மூக்குசளி பழம் (அல்லது) நறுவல்லிபழம் CARDIA DOCHOTOMA

 மூக்குசளி பழம் (அல்லது)

நறுவல்லிபழம்

CARDIA DOCHOTOMA







மற்ற எந்த வகையான உணவுகளை காட்டிலும் பழங்களில் அதிக அளவு உடலுக்குத் தேவையான சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன. 


அதில் நம் தமிழ்நாட்டில் பரவலாக அறியப்படும் ஒரு வகை பழமாக தான் மூக்குச்சளிப்பழம் இருக்கிறது. சித்த வைத்தியத்தில் இந்த பழத்தை #நறுவல்லி எனக் குறிப்பிடுகின்றனர். இந்த நறுவல்லி அல்லது மூக்குச்சளிப் பழம் சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

 நறுவல்லிபழம்பயன்கள்

😊🌿🙏😋🙏🌿🙏


ஆண்மைகுறைபாடு இக்காலங்களில் பல ஆண்களுக்கு குழந்தை பெற்றுக்கொள்ள முடியாததற்கு முதன்மை காரணங்களாக இருப்பது அதற்கு அவர்களின் விந்து நீர்த்து போகுதல் மற்றும் விந்தில் உயிரணுக்கள் குறைபாடு ஆகியவையே இருக்கின்றன


மூக்கு சளி பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வரும் ஆண்களுக்கு விந்து கெட்டியாகி, அந்த விந்தில் உயிரணுக்கள் அதிகரித்து, மலட்டுத் தன்மை குறைபாட்டை நீக்கி,ஆரோக்கியமான குழந்தை பிறக்க வழி வகை செய்கிறது.


உடல் சூடு நமது உடலின் சராசரி வெப்பநிலை அனைத்து காலங்களிலும் சீராக இருப்பது அவசியம் ஆகும். கோடைக்காலங் களில் பலருக்கும் உடல் வெகு சீக்கிரத்தில் உடல் உஷ்ணமடைந்து தலைவலி, உடல் சோர்வு உட்பட பல பாதிப்புகளை ஏற்படுத்தி, கடுமை யான கோடை காலங்களில் மூக்கு சளி பழங் களை சாப்பிட்டு வந்தால் உடல் குளிர்ச்சி அடைவதோடு, உடற்சோர்வு நீங்கி உடலுக்கும், மனதிற்கு உற்சாகத்தை ஏற்படுத்துகிறது. 


குடற்புழுக்கள் சாக்லேட், இனிப்புகள் அதிகம் சாப்பிடுவதால் குழந்தைகள் அதிலும் குறிப்பாக 12 வயதுக்கு உட்பட்ட குழந்தை களுக்கு வயிற்றில் குடற்புழுக்கள் உற்பத்தி யாகி, அவர்களின் உடல் நலத்தை பாதித்து, உடலளவிலும் மனதள விலும் சோர்வடையச் செய்கிறது. வயிற்றில் இருக்கும் புழுக்களை அழிக்க சிறந்த இயற்கை மருந்தாக மூக்குச் சளிப் பழம் இருக்கிறது. 


இதய ஓட்டையை சரி செய்யும்  ஆற்றல் உடையது.தோல் நோய்கள், நீர்ச் சுருக்கை குணமாக்கும் சுவாச கோளாறுகள் சரியாகும்.


இந்த பழங்களை குழந்தைகள் அடிக்கடி சாப்பிடக் கொடுத்து வந்தால் குடற்புழுக்கள் அழிந்து மலத்தின் வழியாக உடலை விட்டு அவை வெளியேறும். உடல் எடை கூட நவீன மருத்துவ அளவுகோலின் படி ஒவ்வொரு மனிதரும் அவரின் உடல் உயரத்திற்கு ஏற்ற அளவில் உடல் எடை பெற்றிருக்கவேண்டும் என அறிவுறுத்துகிறது. ஒரு சிலர் சராசரி உடல் எடைக்கு கீழாக இருக்கின்றனர். இத்தகையவர்கள் சீக்கிரம் உடல் எடை கூட்ட அடிக்கடி நறுவிழி பழங்களை சாப்பிட வேண்டும். 


