Showing posts with label farming proverb. Show all posts
Showing posts with label farming proverb. Show all posts

நம் பண்டைய விவசாயப் பழமொழிகள் Farming proverbs

 🌝 புற்று கண்டு கிணறு வெட்டு

🌝 வெள்ளமே ஆனாலும் பள்ளத்தே பயிர் செய் 

🌝 காணி தேடினும் கரிசல் மண் தேடு

🌝 களர் கெட பிரண்டையைப் புதை 

🌝 கெட்ட நிலத்துக்கு எட்டு வன்னி 

🌝 நன்னிலம் கொழுஞ்சி 

🌝நடுநிலம் கரந்தை 

🌝கடை நிலம் எருக்கு

🌝 களரை நம்பி கெட்டவனும் இல்லை மணலை 🌝நம்பி வாழ்ந்தவனும் இல்லை

🌝 புஞ்சைக்கு நாலு உழவு நஞ்சைக்கு ஏழு உழவு 

🌝 குப்பை இல்லாத வெள்ளாமை சப்பை

🌝 ஆடு பயிர் காட்டும் ஆவாரை கதிர் கட்டும் 

🌝 கூளம் பரப்பி கோமியம் சேர்

🌝 ஆற்று வண்டல் தேற்றும் பயிரை 

🌝 காய்ச்சலும் பாய்ச்சலும் வேண்டும் 🌝

🌝மார்கழி மழை மண்ணுக்கு உதவாது 

🌝 தை மழை நெய் மழை

🌝 கோரையை கொல்ல கொள்ளுப் பயிர் விதை 

🌝 பாரில் போட்டாலும் பட்டத்தில் போடு

🌝 ஆடி ஐந்தில் விதைத்த விதையும் புரட்டாசி 

பதினைந்தில் நட்ட நடவும் பெரியோர்கள்

வைத்த தனம் 

🌝 கலக்க விதைத்தால் களஞ்சியம் நிறையும். 🌝 அடர விதைத்தால் போர் உயரும்

நம் மூத்த முன்னோர் சொல்மிக்க மந்திரமில்லை.

அன்புடன்

உங்கள் விவசாய நண்பன்