ஜல நேர்த்தி ( மூக்கு கழுவுதல் ) Nose cleaning Method

 அனைவருக்கும் வணக்கம் 🙏


ஜல நேர்த்தி ( மூக்கு கழுவுதல் )


இதைபற்றி நிறைய சந்தேகம் அனைவரும் கேட்டதால் மீண்டும் இந்த பதிவு 👇


மருந்து மாத்திரை இல்லாமல்,  


எந்த பத்தியம் இல்லாமல்...


சாதாரண நீரை வைச்சு சளியை அகற்றலாம்.....


இதற்கு 30 ரூபாய் மூக்குகுவளை போதுமானது   


நம்பிக்கையா தொடர்ந்து செய்யனும்


கடைபிடிக்கும் முறைகள் 👇


குவளையில் முக்கால் பங்கு தண்ணீர், 2 கல் உப்பு போட்டு, நம் கண்ணீரின் அளவு சூடா நீர் வைச்சிக்கோங்க, உப்பு கரையனும்....


அடுத்து மூக்கு கழுவ ஆரம்பிக்கும்முன் செய்யவேண்டியது 👇


* செய்யும்போது மூக்கில் அடைப்பு இருக்க கூடாது,  இருந்தா காது, மண்டை க்கு நீர் ஏறிடும் ஒரு வித எரிச்சல் இருக்கும்,  உயிருக்கு ஆபத்து இருக்காது,  சிறிது நேரத்தில் சரியாகிடும்....


எப்படி மூக்கடைப்பை சரிசெய்துட்டு செய்யறது 👇


வேகமான மூச்சுபயிற்ச்சி செய்துட்டு மூக்கு கழுவ ஆரம்பிக்கனும், குழுவில் பலமுறை சொல்லியிருக்கேன்....


இல்லேனா குதிச்சாலும் மூக்கடைப்பு சரியாகும்....


மூக்கடைப்பு சரியானதும்👇


L வடிவத்தில் குனிந்து தலையை சாய்த்து, நாக்கை வெளியே நீட்டி வாய்வழி மூச்சைவிட்டு 10 முறை பழகவும்....


அதுக்கப்புறம் மூக்கு கழுவும் குவளையை வலது மூக்கில் வைத்து சாய்க்கவும்,  தண்ணீர் இடது மூக்குவழியா வரும், 


தண்ணி உள்ள போகும் போது மூக்குவழியா மூச்சுவிட கூடாது, வாய்வழியாதான் விடனும்..  


இரண்டு மூக்கிலும் நீர் விட்டு வெளியேற்றனும்.....



வாய்வழியாகவும்,  மூக்குவழியாகவும் சளி வெளியே வரும்,  அதனால் அதற்கான இடத்தில் நின்றுகொள்ளவும்......


செய்து முடித்ததும் பஸ்திரிகா பயிற்ச்சி கட்டாயம் செய்யனும்....மூக்கில் உள்ள அனைத்து நீரும் வெளியே வரனும்....



பயன்கள்


*முகம் நெற்றி மண்டை அனைத்து பகுதியில் உள்ள சளி வெளியேறிடும்


* மூச்சு சீரானா தூக்கம் நல்லா வரும்


*நல்லா தூங்கினா மனசு நல்லா இருக்கும்


* மனசு நல்லா இருந்தா கோபம் வராது


* கோபம் வரலனா, மனசு ஓருநிலைபட்டு நம்ம சமுதாயத்துக்கு ஏதாவது செய்யனும்னு தோனும்....


