இன்றைய பயிற்சி கண்களுக்கானது eye practice

 அனைவருக்கும் வணக்கம் 🙏


இன்றைய பயிற்சி கண்களுக்கானது, எந்த செலவும் இல்லாதது....நம் கைகளை மட்டும் உபயோகித்தால் போதுமானது....இன்று ஒரு நாள் செய்ங்க....


செய்தவங்க உங்கள் அனுபவங்களை சொல்லி மாலை பயன் என்ன னு கேளுங்க சொல்கிறேன்....


* இரண்டு மணிநேரத்திற்கொருமுறை, கண்களை மூடி,  இரண்டு கைகளையும் குவித்து கண்ணின் மேல் வைத்து....60 எண்ணிக்கை எண்ணவும்.....



* இரண்டு மணநேரத்திற்கொரு முறை என்பது இன்று முழுக்க 6 முறை வரும்....

அனைவருக்கும் வணக்கம் 🙏

காலையில் நாம் செய்த கண் பயிற்சிக்கான பலன்கள்

* நாம் செய்தது கண்களுக்கான யோகா பயிற்சி... ( palming yoga )...

* உள்ளங்கையில் கண்ணை அழுத்தாமல் மறைத்து, வலதுகையை வலது கண்ணிலும், இடது கையை இடது கண்ணிலும்  வைத்து  2 நிமிடம் இருக்கவேண்டும் ( 120 நொடிகள் ).....

பயன்கள்

* கண்கள் ஓய்வு எடுத்து புத்துணர்ச்சி பெறும்

* கண் நீர் அழுத்த நோய் ( glaucoma )  சரியாகும்
* கண்புரை நோய் சரியாகும்

ஒரு நாளைக்கு 6 முறை செய்யவேண்டும்

எனதனுபவம்

கண்களை மூடி திறக்கும் போது ஒரு மலர்ச்சி, புத்துணர்ச்சி கிடைத்தது

Spoon feeding எப்படி சாப்பிடனும் என்பதற்கான பதிவு

 நன்றாக மென்று முழுங்கும் வரை,   கையில் அடுத்த உணவை எடுத்து வாயில் வைக்க கூடாது என்பதற்கான பதிவு .....


* விருப்பமுள்ள அனைவரும் செய்ங்க... ஆரோக்கியமா 100 ஆண்டுகள் வாழ நினைப்பவர்கள் செய்யும் எளிமையான,  எந்த வித செலவும் இல்லாத செயல் இது, நாமும் செய்வோம்....ஆரோக்கியமாக வாழ்வோம், 💐 பதிவு 👇



திப்பிலி (Piper Longum) மிளகிற்க்கு அண்ணன் இதன் இலைகளோ வெற்றிலைக்கு தம்பி

 


பழங்காலமாக நம் சமையல் அறையில் இருந்தது திப்பலி  மிளகாய் வந்தவுடன் நம்மிடம் இருந்து வெளியேறிவிட்டது தற்செயலா திட்டமிடபட்டதா என தெரியவில்லை மிளகாய் திப்பிலி இரண்டிலுமே காரம் இருக்கிறது ஆனால் திப்பிலியில் மட்டுமே காரமும் கூடவே சாதாரண சளி முதல் ஆண்மையை அதிகரிப்பு வரை என ஏகபட்ட மருத்துவ குணம் இருக்கிறது


நம் காலசூழ்நிலையில் சாதாரணமாக வளரகூடிய கொடிதாவரம் இது..வீட்டிலும் மொட்டமாடியிலும் வளர்க்கலாம் எங்கள் வீட்டில் பல ஆண்டுகளாக திப்பிலி செடி வளர்க்கிறோம்..பழங்குடி மற்றும் கிராம மக்கள் அசைவ உணவிற்க்கு பின் திப்பிலி செடியின் இலையை மென்று சாப்பிடுவார்கள்,.இதன் இலை ஜீரண ஆற்றலை அதிகரிக்கும் அதனால்தான் வெற்றிலையின் தம்பி என்று முதல்வரியில் சொல்லியிருந்தென்


சளி,காசநோய், காய்ச்சல், கபம், கோழைச்சளி,   இருமல்,வாய்வுத் தொல்லை, வயிற்றுப் பொருமல், வறட்டு இருமல், இளைப்பு, களைப்பு,  வெள்ளைப் படுதல், போன்ற பிரச்சனைக்கு உணவிலும் சேர்த்துகொள்ளலாம் அல்லது பவுடர் செய்து மிளகு தூள் போல பயன்படுத்தலாம் ஆனால் மிளகைவிட காரம் அதிகம்,,திப்பிலி தூளை நெய் அல்லது நாட்டு சர்க்கரையுடன் சாப்பிட்டால் "அந்த

விசயத்தில் பலம் அதிகமாகும்


திப்பிலி பொடியை இரண்டு ஸ்பூன் எடுத்து வெற்றிலைசாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் சளி காய்ச்சல் இருமல் குணமாகும்

திப்பிலி பொடியுடன் சமஅளவு குப்பை மேனி இலையை நிழலில் உலர்த்தி  பொடி செய்து சேர்த்து சாப்பிட்டால் மூலம் பெளத்திர குணமாகும்

திப்பிலி 5 பங்கு தேற்றான் விதை  3 பங்கு இவை பொடி செய்து அரிசி கழுவிய  நீரில் காலை மாலை என இருவேளை மூன்று நாட்கள் சாப்பிட்டால் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் அதிகரித்து போகும் ரத்தபோக்கு  பிரச்சனை சரியாகும்.


திப்பிலியை தூக்கி வைத்து கொண்டாடலாம். வீட்டில் வளர்க்க தொடங்குகள்