், வேகவைத்த பயரை வீட்டில் யாருக்காவது கொடுத்துடுங்க, (இந்த மாதுளை சாறு சிறுநீரகத்தை சுத்தப்படுத்தும் )....


காலை  உணவு


பூசணிக்காய் லட்டு


மஞ்சள் பூசணி துருவியது ஒரு கைப்பிடி...இதோடு சமஅளவு தேங்காய் துருவல், உப்பு ஒரு சிட்டிகை, ஏலக்காய் தூள் 1 சிட்டிகை, பொடியா நறுக்கிய முந்திரி அரை ஸ்பூன், பொடியா நறுக்கிய ஒரு தாமரை இதழ்,நாட்டுசர்க்கரை ஒரு ஸ்பூன் .....இந்த உணவு நரம்புகளுக்கு பலம் கொடுக்கும், 


மதிய உணவு 

புடலங்காய் கொள்ளு சாலட்.....

தோல் நீக்கிய புடலங்காய் ஒரு தேங்காய்சில் அளவு எடுத்து கொதிக்கும் நீரில் 1 நிமிடம் போட்டு எடுத்துக்கோங்க, அதேமாதிரி ஒரு ஸ்பூன் முளைகட்டிய கொள்ளையும் கொதிக்கும் நீரில் 1 நிமிடம் போட்டு எடுத்துக்கோங்க,

 அடுத்து தேங்காய் எண்ணெய் 1 ஸ்பூன், லெமன் ஜூஸ் 1 ஸ்பூன், உப்பு மிளகு தூள் ஒரு சிட்டிகை, வெல்லம் சிரப் அல்லது தேன் ஒரு ஸ்பூன் இவற்றையெல்லாம் போட்டு நல்லா கலந்துக்கோங்க அதில் கொள்ளுபயிரையும் மிளகளவு நறுக்கிய புடலங்காயையும் கலந்து ஒரு 10 நிமிஷம் வைச்சிருந்து சாப்பிடவும்....


மதியம் 

சாத்துக்குடி ஜூஸ்


சாத்துக்குடி 1 பழம்

ஊறிய பாதாம் பிசின் ஒரு ஸ்பூன்

உப்பு 1 சிட்டிகை 

கலந்து குடிக்கவும்


மாலை


அத்திப்பழம் 2 

திராட்சை 10 

1 மணிநேரம் ஊறவைத்து அரைத்து அதோடு பூசணி விதை வெள்ளரி விதை கலந்து குடிக்கவும்


இரவு பழங்கள் 7 மணிக்குள்


காலை குளியல்....


ரோஜா பூக்கள் மகரந்தம் நீக்கி, ரோஜா இதழ்களை மட்டும் எடுத்து அலசிட்டு மைபோல் அரைத்து உடல் முழுவதும் பூசி குளிக்கவும்.....தினம் இருமுறை குளிக்கலாம் காலை மாலை....


காலை கண் பயிற்ச்சி


காலை படுக்கையில் இருந்து எழுந்தவுடன் இரண்டு கைகளையும் சூடுபறக்க தேய்த்து உள்ளங்கை கண்களில் படுமாறு வைக்கவும், இதை 10 முறை செய்யவும்.....


நன்றி வாழ்த்துக்கள் 💐🤝


*உளுந்து 2 ஸ்பூன் ஊறவைச்சி முளைகட்டி வைங்க

* கேழ்வரகு ஊறவைச்சி முளைகட்டிடுங்க...


செவ்வாய்கிழமை 3 ம் நாளுக்கான உணவு.....


காலை 6 to 7 


மாதுளை ஜூஸ்


மாதுளை 1, 3 ஸ்பூன் தேங்காய்துருவல், ஏலக்காய் 1, இடித்து பொடித்த பனங்கற்கண்டு ஒரு ஸ்பூன் சேர்த்து அரைத்து வடிகட்டி குடிக்கவும்....இதை மாதுளை மனப்பாகுனு சொல்வாங்க, ஆழ்மன அழுத்தங்கள் நீக்கும்.....


