மழை பற்றிய சகுனங்கள் When rain will come? What happens before rain?

 மழை பற்றிய சகுனங்கள்...

----------------------------------------

கீழ்கண்ட சகுனங்கள் தோன்றினால் மழை வரும்.


1. தும்பி பறந்தால் தூரத்தில் மழை

2. தட்டான் தாழப் பறந்தால் மழை

3. அந்தி ஈசல் அடை மழை

4. எறும்பு முட்டை கொண்டு திட்டை ஏறினால் மழை.

5. தவளை கத்தினால் மழை

6. மாடு மயங்கி வானம் பார்த்தால் மழை

7. கொக்கு மேடேறினால் மழை

8. பகற்பொழுதில் சேவல் கூவி வானத்தைப் பார்த்தால் மழை

9. கழுதை காதை உயர்த்தினால் மழை

10. ஈசல் பறந்தால் மழை

11. புற்றிலே ஈசல் பறந்தாலும், மண்ணிலே கரையான் கூடினாலும் மழை

12. பாம்புகள் மரத்தில் ஏறினாலோ அல்லது திறந்த வெளியில் புணர்ச்சியில் ஈடுபட்டாலோ மழை 

13. பசு மாடுகள் கன்றைத் தேடி வீட்டிற்கு ஓடினால் மழை.

14. பூனைகள் நிலத்தை பிராண்டினால் மழை

15. குழந்தைகள் அணைக்கட்டி விளையாடினால் மழை 

16. மலைகள் நீல நிறமாக காட்சியளித்தால் மழை

17. குகைகள் பனிமூட்டத்தால் மறைக்கப்பட்டிருந்தால் மழை

18. ஓணான்கள் வானத்தைப் பார்த்தால், மரத்தில் ஏறி விளையாடினால் மழை

19. பூனை, எலி, பாம்பு முதலிய பிராணிகள் காரணமின்று அங்குமிங்கும் ஓடினால் மழை.

20. மயில்கள் நடனமாடினால் மழை

21. பசுக்கள் சூரியனையும் ,வானத்தையும் பார்த்தால் மழை

22. பச்சோந்திகள் மரத்தின் மீது அமர்ந்து தன் நிறத்தை மாற்றிக்கொண்டால் மழை

23. பசுக்கள் நிழலிடங்களை விட்டு நகர மறுத்தால் மழை

24. நாய்கள் வீட்டிற்கு வெளியே செல்ல மறுத்தால், வானத்தைப் பார்த்து குரைத்தால் மழை

25. சிட்டுக்குருவிகள் மண்ணில் புரண்டு விளையாடினால் மழை

26. மீன்கள் நீரில் துள்ளி விளையாடினால் மழை.

27. பறவைகள், மிருகங்கள் நுனிப்புல் உண்பதைக் கண்டால் மழை.

28. நீரின் சுவை மாறுதல், உப்பு நீர்த்துப் போதல், மோர் புளித்து போதல் நடந்தால் மழை.

29. இரும்பு பொருட்களிலிருந்து மாமிச வாடை வந்தால் மழை

30. சந்திரனை சுற்றி சிவப்பு நிற வளையம் காணப்பட்டால் அல்லது சந்திரனின் நிறம் கோழியின் கண் போன்று காணப்பட்டால் மழை.

31. வட கிழக்கில் மின்னல் தோன்றினால் மழை

32. மேகங்களால் மறைக்கப்பட்ட சந்திரனிலிருந்து பிரதி சந்திரன் தோன்றினால் மழை

33. இரவு நேரங்களில் இடி முழங்கினால், பகல் நேரத்தில் மின்னல் அடித்தால், கிழக்கு திசையிலிருந்து குளிர்ந்த காற்று வீசினால் மழை.

நம் இயற்கையை கண்டறிந்த இயற்கை ஞானிகளை போற்றுவோம்.

இது ஆத்மார்ந்த மூத்தோரின் அனுபவ அறிவுரை

 இதை படிக்கும் முன் உங்கள் மனதை ஒரு நிலைப்படுத்திய பின்னர் படியுங்கள். அப்போது தான் ஒரு தெளிவு உங்களுக்குள் பிறக்கலாம்...


உன்னை வாழ்த்த மனம் இல்லாதவர்கள் இருப்பார்கள். அவர்களைப் பற்றி கவலைப்படாதே.....


நீ எதை செய்தாலும் அதில் ஒரு குறையை கண்டுபிடிக்கக்கூடிய மனிதர்களும் இருந்து கொண்டுதான் இருப்பார்கள். 

     அதையும் பெரிது பண்ணாதே......


உன் லட்சியம் எதுவோ அதை நோக்கி பயணம் போ.....


ஒன்றை மட்டும் தெரிந்து கொள்....

