ஆயுதங்கள் என்றும் அமைதியை தருவதில்லை!! there is no weapon which will make peace in the world

 என்ன  😭😭😭😭😭 கொடுமை 



வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த  இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டது 1945 ஆகஸ்ட் மாதம் 09 ஆம் திகதியாகும்.

அமெரிக்காவினால் ஜப்பானின் நாகசாகி நகரத்துக்கு அணுகுண்டுத் தாக்குதல் நடத்தி 7 நாட்களின் பின்னரே இந்தப் புகைப்படம் ஒரு அமெரிக்கப் படை வீரரினால் எடுக்கப்படுகிறது.

அமெரிக்கா அணுகுண்டுத் தாக்குதல் நடத்தியதன் பின்னர், ஜப்பானில் ஏற்பட்ட சேதங்களை ஆவணப்படுத்தும் பணி வழங்கப்பட்ட 

Joe 0'Donnell என்ற அமெரிக்க ராணுவ வீரரினால் எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படம் குறித்து அவர் தனது நாட்குறிப்பில் இவ்வாறு குறிப்பிடுகின்றார்.

"10 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன் தனது தோளில் ஒரு குழந்தையை கட்டிக் கொண்டு நிற்கிறான்.

இப்படி சிறுவர்கள் தம்பி,தங்கைகளை தோளில் சுமந்து கொண்டு விளையாடுவதை நாம் கண்டிருக்கிறோம்.

ஆனால் இந்தச் சிறுவன் விளையாடுவதற்காக தோளில் ஒரு குழந்தையை சுமந்து வரவில்லை. அவன் எதோ ஒன்றை பெரிதாக சிந்தித்துக் கொண்டு 

இருந்தான். அவனது காலில் செருப்பு கூட இருக்கவில்லை.

அந்தச் சிறுவன் தனது தோளில் இருந்த குழந்தையை திரும்பிப் பார்த்தான், அப்போதுதான்

அவனது தோளில் இருந்த குழந்தை இறந்து இருப்பதை நான் கவனித்தேன். அந்தக் குழந்தையின் கழுத்து சரிந்து இருந்தது.

இறந்த குழந்தையை சுமந்து கொண்டு அந்த சிறுவன் பிணங்களை எரிக்கும் இடத்திற்குச் சென்றான்.

அந்த இடத்தில் நின்றுகொண்டிருந்த சிறுவன் தனது உதடுகளை கடித்துக் கொண்டான். 

அப்போது, அவனது வாயினால் இரத்தம் வழிந்து கொண்டு இருந்தது.

பின்னர் அவனது தோளில் சுமந்துவந்த, அவனது தங்கையின் உடலை தகனம்  செய்வதற்கு

கொடுக்கிறான், கொஞ்ச நேரத்தில் அந்தப் பிஞ்சு 

உடல் தீயில் கருகி விடுகிறது.

அந்த தீச்சுவாலையை பார்த்த வண்ணமே அந்த சிறுவன் நடக்கத் தொடங்கினான்."

இந்த சம்பவம் நடந்து 72 வருடங்களின் பின்னர்

புனித பாப்பரசர் தனது புதுவருட வாழ்த்து அட்டையில் இந்த புகைப்படத்தை பிரசுரித்து

இப்படி ஒரு  குறிப்பையும் சேர்த்துவிடுகின்றார்.

"யுத்தத்தின் பிரதிபலன் இதுதான்"

நாம் அணு ஆயுதங்களை வைத்துக்கொள்வதை

சட்டமாக்குவதா ? அல்லது கடந்த காலங்களில்

படித்த பாடங்களை வைத்து மனிதகுலத்தின் 

விருத்திக்காக பாடுபடுவதா ?

இந்தச் சிறுவன் இரத்தம் வருமளவுக்கு தனது 

உதடுகளை கடிப்பதை நினைக்கும் பொழுது

அந்தப் பிஞ்சு உள்ளத்தின் வேதனையின் அளவை எம்மால் உணர முடியும்." 

ஆயுதங்கள் என்றும் அமைதியை தருவதில்லை!!

படித்ததில் வலித்தது.

மக்களை காப்பாற்றவே ஊடகங்கள் இருக்க வேண்டுமே தவிர. மக்களை வைத்து காசு பார்க்கவும், மக்களை காவு வாங்கவும் இல்லை!

 தென்கச்சி கோ சாமிநாதன்


நான் திருநெல்வேலி வானொலி நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த நேரம்.