இதில் இதில் இருக்கும் சத்துகள் உடல் எடை அதிகரிக்க உதவுகிறது. வைட்டமின் சி மூக்கு சளி பழத்தில் “வைட்டமின் சி” சத்து அதிகம் இருக்கிறது. இந்த வைட்டமின் சி சக்தி நமது உடலில் சரியான அளவில் இருந்தால் மட்டுமே நமது உடலின் நோய்எதிர்ப்புதிறன் வலுவுடன் இருந்து, உடலை வெளியிலிருந்து தாக்க வரும் நோய் நுண்கிருமி களை எதிர்த்து போராட முடிகிறது. 


எனவே அனைத்து வயதினரும் நறுவிலி பழங்களை அடிக்கடி சாப்பிடுவது பயன்தரும்.


பழங்கள் தேவைக்கு

🌿🙏👍🌳🌳🌳🌳🌳

ருதம்பராயோகாமையம்

இயற்கை வழி வீட்டு தோட்ட பயிற்சி - 8

 இயற்கை வழி வீட்டு தோட்ட பயிற்சி - 8☘️🍀🌿🌱🪴🎋🍃🌾


தேதி:  04/07/2021 

 

நேரம்:3:30 PM to 5:00 PM


Topic: ஆடிப்பட்டம் தேடி விதை 

கேள்வி பதில்கள் பகுதி - 2



இந்த நிகழ்வில் விதைப்புக்கு தயாராக இருக்கும் போது தங்களுக்கு ஏற்படும் வீட்டு தோட்டம் பற்றிய அனைத்து சந்தேகங்களுக்கும் விடை கிடைக்கும்


Mr. Balaraman Maneri

Mrs.V.Priya Rajnarayanan 


பயிற்சி ஒருங்கிணைப்பாளர்கள்

Mrs. Ajitha Veerapandian-9500321318

Mrs. Akila Kunalan-9962583057


ஒவ்வொரு வாரமும் நடைபெறும். அனைவரும் பங்கேற்று வீட்டுக்கு ஒரு விவசாயி ஆகலாம்


குறிப்பு: பயிற்சி சரியாக 3.30 PM ஆரம்பித்து  5.00PM முடிந்து விடும்.


seedsisland Team is inviting you to a scheduled Meeting



நமக்கான முதல்தர உணவு கனிகள்தான்! Fruits

 நமக்கான முதல்தர உணவு கனிகள்தான்!

அரசும் மீடியாவும் பிரபலங்களும்...மரம் நிழல் தரும், காற்று தரும், மழை தரும்னு சொல்லுவாங்க...

 ஆனா கனி தரும்னு மட்டும் சொல்லவே மாட்டாங்க. ஏன்?


இப்ப சாலையோரம் வைத்திருக்கும் மரம், அரசு பள்ளி, மருத்துவமனை, அலுவலகங்கள் இங்கெல்லாம் இருக்கும் மரங்களை கவனியுங்கள்.... அங்கு கனி தரும் மரங்கள் எதுவுமே இருக்காது.

ஏன்? 


எங்கெல்லாம் புளிய மரம் நிறைய உள்ள சாலைகள் உள்ளதோ அந்த சாலைகளையெல்லாம் விரிவு படுத்துகின்றேன் என்று அரசு அந்த புளிய மரங்களை வெட்டிவிடும். விரிவாக்கத்திற்கு பின் வெத்து மரங்களையே நடும். 


அரசும் தொண்டு நிறுவனங்களும் வெத்து மர்மங்களை மட்டுமே நடும்.


Lock down னில் பல ஆயிரம் பேர் பல கிலோமீட்டர் ரோட்டில் பசியோடு நடந்து சென்றனர். அப்பொழுதும் கூட அந்த மக்கள் காய் கனி மரங்கள் இருந்தால் பசிக்கு உணவாகுமே என சிந்திக்கவில்லை.