         ஒவ்வொரு மனிதனும்

         தனித்தனி ஜென்மங்கள்.

         தனித்தனி பிறவிகள்

         தனித்தனி ஆன்மாக்கள்.....


அவர்களுக்கென்று தனித்தனி ஆசாபாசங்கள் இருக்கும். குணங்களும் இருக்கும். அதன் வழியில் தான் அவர்களின் பயணமும் இருக்கும். அவர்களை ஒழுங்கு படுத்துகிறேன் என்று வேதனைகளை சுமந்து கொள்ளாதே. அவர்கள் போகும் வரை போகட்டும். போய் ஒரு அனுபவத்தை பெற்றபின் திரும்பி வருவார்கள்.....


அதுவரை நீ பொறுமையாக இருக்க வேண்டும். அவர்கள் போன பாதை நல்லதா? கெட்டதா? என்பதை அவர்களாக உணர்ந்தால்தான் அவர்களுக்கு ஒரு உண்மை தெரியும். அந்த உண்மையை நீ முன்கூட்டியே சொன்னால் உன்னை அவர்களுக்கு பிடிக்காது......


இதுதான் வாழ்க்கையின் தத்துவ உண்மை.....


அவர்களது பூர்வ புண்ணியத்தின் அடிப்படையில்தான் அவர்களின் குணங்களும் செயல்களும் இருக்கும்....


அது,

உடன் பிறந்தவர்களாக இருந்தாலும், 

நண்பர்களாக இருந்தாலும், 

கணவன், மனைவியாக இருந்தாலும், 

பெற்ற குழந்தைகளாக இருந்தாலும், 

பேரன் பேத்திகளாக இருந்தாலும், 

எந்த உறவுகளாக இருந்தாலும், 

                       அவர்களது பிறவி குணம் ஒரு போதும் மாறாது.......


எதைச் செய்ய வந்தார்களோ அதை செய்வதுதானே அவர்களின் விதி.  இதை நீ மாற்றி அமைக்க முடியுமா...?


ஒதுங்கி நின்று வேடிக்கை பார்!....

பந்த பாசத்தில் உள்ளே விழுந்து அறிவுரை சொல்லுகிறேன் என்று கெட்ட பெயரை சம்பாதித்துக் கொண்டிருக்காதே.....


அவர்களுக்கு அனுபவம் தான் குரு.....


அந்த அனுபவம் ஏற்பட்ட பிறகு தன்னை மாற்றிக் கொள்வதற்கு அவர்களுக்கு விதி இருந்தால் தன்னை திருத்திக் கொள்வார்கள். அதுவரை நீ பொறுமையாக இரு........


செயற்கையாக ஒரு குணத்தை  உருவாக்கி உன்னிடம் அன்பை காட்டினாலும்,

        தான் யார்? தன் குணம் என்ன?

என்பதை ஒரு நாள் வெளிப்படுத்தி விடுவார்கள். எதையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தோடு இருந்து கொள்ள பழகிக் கொள்....


நாம் வந்து போகும் உலகத்தில் பிறந்திருக்கிறோம். அவரவர்களுக்கு என்ன வேஷம் கொடுக்கப்பட்டிருக்கிறதோ அதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம். அதைத் தவிர நாம் வேறு எதையும் செய்து காட்ட முடியாது..... 


எல்லையில்லாத அன்பை வைத்திருந்தேன் என்னை ஏமாற்றி விட்டார்கள் என்று புலம்பிக் கொண்டு இருக்காதே. கடலுக்கும் ஒரு எல்லை வைத்திருக்கிறான் கடவுள்.

அதையும் மீறி சிலவேளைகளில் இறைவன் வகுத்த எல்லையை கடல் தாண்டி விடுகிறது. அது போல் இயற்கையின் சுபாவங்களைப் போல் மனித இயற்கை சுபாவங்கள் சில நேரங்களில் தங்களை வெளிப்படுத்தி விடும்.......


நீ உன்னை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறாயோ அப்படி வைத்துக் கொண்டு வாழப்பழகிக் கொள். அதில் நன்மை வந்தாலும், தீமை வந்தாலும், உனக்கும் ஒரு அனுபவம் கிடைக்கும். அதை வைத்து உன்னையும் திருத்திக் கொள்ளலாம்....


இன்பமானாலும் துன்பமானாலும் அதை நீயே சந்திக்க கற்றுக்கொள். அதை பகிர்ந்து கொள்வதற்கு ஒரு துணையைத் தேடாதே.....


உன் இன்ப துன்பத்தில் பங்கு பெறுவதற்கு இந்த பிரபஞ்சத்தில் ஒருவர் பிறந்திருந்தால் நிச்சயம் அவர் உன்னை கைவிடாமல் உன்னோடு சேர்ந்தே பயணிப்பார். அது உன் பிறவி பிராப்தத்தை பொறுத்து இருக்கிறது. அப்படி அது நடந்து விட்டால், எந்த சூழ்நிலையிலும் உன்னோடு இணைந்தே இருப்பார்....


