இரண்டு நாள் இயற்கைவாழ்வியல் பயணம் Two days natural way of life

அனைவருக்கும் வணக்கம் 🙏

*அதிகாலை அலாரம் இல்லாமல் கண்விழிப்பு
* 3 டம்ளர் தண்ணீர் குடிப்பது
* தடாசணம்
* காலைகடன்
* மூலிகை பல்பொடி வைத்து பல் விலக்குதல்
* பித்த நீர் கழிவு நீக்கம்
* கண் கழுவுதல்
* தலைக்குளியல்
* உடல் பயிற்சிகள்
* பஞ்சபூத சக்தி வணக்கம்
* சூரியனை வணங்குதல்
* உமிழ்நீரோடு உணவை மென்று முழுங்குதல்
* கண்பயிற்சிகள்
* இரவு தூங்கும்முன் பயிற்சி

( இவைகள் தினமும் தொடரவும் 👆 )

மேலும் ....

* வாரம் இருமுறை எண்ணெய் குளியல்
* மாதம் ஒரு முறை இரைப்பை சுத்தம்
* வாரம் 3 முறை மூக்கு கழுவுதல்
* மாதம் ஒரு முறை நீர்தாரா
* 3 மாதத்திற்கு ஒரு முறை குடல் சுத்தம்
* 6 மாதத்திற்கு ஒரு முறை மண் குளியல்
* வாரம் ஒரு முறை 16 மணிநேர விரதம்

இந்த பயிற்சிகள் எல்லாம் உங்களுக்கு சொல்லியாச்சு தொடர்ந்து செய்ங்க, தொடர்ந்து செய்யும் போது நீங்க ஒரு பயிற்சியாளராக ஆகமுடியும்,

 நாம் உணர்ந்து செய்யும்போதுதான் மற்றவர்களுக்கு சொல்லமுடியும், 

மருந்தில்லா, செலவில்லா எளிமையான மருத்துவ முறை இது, கழிவுகளின் தேக்கம் தான் நோய், அவைகளை வெளியேற்ற இவ்வளவு வழி நம் முன்னோர் சொல்லிவைச்சிருக்காங்க, அதை தொடர்ந்து செய்வோம் பலன்பெறுவோம்....நம்மோடு 100 பேர் நின்றாலும் நாம் ஆரோக்கியமாக இருந்தால் தனித்து தெரிவோம், ஒரு ஒளிவட்டம் நம்மைசுற்றி இருக்கும்...நம்ம குழு நண்பர்களிடம் அதை நிறையவே பார்க்கிறேன்.....நன்றி....

வாழை இலை குளியல் ( தோல் கழிவு நீக்கம் ) அடுத்தமாதம் ஒரு நாள் செய்முறை விளக்கங்களுடன் சொல்கிறேன்,

மிளகு கற்பம் Pepper formula

 மிளகு கற்பம்.      

மிளகு கற்பம் எடுத்துக்கொள்ள தகுதியானவர்கள் பேதி மருந்து எடுத்து உடல் சுத்தம் செய்து இருக்க வேண்டும். இரண்டு நாள் இடைவெளிக்கு பின் காலை 5.30 எழுந்து பல்துலக்கிய பின் 300 to 400 ml வெண்ணீர் வாய் வைத்து சப்பி குடிக்க வேண்டும். பின் காலை கடன்களை முடித்தபின் வெண்ணீர் குடித்த மணியில் இருந்து 45 நிமிடம் கழித்து முதல் நாள்  ஒரு மிளகு, சிறிது மலைதேன் அல்லது கலப்படம் இல்லாத பனை வெல்லம் சிறிது சேர்த்து மென்று உண்ண வேண்டும்.

ஒவ்வொரு நாளும் ஒரு  மிளகு கூட்டி உண்ணவேண்டும்.  24 வது நாள் 24 மிளகு 25வது நாள் 24 மிளகு உண்ணவேண்டும். பின் ஒரு ஒரு மிளகாக குறைத்து 48 வது நாள் ஒரு மிளகுடன் கற்பம் முடிக்கவேண்டும். மிளகு கற்பம் எடுத்துக்கொள்ளும் காலத்தில் புலால் உணவு உண்ண கூடாது. மேலும் ஊறுகாய், பொறித்த உணவுகள் , அவரைக்காய், கொத்தவரங்காய், கத்தரிக்காய் அளவு குறைத்து உண்ண வேண்டும். 

