கோவை ஆனைகட்டி சத்தர்சனில் அடுப்பில்லா சமையல் பயிற்சி முகாம் cooking without fire

 🌿🙏ஆத்ம வணக்கம்ங்க

பிப்ரவரி 12, 13, இரண்டு நாட்கள் நம்ம கோவை ஆனைகட்டி சத்தர்சனில்

அடுப்பில்லா சமையல் பயிற்சி முகாம்☀️🔥🌿

➖➖➖➖➖➖➖➖

🔹 நமது இல்லத்தில் ஆரோக்கியம் அளிக்கும் அடுப்பில்லா உணவுகளை தயாரிக்க...



🔸 இயற்கை அங்காடி, இயற்கை தயாரிப்பில் உணவகங்கள் அமைத்திட...


🟩 இயற்கை உணவு தயாரிப்பு ஆலோசகர் மற்றும் பயிற்சியாளராக...


🔆இந்த பயிற்சி ஒரு மாபெரும் வாய்ப்பாக அமைந்துள்ளது. இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.


🔺எளிய மலையேற்றம் பயிற்சி, மண்குளியல், தியானம் நுட்பங்கள் கற்றுதரப்படும்


பயிற்சியில் கற்றுக் கொள்ளும் நூற்றுக்கும் மேற்பட்ட இயற்கை உணவு முறைகள்:

🌼ஜூஸ் வகைகள்

🫐கீர் வகைகள்

🥥மில்க் ஷேக்

🥗சாலட் வகைகள்

🍛இயற்கை இட்லி

🥛இயற்கை பால், தயிர்

🍚உப்புமா, கிச்சடி,

🫑பிரியாணி

🍓லட்டு வகைகள்

🥒துவையல், பச்சடி 

🍵பொங்கல், சட்னி

🍹பானகங்கள்

🌽நொறுக்கு தீனிகள்

🌿மூலிகை சாறுகள்

இன்னும் பல...


இயற்கை சூழலில் தங்குமிடம் உணவு மற்றும் பயிற்சியில் கலந்து கொள்பவர் களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.


நாள் : பிப்ரவரி 11 வெள்ளிக்கிழமை மாலை 5 மணி முதல் , 13 ஞாயிறு மாலை 5 மணி வரை இரண்டு நாள் பயிற்சி முகாம்.


இடம் : சத்தர்சன் ஆஸ்ரமம்

ஸ்டெர்லிங் ரிசார்ட் அருகில்,

வடகொட்டத்தரா, கேரளா. ஆனைகட்டி வழி.


முன்பதிவு விபரங்களுக்கு


ஸ்ரீ பதஞ்சலி ஈஸ்வரன்

ருதம்பரா பவுண்டேசன்

செல் 8610823072🥗🌼🪴

வயிறு சுத்தம் செய்திட மாத்திரை போடாமல் இயற்கை முறை Stomach cleaning without Tablet/hospital

 1.      4 கடுக்காய் விதை நீக்கி தோலை எடுத்து சுத்தம் செய்து 2 டம்ளர் நீரில் கொதிக்கவைத்து ஒரு டம்ளர் ஆனபின்பு ஆறவைத்து வெறும் வயிற்றில் காலையில் குடிக்க வேண்டும், கடுக்காய் கஷாயம் எடுக்கும் நாட்களில் காலை கஞ்சி உணவு நல்லது அசைவம் தவிர்ப்பதும் நல்லது. (ஆறு மாதங்களுக்கு ஒரு  முறை  போதும்)

2.        வெகு வெதுப்பான நீரில் (1-2லிட்டர்) ஒரு எலுமிச்சை பழச்சாறு கலந்து கல் உப்பு கலந்து விடிய காலை மெதுவாக குடிக்கலாம். உப்பு சிறிது கரித்தாற்போல் இருந்தால் நல்லது. பிறகு வீட்டிற்குள்ளேயே சில நிமிடம் நடந்தால் உடனே வந்துவிடும்