நீ பெண்ணாக இருந்தாலும், ஆணாக இருந்தாலும், வரும் துன்பத்தை எதிர்கொள் ளக்கூடிய ஆற்றலை உருவாக்கிக் கொள்.


மனிதன் மீது வைக்கும் நம்பிக்கையை விட இறைவன் மீது வைக்கும் நம்பிக்கையை அதிகரித்துக் கொள்.....


உன் கண்ணீரும். உன் கவலையும் உன்னை பலவீனமாக காட்டிவிடும்... அழுவதாலும் சோர்ந்து போவதாலும் ஒன்றும் நடக்கப் போவதில்லை. எப்படி இருந்தாலும் நீதான் அந்த சுமையை சுமந்து ஆகவேண்டும். 


"அழுது சுமப்பதை காட்டிலும், ஏற்று சுமப்பது உனக்கு சிரமம் இல்லாமல் இருக்கும்."


தைரியமும் தன்னம்பிக்கையும் தான் 

ஒரு மனிதனை உலகத்தில் வாழ வைக்கும் என்ற உண்மையை உணர்ந்துகொள். இந்த பக்குவத்தை அடைந்து விட்டால் எத்துன்பமும் உன்னை நெருங்காது என்பதை உணர்ந்துகொள்....


இப்பதிவை பத்திரப்படுத்தி, உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் பொறுமையாக மீண்டும் மீண்டும் படிக்கவும்...

      ஒவ்வொரு வரிகளும் வைர வரிகள்...

இன்பத் தமிழ்...! குண்டக்க என்றால் என்ன? மண்டக்க என்றால் என்ன? Power of Tamil Language


1. அந்தி, சந்தி: 


அந்தி : மாலை நேரத்திற்கும் , இரவுக்கும் இடையில் உள்ள பொழுது. 

சந்தி: இரவு நேரத்திற்கும் , காலை நேரத்திற்கும் இடையில் உள்ள விடியல் பொழுது.


 2. அக்குவேர், ஆணிவேர் :


அக்குவேர் : செடியின் கீழ் உள்ள மெல்லியவேர். 

ஆணி வேர்: செடியின் கீழ் ஆழமாக செல்லும் வேர்.


3. அரை குறை:


அரை : ஒரு பொருளின் சரி பாதி அளவில் உள்ளது.

குறை : அந்த சரிபாதி அளவில் குறைவாக உள்ளது.


 4. அக்கம், பக்கம்:


அக்கம்: தன் வீடும், தான் இருக்கும் இடமும்.

பக்கம்: பக்தத்தில் உளவீடும், பக்கத்தில் உள்ள இடமும்.


5. அலுப்பு சலிப்பு :


அலுப்பு: உடலில் உண்டாகும் வலி.

சலிப்பு: உள்ளத்தில் ஏற்படும் வெறுப்பும், சோர்வும்.


 6. ஆட்டம் பாட்டம் :


ஆட்டம் : தாளத்திற்கு தகுந்தவாறு ஆடுவது.

பாட்டம் : ஆட்டத்திற்குப் பொருத்தமில்லாமல் பாடுவது.


7. இசகு பிசகு:

 

இசகு: தம் இயல்பு தெரிந்து ஏமாற்றுபவர்களிடம் ஏமாறுதல்.

பிசகு: தம்முடைய அறியாமையால் ஏமாறுதல்.


8. இடக்கு முடக்கு: 


இடக்கு : கேளியாக நகைத்து, இகழ்ந்து பேசுதல்.

முடக்கு : கடுமையாக எதிர்த்து, தடுத்துப் பேசுதல்.


9. ஏட்டிக்குப் போட்டி :


ஏட்டி: விரும்பும் பொருள் அல்லது செய்வது. ( ஏடம் : விருப்பம்) போட்டி : விரும்பும் பொருள், செயலுக்கு எதிராக வருவது.


10. ஒட்டு உறவு : 


ஒட்டு : இரத்த சம்பந்தம் உடையவர்கள்.

உறவு : கொடுக்கல் சம்பந்தமான வகையில், நெருக்கமானவர்கள்.


11. கடை கண்ணி :


கடை: தனித் தனியாக உள்ள வியாபார நிலையம்.

கண்ணி : தொடர்ச்சியாக அமைந்த கடைகள் , கடை வீதிகள்.


12. கார சாரம் : 


காரம் : உறைப்பு சுவையுள்ளது.

சாரம்: காரம் சார்ந்த சுவையுள்ளது.


13. காடு கரை :


காடு : மேட்டு நிலம் (முல்லை). 