மோர் தேவையான அளவு குடிக்க வேண்டும். உடல் சூடு அதிகமாக உணர்பவர்கள் இளநீர், மாதுளை, தேவையான அளவு எடுத்துக்கொள்ள வேண்டும்.கீரை உணவு அதிகம் சாப்படவேண்டும.வல்லாரை கீரை எடுத்துகொள்வது பலனை கூட்டி தரும்.  தாய்மார்கள் ஓய்வு நாட்களிலும் மிளகு கற்பம் எடுத்துக்கொள்ளலாம். 

ஆண்கள் மது, புகை பான்பராக் பழக்கம் உள்ளவர்கள் அந்த பழக்கத்தை நிறுத்திய பின் அருகம்புல் சாறு ஒரு மண்டலம் எடுத்துக்கொள்ள வேண்டும். இதோடு மூன்று நாட்கள் கீழ்காய் நெல்லி சாறு, வில்வ சாறு , மணத்தக்காளி சாறு எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பின்புதான் மிளகு கற்பம் எடுத்துக்கொள்ள தகுதியானவர்கள் ஆவார்கள். இந்த முறையில் மிளகு கற்பம் எடுத்துக்கொள்பவரகள் முழு பலரையும் பெறலாம்.

மிளகு கற்பம்

திரு. தங்கபாண்டியன் ஐயாவின் பதிவு....

அனைவரும் இதை செய்யவேண்டும் என வேண்டி கேட்டுக்கொள்கிறேன், எளிமையான இன்றைய தேவைக்கு ஏற்ற மருந்து 👆

இயற்கை உணவுகள் healthy natural foods

 நாளை காலை உணவு


எலுமிச்சை 1/2 பழம், இஞ்சி 1/4 இன்ச், அரைச்சு வடிகட்டி தேன் அல்லது வெல்லம் கலந்து குடிக்கவும்


வாழைக்காய் பசும்பொரியல்


வாழைக்காய் தோல் நீக்கியது 1/4, சம அளவு தேங்காய் துருவல், ஒரு மணிநேரம் ஊறவைத்த பாசிபருப்பு ( தோல் நீக்கியது), மிளகுதூள், சீரகதூள் ஒரு சிட்டிகை, உப்பு ஒரு சிட்டிகை, கலந்து மல்லி இலை தூவி, எலுமிச்சை சில துளிகள் கலந்து 10 நிமிடம் ஆனதும் சாப்பிடவும்.....


மதியம்


அவல் உணவு


அவல் 100 கிராம் எடுத்து அலசி, சம அளவு தேங்காய் துருவல்,  வெல்லம், தோல் நீக்கிய வேர்கடலை சேர்த்து ....சாப்பிடவும்


மாலை


பேரீச்சை 2, அத்திப்பழம் 2, திராட்சை 10 ஒருமணிநேரம் ஊறவைத்து அரைத்து குடிக்கவும் ( ஒரு நபருக்கு )....


இரவு 7 மணிக்குள்


பழங்கள் ஒரே வகை பழம் ( பப்பாளி, மாதுளை, சப்போட்டா, மாம்பழம்) இப்படி ஏதாவது ஒன்று


முக்கிய குறிப்புகள்


* இயற்கை உணவு உண்ணும் போது,  தண்ணி நிறைய குடிங்க, உணவு சாப்பிடும்போது அல்ல, மற்ற நேரங்களில், தாகம் எடுக்காவிட்டாலும் குடிக்கனும்


* உணவு அளவு குறைவா இருக்கறமாதிரி தோனும், ஆனால் போதுமானது, 


* வாழைக்காய் சாப்பிட்டு அரைமணிநேரமாவது மற்ற உணவுக்கு இடைவெளி வேண்டும்...


* பசித்தால் பழங்கள் சாப்பிடுங்க, விதையுள்ள கறுப்பு திராட்சை சிறப்பு