3. 1L 200 ml வெதுவெதுப்பான குடிக்கும் நீரில் (கண்ணீர் உப்பு அளவு )கல் உப்பு கலந்து மெதுவாக குடிக்கவும். அதிகாலை வெறும் வயிற்றில் உள்ள போதுதான் எடுக்க வேண்டும். பின்னர் தாடாசனா செய்யலாம். கழிவு 3,4முறை வெளியேறிய பின்னர் வெதுவெதுப்பான நீர் 1டம்ளர் குடிக்கவும். திரும்பவும்2, 3 முறை வெளியேறும்.  சிறுநீர் போன்று போகும் போது நிறுத்த நாட்டு சக்கரை கலந்த நீர் 1டம்ளர் குடிக்கவும். நின்று விடும். இதை செய்யும்  அன்று மிதமான கஞ்சி வகைகள் சிறந்தது. குளிர்ச்சியான வை தவிர்க்கவும். அசைவ உணவு தவிர்க்கவும்.

ஜல நேர்த்தி ( மூக்கு கழுவுதல் ) Nose cleaning Method

 அனைவருக்கும் வணக்கம் 🙏


ஜல நேர்த்தி ( மூக்கு கழுவுதல் )


இதைபற்றி நிறைய சந்தேகம் அனைவரும் கேட்டதால் மீண்டும் இந்த பதிவு 👇


மருந்து மாத்திரை இல்லாமல்,  


எந்த பத்தியம் இல்லாமல்...


சாதாரண நீரை வைச்சு சளியை அகற்றலாம்.....


இதற்கு 30 ரூபாய் மூக்குகுவளை போதுமானது   


நம்பிக்கையா தொடர்ந்து செய்யனும்


கடைபிடிக்கும் முறைகள் 👇


குவளையில் முக்கால் பங்கு தண்ணீர், 2 கல் உப்பு போட்டு, நம் கண்ணீரின் அளவு சூடா நீர் வைச்சிக்கோங்க, உப்பு கரையனும்....


அடுத்து மூக்கு கழுவ ஆரம்பிக்கும்முன் செய்யவேண்டியது 👇


* செய்யும்போது மூக்கில் அடைப்பு இருக்க கூடாது,  இருந்தா காது, மண்டை க்கு நீர் ஏறிடும் ஒரு வித எரிச்சல் இருக்கும்,  உயிருக்கு ஆபத்து இருக்காது,  சிறிது நேரத்தில் சரியாகிடும்....


எப்படி மூக்கடைப்பை சரிசெய்துட்டு செய்யறது 👇


வேகமான மூச்சுபயிற்ச்சி செய்துட்டு மூக்கு கழுவ ஆரம்பிக்கனும், குழுவில் பலமுறை சொல்லியிருக்கேன்....


இல்லேனா குதிச்சாலும் மூக்கடைப்பு சரியாகும்....


மூக்கடைப்பு சரியானதும்👇


L வடிவத்தில் குனிந்து தலையை சாய்த்து, நாக்கை வெளியே நீட்டி வாய்வழி மூச்சைவிட்டு 10 முறை பழகவும்....


அதுக்கப்புறம் மூக்கு கழுவும் குவளையை வலது மூக்கில் வைத்து சாய்க்கவும்,  தண்ணீர் இடது மூக்குவழியா வரும், 


தண்ணி உள்ள போகும் போது மூக்குவழியா மூச்சுவிட கூடாது, வாய்வழியாதான் விடனும்..  


இரண்டு மூக்கிலும் நீர் விட்டு வெளியேற்றனும்.....



வாய்வழியாகவும்,  மூக்குவழியாகவும் சளி வெளியே வரும்,  அதனால் அதற்கான இடத்தில் நின்றுகொள்ளவும்......


செய்து முடித்ததும் பஸ்திரிகா பயிற்ச்சி கட்டாயம் செய்யனும்....மூக்கில் உள்ள அனைத்து நீரும் வெளியே வரனும்....



பயன்கள்


*முகம் நெற்றி மண்டை அனைத்து பகுதியில் உள்ள சளி வெளியேறிடும்


* மூச்சு சீரானா தூக்கம் நல்லா வரும்


*நல்லா தூங்கினா மனசு நல்லா இருக்கும்


* மனசு நல்லா இருந்தா கோபம் வராது


* கோபம் வரலனா, மனசு ஓருநிலைபட்டு நம்ம சமுதாயத்துக்கு ஏதாவது செய்யனும்னு தோனும்....


* உலகம் அமைதிபெறும்...நாமும் அதில் நிம்மதியா வாழலாம்.......

by Ajitha madam