எனக்கு தெரிந்து ... ஏன் கனி தராத மரங்களை மட்டுமே நடுகின்றனர் என எவரும் சிந்திக்கவில்லை.


நாமெல்லாம் குரங்கிலிருந்து பிறந்தோம் என்றால் நமது முக்கிய உணவே பழம்தானே. ஆனால் நாமே சிந்திக்கவில்லையே. மா பலா நாவல் அத்தி கொய்யா.... என்று எத்தனை மரங்கள் உள்ளன. அவையெல்லாம் ஏன் நடப்படவில்லை. நம் சிந்தனையை எப்படி மழுங்கடித்தனர்.


காரணம்

MMMC: mass media mind control.


மரம் கனி தரும் என்ற வார்த்தையை எல்லா விதத்திலும் மறைத்தனர். தொடர்ந்து மரம் நிழல் தரும் காற்று தரும் மழை தரும் என்று மட்டுமே சொன்னார்கள்.... அதை மட்டுமே மனிதர்களும் நினைத்து கனியை மறந்தான்.


கனி நமக்கான ஊட்டச்சத்து நிறைந்த உணவு .


ஆனால் இதையெல்லாம் தடுத்து கார்பரேட் ஊட்டச்சத்து உணவு என்று கண்ட குப்பைகளை நம்மிடம் திணிக்கிறது. அதையெல்லாம் ஏதோ ராயல் ஃபேமிலி போல ஸ்டைலா வாங்கி தின்னு உடம்பு நாசமா போனதுதான் மிச்சம். கார்பரேட்டுக்கோ ஏகபோக லாபம்.


நல்லா புரிஞ்சிக்குங்க இயற்கையிலிருந்து நாம் இலவசமாக எதையும் பெற்றுவிடக்கூடாது என்று கார்பரேட் தெளிவா செயல்படுறாங்க.


பூமியில் பிறந்த அனைத்து உயிரினங்களுக்கும் இயற்கையாகவே உணவு படைக்கப்பட்டிருக்கிறது.


அதை முழு முற்றாக தடுத்து பணத்தால் மட்டுமே எதையும் வாங்க முடியும் என்ற நிலையை உருவாக்குகிறது கார்பரேட்..


நீங்கள் கற்பனை பண்ணி பாருங்கள் கருவை மரங்கள் உள்ள இடங்களிலும் மற்றும் அனைத்து இடங்களிலும் மா, பலா, வாழை, நாவல் போன்ற மரங்கள் இருந்தால் இந்த இடமே சொர்க்கமாக காட்சி அளிக்கும். தை மாதங்களில் பூத்து குலுங்கும். உணவுப் பஞ்சம் என்ற ஒன்றே இருக்காது.

நம் மனநிலையே ஆனந்தமாக இருக்கும் . உண்மையான சொர்க்கத்தை நாம் அனுபவிக்கலாம். நீங்கள் மீண்டும் மீண்டும் இதே போல் கற்பனை செய்து வெளி உலகத்துக்கு வந்து பாருங்கள்....


அப்பொழுது உங்களுக்கு தெரிவதெல்லாம் கிரிக்கட் மைதானங்களும் கருவை மரங்களும் மற்ற வெற்று மரங்களும் உள்ள வரண்ட பூமியைத்தான். 

ஒரு சொர்க்க பூமியை இப்படி நரகமாக்கிவிட்டு ரேசன் கடையில் புழுத்துப்போன அரிசிக்கு வரிசையில் நிற்கிறோம்.


மீடியாக்கள் சொல்வது மட்டுமே உலகில் உள்ளதாகவும் நடப்பதாகவும் நம்புவது அறியாமையின் உச்சம். மீடியாக்கள் ஒட்டுமொத்த உண்மையை மறைத்துள்ளது.


மீடியா ஒரு ஈவு இரக்கமற்ற மாபெரும் பயங்கரவாதி. 


கார்பரேட் அறிவாளியல்ல... நாம் சிந்திக்கவில்லை அவ்வளவே.


மனிதன் சிந்திக்காதவரை இவையெல்லாம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.