காலை 8 to 9


கேழ்வரகு பால்


முளைகட்டிய கேழ்வரகு 2 ஸ்பூன், தேங்காய் 1 சில், ஏலக்காய் 1, உப்பு ஒரு கல், அனைத்தையும் சேர்த்து அரைத்து வடிகட்டி வெல்லம் கலந்து குடிக்கவும் ....( எலும்புகளுக்கு பலம் கொடுக்கும்) 


மதியம்


சிவப்பு அவல் உளுந்து சாதம்


ஒரு சில் தேங்காய் பால் எடுத்து அதில் ஒரு கைப்பிடி சிவப்பு அவலை சரியா மூழ்கும் அளவு மட்டும் ஊற்றி 20 நிமிடம் வைக்கவும், 20 நிமிடம் ஆனதும் அதில் முளைகட்டிய முழு உளுந்து, ஒரு ஸ்பூன் பொடித்த வறுத்த வேர்கடலை, ஒரு சிட்டிகை உப்பு, மிளகு, சீரகம், மல்லி துருவல் கலந்து உண்ணவும்.....


இதற்கு பொறிடலை துவையல் அரைச்சிக்கலாம்


வெற்றிலை பீடா.....வெற்றிலை காம்பு நரம்பு நீக்கியது 1, ஏலக்காய் கிராம்பு தூள் இரண்டும் சேர்த்து ஒரு சிட்டிகை, பூசணி, வெள்ளரி விதை, இதோடு ஒரு வெல்லம் துண்டு சேர்த்து சாப்பிடவும்....


மாலை....


கொத்தவரங்காய் கத்தரிக்காய் ஜூஸ்


கொத்தவரங்காய் 2, கத்தரிக்காய் ஒரு துண்டு, மிளகு சீரகம் உப்பு ஒரு சிட்டிகை, தேங்காய் துருவல் 2 ஸ்பூன் அரைத்து வடிகட்டி சில துளிகள் எலுமிச்சை சாறு கலந்து குடிக்கவும்....( கர்பப்பை நீர் கட்டிகள் குறையும் )


இரவு  7 மணிக்குள் கொய்யாப்பழம் 3


* காவை ஒரு கைப்பிடி கறிவேப்பிலை மைபோல் அரைச்சு தலை முதல் கால் வரை தடவி குளிக்கவும், நேரம் இருந்தா தடவி 10 நிமிடம் காத்திருந்து குளிக்கவும்


* மதியத்திற்கு மேல் வயிற்றில் ஒரு கர்சீப்பை நனைத்து பிழிந்து ஈரத்துடன் போட்டு 20 நிமிடம் படுத்திருக்கவும், பாய் அல்லது போர்வை விரித்து படுக்கவும்....மெத்தையில் வேண்டாம்


*சோளம் 2 ஸ்பூன் ஊறவைச்சி முளைகட்டவும்

* கொண்டைகடலை 2 ஸ்பூன் ஊறவைச்சு முளைகட்டவும்

* பாசிபயறு 2 ஸ்பூன் ஊறவைக்கவும்...

காலை உணவு


மாதுளை 1, உப்பில் ஒரு மணிநேரம் ஊறவைத்து அலசிய திராட்சை 10, முந்திரி 2, அத்திப்பழம் 1, தேங்காய் துருவல் 2 ஸ்பூன், பூசணி விதை, வெள்ளரி விதை, ஒரு ஸ்பூன் ஊறவைத்த பாதாம் பிசின், வறுத்த வேர்கடலை 2 ஸ்பூன், பசி தாங்க முடியாதவங்க அவல் 3 ஸ்பூன் சேர்த்துக்கோங்க.....