* உலகம் அமைதிபெறும்...நாமும் அதில் நிம்மதியா வாழலாம்.......

by Ajitha madam

எடையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புபவர்கள் புடலங்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வரவேண்டும் Healthy Snake guard

 புடலங்காயை நாம் ஒரு மூலிகை என்பதை அறியாமலே பயன்படுத்தி வருகிறோம். இதில் உள்ள விதைகளை நீக்கி சதைப்பகுதியை மட்டும் பயன்படுத்தவேண்டும். புடலங்காயை பச்சை பயிறு சேர்த்து கூட்டாக செய்து தொடா்ந்து 12 நாட்கள் இடைவெளி விட்டு ஒரு மண்டலம் சாப்பிட்டுவர மூல நோயின் தாக்கம் குறைந்து மூலம் கருகி விழுந்துவிடும்.


எடையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புபவர்கள் புடலங்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வரவேண்டும். இதனால் உடலில் உள்ள தேவையற்ற உப்பு நீரை வியர்வை சிறுநீர் மூலம் வெளியேற்றும்.


அதிக உடல் சூட்டால் மஞ்சள்காமாலை நோய் ஏற்பட்டால் அவர்கள் புடலங்கொடியின் இலைகளை கைப்பிடி அளவு எடுத்து அதனுடன் அதே அளவு கொத்தமல்லி சேர்த்து 300மிலி தண்ணீரில் கொதிக்கவைத்து அந்த தண்ணீரை வடிகட்டி மூன்று வேளை குடித்து வந்தால் மஞ்சள்காமாலை கட்டுப்படும்.


இதய கோளாறு உள்ளவர்கள் புடலை இலையின் சாறு எடுத்து நாள்தோறும் 2 தேக்கரண்டிவீதம் வெறும் வயிற்றில் 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் இதயநோய்கள் அனைத்தும் நீங்கும்.


புடலையின் வேரை கைப்பிடி எடுத்து மைய அரைத்து சில துளிஅளவு வெந்நீரில் விட்டு குடித்து வந்தால் மலமிளகி வயிற்றில் உள்ள பூச்சிகள் வெளியேறும்.


புடலங்காயை பொறியல் செய்து சாப்பிட நரம்புகளுக்கு புத்துணர்வு கிடைக்கும். நினைவாற்றல் அதிகரிக்கும். நீரிழிவு உள்ளவர்கள் புடலங்காயை எந்த வகையிலாவது சேர்த்துவர அனைத்து வகையான சத்துக்களும் அவர்களுக்கு கிடைக்கும்.


கடும் காய்ச்சல் உள்ளவர்கள் வெட்டிய புடலங்காய் 250கிராம் எடுத்து 300மிலி தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி 200மிலி குடித்தால் ஒரே நாளில் காய்ச்சல் இயற்கையாக நீங்கும்....

குட்டி கதை உங்கள் வழ்க்கையை மாற்றும் A short story which will change your life

 கடற்கரை ஓரமாக பெரிய மரம் ஒன்று வளர்ந்திருந்தது. அதன் கிளை ஒன்று மிக நீண்டு கடல் நீருக்கு மேலாக நீட்டிக் கொண்டிருந்தது. அதன் உச்சியில் கடற்குருவி ஒன்று கூடு கட்டியது. அதனுள் நாலைந்து முட்டைகளை இட்டு அடைகாத்து வந்தது. ஆண் குருவியும் பெண் குருவியும் அதே கூட்டில் வசித்தபடி தங்கள் குஞ்சுகள் வெளிவரும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தன.


ஒரு நாள் பெரும் காற்று வீசியது. பெரிய அலைகள் பொங்கி எழுந்தன. கிளையில் இருந்த கூடு நழுவி காற்றின் வேகத்தில் கடலில் விழுந்து மூழ்கியது. குருவிகள் மனம் பதறிக் கதறின. கடல் நீரில் விழுந்து கூடு மூழ்கிய இடத்திற்கு மேலாக கீச், கீச் என்று கத்தியபடியே சுற்றிச் சுற்றி வந்தன.


பெண் குருவி மனம் உடைந்து சொல்லியது. எப்படியாவது முட்டைகளை மீண்டும் நான் காண வேண்டும். இல்லையேல் நான் உயிர் வாழ மாட்டேன் என்றது .


