இயற்கை வழியிலான உணவுகள் வழியிலான மலமிளக்கிகள் யாவை? What are the laxatives through natural foods?

 பப்பாளி, துத்தி, கீரை, வாழை, இயற்கை மலமிளக்கிகள்...

கடுக்காய் பொடி 1  தேக்கரண்டி  1 டம்பளர் நீரில் கரைத்து படுப்பதற்கு முன் குடிக்கவும்                

வெந்தயம்,  கருஞ்சீரகம், ஓமம் இவற்றை பொடியாக்கி1 தேக்கரண்டி 1 டம்பளர் நீரில் கரைத்து குடிக்கவும். இவற்றை குடித்தபிறகு எதுவும் சாப்பிட கூடாது.

 மற்றோரு செலவில்லாத முறை காலை எழுந்தவுடன் 2 பெரிய டம்பளர் நீரை குடிக்கவும் மலசிக்கல் என்பதே வராது 

 மாதுளை பழம் தோல் இரவில் ஊறவைத்து அதிகாலை அந்த நீரை வடிகட்டி சுமார் 400 ml   குடித்தால் நீண்ட நாள் கழிவுகள் வெளியேறும்.

 நெல்லிக்காய் சாறு அதிகாலை குடித்தால் தேங்கியுள்ள கழிவுகளும் வெளியேறும்.

சாம்பாருக்கு பருப்பு வேகவைக்கும் போது ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய் ஊற்றினால் மலமிளக்கி யாக செயல்படும்.

மாவு உணவு (அரிசி & கோதுமை உட்பட தானியம்) தவிர்த்து நார்ச்சத்து உணவுகள் எடுத்தால் நல்ல பலன் கிடைக்கும்.

பசு மாடு போல் சாப்பிட வேண்டும்.

உணவு வாடை பார்த்து அதை அதை அசைபோட்டு மனதை ஒருநிலை படுத்தி உண்ணவேண்டும்.

 எதிரியை அளிக்க வேண்டும் என்றால் அவருக்கு பசிக்காதபோது உணவு கொடு

ஆங்கில பழமொழி.

பசித்து சாப்பிட்டால் மலச்சிக்கல் தவிர்க்கலாம்.

மரங்கள் மண்ணின் வரங்கள்save trees

 🌿🌳இனிய வணக்கம்ங்க.. இன்றைய தினம் இஎஸ்ஐ மருத்துவமனை கல்லூரி முதல்வர் மற்றும்  கண்காணிப்பாளர், தலைமையில்  மருத்துவ மனை உள்பகுதியில்


 மூலிகை வனம்🌵🌿🌳


அமைக்க இடம் ஒதுக்கப் பட்டு நிகழ்வு துவக்கப்பட்டது

ருதம்பரா பவுண்டேசன் நிறுவனர் ஶ்ரீபதஞ்சலிஈஸ்வரன் நிகழ்வுகுறித்து கூறுகையில் பசுமையை அதிகரிக்கும் விதமாக மருத்துவ குணம் மிகுந்த மரங்களை மருத்துவமனை சுற்றிலும் ஆயிரம் மரக்கன்றுகளை நடும்பணி துவக்கி இருப்பது மகிழ்வை தருவதாகவும் நிகழ்வினை ருதம்பரா பவுண்டேசன் சார்பில் நிர்வாகிகள் கேபிள் மணி, டிரீம்டாட்ஸ் சுகுமார், மரம்பொன்னுசாமி,வள்ளிக்கும்மி  குழுவினர் இணைந்து ஒருங்கிணைத்தார்கள்


மரங்கள் மண்ணின் வரங்கள்🌿🙏

🌱🪴🌳🌲🌴🎋🌴🌲🌳🪴🌱

 




சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கோவை இஎஸ்ஐ மருத்துவ மனை ஆயுஷ் சார்பில் யோகா தினம் கொண்டாடப்பட்டது 21/06/2021

 🌿🙏🌸சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கோவை இஎஸ்ஐ மருத்துவ மனை ஆயுஷ் சார்பில் யோகா தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்வை டாக்டர் தமிழ்ச்செல்வன் அவர்கள் துவக்கி வைத்தார் மருத்துவ மனை கண்காணிப் பாளர் டாக்டர் ரவிக்குமார் அவர்கள் தலைமையேற்க நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கோவை ருதம்பரா பவுண்டேசன் நிறுவனர்


🌿🌼யோகா குருஜி ஶ்ரீ பதஞ்சலிஈஸ்வரன்

கலந்து கொண்டு யோகபயிற்சி, ஆற்றல் மிகுந்த சுவாச பயிற்சிகள், முத்திரை களின் நன்மைகள் குறித்தும் இன்றைய வாழ்வியல் சூழலில் நம்மை பாதுகாக்கும் ஆரோக்கியமான இயற்கை  உணவுமுறைகளை நிகழ்வில் கலந்து கொண்ட மருத்துவர்கள்,செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்களுக்கு வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆயுஷ் யோகா மருத்துவர் நந்தினி மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தார் ஒருங்கிணைத்தார்கள்


( நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு அடுப்பில்லா சமையல் முறையில் செய்யப்பட்ட


🌿லெமன்புதினா ஜுஸ்

🥗வெஜ் சாலட்

🍵கவுனி அரிசி நெய்ப்புட்டு

👍எனர்ஜிட்ரைபுரூட்ஸ் லட்டு

ஆகிய சத்துமிகும்  உணவுவகைகளை செய்முறையுடன் ருதம்பரா பவுண்டேசன் சார்பில் வழங்கப்பட்டது.)


நன்றி🌿🌼🙏🌸🌳🪴🌷