கரை : வயல் நிலம் .( மருதம், நன் செய் , புன்செய்).


14.காவும் கழனியும்:


கா : சோலை.

கழனி: வயல். (மருதம் ).


15. கிண்டலும் கேலியும்: 


கிண்டல் : ஒருவன் மறைத்த செய்தியை அவன் வாயில் இருந்து வாங்குவது.

கேலி : எள்ளி நகைப்பது.


16. குண்டக்க மண்டக்க :


குண்டக்க : இடுப்புப்பகுதி, 

மண்டக்க: தலைப் பகுதி,

சிறுவர்கள் கால் பக்கம், தலைப்பக்கம் எது எனத் தெரியாமல் தூக்குவது,

வீட்டில் அந்தந்தப் பொருள் அங்கங்கே இருக்க வேண்டிய இடத்தில் இல்லாமல் இருப்பது.


17. கூச்சல் குழப்பம்:


கூச்சல் : துன்பத்தில் சிக்கி வாடுவோர் போடும் சத்தம். (கூ - கூவுதல்)

குழப்பம்: துன்பத்தின் மத்தியில் உண்டாகும் சத்தத்தைக் கேட்டு, வந்தவர்கள் போடும் சத்தம்.


18. சத்திரம் சாவடி :


சத்திரம் : இலவசமாக சோறு போடும் இடம் ( விடுதி ).

சாவடி: இலவசமாகத் தங்கும் இடம்.

 

19.தோட்டம் துரவு , தோப்பு துரவு :


தோட்டம் : செடி, கொடி, கீரை பயிரிடப்படும் இடம்.

தோப்பு : கூட்டமாக இருக்கும் மரங்கள்.

துரவு: கிணறு.


20. நகை நட்டு :


நகை : பெரிய அணிகலன்கள் (அட்டியல், ஒட்டியாணம்.)

நட்டு : சிறிய அணிகலன்கள்.


21. நத்தம் புறம்போக்கு :


நத்தம் : ஊருக்குப் பொதுவான மந்தை...

புறம்போக்கு : ஆடு, மாடு மேய்வதற்கு அரசு ஒதுக்கிய நிலம்.


22. நேரம் காலம் :


நேரம் : ஒரு செயலைச் செய்வதற்கு நமக்கு வசதியாக அமைத்துக் கொள்வது.

காலம் : ஒரு செயலைச் செய்வதற்கு பஞ்சாங்க அடிப்படையில் செய்ய முற்படும் கால அளவு.


23. நொண்டி நொடம் :


நொண்டி : காலில் அடிபட்டோ, குறையால் இருப்பவர்.

நொடம் : கை, கால் செயலற்று இருப்பவர்.


24. பற்று பாசம் :


பற்று : நெருக்கமாக உறவு கொண்டுள்ளவர்கள்.

பாசம் : பிரிவில்லாமல் மரணம் வரை சேர்ந்து இருப்பது...


25. பழக்கம் வழக்கம் :


பழக்கம் : ஒருவர் ஒரே செயலைப் பல காலமாகச் செய்வது.

வழக்கம் : பலர் ஒரு செயலைப் பலகாலம் (மரபுவழியாக ) கடைப்பிடித்துச் செய்வது.


26. பட்டி தொட்டி :


பட்டி: கால்நடைகள் (ஆடுகள்) வளர்க்கும் இடம் (ஊர்).

தொட்டி : மாடுகள் அதிமாக வளர்க்கும் இடம்.


27. பேரும் புகழும் : 


பேர் : வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்தில் உண்டாகும் சிறப்பு பெருமை. 

புகழ்: வாழ்விற்குப் பிறகும் நிலை பெற்றிருக்கும் பெருமை.


28. பழி பாவம் :


பழி: நமக்குத் தேவையில்லாத , பொருத்தமில்லாத செயலைச் செய்தால் இக்காலத்தில் உண்டாகும் அபச் சொல்.

பாவம் : தீயவை செய்து மறுபிறப்பில் நாம் அனுபவிக்கும் நிகழ்ச்சி.


29. பங்கு பாகம்:


பங்கு: கையிருப்பு. பணம், நகை, பாத்திரம்.( அசையும் சொத்து).

பாகம் : வீடு, நிலம். அசையாச் சொத்து.


30. பிள்ளை குட்டி:


பிள்ளை : பெதுவாக ஆண் குழந்தையைக் குறிக்கும்.

குட்டி: பெண் குழந்தையைக் குறிக்கும்.


31. வாட்டம் சாட்டம் :


வாட்டம் : வளமான தோற்றம், வாளிப்பான உடல்.

சாட்டம் : வளமுள்ள தோற்றம், தோற்றப்பொலிவு.

படித்ததில் பிடித்தது