ஆண் குருவி சொன்னது. அவசரப்படாதே ஒரு வழி இருக்கிறது. நமது கூடு கரையின் ஓரமாகத் தான் விழுந்துள்ளது. கூட்டுடன் சேர்ந்து முட்டைகள் விழுந்ததால் நிச்சயம் உடைந்திருக்காது. அதனால் இந்த கடலிலுள்ள தண்ணீரை வற்றவைத்து விட்டால் போதும். முட்டைகளை நாம் மீட்டுவிடலாம்.என்று பெண் குருவிக்கு தன்னம்பிக்கை ஊட்டியது .


கடலை எப்படி வற்றவைப்பது?


முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிவர இன்னும் பல நாட்கள் ஆகலாம். எனவே நாம் இடைவிடாமல் சில நாட்கள் முயல வேண்டும். நம் வாயில் கொள்ளும் மட்டும் தண்ணீரை எடுத்துக் கொண்டு பறந்து சென்று தொலைவில் கொட்டுவோம். மறுபடியும் திரும்பி வந்து மீண்டும் நீரை நிரப்பிக் கொண்டு போய் தொலைவில் உமிழ்வோம். இப்படியே இடைவிடாமல் செய்து கடல் நீரை வேறு இடத்தில் ஊற்றினால் கடல் நீர் மட்டம் குறைந்து தரை தெரியும். நமது முட்டைகள் வெளிப்படும்.


இதையடுத்து இரண்டு குருவிகளும் தன்னம்பிக்கையுடன் ஊக்கத்துடன் செயலில் இறங்கின. விர்ரென்று பறந்து போய் தங்களது சிறிய அலகில் இரண்டு விழுங்கு நீரை நிரப்பிக் கொண்டன. பறந்து சென்று தொலைவில் போய் உமிழ்ந்தன. மீண்டும் பறந்து வந்து இரண்டு வாய் தண்ணீரை அள்ளின. கொண்டுபோய் தொலைவில் கக்கின.


இப்படியே இரவு பகல் நாள் முழுவதும் இடைவிடாமல் நடந்து கொண்டிருந்தது, இவற்றின் நீர் அகற்றும் படலம்.


அப்போது அந்தக் கடற்கரை ஓரமாக முனிவர் ஒருவர் நடந்து வந்து கொண்டிருந்தார். மகா சக்திகள் நிறைந்த மகான் அவர். ஆளில்லாத அந்தப் பகுதியில் கீச் கீச் என்ற சப்தம் கேட்கவும் அவர் திரும்பிப் பார்த்தார். இரண்டு குருவிகள் பறந்து போவது கண்டு சிரித்தபடி மேலே நடந்தார்.


மீண்டும் கீச் கீச் என்ற சப்தம். குருவிகள் கடலுக்கு மேல் பறந்தன. எதையோ அள்ளின. மீண்டும் பறந்தன. இப்படி பலமுறை நடைபெறவும், முனிவருக்கு வியப்பு. கடலில் இருக்கும் எதைக் கொத்துகின்றன இவை? அங்கு இரை ஏதும் இல்லையே என்று நினைத்தார் அவர்.


உடனே அந்த மகான் கண்களை மூடினார். உள்ளுக்குள் அமிழ்ந்தார். மறுகணம் அவர் மனதில் எல்லா நிகழ்ச்சிகளும் படம்போல் ஓடின. அவர் மனம் உருகியது. முட்டைகளை இழந்த தாயின் தவிப்பும் கடலையே வற்ற வைத்தாவது முட்டைகளை மீட்க வேண்டும் என்ற அதன் துடிப்பும் அவரது உள்ளத்தை நெகிழச் செய்தன.