.

ஒரு நாள் மாலை வேளையில் ஒரு தொலைபேசி அழைப்பு.

.

“ஹலோ… ரேடியோ ஸ்டேஷனா?’

.

“ஆமாங்க.’

.

“நான் டீன் பேசறேன். ஹைகிரவுண்ட் ஆஸ்பத்திரியில் இருந்து… ஒரு முக்கியமான விஷயம்.’

.

“சொல்லுங்க டாக்டர்.’

.

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஒரு ஆக்சிடெண்ட் நடந்துபோச்சி!’

.

“எங்கே டாக்டர்?’

.

“பாளையங்கோட்டை ரயில்வே கிராசிங் தாண்டி… கொஞ்ச தூரத்துலே…’

.

“பெரிய விபத்தா டாக்டர்?’

.

“ஆமாம்… வடநாட்டு சுற்றுலா பஸ் ஒன்றும் ஒரு லாரியும் மோதிக்கிட்டதுலே, டிரைவர் உள்பட கொஞ்ச பேர் அந்த இடத்துலேயே இறந்துட்டாங்க. அடிபட்டு உயிருக்குப் போராடிக்கிட்டி இருக்கிறவங்களை எல்லாம் இங்கே கொண்டு வந்து சேர்த்து இருக்காங்க. இந்த நேரத்துலே உங்களாலே ஒரு உதவி!’

.

“சொல்லுங்க டாக்டர்… எங்களாலே முடிஞ்சது எதுவா இருந்தாலும் செய்யிறோம்.

.

“வேறே ஒண்ணுமில்லே. இப்ப இங்கே எங்ககிட்டே வந்து சேர்ந்து இருக்கறவங்களுக்கு   எல்லாம் உடனடியா ரத்தம் செலுத்தியாகணும். அப்படி செஞ்சா தான்  அவங்களையெல்லாம் காப்பாத்திடலாம்.’

.

“சரி.’

.

“ஆனா போதுமான ரத்தம் இப்ப பிளட் பாங்க்ல இல்லே. பொதுமக்கள் யாராவது வந்து ரத்தம் கொடுத்தா இவங்களை எல்லாம் பிழைச்சுக்குவாங்க. இப்ப நான் உங்ககிட்டே கேட்டுக்கறது என்னன்னா, உடனடியா இது சம்பந்தமா நீங்க ரேடியோவுல ஒரு அறிவிப்பு கொடுக்க முடியுமா?’

.

“இப்பவே நாங்க அதுக்கு ஏற்பாடு செய்யறோம். நீங்க மற்ற வேலைகளைக் கவனிங்க.’

.

வானொலி நண்பர்கள் உடனே செயலில் இறங்கினார்கள். அந்த சமயத்தில் திரைப்பட இசை ஒலிபரப்பாகிக் கொண் டிருந்தது. அவசரம் அவசரமாக அறிவிப்பு ஒன்று எழுதப்பட்டது நாலு வரிகளில்.

.

“நேயர்களே! ஒரு முக்கிய அறிவிப்பு. சற்று முன் நேர்ந்த ஒரு விபத்தினால் பாதிக்கப் பட்டவர்களைக் காப்பாற்ற ரத்தம் தேவைப்படுகிறது. ரத்த தானம் செய்ய விரும்புகிறவர்கள் உடனடியாக பாளையங் கோட்டை மருத்துவமனைக்கு விரைந்து செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்.’

.

அறிவிப்பாளர் தூத்துக்குடி ராஜசேகரன், ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாடலை நிறுத்தி இடையே அந்த அறிவிப்பை வாசிக்கிறார். ஒரு முறைக்கு இருமுறையாக இந்த அறிவிப்பு வாசிக்கப்படுகிறது. மறுபடியும் படப்பாடல்கள் தொடர்கின்றன. ஒரு இருபது நிமிடங்கள் கடந்திருக்கும். இன்னும் இரண்டு பாடல்களை ஒலிபரப்ப நேரம் இருந்தது. அந்த சமயத்தில் மறுபடியும் தொலைபேசி அழைப்பு.

.

“ஹலோ!’

.

“”சார்… மறுபடியும்    ஹைகிரவுண்ட் ஆஸ்பத்திரியில் இருந்துதான் பேசறோம். நீங்க உடனே இன்னொரு அறிவிப்பு செய்யணும்.’

.

“என்ன சொல்லணும்… சொல்லுங்க டாக்டர்.’

.