காலை 8 to 9


சோளப்பால்


முளைகட்டிய சோளம் 2 ஸ்பூன்,  ஒரு தேங்காய் சில் 1, ஏலக்காய் 1, வெல்லம்  ஒரு ஸ்பூன், அரைத்து வடிகட்டி குடிக்கவும் ( இரும்பு சத்துள்ளது சோளம் )


மதியம்


மசாலா அவல்


அலசி எடுத்த வெள்ளை அவல் ஒரு கைப்பிடி, 3 சின்ன வெங்காயம் பொடியா நறுக்கியது, தக்காளி 1 முக்கால் காய்பதம், பொடியா நறுக்கிய முடக்கற்றான் கீரை ஒரு ஸ்பூன், மிளகு தூள் சீரகத்தூள், முளைகட்டிய சுண்டல், பாசிபயறு சேர்க்கவும்......இதில் அரைத்து சேர்க்க மிளகாய் 1, இஞ்சி 1 துண்டு, பூண்டு 1 பல், கொத்தமல்லி இலை 1 ஸ்பூன் அரைத்து இதோடு கலந்து 10 நிமிடம் ஆனதும் சாப்பிடவும்....


தக்காளி ஸ்வீட்


தக்காளி 1, பேரீச்சை 2, முந்திரி 2, எலுமிச்சை சாறு 1/4 ஸ்பூன், இஞ்சி 1/4 ஸ்பூன் அல்லது ஏலக்காய் ஒரு சிட்டிகை, இதோடு 1/2 ஸ்பூன் வெல்லம் சேர்த்து பிசைந்து 10 நிமிடம் வைத்து சாப்பிடவும்....


மாலை


எலுமிச்சை சாறுடன் ஊறவைத்த சப்ஜா விதை, பனங்கற்கண்டு சேர்த்து குடிக்கவும்


இரவு


வாழைப்பழ பேடா, 


வட்டமா நறுக்கிய வாழைப்பழம், அதோடு துருவிய தேங்காய், வெல்லம், ஏலக்காய் ஒரு சிட்டிகை கலந்து சாப்பிடவும்....


பூக்குளியல்


துளுக்க சாமந்திப்பூ இதழ்களை எடுத்து அலசி மைபோல் அரைச்சு பூசி குளிக்கவும் தலைக்கு பூச வேண்டாம்..   


இந்த லேசா கலர் இருப்பதுபோல் தெரியும், ஆண்கள் கற்றாழை ஜெல் போட்டு குளிக்கலாம்...


* பச்சை வேர்கடலை 2 ஸ்பூன் ஊறவைக்கவும்...

5 ம் நாள் வியாழக்கிழமை க்கான உணவு பதிவு


காலை 6 to 7


மாதுளை சாலட்


மாதுளை 1, சி. வெங்காயம் 2 பொடியா நறுக்கியது, தேங்காய் துருவல் 3 ஸ்பூன், பச்சை மிளகாய் 1, பொடியா நறுக்கிய கறிவேப்பிலை 1 ஸ்பூன், தூதுவளை 2 இலை பொடியா நறுக்கியது,  கடாயில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி, கடுகு உளுந்து போட்டு தாளித்து, பச்சை மிளகாய் கறிவேப்பிலை , தூதுவளை போட்டுஅதோடு மாதுளை அடுத்து தேங்காய் துருவல் ஒரு சிட்டிகை உப்பு போட்டு 1 நிமிடம் ஒரு பிரட்டு பிரட்டி அடுப்பை அணைத்துவிடவும்......

இதில் அறுசுவையும் கிடைக்கும், காலையும், இரவும் இந்த உணவு உண்ணலாம்.....


காலை 8 to 9


வெள்ளரிக்காய் இனிப்பு சாலட்


வெள்ளரிக்காய் தோலோடு வட்டமா நறுக்கி வைச்சிக்கோங்க, அதில் 2 ஸ்பூன் முளைகட்டிய பச்சை வேர்கடலை, தேங்காய் துருவல் 2 ஸ்பூன், சுக்குப்பொடி ஒரு சிட்டிகை, கருபட்டி சாறு 1 ஸ்பூன் கலந்து சாப்பிடவும்.....