உடனே தனது தவ பலத்தை ஒன்று திரட்டிய முனிவர் கையை உயர்த்தினார். மறுகணம் கடல் சில அடிகள் பின் வாங்கியது. அங்கே கூட்டுடன் இருந்த முட்டைகள் தென்பட்டன. குருவிகள் அதைப் பார்த்து குதூகலத்துடன் கீச்சிட்டன. ஆளுக்கொன்றாக முட்டைகளை பற்றிக் கொண்டு போய் வேறிடத்தில் சேர்த்தன.


நான் அப்போதே சொன்னேன் பார்த்தாயா? நமது ஒரு நாள் உழைப்பில் கடல் நீரை குறைத்து முட்டைகளை மீட்டு விட்டோம் பார்த்தாயா? என்றது ஆண் குருவி பெருமிதமாக.


முனிவர் சிரித்தபடி தொடர்ந்து நடந்தார். இங்கே குருவிகள் முட்டைகளை மீட்டது அவற்றின் உழைப்பாலா? இல்லை. முனிவரின் அருளால். ஆனால் அந்தக் குருவிகளுக்கு முனிவர் என்ற ஒருவரைப் பற்றியோ தவ வலிமை என்றால் என்ன என்பது பற்றியோ, எதுவுமே தெரியாது.ஆனால் தன்னம்பிக்கையுடன் கடல் நீரை அள்ளின .


அதே சமயம் குருவிகள் மட்டுமே கடல் நீரை மொண்டு சென்று ஊற்றிக் கொண்டிருக்காவிட்டால் முனிவர் தம் வழியே போயிருப்பார்.

அவரை மனம் நெகிழ வைத்தது எது? அவற்றின் உழைப்பும் முயற்சியும்தான். ஆக இங்கே முட்டைகள் மீட்கப்பட்டது, குருவிகளாலும் தான். முனிவராலும் தான். முனிவரின் ஆற்றல் அவற்றுக்குப் பக்க பலமாக வந்து சேர்ந்தது. குருவிகளின் உழைப்புத்தான் அதற்கு அடிப்படையாக அமைந்தது.


அன்பு நண்பர்களே .

எல்லையில்லா ஆற்றல் பெற்றவர்களே,


இளமைப் பருவம் வாழ்வின் இன்றியமையாப் பருவம்.

பருவத்தே பயிர் செய் என்பார்களே. இளமையில் வியர்வை சிந்தாவிட்டால் முதுமையில் கண்ணீர் சிந்த

வேண்டி இருக்கும்.


எனவே விழித்திருக்கும் நேரமெல்லாம் உழைத்துக் கொண்டிருங்கள்.

வாழ்வில் எல்லா நேரமும் நல்ல நேரம்தான்.

உழைக்காத நேரம்தான் ராகு காலம்.


திட்டமிடுங்கள். ஒவ்வொன்றையும் திட்டமிடுங்கள். உழைத்திடுங்கள் .


வாடா மல்லிக்கு வண்ணம்

உண்டு வாசமில்லை,


வாசமுள்ள மல்லிகைக்கோ

வயது குறைவு.


வீரமுள்ள கீரிக்கு கொம்பில்லை,


கொம்புள்ள கடமானுக்கோ

வீரம் இல்லை.


கருங்குயிலுக்குத்

தோகையில்லை..


தோகையுள்ள மயிலுக்கோ

இனிய குரலில்லை.


காற்றுக்கு

உருவமில்லை..


கதிரவனுக்கு நிழலில்லை


நீருக்கு நிறமில்லை


நெருப்புக்கு ஈரமில்லை


ஒன்றைக் கொடுத்து

ஒன்றை எடுத்தான்,


ஒவ்வொன்றிற்கும் காரணம்

வைத்தான்,


எல்லாம் இருந்தும் எல்லாம்

தெரிந்தும் கல்லாய் நின்றான்

இறைவன்.


அவனுக்கே இல்லை,

அற்பம் நீ உனக்கெதற்கு

பூரணத்துவம்?

எவர் வாழ்விலும் நிறைவில்லை

எவர் வாழ்விலும்  குறைவில்லை

புரிந்துகொள்...


🙏💐💐💐🙏