“தயவு செய்து மேற்கொண்டு யாரும் ஹைகிரவுண்ட்  ஆஸ்பத்திரிக்கு ரத்ததானம் செய்ய வர வேண்டாம்னு சொல்லணும்.’

.

“என்ன ஆச்சு டாக்டர்?’

.

“ஏகப்பட்ட பேர் ரேடியோ அறிவிப்பைக் கேட்டுட்டு ரத்தம் கொடுக்க இங்கே வந்துட்டாங்க… கூட்டத்தை எங்களாலே சமாளிக்க முடியலே. அவ்வளவு பேர்கிட்டே ரத்தம் கலெக்ட் பண்ணவும் இப்ப இங்கே வசதி இல்லே. ப்ளீஸ்…!’

.

மறுபடியும் வானொலி அறிவிக்கிறது.

“இனி யாரும் அங்கே செல்லத் தேவையில்லை என்பதை நன்றியோடு தெரிவித்துக்     கொள்கிறோம்.

.

மறுநாள் மருத்துவமனைக்குப் போகிறோம். படுக்கையில் இருந்தவர்கள் பாசத்தோடு எங்களைப் பார்க்கிறார்கள். மொழி ஒரு தடையாக இல்லை.

.

ஊடகங்கள் சமுதாயத்திற்கு எப்படிக் கடமையாற்ற வேண்டும் என்று கேட்டீர்கள். இந்த உண்மை நிகழ்ச்சி அதற்கு ஓர் எடுத்துக்காட்டு.”

இப்படி எல்லா ஊடகங்களும் இருந்திருந்தால் கொரானா இவ்வளவு வேகமாக பரவி இருக்காது. உயிரிழப்பும் இவ்வளவு ஏற்பட்டு இருக்காது. மக்களை காப்பாற்றவே ஊடகங்கள் இருக்க வேண்டுமே தவிர. மக்களை வைத்து காசு பார்க்கவும், மக்களை காவு வாங்கவும் இல்லை!


தாளிசாதி சூரணம் | தாளிசபத்திரி (Taxus baccata)

 தாளிசாதி சூரணம் 


தாளிசபத்திரி (Taxus baccata) என்பது இந்த மருந்தின் முக்கிய உட்பொருள்.


அது காட்டு லவங்க மரம். தாளிசபத்திரி அதிகம் இருப்பதால் இந்த மாத்திரைக்கு தாளிசாதி சூரணம் என்று பெயர். இந்த மாத்திரையில் இருக்கும் முக்கிய உட்பொருள்கள்: சுக்கு, மிளகு, அரிசித் திப்பிலி, லவங்கப்பட்டை, ஏலரிசி, மூங்கில் உப்பு, இன்னும் பல.


அளவோடு உட்கொள்ளலாம்


இந்தச் சித்த மருந்து பொடியாகவும் மாத்திரையாகவும் கிடைக்கிறது. சாதாரணச் சளியாக இருந்தால் ஒன்று, தொண்டையில் சளி கட்டியிருந்தால் சப்பிச் சாப்பிடுவதற்கு வடகம் என மாறுபட்ட வகைகள் உண்டு. இந்த மருந்து செரிமானத்துக்கும் துணைபுரியும். எதிர்க்களித்தல், வாயுப் பிரச்சினைகள் போன்றவற்றுக்கும் இந்த மருந்து நிவாரணமளிக்கும்.


தலைவலிக்கு அடுத்தபடியாகப் பலரையும் அடிக்கடிப் பிடித்தாட்டும் பிரச்சினையாக சளி, இருமலே இருக்கிறது. இந்தச் சளிக்கு தாளிசாதி சூரணம் சிறந்த நிவாரணம் தரும். வேளைக்கு இரண்டு மாத்திரைகள் என்ற வீதத்தில் மூன்று நாட்கள்வரை உட்கொள்ளலாம். 'இம்காப்ஸ்' எனப்படும் இந்திய மருந்து உற்பத்திக் கூட்டமைப்பின் தயாரிப்பு இந்த மருந்து. சித்த-ஆயுர்வேத மருந்தகங்கள், 'இம்காப்ஸ்' கடைகளில் கிடைக்கும்.


எந்த மருந்தையும் நாமே இஷ்டத்துக்கு உட்கொள்வது தவறு. சித்த மருந்துகளும் அப்படியே. அதனால் அளவோடு தாளிசாதி சூரணத்தை உட்கொண்டு, வளமோடு சளியை விரட்டலாம்.