மதியம்


வெள்ளைபூசணி தயிர் சாதம்


வெள்ளை பூசணிகாயை துருவி அதில் வரும் நீரை பிழிந்து எடுத்துடுங்க, பூசணி துருவலோடு அதே அளவு அலசி எடுத்த அவல் சேர்த்து, மூழ்கும் அளவு தேங்காய் பால் ஊற்றி எலுமிச்சை சாறு 2 ஸ்பூன், இஞ்சி துருவல் 1/4 ஸ்பூன், பொடியா நறுக்கிய பச்சை மிளகாய் 1, உப்பு ஒரு சிட்டிகை பொடியா நறுக்கிய கறிவேப்பிலை மல்லி....இதோடு வறுத்த வேர்கடலை 2 ஸ்பூன் அல்லது மாதுளை 2 ஸ்பூன் சேர்த்து, ஒரு மணி நேரம் ஆனதும் உண்ணலாம்.....தினமும் காலை உணவாக இந்த தயிர் சாதம் எடுத்துக்கொண்டால் அல்சர் சரியாகும், திரும்பவும் வராது....


கோவைக்காய் ஊறுகாய்


இரண்டு பிஞ்சி கோவைக்காயை பொடியா நறுக்கி, ஒரு சிட்டிகை இந்துப்பு, அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு, மிளகு சீரகத்தூள் போட்டு 10 நிமிடம் ஆனதும் சாப்பிடவும்.....தோல் நோய், கர்பப்பை சம்மந்தமான நோய் குணமாகும்...


சப்ஜா விதை ஷேக்


சப்ஜா விதை 1 ஸ்பூன், தேங்காய் பால் 1 கப், வாழைப்பழம் 1..... தேங்காய்பாலில் வழைபழத்தை மசித்து போட்டுக்கோங்க, அதோடு ஊறவைத்த சப்ஜா விதை போட்டு கலந்து, திராட்சை, முந்திரி, பேரீச்சை பொடியா நறுக்கி போட்டு சாப்பிடவும்....


இரவு


சிவப்பு அவல் ஒரு கப், கறுப்பு திராட்சை 1/4 கப், தேங்காய் துருவல் 3 ஸ்பூன், மாதுளை 1/4 கப், அலசி ஊறவைத்து எடுத்த அவல், அதோடு 10 நிமிடம் உப்பு நீரில் ஊறவைத்து எடுத்த உலர் திராட்சை, இதோடு மாதுளை முத்துக்கள், தேங்காய் துருவல் சுவைக்கு வெல்லம் தேவைபட்டால் சேர்த்து உண்ணவும்.......



காலை குளியல்


செம்பருத்தி இதழ்கள் மட்டும் எடுத்து அலசி மைபோல் அரைத்து குளிக்கவும்.....



இன்றுடன் இயற்கை உணவு பதிவு நிறைவடைகிறது....நாளை மாலை 6 மணிக்கு மேல் இந்த உணவுகளின் நிறை குறை பதிவுகள் அவசியம் தேவை 🙏🤝.....மருந்தில்லா மருத்துவம் நோக்கிய நம் பயணம் தொடரட்டும், எவ்வளவு பணம் நம் கையில் கொட்டிக்கிடந்தாலும் ஆரோக்கியம் நிம்மதி இந்த அற்புத உடலை பொருத்தே அமையும்.....நோயின்றி வாழ காய்கனிகளை முதல் உணவாக உண்போம்.....


* இந்த 5 நாளில் நாம் உண்ட காய்கறி, கீரைகள் நம் வீட்டுத்தோட்டத்தில் விளைந்ததாக இருந்தால் 100% நன்மை கிடைக்கும்....நன்றி